search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • இளையான்குடி அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள ஆத்திவயல் ஆதிருடையவர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் அருகே யாகசாலை அமைத்து அதில் புனித நீர் கடங்கள் வைத்து யாக பூஜைகள் நடந்தன. யாகத்தின் நிறைவில் பூர்ணாகுதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் மங்கள இசை முழங்க புனிதநீர் கடங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன் பின்னர் ஆதிருடையவர் அய்யனார் சுவாமி மூலவர் விமானக் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விமானக் கலசத்திற்கு தீபாரதனை கட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன் மற்றும் ஆத்திவயல், புக்குளி, மொச்சியேந்தல், சிறுபுக்குளி சுமாதரப்பு மற்றும் இதன் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.
    • இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கி வருகிறது.

    சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் உடனான பூரணை புஷ்கலை தேவியர் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்த கோவில் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குலதெய்வமாகவும் சிங்கம்புணரியின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 1-ந்தேதி நடைபெறுகிறது.

    கும்பாபிஷேக விழாவிற்கு ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. நேற்று கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருப்பணி குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.ராம அருணகிரி தலைமையில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, கோவில் கண்காணிப்பாளர் தன்னாயிரம், கிராம அம்பலம் சத்தியசீலன், கிராம முக்கியஸ்தர்கள் அடைக்கலம் காத்த நாட்டார்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    இதை தொடர்ந்து சேவகப்பெருமாள் உடனான பூரணை புஷ்கலை தேவியாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. தினமும் அன்னதான நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது.
    • விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த காராமணிக் குப்பம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

    கடலூர் - பண்ருட்டி மெயின் ரோட்டில் காராமணிக்குப்பம் குளக்கரை குப்பத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிந்தாமணி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலை கடந்த 2002 -ம் ஆண்டு புதிதாக கும்பாபிஷேகம் நடைபெற்று பராமரித்து வந்தனர். தற்போது கடலூர் - மடப்பட்டு சாலை விரிவாக்க பணியின் போது கோவிலை இடித்து விட்டு அதனை கட்டித் தருவதாக தெரிவித்தனர். ஆனால் இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களிடம்இருந்து பணம் வாங்கி தருகிறோம் என தெரிவித்தனர். ஆனால் இது நாள் வரை கோவில் கட்டுவதற்கு பணம் வழங்கவில்லை. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    • பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாதர் கோவில் உள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு இங்கு ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ மரகத நடராஜர் சிலை அமைந்துள்ளது. மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஆண்டு முழுவதும் இந்த சிலையின் மீது சந்தன கவசம் பூசப்பட்டு வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்தன்று சந்தனம் களைந்து பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

    இந்த மங்களநாதர் கோவில் சுவாமி சன்னதி முதல் பிரகாரம் கடந்த சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக முழுமை பெறாமல் காட்சி அளித்து வந்தது. குறிப்பாக சுவாமி சன்னதி பிரகாரத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியிலும், வடக்கு மற்றும் தெற்கு பகுதியிலும் பெரும்பாலான தூண்கள் மற்றும் மேல் தளங்களில் கற்கள் இல்லாமலும் முழுமை பெறாமலேயே காட்சி அளித்து வந்தது.

    இந்தநிலையில் சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் நன்கொடை மூலம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதியில் திருப்பணிகள் நடைபெற்று 4 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவடைந்தன. தற்போது மங்களநாயகி அம்பாள் சன்னதி உள்பிரகாரம் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் சேதமடையாமல் அதன் தன்மை குறையாமல் சுண்ணாம்பு, கருப்பட்டி, கடுக்காய் உள்ளிட்டவைகளை கொண்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சீரமைப்பு பணிக்காக தேவைப்படும் மணல் தஞ்சையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பணிகள் முடிந்து கோவிலின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு ராஜகோபுரம், அம்மன் சன்னதி கோபுரம், நடராஜர் சன்னதி கோபுரம், ராஜ கோபுரம் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்பாள் சன்னதி வெளிபிரகார பணிகளை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நந்தி மண்டப பிரகாரம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    திருஉத்தரகோசமங்கை கோவிலின் மராமத்து மற்றும் சீரமைப்பு பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து வரும் நவம்பர் அல்லது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம், ராயல் ஆர்கெஸ்ட்ரா இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவை ஜோதிலிங்க குருக்கள், கார்த்திகேய சிவாச்சாரியார் உள்ளிட்ட அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இதற்கிடையே கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பெரியோர்கள்,பொதுமக்கள் முடிவு செய்தனர். இதன்படி கடந்த 24-ந் தேதி (புதன்கிழமை) விநாயகர் வழிபாடு, திருவிளக்கு வழிபாடு,குபேர லட்சுமி யாகம், யாகசாலை பிரவேசம், உள்ளிட்ட யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், கோபுர கலச ஊர்வலம் நடைபெற்றது.

    அன்று மாலை இரண்டாம் கால பூஜை, கும்ப அலங்காரம், மகாலட்சுமி யாகம், நவகிரக யாகம் மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து 25ந் தேதி காலை மூன்றாம் கால யாக பூஜை உடன் துவங்கி, கோ பூஜை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, நவகாளி அர்ச்சனை உள்ளிட்டவை நடைபெற்று, காலை 9 மணிக்கு பெரிய விநாயகர், மாகாளியம்மன், துர்க்கை அம்மன், வள்ளி,தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர், காலபைரவர் உள்ளிட்ட மூலாலய மூர்த்திகள், கோபுர கலசங்கள், ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ,மகா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம், ராயல் ஆர்கெஸ்ட்ரா இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து 2 நாட்கள் அன்னதானம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேக விழாவை ஜோதிலிங்க குருக்கள், கார்த்திகேய சிவாச்சாரியார் உள்ளிட்ட அடிகளார் பெருமக்கள் நடத்தி வைத்தனர்.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் முருகசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் குருமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் திண்டு பாலு மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
    • இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

    சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. சிங்கம்புணரி வட்டார பகுதியில் உள்ள 100 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த கோவில் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. திருப்பணி குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம அருணகிரி தலைமையில் கோவில் அருகில் யாகசாலை அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். விழாவிற்கு சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    தற்போது பிரமாண்டமாக யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வருகின்ற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி முதல் யாகசாலையில் சிறப்பு வேள்வி நிகழ்ச்சிகள் தொடங்கி முதல் கால பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்குகிறது. பின்னர் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்ற 1-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ராம.அருணகிரி, தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம் திருப்பணி குழு கமிட்டியினர் மற்றும் அடைக்கலம் காத்த நாட்டார்கள் பரம்பரை ஸ்தானீகம் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

    • சாயல்குடி அருகே மறவர் கரிசல்குளத்தில் வில்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மறவர் கரிசல்குளம் கிராமத்தில் வில்வநாதர், விநாயகர், அரியநாச்சி அம்மன், சுப்பிரமணியர், தவசி தம்பிரான், தவமுனி மற்றும் பரிவார தெய்வங்கள் ராஜகோபுர கும்பாபிஷேக விழா நடந்தது.


    சிறப்பு அலங்காரத்தில் வில்வநாதர் சுவாமி.

    இதையொட்டி கடந்த 1-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு மதுரை ஆதீனம் சுந்தர மூர்த்தி ஞானசம்பந்த தேசிகர் சுவாமிகள், கோவை காமாட்சி ஆதீனம் ஞானகுரு சிவலிங்கேசுவர சுவாமிகள், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிந்தலக்கரை காலிபராசக்தி சித்தர் பீடம் ராமமூர்த்தி அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    கடந்த 3 தினங்களாக சுவாமிக்கு விக்னேசுவர பூஜை, புண்ணியாக வசானம், மகா சங்கல்பம், மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கணபதி வழிபாடு, வாஸ்து ஹோமம், கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம், முதல், 2-ம் கால, 3-ம் கால பூஜைகள், எந்திர பிரதிஷ்டை, விக்ரகப் பிரதிஷ்டை, மருந்து சாத்துதல், 4-ம் கால யாகம், கஜ, கோ, தன, சர்ப பூஜைகள் நடந்தன.

    இறுதி நாளான நேற்று கடம் புறப்பாடு நடந்து கோபுர கலசம், மூலஸ்தானம் மற்றும் சுவாமிகளுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 4 நாட்களாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • அலங்காநல்லூர் அருகே கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள மேலசின்னணம்பட்டி கிராமத்தில் மூங்கிலணை காமாட்சி அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி புனித நீர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்.

    • மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.
    • ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி மூலவர் விமான கோபுரத்தின் மீது தங்க முலாம் பூசும் பணிகள் தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்தது. அதையொட்டி அங்குரார்ப்பணம், யாக சாலையில் புண்யாஹவச்சனம், ரக்ஷா பந்தனம், மாலை ஸ்ரீவாரி காலகர்ஷணம் நடந்தன.

    22 மற்றும் 23-ந்தேதிகளில் காலை மற்றும் மாலை யாகசாலையில் மற்ற வைதீக காரியகர்மங்கள், 24-ந்தேதி காலை ஜலாதி வாசம், பிம்ப ஸ்தாபனம் உள்ளிட்ட சடங்குகளும், மாலை மகா சாந்தி திருமஞ்சனம் உள்ளிட்ட யாகசாலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    நேற்று காலை 7.45 மணியில் இருந்து காலை 9.15 மணிக்குள் மிதுன லக்னத்தில் கும்ப ஆராதனம், நிவேதனம், ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி, மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் ஆகியவை நடந்தது. அதன்பின் அக்ஷதாரோஹணம், அர்ச்சக பவனி நடந்தது. காலை 10.30 மணியளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திருமலை பெரிய, சின்னஜீயர் சுவாமிகள், கோவில் தலைமை அர்ச்சகர் சீனிவாசதீட்சிதர், ஆகம ஆலோசகர் சீதாராமச்சாரியலு, மோகன ரங்காச்சாரியலு, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் அசோக்குமார், இணை அதிகாரி வீரபிரம்மன், நிதித்துறை அதிகாரி பாலாஜி, சட்டத்துறை அதிகாரி வீரராஜூ, கோவில் துணை அதிகாரிகள் சாந்தி, கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி கோவிந்தராஜன், உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர்கள் நாராயணா, மோகன்ராவ், கோவில் ஆய்வாளர்கள் தனஞ்செயா, ராதாகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணை குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடம் புறப்பாடு நடைபெற்று, வேத பாராயணம், தேவாரம் திருமுறை பதிகங்கள் பாடப்பட்டு, பக்தி சிரத்தையுடன் சிவாச்சாரியார்கள் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். இந்த நிகழ்வில் அனைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • நாட்டார்மங்கலத்தில் வழிவிடு விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நாட்டார் மங்கலத்தில் உள்ள வழிவிடும் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறைஅமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கல கிராமத்தினர் செய்திருந்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திங்களூர் கிராமத்தில் பெருந்தேவி நாயகி சமேத ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் திருப்பணிகள் தொடங்கி முடிந்தது.

    இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேக விழா முதல் யாகசாலை கலா கர்ஷசனம் அக்னி மிதனம் அக்னி பிராணாயணம் யாகசாலை பிரவேசம் பூர்ணாஹூதியுடன் பூஜை துவங்கியது.

    நேற்று காலை நான்காம் யாகசாலை பூஜையில் மூல மந்திர ஹோமம், சிறப்பு மஹாபூர்ணாஹூதி நடை பெற்று மஹாதீபாரதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து வேதபாராயணங்கள் நாதஸ்வர இன்னிசை கச்சேரிகள் முழங்க புறப்பட்டு சன்னதியின் பிரகாரங்கள் உலா வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாள், தாயார் சன்னதி, ராஜகோபுரம் கலசங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலர் சக்திவேல், ஆய்வாளர் குணசுந்தரி, கணக்கர் செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராமவாசிகள், சேவா ர்திகள் செய்திருந்தனர்.

    ×