search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98432"

    • வாரிசு- துணிவு திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.


    வாரிசு - துணிவு

    இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 1 மணிக்கும் வாரிசு திரைப்பட சிறப்புக் காட்சி நாளை அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படங்களின் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


    துணிவு - வாரிசு

    அதாவது, ஜனவரி 13-ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி வரை வாரிசு மற்றும் துணிவு படங்களின் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், திரையரங்க வளாகங்களில் உள்ள உயர்வான பேனர்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    • தியேட்டர்களில் கட் அவுட் வைக்க அனுமதி மறுப்பு
    • ரசிகர்கள் ஏமாற்றம்

    நாகர்கோவில்:

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில் பொதுமக்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பொங்கல் பண்டிகையை யொட்டி விஜய் நடித்த வாரிசு படமும், அஜித் நடித்த துணிவு படமும் வெளியாகிறது.

    இதையடுத்து விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் அஜித் இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவிலில் விஜய் நடிக்கும் வாரிசு படம் 2 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதே போல் அஜித் நடித்த துணிவு படமும் 2 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

    இதையடுத்து ரசிகர்கள் தியேட்டர் முன்பு கட் அவுட்கள் வைக்க ஏற்பாடுகள் செய்தனர். 2 ரசிகர்களும் கட் அவுட்டு கள் வைக்க போலீசாரின் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து அனுமதி கேட்டனர்.அவர்களும் தியேட்டருக்கு வெளியே கட் அவுட் வைக்க அனுமதி மறுத்துள்ளனர்.

    தியேட்டருக்குள் கட் அவுட் வைத்தால் அதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் தியேட்டர் நிர்வாகமே முழு பொறுப்பு என்று தெரிவித்தனர். இத னால் தியேட்டர் உரிமை யாளர்களும் கட்அவுட் வைப்பதற்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறப்படு கிறது. வழக்கமாக புதிய படங்கள் வெளியானால் தியேட்டர்களின் வெளியே கட்அவுட்டுகள் வைப்பது வழக்கமாகும். ஆனால் தற்பொழுது கட்அவுட்டுகள் வைக்க அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    நாகர்கோவிலில் விஜய் நடித்த வாரிசு படம் நாளை 11-ந்தேதி அதிகாலை 6.00 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதே போல் அஜித் நடித்த வாரிசு படம் நாளை காலை 7.30 மணிக்கு திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    2 படத்திற் கான டிக்கெட்டுகளும் விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி வருகிறார்கள்.முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நாகர்கோவிலை தவிர்த்து வெள்ளிச்சந்தை, குழித்துறை பகுதியில் உள்ள தியேட்டர்களிலும் விஜய் அஜித் படங்கள் வெளியிடப்படுகிறது.

    • எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • ‘துணிவு’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    எச்.வினோத்

    இதையடுத்து 'துணிவு' பட இயக்குனர் எச்.வினோத் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். துணிவு படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், துணிவு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம் ஆனால் அது முடியவில்லை என்றதும் டிசம்பரில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம் அதுவும் முடியவில்லை. இப்போது ரிலீஸ் வரைக்கும் இன்னும் ஒரு பத்து நாட்கள் இருந்தால் நன்றாக செய்திருக்கலாம் என்ற சூழ்நிலை தான் இருக்கிறது. ஆனால், ரீலீஸ் தேதி அறிவித்துவிட்டோம் செய்தே ஆக வேண்டும் இதை விட்டால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் தள்ளி போய்விடும் அது பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று தான் இப்போது ரிலீஸ் செய்கிறோம்" என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.




    • நீயும் நானும் வேறு இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா என்று அஜித், விஜய் ரசிகர்கள் சார்பாக இந்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளோம்.
    • தமிழ் திரை உலகில் அஜித், விஜய் இருவரும் இரு பெரும் கண்கள்.

    சென்னிமலை:

    பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் நாளை வெளியாகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இரண்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    பல ஊர்களில் ஒரே மாலில் உள்ள இரண்டு தியேட்டர்களில் இருவர் நடித்த படமும் வெளியிடப்படுகிறது. அப்படி உள்ள இடத்தில் தியேட்டர் முன்பு கட்அவுட், பேனர் வைக்கப்பட்டுள்ளது.

    இதனால் இரண்டு ரசிகர்கள் மத்தியிலும் ஒரு வித பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் உள்ள ஒரு தியேட்டரில் அஜித்தின் துணிவு படம் மட்டும் வெளியாகிறது.

    இதையடுத்து அந்த தியேட்டர் முன்பு விஜய், அஜித் ரசிகர்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாக அஜித், விஜய் ஆகியோரின் போட்டோக்களை போட்டு இரண்டு படத்தின் பெயரையும் குறிப்பிட்டு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். அதில் ''நீயும் நானும் வேற இல்லடா... ரெண்டு பேரும் ஒத்த உசுருடா...'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    இது குறித்து சென்னிமலை ஒன்றிய அஜித் ரசிகர்கள் மன்ற நிர்வாகியான நேதாஜி என்பவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகை என்றாலே சிலருக்குப் பொங்கல் சாப்பிடப் பிடிக்கும் சிலருக்கு கரும்பு சாப்பிடப் பிடிக்கும் ஆனால், பொங்கல் இல்லாத கரும்போ அல்லது கரும்பில்லாத பொங்கலோ ரசிக்கவும் பிடிக்காது ருசிக்கவும் பிடிக்காது.

    அதுபோல் தமிழ் திரை உலகில் அஜித், விஜய் இருவரும் இரு பெரும் கண்கள். இதில் ஒருவரை வெறுத்து இன்னொருவரை ரசிப்பது கரும்பை ஒதுக்கி பொங்கல் கொண்டாடுவது போல, என்னும் நோக்கில் "நீயும் நானும் வேறு இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா" என்று அஜித், விஜய் ரசிகர்கள் சார்பாக இந்த டிஜிட்டல் பேனர் வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    துணிவு

    இந்நிலையில், 'துணிவு' படத்தின் புரோமோஷன் பணிகள் லண்டனில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பான வீடியோவை லைகா நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • வஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டு திரைப்படங்களும் வருகிற 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த இரண்டு ப்படங்களை வாழ்த்தி நடிகர் பேசியுள்ளார்.

    வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'வாரிசு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர் நடித்துள்ள 'துணிவு' படமும், வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்துள்ள 'வாரிசு' படமும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    விஜய் - அஜித்

    விஜய் - அஜித்


    இந்நிலையில் வாரிசு-துணிவு இரண்டு படங்களையும் நடிகர் பிரபு வாழ்த்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 'காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் பிரபு சென்றிருந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று காலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என இரண்டு படங்களுமே நன்றாக போகும். இரண்டு பேரும் நம்ம தம்பிகள்தான். இருவரின் படங்களும் வெற்றி பெறட்டும், சந்தோஷம்" என்றார்.

    • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படங்களின் டிரைலர்கள் வெளியாகி வைரலானது.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வருகிற 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

    வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு மற்றும் வாரிசு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பணிகளில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

     

    இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் டிக்கெட் முன்பதிவு செய்ய சென்னையில் உள்ள ஒரு திரையரங்குகிற்கு ரசிகர்கள் திரண்டிருந்தனர். அச்சமயம் இரு தரப்பு ரசிகர்களும் துணிவு, வாரிசு என்று கோஷமிட இதனை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் ஆரோக்கியமாக தங்களின் படங்களின் பெயர்களை கூச்சமிட்டாலும், 'இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள..?' என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

    • எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

    'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், 'துணிவு' படத்தின் இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் படம் குறித்து பேசியுள்ளார். அதில், மிகப் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும்போது, அவர்களுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரஷர் கண்டிப்பாக இருக்கும். மேலும் வியாபாரம், கதை, ஹீரோ மெட்டிரியல் என பல விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    வியாபாரம் சார்ந்த கதையை செய்தாலும், வியாபாரத்திற்காக மக்களிடம் தவறான கருத்தை விதைத்துவிடக் கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கிறோம். அஜித், விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு நிச்சயம் பிரஷர் இருக்கும். அதை மறுக்க முடியாது, இருந்தும் படத்திற்காக இயக்குனர்கள் உழைப்பது என்பது பொதுவானதுதான். துணிவு திரைப்படத்தின் முதல் பாதி ரசிகர்களுக்காகவும், இரண்டாம் பாதி அனைவருக்கும் பிடித்தமான படமாக இருக்கும் என்றார்.

    • அஜித் நடித்துள்ள 'துணிவு' திரைப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    விக்னேஷ் சிவன் - அஜித்

    இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    சந்தானம் - அரவிந்த் சாமி

    இந்நிலையில், ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’.
    • இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    துணிவு போஸ்டர்

    இந்நிலையில், 'துணிவு' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.



    • விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • விஜய்-அஜித் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    விஜய்யின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ஜில்லா, அஜித்தின் வீரம் திரைப்படமும் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்-விஜய் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா பிரியர்களும் இந்த படங்களை எதிர்பார்த்திருக்கின்றனர்.

     

    வாரிசு - துணிவு

    வாரிசு - துணிவு

    வாரிசு படத்தை வம்சி இயக்கியுள்ளார். துணிவு படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். துணிவு படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

     

    ராஜாவின் பார்வையிலே

    ராஜாவின் பார்வையிலே

    இந்நிலையில் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்திருந்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையில் வாரிசு-துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராஜாவின் பார்வையிலே படத்தை சில திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய், அஜித், இந்திரஜா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில், இளையராஜா இசையில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ’துணிவு’ திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


    துணிவு

    'துணிவு' திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'துணிவு' படத்தின் 'சில்லா சில்லா', காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா'ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தணிக்கைக் குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


    துணிவு

    இந்நிலையில், 'துணிவு' திரைப்படத்தில் அஜித்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.




    ×