search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    சென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆஜராக மாட்டோம் என்று வக்கீல்கள் தெரிவித்து உள்ளனர். #ChennaiGirlHarassment #POCSOAct
    சென்னை:

    சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.

    11 வயது, 5 மாதங்கள் நிரம்பிய அந்த சிறுமி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து, காமக்கொடூரர்களின் காமப்பசிக்கு பலியாகி இருக்கிறார்.

    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுமியின் தந்தை, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இந்த சிறுமியின் மூத்த சகோதரி மராட்டிய மாநிலம் அவுரங்கபாத்தில், ஓட்டல் மேனேஜ்மெண்ட் சம்பந்தமான பட்டப்படிப்பு படித்து வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை சேத்துப்பட்டில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு காது கேட்கும் திறன் குறைவாக உள்ளது. வெகுளித்தனமான அந்த சிறுமி யாரிடமும் அன்பாக பழகக்கூடிய சுபாவம் உள்ளவர்.



    அதை பயன்படுத்தி தான் 23 பேர் கொண்ட காமவெறியர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் தோட்டக்காரர் முதல், காவலாளி வரை அந்த சிறுமியை தங்கள் உல்லாசத்துக்கு விருந்து படைக்க வைத்துள்ளனர்.

    அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிறிய காயங்கள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமியின் மூத்த சகோதரி சென்னைக்கு வந்திருக்கிறார். சிறுமியின் கழுத்தில் உள்ள காயங்களை பார்த்து விவரம் கேட்டுள்ளார். அதற்கு பிறகுதான் கதறி அழுதபடி தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி சிறுமி விவரமாக கூறியிருக் கிறார். அதன்பிறகு சிறுமியின் பெற்றோருக்கு இந்த வி‌ஷயம் தெரிய வர அவர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.



    இந்த கொடூர சம்பவம் குறித்து அயானவரம் உதவி போலீஸ் கமி‌ஷனர் சிராஜூதீனை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த புகார் மனு பற்றி தெரியவந்ததும் கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், இணை கமி‌ஷனர் அன்பு, துணை கமி‌ஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயசந்திரிகா, வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ‘போக்சோ’ சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    23 பேர் கொண்ட காமவெறியாட்ட கும்பல், சிறுமியை சீரழித்துள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 6 பேர் கைதானார்கள். அடுத்தகட்டமாக மேலும் 12 பேரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட 18 பேரில், 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    1. முருகே‌ஷ் (வயது 54) - பாளையக்கார தெரு அயனாவரம். 2. பரமசிவம் (60) - அயனாவரம் சி.கே. தெருவைச் சேர்ந்தவர். 3. ரவிக் குமார் (66) - பங்காரு தெரு அயனாவரம். 4. ஜெய்கணே‌ஷ் (23) - வசந்தா கார்டன் முதல்தெரு, அயனாவரம். இவர் சிறுமி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 5. பாபு (36) - எஸ்.வி.எம்.நகர், ஓட்டேரி- லிப்ட் இயக்கும் தொழிலாளி. 6. பழனி (40) - காந்திநகர், புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 7. தீனதயாளன் (50) - மேட்டுத்தெரு, அயனாவரம், லிப்ட் இயக்கும் ஊழியர். 8. அபிஷேக் (23) - பழனியப்பா 2-வது தெரு, அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 9. சுகுமாரன் (60) - பாலாஜி நகர், 4-வது மெயின்ரோடு, கதின்மேடு, அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 10. இறால் பிரகா‌ஷ் (58) - நீல்ஸ் கார்டன், பெரம்பூர், அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. 11. ராஜா (32) - அம்பேத்கர் நகர், அயனாவரம், அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக வேலை செய்பவர். 12. சூர்யா (23) - ராஜாதோட்டம் 2-வது தெரு, புளியந்தோப்பு, அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக உள்ளார். 13. சுரே‌ஷ் (32) - கன்னியப்பன் தெரு, கொளத்தூர், பிளம்பராக வேலை செய்பவர்.

    14. ஜெயராமன் (26) - நரசிம்மன் நகர், 3-வது தெரு கொடுங்கையூர், எலக்ட்ரீசியனாக உள்ளார். 15. ராஜசேகர் (40) - வசந்தா கார்டன் 2-வது தெரு, அயனாவரம், வீட்டு வேலை செய்பவர். 16. குணசேகர் (55) - மதுரை பிள்ளைத்தெரு, அயனாவரம், தோட்ட வேலை செய்பவர். 17. உமாபதி (42) - எம்.கே.பி.நகர், காவலாளி வேலை செய்பவர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். ஒருவரை காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    கைதான 17 பேரில், 66 வயது நிரம்பிய லிப்ட் ஊழியர் ரவிக்குமார் தான், முதன் முதலாக சிறுமியிடம் பழகியிருக்கிறார். சிறுமி லிப்ட்டில் செல்லும்போது, ரவிக்குமாரிடம் அன்பாக பேசியிருக்கிறார். அவரது வெகுளித்தனத்தை பயன்படுத்தி ரவிக்குமார் கத்திமுனையில் மிரட்டி முதன் முதலாக சிறுமியை தனது காம இச்சைக்கு பணிய வைத்திருக்கிறார்.

    அதன்பிறகு, ரவிக்குமார் மூலமாக ஒவ்வொருவரின் காமஇச்சைக்கும் சிறுமி பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் சிறுமிக்கு போதை ஊசிபோட்டும், போதை மாத்திரை கொடுத்தும், ‘செக்ஸ்’ விளையாட்டில் ஈடுபட்டனர். சிறுமியிடம் உறவு கொள்வதை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. லிப்ட் ஊழியர் ரவிக்குமார், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். அவரைத்தொடர்ந்து கைதான மற்றவர்களும் சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

    சிறுமியை சீரழித்தவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்று தெரியவந்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியிலும், ‘லிப்ட்’டுக்குள்ளும், வைத்து சிறுமியை கெடுத்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகாத வகையில், மறைவான இடங்களில் வைத்து காமவெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

    கைதானவர்களில் 7 பேர் 50 வயதை தாண்டியவர்கள். பேரன் பேத்தி கண்டவர்கள் ஆவார்கள். ஈவு இரக்கம் இல்லாமல், இந்த மாபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் சிறுமியைக் கெடுத்த ரவிக்குமார் சிறுமியிடம் தாத்தா போல் பழகியுள்ளார். அந்த உரிமையில் தொட்டு கட்டிப்பிடித்து விளையாடிய ரவிக்குமார் நாளடைவில் தன் இச்சைக்கு இணங்க வைத்துவிட்டார்.

    சிறுமியின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட்டு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும், அவர்கள் மீது விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சிறுமி கொடூரமாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை, நேற்று காலை 11.30 மணிக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் போலீசார் அழைத்து வந்தனர்.

    மதியம் 1.15 மணிக்கு அந்த 17 பேரும் நீதிபதி மஞ்சுளா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அவர்கள் 17 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த நடைமுறை முடிவதற்கு மதியம் 3 மணி ஆகிவிட்டது. இதன்பின்னர் மதியம் 3.15 மணிக்கு 17 பேரையும் கோர்ட்டில் இருந்து சிறைக்கு கொண்டு செல்வதற்காக கோர்ட்டு அறையில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர். மகளிர் கோர்ட்டு 3-வது மாடியில் செயல்பட்டு வருவதால், அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவே அழைத்துவரப்பட்டனர்.

    அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் சிலர் குற்றவாளிகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். ஒருகட்டத்தில் குற்றவாளிகள் படிக்கட்டில் இருந்து இறங்கியதும் அவர்களை வக்கீல்கள் சூழ்ந்து சரமாரியாக தாக்க தொடங்கினர். சுமார் 10 நிமிடங்கள் இந்த தாக்குதல் நீடித்தது.

    தாக்குதலில் சிக்கிய கைதிகள் ‘அய்யோ... அம்மா...’ என்று கதறியபடி தரையில் உருண்டனர். 2 கைதிகள் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளப்பட்டு தாக்கப்பட்டனர்.

    முதலில் படிக்கட்டில் இறங்கிய 5 குற்றவாளிகள் மட்டுமே வக்கீல்கள் பிடியில் சிக்கிக்கொண்டதால், அவர்களை மீட்க போலீசார் கடும் சிரமப்பட்டனர். ஒருகட்டத்தில் அவர்களை வக்கீல்களிடம் இருந்து மீட்ட போலீசார், உடனடியாக மீண்டும் அதே கோர்ட்டு அறைக்குள் அழைத்துச்சென்று கதவுகளை மூடினர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் ஏராளமான வக்கீல்கள் மகளிர் கோர்ட்டு முன்பு திரண்டனர்.

    இதனைத் தொடர்ந்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஜெயராம், ஆனந்தகுமார் சின்ஹா, கலைச்செல்வன், அன்பு ஆகியோர் கோர்ட்டுக்கு விரைந்து வந்தனர். அதேபோன்று அங்கு வந்த வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன், வக்கீல் சங்க பிரதிநிதிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன், நீதிபதிகள் சுபாதேவி, மஞ்சுளா, ஜெயந்தி, தர்மன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    வக்கீல்களை கலைந்து போக சொன்னால் மட்டுமே குற்றவாளிகளை பத்திரமாக அழைத்து செல்ல முடியும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் வக்கீல்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

    மகளிர் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் வெளியே அழைத்து செல்லும் அனைத்து வழிகளிலும் வக்கீல்கள் கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இரவு 7 மணிக்கு மேல் வக்கீல்கள் கோர்ட்டில் இருந்து கலைந்து செல்ல தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு குற்றவாளிகளை போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வேனில் ஏற்றினர். அப்போது அங்கிருந்த வக்கீல்கள் குற்றவாளிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர். வக்கீல் ஒருவர் குற்றவாளிகள் இருந்த வேன் சாவியை பறிக்க முயன்றார்.

    அப்போது சாவி வேனுக்குள் விழுந்தது. இதைத்தொடர்ந்து சாவியை எடுத்த டிரைவர் வேனை அங்கிருந்து வேகமாக எடுத்துச்சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த வக்கீல்கள் வேனை கைகளால் தட்டியபடி ஆவேசமாக கோ‌ஷமிட்டனர்.

    பின்னர் அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் யாரும் ஆஜர் ஆக மாட்டார்கள் என்று ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிரு‌ஷ்ணன் அறிவித்து உள்ளார். 
    கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பயிற்சியாளரை போலீசார் கைது செய்தனர். #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    தேசிய பேரிடர் மேலாண்மை குழு சார்பில் கோவை அருகே தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெற்றது. இதில் கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போதோ கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    3 மாடிகளை கொண்ட இந்த கல்லூரியில் 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றுவது போலவும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி பெறுவதற்காக மாணவிகள் 2-வது மாடியில் நின்றுகொண்டு இருந்தனர். கீழே மாணவிகளை காப்பாற்றுதவற்காக சிலர் வலையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.

    இந்த கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்த லோகேஸ்வரி (வயது 19) என்பவரும் பயிற்சியில் கலந்துகொண்டார். இவர் 2-வது மாடியில் இருந்து கீழே குதிக்க தயக்கம் காட்டினார். அப்போது மேலே நின்றுகொண்டிருந்த பயிற்சியாளர் ஒருவர் தைரியமாக குதி என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

    ஒருகட்டத்தில் மாணவியின் கையைப் பிடித்து கீழே குதிக்கவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரியின் தலை முதல் மாடியில் இருந்த சிலாப்பில் இடித்தது. இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் பலமாக அடிபட்டது. இதனை பார்த்துக்கொண்டு இருந்த மாணவிகள் பயத்தில் அலறினர்.



    காயமடைந்த மாணவி லோகேஸ்வரி உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முதலுதவி பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.#CoimbatoreStudent #Logeshwari




    கோவை நரசிபுரத்தில் தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CoimbatoreStudent #Logeshwari
    கோவை:

    கோவையில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கிவருகிறது. இந்நிலையில், அந்தக் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்டம் சார்பாக, பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றிருக்கிறது.  அந்த கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயின்றுவந்த  லோகேஸ்வரி  என்ற மாணவி, கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது 2-வது மாடியில் இருந்து பாதுகாப்பு கயிறு கட்டாமல் பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மாணவியை பிடிப்பதற்காக மாணவர்கள் வலையுடன் இருந்தபோது சன்ஷேடில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார். மாணவி குதிப்பதற்கு முன்னதாக பயிற்சியாளர் அவரை கீழே தள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. மாணவி எதிர்பாராத விதமாக சன்ஷேடில் மோதி கீழே விழுந்தார். அவருடைய தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  #CoimbatoreStudent #Logeshwari #tamilnews
     
    தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் சேதுமணி மகன் சதீஸ்குமார்(வயது23). ஆட்டோ டிரைவர். திருமணமாகி அதேபகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

    வடக்குதெருவை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது அவரிடம் சதீஸ்குமார் ஆசைவார்த்தை கூறி ஆட்டோவில் அழைத்துச்சென்றுள்ளார்.

    அதேபகுதியில் புதரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அழுதுகொண்டே தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் வழக்குபதிவு செய்து சதீஸ்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். #tamilnews
    திருவொற்றியூரில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சட்டக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதி கோபி நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் அஸ்வினி (வயது 20). இவர் சென்னை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், நாகை மாவட்டம் வேதாரண்யம் செட்டிபுலத்தை சேர்ந்த தென்னவன் (25) என்பவரும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கமாகி காதலித்து வந்தனர்.

    தென்னவன், சென்னை பூந்தமல்லியில் தங்கி அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 3-ந் தேதி அஸ்வினி வீட்டில் அனைவரும் கேரளாவுக்கு சென்று விட்டனர்.

    அஸ்வினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். காதலன் தென்னவனை தன் வீட்டுக்கு அவர் வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு தென்னவன் பரிதாபமாக இறந்து போனார்.

    சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காதலன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட அஸ்வினியை திருவொற்றியூர் சக்திபுரத்தில் உள்ள உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீட்டில் அஸ்வினி மட்டும் தனியாக இருந்தார். இரவு வீடு திரும்பிய உறவினர்கள் கதவை தட்டினர்.

    ஆனால் வெகுநேரமாக கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அஸ்வினி தூக்கில் தொங்கியபடி கிடந்தார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த அஸ்வினியை கீழே இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அஸ்வினி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
    உலக அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தருவேன் என்று இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் தெரிவித்தார். #MissIndia #AnukreethyVas
    சென்னை:

    ‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி மும்பையில் கடந்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி நடைபெற்றது. இதில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அனுகீர்த்தி வாஸ் (வயது 19) இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனையடுத்து சென்னைக்கு நேற்று வந்த அனுகீர்த்தி வாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திய அழகி போட்டி நடத்தப்பட்ட 30 நாட்களும் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தது. இந்த இடத்துக்கு நான் வருவதற்கு என்னுடன் பங்கேற்ற 29 போட்டியாளர்களும், அமைப்பும் தான் காரணம். பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.



    தமிழக பிரதிநிதியாக பங்கேற்றதே எனக்கு பெருமையான விஷயம். அதிலும் வெற்றி பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. ‘மிஸ் இந்தியா’ போட்டி பற்றிய விழிப்புணர்வு தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. விழிப்புணர்வு இருந்தால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். மற்றொரு இந்திய அழகி மற்றும் உலக அழகி தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்று உறுதியாக கூறுகிறேன்.

    உலக அழகிப்போட்டி சீனாவில் வருகிற டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. எனக்காக பல்வேறு நிபுணர்கள், குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். நான் என்னால் முடிந்த அளவு அனைத்து துறையிலும் சிறந்தவளாக மாறிக்கொண்டு வருகிறேன். அதற்காக எனக்கு பல்வேறு தரப்பினரும் உதவிபுரிகிறார்கள். இந்தியாவின் சார்பில் வெளிநாட்டு மண்ணில் பங்கேற்கும் பிரதிநிதி என்பதால் உடல் தகுதி உள்பட அனைத்து தகுதிகளையும் சிறப்பான முறையில் மேம்படுத்தி வருகிறேன்.

    உலக அழகி போட்டியை கவனத்தில் வைத்தே என்னுடைய பயணம் தொடர்கிறது. 17 வருடங்களுக்கு பின்னர் நமது நாட்டை சேர்ந்த மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்று மகுடம் சூட்டினார். தற்போது அதனை தொடருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதே என்னுடைய பொறுப்பு.

    அதற்காக முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன். உலக அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத்தருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அழகி பட்டத்தை வெல்பவர்கள் பணக்காரர் களாக தான் இருக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். பணம் ஒரு பொருட்டல்ல. திறமைகளை வைத்தே அதில் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இந்திய அழகி பட்டத்தை பெற்றதற்கு எனது தாயாருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை தனியாக வளர்ப்பதே பெரிய விஷயம். அதிலும் உன் கனவு எதுவோ அதை நிறைவேற்று, உன்னால் முடியும் என்று சொல்லி வளர்ப்பது பெரிய விஷயம். எனது அம்மாவினாலேயே நான் இந்த அளவுக்கு வந்திருக்கிறேன்.

    நான் லயோலா கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் (பிரெஞ்சு) 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். இந்திய அழகி பட்டம் பெற்றிருப்பதால், உலக அழகி போட்டிக்கு என்னை தயார்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன். அதனால் என்னுடைய படிப்பை மாற்றுகிறேன், நிறுத்த மாட்டேன்.

    உலக அழகி போட்டி முடிந்த பின்னர் படிப்பை முடிப்பேன். ஏனென்றால் அதுவும் நான் ஆசைப்பட்டு எடுத்த பாடம். முடிவு இல்லாமல் எதையும் விடமாட்டேன். கண்டிப்பாக அதனை முடித்து விடுவேன்.

    என்னை மனதார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. உங்கள் (தமிழக மக்கள்) ஒவ்வொருவருடைய வாழ்த்துகள் தான் என்னை மேலும் வளர்ச்சியடைய செய்கிறது. மேலும் ஊக்குவிப்பதாகவும் இருக்கிறது. என்னுடைய பாட்டி வாழ்த்தியது தான் சிறப்பான வாழ்த்தாக அமைந்தது. நான் ஊரில் இருந்து வீட்டுக்கு வந்ததும் பாட்டி, என்னை கட்டி அணைத்து அழத்தொடங்கிவிட்டார். அவர் தான் இந்த மாதிரி உடை உடுத்தக்கூடாது, ‘மேக்கப்’ போடக்கூடாது என்று சொன்னவர். அவர் இன்று நான் வளர்ந்திருப்பதை பார்த்து பெருமைப்பட்டு அழுதது, என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு.

    குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் குறைந்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் உள்பட அனைத்திலும் தமிழகம் வளர்ந்து கொண்டே வருகிறது. கல்வி மேம்பட, மேம்பட மற்ற காரணிகளும் குறையும். அதுபோல தான் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் தமிழகத்தில் குறைந்து வருகிறது.

    எளிதில் அணுகுபவராக இருப்பவரே என்னை பொறுத்த வரையில் உலக அழகி, இந்திய அழகி. உதவி என்று வருபவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவி செய்ய வேண்டும். உலக அழகி போட்டியில் பங்கேற்பதற்கு தமிழ் மொழி ஒரு கூடுதல் பலனாக இருக்கும். ஏனெனில் தமிழ் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழின் கலாசாரம், இலக்கியம், தொன்மை தெரிந்தவர்களுக்கு தான் அதன் முக்கியத்துவம் தெரியும்.

    தமிழில் இருப்பதுபோல சிறப்பு அம்சங்கள் வேறு எந்த மொழியிலும் இல்லை. தமிழ் மொழியை கற்பது கஷ்டம். தமிழன் எங்கு சென்றாலும் அந்த மொழியை கற்றுக்கொள்வான். அந்த வகையில் இது எனக்கு கூடுதல் பலன் அளிக்கும் என்று நம்புகிறேன்.

    திருநங்கைகளின் சம உரிமைகளுக்காக பணியாற்ற விரும்புகிறேன். அழகை வைத்து மட்டுமே இந்திய அழகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. நீங்கள் யார்? நீங்கள் எப்படி? என்ன செய்கிறீர்கள்? என்பதை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பல்வேறு சமுதாய பங்களிப்புகளை செய்து வரும் இந்திய அழகி அனுகீர்த்தி வாஸ், விரைவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளார்.  #MissIndia #AnukreethyVas #Tamilnews 
    பொன்னேரி அருகே தேர்வில் தோல்வியடைந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த ஏலியம்பேடு பெரியார் நகரைச்சேர்ந்தவர் மாரி. கூலித் தொழிலாளி. இவரது மகள் சுஜிதா (16) பொன்னேரி அடுத்த வேன் பாக்கம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்நிலையில் தேர்வில் சுஜிதா 3 பாடத்தில் தோல்வி அடைந்து இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்து வந்தார். இதனால் மன வேதனையடைந்த சுஜிதா கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்ட்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சுஜிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews
    கோபி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    கடத்தூர்:

    கோபி அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கோபி அருகே உள்ள மொடச்சூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. இவருடைய மனைவி ரேவதி. இவர்களுடைய மகள் ஷர்மிலி (வயது 18). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். ஷர்மிலிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை என்று தெரிகிறது. ஷர்மிலி மனவேதனையில் இருந்து உள்ளார். இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை ரமேசும், ரேவதியும் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டனர். ஷர்மிலி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது அவர் வீட்டின் விட்டத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷர்மிலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    குளச்சல் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள இலப்பவிளை அரசு தொடக்கப்பள்ளியில் தெற்கு புத்தளத்தைச் சேர்ந்த பொன்ராஜதுரை (49) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பொன் ராஜதுரை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி, பெற்றோரிடம் பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் நேரில் வந்து அவர்களை சமாதானப்படுத்தி ஆசிரியரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் உறவினர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

    கல்வி அதிகாரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்த வேண்டும், ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த குளச்சல் உதவி தொடக்க கல்வி அதிகாரி சந்திரமதி, குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு) வேணுகோபால் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் பெற்றோரை போலீஸ்நிலையத்தில் புகார் செய்யும் படி அறிவுறுத்தினர். அதன்படி பெற்றோரும் குளச்சல் போலீஸ் நிலையம் சென்று தங்கள் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் பொன்ராஜதுரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து பொன் ராஜதுரை மீது போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அப்போது பொன் ராஜதுரை திடீரென மயங்கி விழுந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் பொன் ராஜதுரை ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் நாகர்கோவில் ஜெயிலில் பொன்ராஜதுரை அடைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குளச்சல் பகுதியில் நேற்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
    தேனி அருகே 2 இளம் பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அரண்மனைப்புதூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பார்வதி (வயது 21). பிளஸ்-2 முடித்து விட்டு கடந்த 3 மாதமாக பழனிச்செட்டிபட்டியில் தையல் பயிற்சிக்கு சென்று கொண்டு இருந்தார்.

    சம்பவத்தன்று பயிற்சிக்கு செல்வதாக கூறிச் சென்ற பார்வதி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் அக்கம் பக்கம் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பழனிச்செட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தேனி அருகே பண்ணைத் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பிரியங்கா (17). பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். சம்பவத்தன்று ராஜாவும் அவரது மனைவியும் வீரபாண்டியில் உளள உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தனர். வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா மாயமானார்.

    திருமணம் முடிந்து வந்த ராஜா மகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அந்த புகார் மனுவில் தனது மகளை ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சுகுமார் (வயது 25) என்பவர்தான் கடத்தியிருக்க கூடும் என்று தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பார்வதி, பிரியங்காவை தேடி வருகின்றனர்.

    சேலம் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் கூலி தொழிலாளி.

    இவரது மகள் பவித்ரா வயது (17). இவர் கணவாய்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரியாவை கல்லூரிக்கு போகவேண்டாம் என பெற்றோர் கூறியதாக தெரிகிறது. மேலும் அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் பவித்ரா இருந்தார்.

    நேற்று தனியாக இருந்த பவித்ரா வீட்டில் உடல் கருகிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிளஸ் 2 கணக்குப்பதிவியல் திருத்தும் பணியின் போது திருச்சி மாணவி விடைத்தாளில் 6 பக்கத்தை திருத்தாமல் விட்ட பள்ளி ஆசிரியர் யார்? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். #TNHSCResult

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சோனாபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் திவ்யா (வயது 17) . இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல் பிரிவு படித்தார்.

    பிளஸ் 2 தேர்வை ஆர்வமுடன் எழுதியிருந்த திவ்யா கணக்குப்பதிவியல் பாடத்தில் தனக்கு அதிகமார்க் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் 200-க்கு 124 மதிப்பெண்களே அவருக்கு கிடைத்தது.

    பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்களை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து பார்க்கும் வசதி உள்ளது என்பதால் திவ்யா டவுன் லோடு செய்து பார்த்தார். அப்போது தான் எழுதிய விடைத்தாளில் 6 பக்கங்கள் விடைத்தாள் திருத்திய ஆசிரியரால் திருத்தாமல் விடுபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து திருச்சி மண்டல அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அங்கு ஊழியர்கள் பிளஸ் 2 விடைத்தேர்வு மறு மதிப்பீட்டிற்கான கால அவகாசம் 6-ந்தேதியோடு முடிந்து விட்டதால் சென்னை தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் முறையிட கூறினர்.


    இதனால் திவ்யா மன உளைச்சல் அடைந்துள்ளார். திருத்தாமல் விடுபட்ட 6 பக்கங்களில் அவருக்கு 60 மதிப் பெண்கள் வரை கிடைக்கும். மேலும் தேர்வுத்தாளில் 12 மதிப் பெண்கள் கொண்ட கேள்விக்கு சரியான விடை அளித்திருந்தும் அதற்கு விடைத்தாள் திருத்திய ஆசிரியர் 6 மதிப்பெண்கள் மட்டுமே அளித்திருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்போது மதிப்பெண் குறைந்திருப்பதால் உயர் கல்வி வாய்ப்பில் திவ்யாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று மற்றொரு மாணவி ஹர்ஷினி என்பவரின் கணிதப்பாட விடைத்தாளில் 6 மதிப்பெண் வினாவிற்கான விடை திருத்தப்படாமலேயே அருகில் 0 போடப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த தகவல் பரவியதால் மற்ற மாணவ, மாணவிகளும் தங்களுக்கு உரிய மதிப்பெண்கள் குறைந்ததற்கும் விடைத்தாள் சரியாக திருத்தப்படாதது காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மற்ற மாணவ, மாணவிகளும் விடைத்தாள் நகல்களை டவுன்லோடு செய்து பார்த்து வருகின்றனர்.

    இதற்கிடையே மாணவி திவ்யா, மற்றும் ஹர்ஷினியின் விடைத்தாள்கள் எந்த விடைத்தாள் திருத்தும் தேர்வு மையத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அவற்றை திருத்திய பள்ளி ஆசிரியர்கள் யார்? என விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    விடைத்தாளில் உள்ள ஆசிரியர்களின் கையெழுத்து மூலம் அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது. #TNHSCResult

    ×