search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோஷம்"

    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகார தலங்களாக இந்த 2 கோவில்கள் உள்ளன
    காலசர்ப்பதோஷ ஜாதகமாக இருந்தால் முப்பது வயதிற்குள் எந்த லாபகரமான அதிர்ஷ்டத்தையும் பெற முடியாது. திருமணம் தடை கூட ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். காலசர்ப்ப தோஷத்தை காலசர்ப்ப யோகமாக மாற்ற வேண்டும் என்றால் இறைவனிடமே தஞ்சம் அடைய வேண்டும்.

    நாள் என்ன செய்யும், கோள் என்ன செய்யும் வினைதான் என்ன செய்யும், இறைவன் என் அருகில் இருக்கும் வரை என்ற முழு நம்பிக்கையுடன் தெய்வத்தை வணங்குங்கள்.

    ராகுவை போல் கொடுப்பார் இல்லை, கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்பார்கள்.

    பொதுவாக ராகு – கேது ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லை என்றால் அவர்களுக்கு நாகதோஷம் ஏற்படும். அதை போக்க சிறந்த பரிகாரம் திருக்காளஹஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம்.

    வாயு பகவானுக்கும், ஆதிசேடனுக்கும் சண்டை ஏற்பட்டது. அதிக சக்தியுடையவர்கள் யார்? என்று வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் பிரச்னை. அதனால் அதிக கணமுள்ள மலையை யார் அசைக்கிறார்களோ அவர்கள்தான் பலவான்கள் என்று அவர்களுக்குள்ளேயே போட்டி வைத்து கொண்டார்கள். மலையை அசைத்தார்கள். மலை அசைந்து அசைந்து வானத்தில் இருந்து பூமியில் விழுந்து அந்த மலை மூன்றாக பிளந்தது. அதில் இருந்து ஒரு பகுதிக்குதான் திருகாளஹஸ்தி என்ற நாமம் சூட்டப்பட்டது.

    திருக்காளஹஸ்தி திருக்கோயிலில் சிவனின் அருகே இருக்கும் தீப சுடர் ஒன்று மட்டும் எந்நேரமு்ம காற்றில் அசைந்து கொண்டெ இருக்கும். சிவபெருமானின் மூச்சி காற்றுபட்டு தீப சுடரொலி அசைகிறது. திருகாளஹஸ்தி திருத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுஸ்தலம் என்கிற காற்றுதலம். இந்த காளஹஸ்தியில் நக்கீரர் தன் பாபத்தையும் தோஷத்தையும் போக்கி கொண்டார்.

    ஞானம் பெற வேண்டும் என்றால் திருகாளத்திக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் ஞானப் பூங்கோதை என்ற பார்வதி தேவி. ஆம் பக்தர்களுக்கு ஞானத்தை அள்ளி தர தயாராக இருக்கிறாள் நம் அன்னை.

    திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோ திருநாகேஸ்வரம் சென்று அங்கு தோஷ பரிகாரத்தையும் செய்ய வேண்டும்.

    எப்படி திருப்பதியில் இருக்கும் பெருமாளை பார்ப்பதற்கு முன்போ அல்லது பின்போ அலமேலுமங்கை தாயாரையும் பார்க்க வேண்டும் என்கிற விதி இருக்கிறதோ அதுபோல்தான் திருகாளஹஸ்திக்கு சென்று காலசர்ப்ப தோஷம் தீர பரிகாரம் செய்தாலும் திருநாகேஸ்வரம் சென்று அங்கும் பரிகாரம் செய்தால்தான் பலன் கிடைக்கும் என்கிறது பரிகார சாஸ்திரம்.

    ராகு – கேது என்கிற இரு கிரகங்களால் ஏற்படும் தோஷமே காலசர்ப தோஷம் அல்லது சர்ப்ப தோஷம். கேது தோஷத்தை காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் காண வேண்டும. ராகு தோஷத்தை திருநாகேஸ்வரம் சென்று பரிகாரம் காண வேண்டும. கேது தோஷம் நீங்கினால் ஞானம் வாரி வழங்கும். புத்தி தெளிவு பெறும். பக்தி அறிவு ஜொலிக்கும்.

    ஞானம் என்பது அறிவு.

    தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் உள்ளது. ஐந்து தலை கொண்ட ராகுக்கு சிறந்த தலம். இதை திருநாவுக்கரசர் எவ்வளவு அழகாக சொல்லியிருக்கிறார் பாருங்கள்.

    “சந்திரர் சூரியர் சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருளும் நாகேச்சுரம்.” என்று திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் உள்ளது.

    இதையே சம்பந்தரும் தம் அழகு தமிழில்…

    “மாயனும் மலரானும் கை தொழ ஆய அந்தணன் ஆடானை தூய மாமலர் தூவின் கை தொழ தீய வல்வினை தீருமே காளமேக நிறக் காலனோடும் அந்தகள் கருடனும் நீளமாய் நின்று எய்த காமனும் பட்டன்நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நன்னுவார் கோளு நாளும் தீயவேனும் நல்வவாம் குளிக்கொள்மினே”

    திருகாளஹஸ்தி, கேது தோஷத்தை போக்கும் – திருநாகேஸ்வரம் ராகு தோஷத்தை போக்கும்.

    ராகு – கேது தோஷம் நீங்கினால்தான் வசதியான வாழ்க்கை நல்ல தெளிவான புத்தியும் அமையும். ஞானமும், செல்வமும் சேர வேண்டும். அப்படி சேர்ந்தால்தான் அவர்கள் முழுமையான மனிதப்பிறவி எடுத்ததற்கு பலன் அடைகிறார்கள். அதற்கு திருகாளஹஸ்தியும் திருநாகேஸ்வரமும் துணை செய்யும்
    ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.
    பிரதோஷ நேரத்தில் சிவபெருமானையும், உமா தேவியையும், நந்தீஸ்வரரையும் வழிபடுவது நல்லது. ‘பிரதோஷம்’ என்ற சொல்லில் ‘தோஷம்’ என்று வருகிறது. சகல தோஷங்களும் போய் சந்தோஷம் குடிகொள்ள பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யவேண்டும்.

    உலகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய நேரம் பிரதோஷ நேரமாகும். அதாவது ஆலகால விஷத்தை சிவன் உண்டு, நீலகண்டனாகி உலகத்தைக் காப்பாற்றிய நேரம். அன்றைய தினம் விரதம் இருந்து சிவனை பூஜிப்பதோடு, நந்திக்கொம்பு வழியே நாயகனைப் பார்த்து, நந்தியையும் வழிபட்டால் சிந்தித்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாகும்.

    ஒளி தீபம் ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் வந்து சேரும். அர்ச்சனைகள் செய்தால் பிரச்சினைகள் தீரும். அபிஷேகம் பார்த்தால் அனைத்துப் பலன்களும் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் சிவனுக்கும், நந்திக்கும் குறுக்கே போகக்கூடாது.
    முன் வினை கர்மாக்கள், பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் அகலும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
    முன் வினை கர்மாக்கள், பித்ரு தோஷங்கள், சாபங்கள் போன்றவை சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலம் அகலும். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * ஜென்ம நட்சத்திரம் அன்று அகத்திக் கீரையை பசுவிற்கு கொடுத்து தடவிக் கொடுப்பது.

    * அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்தல் மற்றும் சூரிய காயத்ரி மந்திரம் படித்தல்.

    * எறும்புக்கு பச்சரிசி போடுதல் (பச்சரிசி மாவில் கோலம் போடலாம்).

    * சங்கடம் தீர சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது.

    * ஆனைமுகனுக்கு அருகம்புல் மாலை சூட்டி வழிபடுவது.

    * வீட்டுத் துளசி மாடத்தில் விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்தல்

    * காகத்திற்கு கருப்பு எள் கலந்த சோறு வைத்தல்.
    சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.
    ஜாதகத்தில் 2, 4, 7, 8, 12 மற்றும் லக்னம் ஆகிய இடங்களில் ராகு- கேதுக்கள் இருந்தால், உங்களுக்கு சர்ப்ப தோஷம் உள்ளது என்று பொருள். நீங்கள் உங்கள் ஜாதகத்திற்குப் பொருத்தமான ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து, யோக பலம் பெற்ற நாளில் அங்கு சென்று முறைப்படி வழிபட்டு வந்தால் தடைகள் அகலும்.

    திருப்பாம்புரம் என்னும் திருக்கோவில் பேரளம் அருகில் உள்ளது. இங்கு பாம்புரநாதர் - வண்டார்குழலி அம்மன் அருள்பாலித்து வருகிறார்கள். சிவன் கழுத்தில் இருந்த பாம்பு கர்வம் காரணமாக, பலம் இழந்து கீழே விழுந்து, இத்தல ஈஸ்வரனை வழிபட்டு மீண்டும் பலம் பெற்று சிவபெருமானை போய்ச் சேர்ந்தது.

    எனவே இழப்புகளை ஈடுசெய்யும் ஆற்றல் இத்தலத்திற்கு உண்டு.
    ஒருவரின் லக்கனத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து வழிபட வேண்டிய தெய்வங்கள் வேறுபடும். அந்தந்த கிரகத்திற்கு உரிய தெய்வங்களை வழிபடும்போது தோஷத்தினால் உண்டாகும் பாதிப்பின் வீரியம் குறையும்.
    ஒருவரின் லக்கனத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து வழிபட வேண்டிய தெய்வங்கள் வேறுபடும். அந்தந்த கிரகத்திற்கு உரிய தெய்வங்களை வழிபடும்போது தோஷத்தினால் உண்டாகும் பாதிப்பின் வீரியம் குறையும்.

    எந்த தெய்வத்தை வணங்கினால் தோஷ நிவர்த்தி உண்டாகும் என்பதை பார்ப்போம்.

    சூரியன் : ஜாதகத்தில் லக்னத்தோடு சூரியன் இருந்தால் அவர்கள் சூரிய பகவானை வணங்கவேண்டும். தினமும் “ஓம் சூர்ய நாராயணரே போற்றி ” என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். இவ்வாறு சூரியனை வழிபட்டு வந்தால் சூரியனால் உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் உண்டாகும்.

    சந்திரன் : ஜாதகத்தில் லக்னத்தோடு சந்திரன் இருந்தால் அவர்கள் மகாலட்சுமியை வணங்க வேண்டும். தினமும் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் ஜாதக தோஷங்கள் விலகும்.

    சுக்கிரன்: ஜாதகத்தில் லக்னத்தோடு சுக்கிரன் இருந்தால் அவர்கள் அம்மனை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் சகல தோஷங்கள் விலகி வாழ்க்கை சுபிக்க்ஷம் உண்டாகும்.

    செவ்வாய் : ஜாதகத்தில் லக்னத்தோடு செவ்வாய் இருந்தால் அவர்கள் முருகபெருமானை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தால் ஜாதக தோஷங்கள் விலகும்.

    புதன் : ஜாதகத்தில் லக்னத்தோடு புதன் இருந்தால் அவர்கள் ஸ்ரீராமனை வணங்க வேண்டும். தினமும் “ஸ்ரீராமஜெயம்" என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.

    குரு : ஜாதகத்தில் லக்னத்தோடு குரு இருந்தால் அவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். தினமும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.

    சனி : ஜாதகத்தில் லக்னத்தோடு சனி இருந்தால் அவர்கள் வெங்கடேச பெருமாளை வணங்க வேண்டும். தினமும் “ஓம் நமோ நாராயாணாயா “ என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.

    ராகு : ஜாதகத்தில் லக்னத்தோடு ராகு இருந்தால் அவர்கள் துர்கை அம்மனை வணங்க வேண்டும். அதோடு தினமும் “ஓம் துர்கா தேவியே போற்றி ” என்று துர்கையின் நாமங்களை போற்ற வேண்டும்.

    கேது : ஜாதகத்தில் லக்னத்தோடு கேது இருந்தால் விநாயகரை வணங்க வேண்டும். தினமும் “ஓம் சக்தி விநாயக நமஹ” என்ற மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருப்பதன் மூலம் ஜாதக தோஷங்கள் விலகும்.
    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறையில் உள்ள தங்கம், வெள்ளி பல்லிகளை பக்தர்கள் தொட்டு தடவி வணங்கினால் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள்.
    வைணவ தலங்களில் 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். அடுத்ததாக திருப்பதி-திருமலை ஏழுமலையானை சொல்வார்கள். மூன்றாவது இடத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தலமாக காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் ஆலயம் திகழ்கிறது.

    இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது.  கீதையில் கிருஷ்ண பகவான் தனது வடிவமாக குறிப்பிட்ட அரச மரமாக இந்த அரச மரம் கருதப்படுகிறது. இந்த மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. இந்த சன்னதியை திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை தினத்தன்று சுற்றி வந்தால் குழந்தை பாக்கியம் உறுதியாக கிடைக்கும் என்று ஐதீகம் உள்ளது. ராமானுஜருக்காக கூரத்தாழ்வார் கண் பார்வை இழந்தது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அவருக்கு மீண்டும் வரதராஜ பெருமாள் ஆலயத்தில்தான் கண் பார்வை திரும்ப கிடைத்தது. எனவே இந்த ஆலயத்தில் வழிபட்டால் கண் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

    சிருங்கி பேரர் என்னும் முனிவரின் இருமகன்கள் கவுதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். ஒருநாள் அவர்கள் பூஜைக்கு கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்தன. இதை கண்ட முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்து விட்டார்.

    பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என தெரிவித்தார். அதன்படி இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர்.

    பெருமாள் அவர்கள் இருக்கும் மோட்சத்துக்கு செல்ல வழிகாட்டினார். அதோடு சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்கும் என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கி நலம் உண்டாகும். சூரியன், சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.

    இந்த நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் வரதராஜபெருமாள் ஆலயத்தின் கருவறை பின்பகுதியில் மேற்கூரையில் தங்கம், வெள்ளியில் பல்லிகள் அமைத்துள்ளனர். பக்தர்கள் அந்த பல்லிகளை தொட்டு தடவி வணங்குகிறார்கள். இதன் மூலம் தங்கள் தோஷங்கள் நிவர்த்தி பெறுவதாக நம்புகிறார்கள். இதனால் வட மாநில மக்களிடம் வரதராஜபெருமாள் ஆலயம் பல்லி ஆலயம் என்று புகழ் பெற்றுள்ளது.

    சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும்.
    ” நாம் கிரகங்கள், நட்சத்திரங்களில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும்.”

    சனீஸ்வரர் பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிப்பட்டால் 7½ ரையும் விலகி 8 ஆகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

    ஏழரைச்சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி இவைகள் தங்கள் வாழ்க்கையில் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என நினைக்கிறார்கள். இதற்காக பல பரிகாரங்களைச் செய்கிறார்கள்.

    அதில் தவறில்லை. ஆனால், செலவே இல்லாமல் எளிய அறிவியல் பரிகாரம் ஒன்று உள்ளது. நம் பூர்வீகமே நட்சத்திரங்கள் தான். அவைகளைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்து கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய எதிர்காலம் நன்றாக அமையும். கிரகம், நட்சத்திரங்களை நோக்கி தியானம் செய்தால் நற்பலனை நிச்சயம் நம்மால் பெற முடியும்.

    சூரியனுக்கு அருகில் சனி இருப்பதாக மனதில் கற்பனை செய்து, சனீஸ்வரா! எனக்கு உன்னால் வரும் கெடுபலன்களில் இருந்து காப்பாற்று, என மனதால் தியானம் செய்ய வேண்டும். இந்த முறையில் இரவில் அல்லது பகலில் எந்த நேரத்திலும் மனத்திரையில் கண்டு தியானிக்கலாம்.

    சனி மட்டுமல்ல! பிற கிரகப்பெயர்ச்சிகளால் நமக்கு பிரச்சனை இருந்தாலும், சம்பந்தப்பட்ட கிரகங்களுடன் ஒன்றாகவோ அல்லது குறிப்பிட்ட கிரகத்துடன் அன்றைய நாளில் சம்பந்தப்பட்ட நட்சத்திரத்துடன் ஒன்றிக் கலந்தோ உயிர்க்கலப்பு பெறலாம்.

    கிரகங்களின் இருப்பிடத்தை மனத்திரையில் கண்டு தியானத்தில் ஆழ்ந்து விடுவதன் மூலம் அவைகளிடம் இருந்து காந்த அலைக்கதிர்களை நம்மால் ஈர்க்க முடியும். 10 அல்லது 15 நிமிடம் இந்த தியானத்தை செய்வதன் மூலம் கிடைக்கும் பலன், கோயில்களில் நவக்கிரகங்களை வலம் வந்து அடையும் பலனுக்கு ஈடாகவோ இருக்கும்.

    உங்கள் பிறந்த நட்சத்திர நாளில், உங்களது நட்சத்திரம் இருக்குமிடத்தை உத்தேசமாகக் கணக்கிட்டு அந்த இடத்திற்கு மனதால் சென்று தியானம் செய்பவர்கள் பிரத்யேக பலனைப் பெற முடியும்.
    எந்த விதமான சர்ப்ப தோஷமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
    1. ராகு கால பவுர்ணமி பூஜை-பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
    2. ராகு கால கிருத்திகை பூஜை-புகழ் தரும்.
    3. ராகு கால சஷ்டி பூஜை-புத்திரப்பேறு கிடைக்கும்.
    4. ராகு கால ஏகாதசி பூஜை-பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
    5. ராகு கால சதுர்த்தி பூஜை-துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.

    எந்த விதமான சர்ப்பதோஷமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    பாம்பினை அடிப்பதால் வரும் தோஷம்; முன்னோர்களினால் வந்த நாக தோஷம் நீங்க செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்து வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதற்கு கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    லக்கினத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கவேண்டும், எந்த மந்திரத்தை ஜெபித்தால் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமானது விலகும் என்று பார்க்கலாம்.
    ஒருவரது ஜாதகப்படி லக்னம் என்பது மிக முக்கியமான ஒன்று. சிலரது ஜாதகத்தில் லக்கினத்தோடு கிரகங்கள் சேர்ந்திருக்கும். சிலரின் ஜாதகத்தில் லக்னம் தனித்தும் இருக்கும். லக்கினத்தில் இருக்கும் கிரகத்தை பொறுத்து ஒருவர் எந்த தெய்வத்தை வணங்கவேண்டும் எந்த மந்திரத்தை ஜெபிக்கவேண்டும் என்று பார்ப்போம். இதன் மூலம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமானது விலகும்.

    சூரியன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சூரியன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் சூரியனாரை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சூர்ய நாராயணரே” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.

    சந்திரன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சந்திரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மகாலட்சுமியை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் மகாலட்சுமியே நமஹ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.

    சுக்கிரன்: ருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சுக்கிரன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அம்பாளை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சக்தி” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.

    செவ்வாய்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு செவ்வாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் முருகனை வணங்கவேண்டும் அதோடு தினமும் ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.

    புதன்: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு புதன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஸ்ரீராமனை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ராம ராம ராம, ஓம் நமோ, பகவதே வாசுதேவாய” என்ற மந்திரம் ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.

    குரு: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு குரு இருக்கும் பட்சத்தில் அவர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.

    சனி: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு சனி இருக்கும் பட்சத்தில் அவர்கள் வெங்கடாஜலபதியை வணங்கவேண்டும் அதோடு தினமும் “கோவிந்தா, ராமதாச ஆஞ்சநேய, அனுமன், நரசிம்மர் - யோக நரசிம்மம் சரணம் பிரபத்யே, சாஸ்தா - ஓம் தர்மசாஸ்தாவே சரணம்” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும். இதையும் படிக்கலாமே: நீங்கள் செய்யும் பரிகாரம் பலனளிக்க வில்லையா ? இந்த கதையை படியுங்கள்

    ராகு: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு ராகு இருக்கும் பட்சத்தில் அவர்கள் துர்கை அம்மனை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் துர்கா தேவியே போற்றி ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.

    கேது: ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தோடு கேது இருக்கும் பட்சத்தில் அவர்கள் விநாயகரை வணங்கவேண்டும் அதோடு தினமும் “ஓம் சக்தி விநாயக நமஹ” என்ற மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக ஜாதக தோஷங்கள் விலகும்.
    ஸ்ரீரங்கம் ஆலயத்தின் சேர்த்தி வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
    பங்குனி உத்திர நாளில் இந்திய தேசத்திலுள்ள புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியிலுள்ள எட்டு புனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. இந்த நாளில் வெங்கடாசலபதியை சேவிப்பதும், புனித நீராடுவதும் சிறப்பானவை.

    அதுமட்டுமா! வைணவ தென்கலைப் பிரிவின் மஹா ஆசார்யரான ஸ்ரீராமாநுஜர் பெருமாளைத் தொழுது சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று வசனக் கவிதைகளைப் பாடியதால் ‘உடையவர்’ என்ற பதவியை திருமாலிடமிருந்து பெற்றார். இந்தப் பதவியை ஸ்ரீராமாநுஜர் பெற்ற நாள் பங்குனி உத்திரம். ஸ்ரீரங்கம் ஆலயத்தின் ‘சேர்த்தி வைபவம்‘ நடைபெறுவதும் இந்த நாளில்தான். ரங்கநாத பெருமாள் - ரங்கநாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டையிட்டுக்கொள்வதும், பின்னர் இணைவதும் இந்த நாளின் விசேஷம்.

    இந்த வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்த நாளில் காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் மற்றும் பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார். இந்த வைபவம் பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் நடைபெறுகிறது.

    மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் பங்குனி உத்திர நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாகக் காணப்படும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், திருவிளக்கு பூஜை, தீர்த்தவாரி, தேர்த்திருவிழா என தமிழகம் முழுக்க இந்த நாளில் பல விசேஷங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர நாளில் நீர் மோர் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது, அன்னதானம் செய்வது போன்றவை பெரும் புண்ணியத்தைத் தரும்.

    பூ முடித்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண ஓலை எழுதுதல், சீமந்தம், புதிய பொருள்கள் வாங்குதல், புதிய சிகிச்சை மேற்கொள்ளுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடி நடுதல், வணிகம் தொடங்குதல், வேலையில் சேருதல், புதிய இடத்துக்கு மாறுதல், நீர் நிலைகளை உருவாக்குதல், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத் திருநாள். எண்ணற்ற பல மங்களகரமான, தெய்விக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.
    நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.
    முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

    இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின. நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.

    முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.

    நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை பாம்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாம்பு வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. பாம்பு வழிபாடு கீழ்கண்ட நன்மைகளைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    1. மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.
    2. வாழ்வில் வளம் பெருகும்.
    3. நோய்கள் குணமாகும்.
    4. இறந்த பின்பு உறவினர்களும், அரசர்களும் பாம்பாக மறுபிறவி எடுப்பார்கள்.
    5. முன்னோர்கள் பலவித வியாதிகளை உண்டாக்குவார்கள். அதிலிருந்து விடுபட பாம்பு வழிபாடு அவசியம்.

    இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைத்தே நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டிலும் பாம்பு வழிபாடு புகழ் பெற்றது. பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன. நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர் போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன. அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன. நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம், பாம்பணி, காளத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.

    பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது. நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன், நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.

    பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர். இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர். இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பைச் சூடியிருந்தனர். கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

    இதே போன்று நாகலோகம் என்ற ஒன்று இருந்ததாகவும், அங்கு நாகங்களின் தலைவன் நாகராஜன் இருப்பதாகவும் கூறுகிறார்கள். கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி. அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார். அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு. இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.
    இவ்வாறு பாம்பு வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.
    ×