search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98381"

    தனக்கு எதிராக பாலியல் புகார் செய்த மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கக்கூடாது என்று வழக்கு தொடர்ந்த பேராசிரியருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    புதுச்சேரி பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியவர் குமாரவேல். இவர், அவரது வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த மாணவி புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் பேராசிரியரிடம் விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம் பேராசிரியரை தற்காலிக பணி நீக்கம் செய்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி குமாரவேல் கல்லூரி தலைவரிடம் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில், அந்த மாணவி தனக்கு மாற்றுச்சான்றிதழ் மற்றும் தடையில்லா சான்று தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் மனு கொடுத்தார். இதை எதிர்த்து குமாரவேல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீதான விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட மாணவிக்கு மாற்றுச்சான்றிதழ் தந்தால் விசாரணை மேலும் தாமதமாகும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் விசாரித்தார்.

    பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘புகார் கொடுத்த மாணவியை கல்லூரியைவிட்டு வெளியே செல்ல தடை விதிக்கும் வகையில் மனுதாரர் இந்த வழக்கை உள்நோக்கத்துடன் தொடர்ந்துள்ளார்.

    எனவே, மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை புதுச்சேரி மாநில சட்டப்பணி ஆணைக்குழுவிடம் 2 வாரத்துக்குள் செலுத்தவேண்டும். இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார். #tamilnews
    தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்ற மாணவி மாயமாகி 77 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவரை தேடும் பணியில் 500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டுதுறையை சேர்ந்தவர் ஜேம்ஸ். தோட்ட தொழிலாளி. இவரது மகள் ஜேஸ்னா (20). இவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சர பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி ஜேஸ்னா தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து ஜேம்ஸ் கோட்டயம் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் கல்லூரி மாணவி இறந்து கிடப்பதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் ஜேஸ்னாவாக இருக்கலாம் என கருதிய கேரள போலீசார் ஜேம்ஸ் மற்றும் அவரது உறவினர்களை அழைத்து கொண்டு செங்கல்பட்டு சென்றனர். ஆனால் பிணமாக கிடந்தவர் ஜேஸ்னா இல்லை என தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் ஜேம்ஸ் குடும்பத்தினர் கேரளா திரும்பினார்கள். தனது மகள் மாயமானது குறித்து ஜேம்ஸ் கோர்ட்டில் கேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    மேலும் கேளரள முதல்-மந்திரி, டி.ஜி.பி. ஆகியோரிடமும் புகார் அளித்து இருந்தார்.

    மாயமாகி 77 நாட்கள் ஆகியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து தேடும் பணிக்கு சிறப்பு குழுவினர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 4 டி.எஸ்,பி.க்கள், சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் 8 பேர் என மொத்தம் 500 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

    அவர்கள் இன்று முதல் மாணவியை தேடும் பணியை தொடங்கினார்கள். மாணவி ஜேஸ்னா மாயமாகும் முன் தனது தோழிக்கு செல்போனில் தகவல் அனுப்பி உள்ளார். அதில் நான் மரணம் அடைய போகிறேன் என தெரிவித்து உள்ளார்.

    இந்த தகவல் இன்று தான் சைபர் கிரைம் போலீசார் மூலம் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மாணவியை தேடும் பணியில் சிறப்பு குழுவினர் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    மாணவி மரணம் அடைய போவதாக தகவல் அனுப்பி இருந்ததால் கோட்டயம், இடுக்கி, பத்தனம் திட்டா மாவட்டங்களில் உள்ள ஆறு, கடல், வனப்பகுதி, பாழடைந்த கிணறுகள், குளம் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #tamilnews
    ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா தற்கொலை கொண்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.#NEET2018 #Pratheeba TNStudentSuicide
    சென்னை:

    ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட பரிதாப நிகழ்வு நடந்துள்ளது. இத்தகைய தற்கொலைகள் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகின்றன. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து அநீதிகளை ஏற்படுத்தி வருகின்றன. அநீதியில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க போராட்டங்களுக்கான வியூகங்களை வகுக்குமாறு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை கேட்டுக்கொள்கிறேன்.

    ‘நீட்’ தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டது நெஞ்சத்தை பிழிகிறது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவின் கதிதான் என்ன? ‘நீட்’ தேர்வால் தமிழ்நாட்டுக்கு 1,450 இடங்கள் பறிபோய்விட்டது. இதனை பார்க்கும்போது நெஞ்சு பொறுக்கவில்லை. இதற்கொரு முடிவு கண்டாக வேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து மாாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ‘நீட்’ தேர்வு ஏழைகளின் மருத்துவ கல்வி வாய்ப்பை பறிப்பதற்கான கருவியாக மாறியுள்ளது.

    ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் பிரதீபா இன்னுயிரை மாய்த்துவிட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். கல்வியை தரமானதாக மேலும் முன்னேற்றி ‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கும் அளவுக்கு மாணவர்களுக்கு தமிழக அரசு பயிற்சியளிக்கவேண்டும். மாணவர்களும் கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல் தைரியமாக எதிர்காலத்தை எதிர்கொள்ளவேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ கனவு ஈடேறாத துக்கத்தில் மாணவி பிரதீபா தற்கொலை செய்துள்ளார். ‘நீட்’ தேர்வால் தமிழகத்தில் அனிதாவின் உயிர் காவுக்கொள்ளப்பட்டது. இப்போது பிரதீபாவை அது பலி வாங்கியிருக்கிறது. கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவை சுருக்கிவிட்ட ‘நீட்’ தேர்வு இந்தியா முழுவதும் ஒழிக்கப்படவேண்டும்.

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ‘நீட்’ தேர்வில் சந்தித்த தோல்வி காரணமாக தற்கொலை செய்திருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாநில வளர்ச்சி, தமிழக மாணவர்களின் எதிர்காலம், தமிழக இளைஞர்களின் கனவு போன்றவற்றை சிதைக்கும் ஒரு தேசிய கொள்கை தமிழகத்துக்கு தேவை இல்லை. இந்த கருத்தை அனைத்து தமிழக தலைவர்களும் ஒருமித்த குரலுடன் உரைத்தால் தான் ‘நீட்’ தேர்வுக்காக தற்கொலை செய்யும் மாணவர்களின் துயர நிலை மாறும்.

    ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் பிரதீபா தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. அவருடைய குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பிரதீபாவின் உயிரிழப்புக்கு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசும், விலக்கு பெற்றுத்தர முடியாத தமிழக அரசும் தான் காரணம். பிரதீபா குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சம் வழங்கவேண்டும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பெரவளூர் கிராமத்துக்கு சென்று மாணவியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, சென்ற ஆண்டு அனிதா என்கிற மாணவி இதே காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்றார்.

    இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். #NEET2018 #Pratheeba TNStudentSuicide
    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஐதராபாத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #NEET #NEET2018 #NEETkills
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர், ஐதராபாத் கச்சிக்குடா பகுதியை சேர்ந்தவர் மாணவி ஜஸ்லீன் கவுர் (வயது 18). இந்த மாணவி, ‘நீட்’ தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்த நிலையில் அவர் நேற்று காலை 10.30 மணிக்கு அங்கு அபிட்ஸ் பகுதியில் அமைந்து உள்ள 10 மாடிகளை கொண்ட மயூரி வணிக வளாகத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். வாகனத்தை நிறுத்திவிட்டு விறுவிறுவென மாடிப்படிகள் ஏறி, அந்த கட்டிடத்தின் உச்சிக்கு சென்றார்.

    அவர் அங்கு இருந்து குதிக்கப்போவதை உணர்ந்த பலரும் அவரை குதிக்க வேண்டாம் என்று அலறினர். ஆனால் அதையும் மீறி அவர் கீழே குதித்து விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, ஜஸ்லீன் கவுரின் உடலை கைப்பற்றி, அரசு உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த மாணவி, மாடிப்படியேறி கட்டிடத்தின் உச்சிக்கு சென்று கீழே குதித்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    டெல்லி துவாரகா 12-வது செக்டாரை சேர்ந்தவர் மாணவர், பிரணவ் மெஹந்திரத்தா (வயது 19). இவர் 2016-ம் ஆண்டு பிளஸ்-2 தேர்வில் வெற்றிபெற்று, மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதியும், அவற்றில் தோல்வி அடைந்ததால் இந்த ஆண்டும் ‘நீட்’ தேர்வு எழுதினார்.

    தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியான சிறிது நேரத்திலேயே பிரணவ் 8-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    ரத்த வெள்ளத்தில் அவரது உடல் தரையில் கிடந்தது. போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில், அவர் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததும், ஆனால் பெற்றோரிடம் வெற்றிபெற்றதாக பொய் சொல்லி இருந்ததும் தெரிந்தது.

    இதுபற்றி பிரணவ் தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதமும் சிக்கியது. அவர் ஏற்கனவே படுக்கை அறையில் ஒரு துப்பட்டாவை தூக்குகயிறாக கட்டியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் ‘நீட்’ தேர்வை 3 முறை மட்டுமே எழுத முடியும் என்று விதி வகுக்கப்பட்டு உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற தனது கனவு தகர்ந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

    ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.  #NEET #NEET2018 #NEETkills
    மதுரையில் காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கடத்தியது தொடர்பாக வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தல்லாகுளம், புலித்தேவன் தெருவைச் சேர்ந்த 16 வயதுடைய மைனர் பெண் புதுநத்தம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவர் தினமும் பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்த வாலிபர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அடிக்கடி மாணவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவி காதலிக்க மறுத்ததோடு, வாலிபரை கண்டித்துள்ளார்.

    சம்பவத்தன்று அந்த மாணவி பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த வாலிபர் மாணவியை வழிமறித்து காதலிக்குமாறு மீண்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்பிரேயை மாணவி மீது அடித்துள்ளார்.

    இதில் மயங்கிய மாணவியை, வாலிபர் காரில் கடத்தினார். இதற்கு உடந்தையாக 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் செயல்பட்டுள்ளார்.

    ஒரு இடத்தில் காரை நிறுத்தி வாலிபர் உள்பட 2 பேரும் அருகில் இருந்த கடைக்கு சென்றனர். அப்போது மயக்கம் தெளிந்த அந்த மாணவி நைசாக காரில் இருந்து தப்பினார்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகின்றனர். #tamilnews
    மோடி அரசின் நீட் தேர்வு மோசடியால் அனிதா, பிரதீபா ஆகிய இரு உயிர்களைப் பலிவாங்கி இருக்கின்றது என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். #NeetExam #NeetExamResult2018 #Vaiko
    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தமிழகத்தில் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவ, மாணவியர்களுள் சுமார் 39.55 விழுக்காடு அளவில் வெறும் 45,336 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

    மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் வினாத்தாள் அமையும் என்று கூறினார். ஆனால் இரண்டே நாளில் தாம் கூறியதையும் மறுத்து, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்துதான் வினாத்தாள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்தார். இது முதல் கோணல்.

    அடுத்து, நீட் தேர்வு எழுதும் மையங்கள் ஒதுக்கீடு செய்ததில், சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தமிழக மாணவர்களை அலைக்கழித்தது. கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதச் சென்ற தமிழ்நாடு மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாயினர். இது இரண்டாவது கோணல்.

    இதுபோன்ற காரணங்களால் நீட் தேர்வில் தமிழகம் குறைந்த அளவில் தேர்ச்சி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றது.

    மத்திய அரசு நீட் தேர்வைத் திணித்ததால் கடந்த ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு தமிழகத்தை உலுக்கியது. இந்த ஆண்டு நீட் தேர்வால் இன்னொரு மாணவியைத் தமிழ்நாடு இழந்து இருக்கின்றது.

    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள பெருவள்ளூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் மாணவி பிரதீபா, படிப்பில் படு சுட்டியாக இருந்ததால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். 12 ஆம் வகுப் பில் 1125 மதிப்பெண் பெற்றார். ஆனால், நீட் நுழைவுத் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள் பெற்றதை எண்ணி மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். நேற்று மாலை எலி மருந்தை உட்கொண்ட அவர், திருவண்ணாமலை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உயிர் இழந்தார்.



    மோடி அரசின் நீட் தேர்வு மோசடி, அனிதா, பிரதீபா ஆகிய இரு உயிர்களைப் பலிவாங்கி இருக்கின்றது. இனியும் இந்தப் பட்டியல் தொடரக் கூடாது.

    நீட் தேர்வில் தேர்ச்சிபெற இயலாத மாணவ மாணவியர், எத்தனையோ துணை மருத்துவப் படிப்புகளும் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பை பெறக்கூடிய அளவுக்கு பல கல்லூரிகளும் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அவற்றில் சேர்ந்து பயில முயற்சிக்க வேண்டும். மாறாக, தற்கொலை செய்து கொள்ளும் முடிவை மேற்கொள்ளக் கூடாது என்று வேண்டுகிறேன்.

    பிரதீபா குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    உயிர்ப்பலி தந்த அனிதா, பிரதீபா போன்ற ஏழை மாணவிகளின் மருத்துவக்கனவைப் பொசுக்கிய மத்திய பா.ஜ.க அரசும் அதற்குத் துணை போகும் தமிழக அரசும் தூக்கி எறியப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டின் கல்வி உரிமையைப் பறித்து, சமூக நீதியை ஆழக் குழிதோண்டிப் புதைத்து வரும் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; அதுவரை சமூக நீதிக்கான போராட்டம் ஓயப்போவது இல்லை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #NeetExam #NeetExamResult2018 #Vaiko
    செங்கல்பட்டு அருகே எரித்து கொல்லப்பட்டவர் கேரள கல்லூரி மாணவியா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செங்கல்பட்டு:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவந்தவர் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் (வயது 20). இவர் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அவர் மாயமானார்.

    இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேஸ்னாவை தேடிவந்தனர். இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. காணாமல்போன கல்லூரி மாணவி ஜோஸ்னா குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை தாலுகா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

    கேரள மாநிலத்தில் காணாமல்போன ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை உடலில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் கொல்லப்பட்ட பெண்ணின் உடலிலும் காணப்பட்டது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, கேரள போலீசாரிடம் இந்த கொலை தொடர்பாக தகவல் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் கேரள போலீசார் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு விசாரணை மேற்கொள்ள வருகின்றனர். அவர்கள் வந்து அந்த உடலை பார்வையிட்ட பின்னரே அது மாணவி ஜோஸ்னாவா என்பது தெரியவரும்.

    வேடந்தாங்கல் அருகே பிளஸ்-1 தேர்வில் 4 பாடத்தில் தோல்வி அடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மதுராந்தகம்:

    வேடந்தாங்கலை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் தீபா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் தீபா 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தீபா பள்ளிக்கு சென்று வந்தார். பள்ளியில் இருந்து வந்தது முதல் அவர் யாரிடமும் பேசவில்லை. பெற்றோர் கேட்டபோதும் எதுவும் கூற மறுத்துவிட்டார்.

    நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபா திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் தீபா பிணமாக கிடப்பது தெரிந்தது. 4 பாடங்களில் தேச்சி பெறாததால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    கோவளத்தை அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் ‌ஷமியா (23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 30-ந் தேதி அவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார். இவரது மகள் ரபீனா (வயது 18). மேச்சேரியில் உள்ள தனது பாட்டி அம்மாசி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கோடை விடுமுறையில் ரபீனா மாதா கோவில் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    பிளஸ்- 1 தேர்வில் ரபீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிநயா (14). 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டு வேலை செய்யும்படி அபினயாவை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த அபினயா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.#tamilnews
    எலும்புருக்கி நோய் பாதிப்பால் சிறப்பு அனுமதி பெற்று படித்து சமீபத்தில் உயிரிழந்த கோவை மாணவி பிளஸ் 1 தேர்வில் 600-க்கு 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். #Plusoneresult
    கோவை:

    கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகள் பிரித்தி.

    இவர் சிறு வயது முதல் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் அவர் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

    தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் படிப்பில் சுட்டியாக விளங்கினார். அவர் சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். பிரித்தியால் நடக்க முடியாது என்பதால் அவரை தாய் புவனேஸ்வரி தனது தோளில் சுமந்து சென்று பள்ளியில் விட்டு வந்தார்.

    பள்ளி முடியும் வரை தனது மகளுக்கு உதவியாக இருந்தார். இதன் பலனாக மாணவி பிரித்தி நன்கு படித்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 468 மதிப்பெண் பெற்றார்.

    இதனை தொடர்ந்து பிரித்தி கலைப்பிரிவில் படிக்க விரும்பினார். ஆனால் சீரநாயக்கன் பாளையம் மேல்நிலைப்பள்ளியில் கலைப்பிரிவு பாட வகுப்புகள் இல்லை. மற்ற பாடப்பிரிவுகள் தான் இருந்தது.

    இதனால் தன்னால் மேற்படிப்பு படிக்க முடியாமல் போய் விடுமோ என கவலை அடைந்தார். பிரித்தியின் தாயும் வேறு பள்ளியில் மகளை சேர்த்தால் எப்படி அவளை சுமந்து கொண்டு செல்வது என வருத்தத்தில் இருந்தார்.

    இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் கல்வி அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அதே பள்ளியில் வணிக கணிதம் பிரிவு கொண்டு வந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரித்தி அதே பள்ளியில் மீண்டும் சேர்ந்து பிளஸ்-1 படித்தார்.

    பிளஸ்-1 பொது தேர்வையும் அவர் எழுதினார். தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்த அவர் பொழுது போகாமல் தவிர்த்து வந்தார். தேர்வு முடிவை அவர் ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரித்தி திடீரென மரணம் அடைந்தார்.

    அவரது மரணம் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி பொது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில் மாணவி பிரித்தி 471 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    அவர் தமிழில் 93, ஆங்கிலம்- 54, பொருளாதாரம்-68, வணிக கணிதம்- 74, வணிகவியல்-88 அக்கவுண்டன்சி -94 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

    பிளஸ்-1 தேர்வில் 471 மதிப்பெண் பெற்ற மாணவி தற்போது உயிருடன் இல்லை என்பதை நினைத்து பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர். #Plusoneresult
    சேலத்தில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்துள்ளார். 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    சேலம்:

    சேலம் சூரமங்கலம், ஆண்டிப்பட்டி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ரவீனா (வயது 17). இவர் மேச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் ரவீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இன்று காலை வீட்டில் இருந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

    இதனால் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்தது. வலி தாங்காமல் அவர் அலறினார். சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து ரவீனாவை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு உள்ளதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18ந் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி சபிகா உடல், கராச்சி நகருக்கு வந்து சேர்ந்தது. #SchoolShooting #Karachi #StudentSabika
    கராச்சி:

    அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் பெருநகர பகுதியில் அமைந்து உள்ள சாண்டா பே உயர்நிலைப்பள்ளியில் கடந்த 18-ந் தேதி நடந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

    அவர்களில் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த மாணவி சபிகாவும் (வயது 17) ஒருவர். சபிகா, அங்கு அமெரிக்க வெளியுறவுத்துறை உதவித்தொகை பெற்று படித்து வந்தார்.

    இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த அவரது உடல், கராச்சி நகருக்கு நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு வந்து சேர்ந்தது. அவரது தந்தை அஜீஸ் ஷேக், மகளின் உடலைப் பெற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் அமெரிக்க தூதர் ஜான் வார்னர், கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    சபிகாவின் உடல் விமான நிலையத்தில் இருந்து, குல்ஷான் இ இக்பால் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    அதன்பின்னர் கராச்சி ஹக்கீம் சயீத் மைதானத்தில் காலை 9 மணியளவில் இறுதி தொழுகை நடைபெற்றது. அதில் சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் ஷா, கவர்னர் முகமது ஜபைர், உள்துறை மந்திரி சொகைல் அன்வர் சியால் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறைந்த மாணவி சபிகாவுக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து ஷா பைசல் காலனியில் உள்ள அஜிம்புரா மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    ஜூன் மாதம் 9-ந் தேதி சபிகா ஊருக்கு வருவார் என குடும்பத்தினர் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த நிலையில், அவருக்கு இந்த பரிதாப முடிவு ஏற்பட்டுவிட்டது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.  #SchoolShooting #Karachi #StudentSabika
    வைரஸ் காய்ச்சலால் பிளஸ்-1 தேர்வில் 3 பாடங்களில் தோல்வியடைந்த சென்னை மாணவியை மறுதேர்வு எழுத ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 படித்த ஷாரோன் நிவேதிதா என்பவரின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது மகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பிளஸ்-1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வியடைந்துவிட்டார். எனவே தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத எனது மகளை அனுமதிப்பதுடன், அதே பள்ளியில் பிளஸ்-2 படிப்பை தொடரவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில், ‘சி.பி.எஸ்.இ. விதிமுறைகளின்படி 2 பாடங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே மறுதேர்வு எழுத முடியும்’ என்றும், ‘காய்ச்சலால் தான் தோல்வியடைய நேரிட்டது’ என்று மாணவி தரப்பிலும் வாதிடப்பட்டது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அந்த மாணவி தோல்வியடைந்த பாடங்களுக்கு நடைபெறும் மறுதேர்வுகளில் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
    ×