search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • கும்பாபிஷேகம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சித்தூர் மாவட்டம் ஐராலா மண்டலம் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கும்பாபிஷேக பூஜைகள் நேற்று தொடங்கியது.

    முதல் நாளான நேற்று வேத ஸ்வஸ்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், கணபதி ஹோமம், சத்துருவேத ஆவாஹனம், மந்திரபுஷ்பம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் செயற்பொறியாளர் வெங்கட் நாராயணா, கோவில் துணை ஆணையாளர் கஸ்தூரி, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளர் கோதண்டபாணி மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.

    21-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்கிறார்.

    • சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுகவேனஸ்வரர் சொர்ணாம்பிகை அம்ம னுடன் அருள் பாலிக்கிறார்.
    • கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் உள்ளது.

    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் சுகவேனஸ்வரர் சொர்ணாம்பிகை அம்ம

    னுடன் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    திருப்பணிகள்

    இந்த கோவில் திருப்பணி செய்ய கடந்த 2018-ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முழுமையாக முடியும் தருவாயில் உளளது. இதையொட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி காலை 10.50 மணிக்கு மேல் 11.50 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மகாகும்பாபிஷேகம்

    அன்று காலை 10.50 மணிக்கு அனைத்து விமா னங்கள் மற்றும் அனைத்து ராஜகோபுரங்களுக்கும் சமகால மகா கும்பாபி ஷேகம்நடக்கிறது. 11.15 மணிக்கு சுகவேனஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபி ஷேகம் மறறும் மகா தீபாராதனை நடக்கிறது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்கல், மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேஸ்வரருக்கு திருக்கல்யாணம், 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.

    இந்த விழாவில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்க ளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • செவ்வாய்க்கிழமை திரளான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.
    • இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    பொன்னேரி அடுத்த சின்னம்பேடு, சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து செல்வது வழக்கம். வாரத்தில் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் வெளியூர்களில் இருந்தும் பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சாமிதரிசனத்துக்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இந்த கோவிலில் வருகிற 21-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன்.

    இந்த நிலையில் கும்பாபிஷேக விழா பணியையொட்டி கோவில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகின்ற 20-ந்தேதி வரை மூலவரை தரிசிக்க இயலாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • 17 ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படாமல் இருந்தது.
    • வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாலாலயம் நடைபெறுகிறது.

    தஞ்சையை ஆண்ட சோழபேரரசர்கள் தஞ்சையை சுற்றிலும் எட்டு திசைகளிலும் அஷ்டசக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்புறத்தில் அமைய பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் ஆகும். இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது.

    இந்த சிலையில் கோடை காலங்களில் முத்து, முத்தாக வியர்வை துளிகள் வெளியாகும் என்பது ஐதீகம். மூலவர் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்வதில்லை. பிற அபிஷேகத்துக்கான அம்பாளின் வலதுபுறத்தில் வடக்கு நோக்கிய நிலையில் விஷ்ணு துர்க்கை உள்ளது. இந்த விஷ்ணு துர்க்கைக்கும், அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    மேலும் ஆகம விதிப்படி இந்த கோவிலில் நாள்தோறும் 4 கால பூஜைகள் நடந்து வருகின்றன. மூலவராக விளங்கும் புற்று வடிவில் உள்ள அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்டல தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும்.

    இந்த கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகளுடன் கடந்த 2004-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பொதுவாக கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.

    ஆனால் 17 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தப்படாமல் இருந்தது. தமிழகஅரசு பல கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலிலும் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    அவர்களின் எதிர்பார்ப்புபடி குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலில் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலில் கொடிமரத்தின் இருபுறமும் உள்ள மண்டபங்களின் தூண்கள் விரிசல் விழுந்து இருந்ததால் அந்த மண்டபங்களை இடித்துவிட்டு புதிய மண்டபங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டன. அதன்படி 2 புறமும் உள்ள மண்டபங்கள் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கோவிலுக்கு வெளியே புதிய தரைத்தளம் அமைப்பதற்கான பணியும் தொடங்கப்பட்டுள்ளது.

    வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை பாலாலயம் நடைபெறுகிறது. அதன்பிறகு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் புனரமைக்கும் பணி தொடங்கப்படும். இந்த பணிகள் எவ்வளவு விரைவில் முடிக்கப்படுமோ அதன்பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் தொடங்கியுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கும்பாபிஷே நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.
    • கோவிலை சுற்றி உள்ள 100 கடைகள் தற்காலிகமாக அகற்ற உத்தரவு.

    பொன்னேரி :

    பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த கோவிலில் வருகிற 21-ந் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை, வாகன நிறுத்தும் வசதி, பக்தர்கள் தங்குவதற்கான இடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    கோவிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட பூ மாலை, தேங்காய், பழம், காய்கறிகள் கடைகள் உள்ளன. இதனால் கும்பாபிஷேம் நடைபெறும் நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.

    இதையடுத்து கோவிலில் இட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் கோவிலை சுற்றி உள்ள கடைகளை தற்காலிகமாக அப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வியாபாரிகளுக்கு வருவாய் துறையினர் உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறுவாபுரி கோவில் வியாபாரிகள், கிராம மக்கள், கோவில் நிர்வாகத்தினர் ஆகியோருடன் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் ரஜினிகாந்த், செயல் அலுவலர் செந்தில் குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது சிறுவாபுரி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா முடியும் வரை கோவிலை சுற்றி உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை தாமாக அகற்றி விடுவதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

    மேலும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

    • கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது.
    • 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும், முதலையுண்ட பாலகனை சுந்தரர் பதிகம்பாடி மீட்டெடுத்த கோவில் என்ற பல சிறப்புகள் பெற்றது கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் ஆகும்.

    இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த இக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்களிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்குசாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தநிலையில் இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்து ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது நியதி. கடந்த 2 மாதமாக கோவில் நிர்வாகத்தினர் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். எனவே கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகள் தொடங்கி விரைவில் நடப்பதற்காக பொதுமக்கள் வளமாக வாழவும் கருணாம்பிகை அம்மன் சன்னதியில் நேற்று நவசக்தி அர்ச்சனை நடந்தது.

    இதில் கோவில் 9 சிவாச்சாரியார் ஒன்றிணைந்து வேத மந்திரங்கள் படித்து சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் நவசக்தி அர்ச்சனை செய்தனர். இதில் அவினாசி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆகஸ்டு 4-ந்தேதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
    • ஆகஸ்டு 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கம் விநாயகர் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் மோகன்ரெட்டி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ்பாபு ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:-

    காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் தற்போது சீரமைப்புப்பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. பணிகள் 100 சதவீதம் முடிந்ததும் வருகிற ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அன்று காலை 7 மணியில் இருந்து பகல் 11 மணி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அன்று கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

    ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியில் இருந்து கோவில் விமான கோபுரத்துக்கு சிறப்புப்பூஜைகள் தொடங்கி, 21-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனால், ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

    ஆர்ஜித சேவைகளில் முன்பதிவு செய்த பக்தர்கள் வேறொரு தேதியில் கோவிலுக்கு வந்து குறிப்பிட்ட ஆர்ஜித சேவைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அறங்காவலர் குழு கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மழைக்காலங்களில் சாலையில் ஓடும் கழிவு நீர் மூலவர் கருவறை வரை சென்று விடுகின்றன.
    • கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறவில்லை.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே மூலனூரில் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீதேவி பூமாதேவி வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, தும்பிகையாழ்வார், கருடாழ்வார், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோவில் மூலனூர் ரோடு ஓரமாக உள்ளது. ரோடு மேம்படுத்தும் பணியால் உயர்த்தப்பட்டதால் இக்கோவில் தற்போது ரோட்டுக்கு கீழே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் ஓடும் கழிவு நீர் மூலவர் கருவறை வரை சென்று விடுகின்றன.

    கோவில் வளாகம் முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. மழைக்காலங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இக்கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு 1982 ஆம் ஆண்டும், ஸ்ரீதேவி பூமாதேவி வரதராஜ பெருமாளுக்கு 1988 ஆம் ஆண்டும், தும்பிக்கையாழ்வாருக்கு 1993 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளன, தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கும், சனிக்கிழமை அன்று வரதராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோவில் வளாகத்திற்குள் நீர் புகுந்து கோவில் சுவர்கள் தரைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. மழைக்காலங்களில் கோவிலுக்குள் செல்வதற்காக ஹாலோ பிளாக் கற்கள் போட்டு அதன் மீது நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து இக்கோவிலை புதுப்பிக்க வேண்டுமாறு வெள்ளகோவில் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 23-ந்தேதி அம்மன் வீதி உலா, திருவிளக்கு பூஜை நடக்கிறது.
    • 24-ந்தேதி தீச்சட்டி ஏந்துதல் மற்றும் தீ மிதி திருவிழா நடக்கிறது.

    சென்னை புத்தகரம் லட்சுமி நகரில் உள்ள ஸ்ரீ நாகாத்தம்மன் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி சமேத சர்பேஸ்வரர் ஆலயத்தில் 31-ம் ஆண்டு தீ சட்டி ஏந்துதல், தீ மிதி திருவிழா மற்றும் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை 9 மணிக்கு அரசானி கால் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று (21-ந்தேதி) யாக சாலை பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. 22-ந்தேதி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. 23-ந்தேதி அம்மன் வீதி உலா, திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    24-ந்தேதி அம்மனுக்கு கூழ் வார்த்தல், தீச்சட்டி ஏந்துதல் மற்றும் தீ மிதி திருவிழா நடக்கிறது. 25-ந்தேதி அம்மன் திரு வீதி உலா நடக்கிறது.

    • அம்மன் சன்னதியின் மூல கோபுரத்தில், காடு போல அரச மரங்கள் நன்றாக வளர்ந்து, சிலைகளும், கோபுரத்தின் கட்டுமானமும் சேதமடைந்துள்ளது.
    • கும்பாபிேஷகம் நடந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் கோவிலில் உள்ள கன்னிமார், பேச்சியம்மன் சன்னதிகளின் நிலவறை மேற்கூரை இடிந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றது.

    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சி காந்திபுரத்தில் 200 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளது. கடந்த 1963ம் ஆண்டு அறநிலையத் துறையின் கீழ் இக்கோவில் கொண்டுவரப்பட்டது. 1981 மற்றும் 2006ம் ஆண்டு கும்பாபிஷேகங்கள் நடந்தன.

    கும்பாபிேஷகம் நடந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் கோவிலில் உள்ள கன்னிமார், பேச்சியம்மன் சன்னதிகளின் நிலவறை மேற்கூரை இடிந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றது. மேலும் கொடிமரம் உள்ள பீடத்தின் கால்கள் இடிந்து இரண்டாக பிளந்து நிற்கிறது.அம்மன் சன்னதியின் மூல கோபுரத்தில், காடு போல அரச மரங்கள் நன்றாக வளர்ந்து, சிலைகளும், கோபுரத்தின் கட்டுமானமும் சேதமடைந்துள்ளது. சிலைகளின் வர்ணம் மங்கி பொலிவிழந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட சமுதாயத்தினரின் குல தெய்வமாக விளங்கும் அங்காளம்மன் கோவிலை அறநிலையத் துறையினர் சிறப்பு கவனத்தில் கொண்டு உடனடியாக கும்பாபிஷேகத்தை நடத்திட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது.
    • பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோவிலில் தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பூதப்பாண்டியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதலிங்கசாமி-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் புத்தக சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக பாலாலயம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலையில் கோவிலில் நடந்தது.

    பிரசன்னத்தில், இந்த பகுதியில் இறப்புகள் அதிக அளவில் நடந்து வருகிறது. நோய்கள் பாதிப்பும் இருப்பது தெரிகிறது. எனவே கோவிலில் மிருத் யுஞ்சய ஹோமம் ஒரு வாரத்தில் செய்ய வேண்டும். கோவிலில் உள்ள ராகு, கேதுக்கு சரியான முறையில் பூஜைகள் செய்யப்பட வேண்டும். கோவிலில் நிர்வாகம் அதனை சரியாக செய்யவில்லை.

    ஆடம்பரம் இல்லாத காலத்தில் பூஜைகள் முறையாக நடந்தன. தற்போது ஆடம்பரமாகி விட்ட நிலையில் பூஜைகள் முறையாக நடத்தவில்லை. மேலும், இங்கு உள்ள ராமர் பாதம் மற்றும் சாஸ்தாவுக்கு தினசரி பூஜைகள் செய்ய வேண்டும்.

    தினசரி பூஜை செய்யும்போது சங்கு ஊதி, பாணி அடித்து, நெய்வேத்தியம் படைத்து பூஜைகள் நடத்த வேண்டும். தெப்பக்குளம் பாழடைந்து துர்நாற்றம் வீசுகிறது. அதற்கு ஜலபிரிதி பூஜை நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமேடு அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையப்பட்டி கிராமத்தில் சின்ன அம்மன், அரியநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கருடஹோமம், உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் 3 கால யாகபூஜைகள் முடிவடைந்ததும் வேத மந்திரங்கள் முழங்க கோவில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை வலையபட்டி, சின்னப்பட்டி தெரு விழா கமிட்டியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×