search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரசம்ஹாரம்"

    திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பாவாடை தரிசனமும் நடந்தது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8-ந்தேதி வேல்வாங்குதலும், 9-ந்தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. பக்தர்கள் கோவிலுக்குள் காப்புகட்டி விரதமிருக்க அனுமதிக்கப் படாததையொட்டி நேற்று காலையில் கிரிவலத்தில் சட்ட தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் வழக்கம்போல சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் உக்ரம் (கோபம்) தணிக்கும் பொருட்டாக பாவாடை தரிசனம் நிகழ்வு நடைபெற்றது. இதனையொட்டி 100 படி அரிசி சாதம் படைத்து அதில் 20 லிட்டர்தயிர் கலந்து கருவறையில் முருகப்பெருமானுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது

    இதனைத்தொடர்ந்துசிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு "தங்க கவசம்" அணிவிக்கப்பட்டது. இதேபோல கருவறையில் அமைந்து உள்ள சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர் ஆகிய விக்ரங்களுக்கும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப் பட்டது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அங்கு பெரும்பாலான பக்தர்கள் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தனர். இந்த கோவிலை பொறுத்தவரை கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளில் மாலை 5 மணிக்குமேல் இரவு 9 மணி வரையிலும், தமிழ் புத்தாண்டு அன்றும் கருவறையில் முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிப்பது. வழக்கம். அதன்படி கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவில் சுப்பிரமணி சாமி கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆலய பணியாளர்கள், பிரதோஷ கமிட்டியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் மாங்கல்யபிரசாதம் வழங்கப்பட்டது. கல்யாண விருந்து அன்னதானம் பார்சலாக வழங்கப்பட்டது. இரவு சாமி-அம்மன் புறப்பாடு கோவில் வளாகத்தில் நடந்தது.காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சோழவந்தான் பிரளயநாதர் சாமி கோவிலிலும், திருவேடகம் ஏடகநாதர் சாமி கோவிலில் கந்தசஷ்டி நிறைவு விழா நடைபெற்றது.
    8-ம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு பட்டினப்பிரவேசம், 9 மற்றும் 10-ம் திருவிழாவான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஊஞ்சல் வைபவம் 12-ம் திருவிழாவான திங்கட்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் யாக சாலையில் தீபாராதனை, தொடர்ந்து சுவாமி தங்க சப்பரத்தில் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வருதல், மாலையில் சுவாமி மற்றும் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை கடற்கரையில் நடைபெற்றது. 2-ம் ஆண்டாக பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், இணை ஆணையர் குமரதுரை உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான இன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விசுவரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 6 மணிக்கு மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

    8-ம் திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு பட்டினப்பிரவேசம், 9 மற்றும் 10-ம் திருவிழாவான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு ஊஞ்சல் வைபவம் 12-ம் திருவிழாவான திங்கட்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
    திருத்தணி முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து தினசரி காவடி மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி விழா நேற்று மாலை நடைபெற்றது.

    கொரோனா அச்சறுத்தல் காரணமாக லட்சார்ச்சனை ரத்து செய்யப்பட்டது. பக்தர் கள் உட்கார்ந்து தரிசிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்து இருந்தது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவசம், வைர கிரீடம், பச்சைக் கல் மரகத மாலை மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    திருத்தணி மா.பொ.சி. சாலையில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் புஷ்பங்கள் அடங்கிய கூடைகளை மலைக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

    சுமார் ஒரு டன் எடையுள்ள பல்வேறு வகையான பூக்களால் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடத்தி தீப ஆராதனை செய்யப்பட்டது.

    இன்று காலை 10 மணி அளவில் காவடி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலி சரடு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.
    மதுரை மாவட்டம், அழகர் மலையில் உள்ள 6-வது படைவீடான பழமுதிர்ச்சோலை சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி திருக்கோவிலின் ஈசான திக்கில் கஜமுகாசுரனையும், அக்கினி திக்கில் சிங்க முகாசுரனையும் சம்ஹாரம் செய்தார்.

    ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மா சூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி இருப்பிடம் சென்ற பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    பின்னர் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. இன்று (புதன் கிழமை) காலை சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் காட்சியளித்தார்.

    திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
    இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
    சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்றக்குடி கோவிலில் கந்த சஷ்டி விழா எளிமையாக நடந்தது. இந்நிலையில் இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.

    முன்னதாக நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் மூலவர் சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று பெய்த தொடர் மழை காரணமாக காலை முதல் பக்தர்கள் வரத்து இல்லாததால் கோவில் வளாகம் மற்றும் கோவில் மலைக்குன்று பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
    இன்று (புதன்கிழமை) காலை கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது.
    கோவையை அடுத்த மேற்கு மலை தொடர்ச்சி மலையில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இது முருகனின் 7-வது படைவீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் கடந்த 5- ந் தேதி தொடங்கியது.

    இதையொட்டி தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜை, சத்ரு சம்ஹார வேள்வி, விநாயகர் பூஜை, சண்முக அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் போன்ற 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 3 மணியளவில் சுவாமி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னை பராசக்தியிடம் வேலை பெற்றுக் கொண்ட சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் கோவிலின் முன்புறம் எழுந்தருளினார். வீரபாகுதேவர் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி னார். பின்னர் அவர்கள் கோவிலை சுற்றி வீதி உலா வந்தனர்.

    இதைத்தொடர்ந்து முருகப்பெருமான் முதலில் தாரகாசுரனை வதம் செய்தார். இரண்டாவதாக பானுகோபனை வதம்செய்தார். 3-வதாக சிங்க முகாசுரனை வதம் செய்தார். 4-வதாக சூரபத்மனின் தலையை வேலால் துண்டித்து முருகப்பெருமான் வதம் செய்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த சிவாச்சாரியார்களும், கோவில் ஊழியர்களும் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என பக்தி முழக்கமிட்டனர். இதையடுத்து சூரபத்மனை வதம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் மகாதீபாராதனை நடந்தது. சூரசம்ஹார விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை. கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றனர்.

    இன்று (புதன்கிழமை) காலை கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல், பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் யானை வாகனத்தில் கோவிலை சுற்றி வீதிஉலா வருகிறார். இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நேற்று மருதமலையில் சூரசம்ஹார நிகழ்ச்சியை புகைப்படம் மற்றும் செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் மலையடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினர், மலைக்கு மேலே கோவிலுக்கு செல்ல நிருபர்களுக்கு அனுமதி அளித்தனர். இதே போல் கோவை காந்திபார்க் பாலதண்டாயுதபாணி கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் யாரும் அனுமதிக் கப்படவில்லை
    திருப்பரங்குன்றம், சோலைமலையில் கந்தசஷ்டி விழா சூரசம்ஹாரம் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. அந்த நிகழ்ச்சிகள் முடியும் வரை நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    கந்த சஷ்டி விழா முருகப்பெருமான் ேகாவில்களில் சிறப்பாக நடைபெறும். அதிலும் அறுபடை வீடுகளில் நடைபெறும் கந்தசஷ்டி மிகவும் சிறப்புக்குரியது.

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி, கடந்த 4-ந்தேதி சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் கோவிலுக்குள் நேற்று பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்தது. இதனையொட்டி சிறப்பு அலங்காரத்துடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். இதனையடுத்து போர்படை தளபதி வீரபாகு தேவரும், முருகப்பெருமானின் பிரதிநிதியாக முதல் ஸ்தானிகரான சிவானந்த பட்டரும் அங்கு வந்தனர். இந்த நிலையில் இருமாப்பு கொண்ட சூரபதுமன் திருவாட்சி மண்டபத்தை சுற்றிவந்தான்.

    முருகப்பெருமான் தன் தயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற சக்திவேலான நவரத்தினவேல் கொண்டு சூரபதுமனை வதம் செய்தார். இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவானந்த பட்டர் தனது கையில் வேல் ஏந்தி சம்ஹாரம் சார்ந்த புராண கதை கூறினார். இதனை தொடர்ந்து முருகப்பெருமான் உற்சவர் சன்னதிக்கு சென்றார். அங்கு மேளதாளங்கள் முழங்கமுருகப்பெருமான், தெய்வானைக்கு மாலை மாற்றி மகா தீபாராதனை நடந்தது.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி இன்றி சூரசம்ஹாரம் நடந்தது. அதாவது, மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    சன்னதி தெருவில் பக்தர்கள் குவிந்து 3 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து, அதன் பின்பு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாக தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி சட்டத்தேரில் இன்று கிரிவலம் வருவது வழக்கம். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    இன்று மாலை 4 மணி அளவில் பாவாடை தரிசனம் நிகழ்ச்சியும், முருகப்பெருமானுக்கு தங்க கவச அலங்காரமும், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய்பெருமாள், கற்பகவிநாயகர், துர்க்கை அம்பாளுக்கு வெள்ளிக் கவச அலங்காரமும் செய்யப்படுகிறது

    மதுரை மாவட்டம் அழகர் மலை உச்சியில் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலையில் நடந்தது.

    இதையொட்டி வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பாடாகி கோவிலின் கஜமுகாசூரனையும், அடுத்து சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்த பின்னர், ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் சூரபதுமனையும் சம்ஹாரம் செய்தார்..

    இதையடுத்து சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு சாந்த அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது.

    தொடர்ந்து இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்குமேல் சஷ்டி மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலையில் கோவில் உள் பிரகாரத்தில் பல்லக்கு வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    கொரோனா பரவல் தடுப்புக்காக இந்த ஆண்டும் சூரசம்ஹாரத்தை காண நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. சூரசம்ஹார நிகழ்ச்சிகள் முடிந்து சுவாமி இருப்பிடம் சென்ற பின்னரே, நீண்ட நேரத்துக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மேற்பார்வையில் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், உள் துறை அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சத்திரப்பட்டி, அப்பன் திருப்பதி போலீசார் செய்திருந்தனர்.
    ராமேசுவரம் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா பக்தி கோஷத்துடன் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கடந்த 4-ந்தேதி அன்று கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதேபோல் ராமேசுவரம் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது.

    வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெருமான் கோவிலில் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ராமலிங்க பிரதிஷ்டை மண்டபம் எதிரே உள்ள பிரகாரத்தில் வேலால் சூரனின் தலையை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து சூரனை வதம் செய்த வேலுக்கு பால் மற்றும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதை .தொடர்ந்து முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண மூன்றாம் பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியானது கோவிலின் மேற்கு வாசல் ரத வீதி பகுதியில் வைத்து நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு தட்டுப்பாடு காரணமாக 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் கோவிலுக்குள்ளேயே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் இணை ஆணையர் பழனி குமார், பேஸ் கார்கள் முனியசாமி, ராமநாதன், கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்

    இதேபோல் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலிலும், ராமநாதபுரம் ரணபலிமுருகன் கோவில், குண்டுக்கரை சாமிநாத சாமி கோவிலிலும் கோவிலின் உள்ளேயே வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. அதுபோல் இன்று(புதன்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பு இன்றி எளிமையாக நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக கருதப்படும் திருச்சீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், முருகபெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். சூரபத்மனை வென்று தேவர்களை காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 4-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

    தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மதியம் 2.45 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவில் கடற்கரை முகப்பிற்கு வந்தான். மாலை 4.55 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரை முகப்பில் எழுந்தருளினார். முதலில் மாயையே உருவாக கொண்ட யானைமுகனான தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போர் புரிவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டியவாறு வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே நின்று போரிட தயாரானான். மாலை 5.13 மணிக்கு தாரகாசூரனை வேல் கொண்டு முருகபெருமான் வதம் செய்தார்.

    தொடர்ந்து கன்மமே உருவான சிங்கமுகாசூரனும் முருகபெருமானுடன் போரிடுவதற்காக உக்கிரத்துடன் வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை வலம் வந்து நேருக்கு நேர் போர் புரிய தயாரானான். மாலை 5.22 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

    சகோதரர்களின் இழப்பால் ஆத்திரம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மனும் தனது படைவீரர்களுடன் முருகபெருமானுடன் போரிட வேகமாக வந்தான். முருகபெருமானை 3 முறை சுற்றி போரிட வந்த சூரபத்மனையும் மாலை 5.30 மணிக்கு சுவாமி வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுற்றி வந்து வட்டமிட்டது.

    இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

    தாரகாசூரன், சிங்கமுகாசூரன், சூரபத்மன் ஆகியோர் போர் புரிய வந்ததையும் படத்தில் காணலாம்.

    பின்னர் சினம் தணிந்த முருக பெருமானுக்கும், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் எழுந்தருளினார். அங்கிருந்த கண்ணாடியில் தெரிந்த சுவாமியின் பிம்பத்துக்கு சாயாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் இந்து சமய அறநிலைய துறை ஆணையாளர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், உதவி கலெக்டர் (பயிற்சி) ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுப்புலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, தாசில்தார் சுவாமிநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வழக்கமாக சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. மேலும் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    சூரசம்ஹாரம் நடைபெற்ற கடற்கரை நுழைவு பகுதியில் 3 பக்கமும் தகரத்தை கொண்டு அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வராத வகையில் நாழிக்கிணற்றில் இருந்து கடல் நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் போலீசார் கண்காணிப்பு கோபுரத்தில் நின்றபடி கண்காணித்தனர்.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சூரனை வதம் செய்த முருகபெருமானை பெரும்பாலான பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்தே தொலைக்காட்சிகளிலும், இணையதளம் மூலமாகவும் ‘கந்தனுக்கு அரோகரா, வெற்றிவேல் முருகனுக்கு’ அரோகரா போன்ற பக்தி கோஷங்களை முழங்கியவாறு மனமுருக தரிசித்தனர்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் மற்றும் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 உதவி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 56 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    திருவிழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்றும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் திருச்செந்தூர். இங்கு முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். சூரபத்மனை வென்று தேவர்களைக் காத்த இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 4-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமி, அம்பாள்களுக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. 

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான இன்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் யாகசாலையில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. 

    இதையடுத்து, மதியம் 2.45 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் இருந்து சூரபத்மன் தனது படைவீரர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவில் கடற்கரை முகப்பிற்கு வந்தான். மாலை 4.55 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் வண்ண மலர்களாலான மாலைகள் அணிந்து அலங்காரத்துடன் கையில் வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்வதற்காக கடற்கரை முகப்பில் எழுந்தருளினார்.

    முதலில் மாயையே உருவாக கொண்ட யானை முகனான தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகபெருமானிடம் போர் புரிவதற்காக ஆக்ரோஷமாக தலையை ஆட்டியவாறு வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை சுற்றி வந்து சுவாமிக்கு எதிரே நின்று போரிட தயாரானான். மாலை 5.13 மணிக்கு தாரகாசூரனை வேல் கொண்டு முருகபெருமான் வதம் செய்தார்.
    தொடர்ந்து கன்மமே உருவான சிங்கமுகாசூரனும்   முருகபெருமானுடன் போரிடுவதற்காக உக்கிரத்துடன் வந்தான். அவன் முருகபெருமானை 3 முறை வலம் வந்து நேருக்கு நேர் போர் புரிய தயாரானான். மாலை 5.22 மணிக்கு சிங்கமுகாசூரனையும் முருகபெருமான் வேலால் வதம் செய்தார்.

    சகோதரர்களின் இழப்பால் ஆத்திரம் அடைந்த ஆணவமே உருவான சூரபத்மனும் தனது படைவீரர்களுடன் முருகபெருமானுடன் போரிட வேகமாக வந்தான்.  முருகபெருமானை 3 முறை சுற்றி போரிட வந்த சூரபத்மனையும் மாலை 5.30 மணிக்கு சுவாமி வேல் எடுத்து சம்ஹாரம் செய்தார். அப்போது வானத்தில் கருடன் 3 முறை சுற்றி வந்து வட்டமிட்டது.

    இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வந்த சூரபத்மனை முருகபெருமான் சேவலும், மயிலுமாக மாற்றி தன்னுடன் ஆட்கொண்டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.

    சூரசம்ஹார நிகழ்ச்சியில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2-வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    திருவிழாவின் 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) இரவு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இன்றும் பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை.
    முருகபெருமானது வரலாறுகளையும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.
    ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான்.

    சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான் சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில்களில் இன்று நடக்கிறது. சூரனை சம்ஹாரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே காண்போம்...!

    முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனுக்கு எதிரான போருக்கு முருகப்பெருமான் புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகு தேவர், வீரகேசரி, வீர மகேந்திரா, வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படை தளபதிகளாக விளங்கினர். சூரபத்மனையும், அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலை நாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.

    வெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன்பதக்கத்தை முருகன் பெற்றார்.

    முருக பெருமானின் படைகள் ஏழு கடல்களையும் கலக்கி ஆரவாரத்துடன் புறப்பட்டன. சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3-ம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுக சூரன் சிங்கமென சீறிப்பாய்ந்து போர்க்களம் வந்தான்.

    ஆனால் முருகப்பெருமானின் வேல், சிங்கமுக சூரனை சம்ஹாரம் செய்து, அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபத்மன் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மனின் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபத்மன் மட்டுமே. பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப்போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி, மாறி மாயத்தால் தப்பினான். இறுதியில் முருகப்பெருமானின் வேல் படை சூரபத்மனை தேடி சென்று செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மறைந்த மாமரத்தை இருகூறாக பிரித்தது.

    சூரபத்மன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறியது. பின்னர் முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி, மீண்டும் முருகன் கைக்கு வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு ஆனது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும், மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.

    தேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் தலத்துக்கு முருகப்பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த 6 முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவதச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர். தேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்ய எண்ணி பிரம்மனிடம் தெரிவிக்க, பிரம்மன் முருகனின் உளப்பாங்கு அறிந்து அவரிடம் தனது விண்ணப்பத்தை வைத்தார். முருக பெருமானும் மகிழ்ந்து சம்மதம் சொன்னார்.

    திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்-பார்வதிதேவியை முருகன்-தெய்வானையுடன் மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர். பின்னர் முருகப்பெருமான் நீலமயில் மீது ஏறி குன்றிலே தேவசேனாதேவியுடன் எழுந்தருளி அருள் புரிந்தார்.

    முருகபெருமானது வரலாறுகளையும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண வைபவங்களையும் உணர்ந்து, கந்த சஷ்டியன்று அவரது தரிசனம் பெற்ற அனைவருக்கும் ஆறுமுக பெருமான் ஆனந்த வாழ்வு தருவார்.
    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும்.
    ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா ஏழு நாட்கள் நடைபெறும்.

    திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி துவங்கியது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் உற்சவர் சண்முகர் சிறப்பு அலங்காரத்தில் காவடி மண்டபத்தில் எழுந் தருளினார்.

    அதனைத் தொடர்ந்து உற்சவர் சண்முகர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனை நடத்தப்படவில்லை.

    மேலும் இன்று அதிகாலை மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அரக்கோணம் சாலையில் உள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக உற்சவர் சண்முகப் பெருமாள் காவடி மண்டபத்தில் எழுந்தருள்வார்.

    அதனைத் தொடர்ந்து மாலையில் சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனை நடைபெறும். நாளை காலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அமர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. இதற்கு மாறாக பக்தர்கள் வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    புஷ்பாஞ்சலி மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் யூடியூப்சேனல் மற்றும் இணைத்தளம் மூலம் நேரடி ஒளி பரப்பு செய்ய கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    ஆறுபடை வீடுகளில் முருகன் கோவில்களில் கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். முருகப்பெருமான் சினம் தணிந்து வள்ளியை திருமணம் செய்ததால் புஷ்பாஞ்சலி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×