search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி"

    • 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் உழவர் சந்தைக்கு கோனூர், திண்டமங்கலம், கீழ்சாத்தம்பூர், கீரம்பூர், கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    கிலோ ரூ.130

    உழவர் சந்தையில் தற்போது அதிகபட்ச விலையாக சின்னவெங்காயம் கிலோ ரூ.80, இஞ்சி ரூ.280, கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரிடையாக வாங்கி நாமக்கல் உழவர் சந்தையில் விற்று வந்தனர்.

    இதனால் வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்ற நிலையிலும், உழவர் சந்தையில் ரூ.90-க்கு விற்கப்பட்டன.

    விற்பனை நிறுத்தம்

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வாங்க உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தக்காளி விலை தொடர்நது உயர்ந்து வந்ததால், விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி உழவர் சந்தையில் விற்கப்பட்டது. தற்போது தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தக்காளி கிடைக்கவில்லை. இதனால் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் மீண்டும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது.
    • குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    தக்காளி விலை ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தக்காளி கிலோ இன்னும் ரூ.120 முதல் ரூ.130 வரை சில்லறை காய்கறி கடைகளில் விற்கப்படுவதால் குறைந்த அளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு சென்னையில் 300 ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்தது. கிலோ ரூ.60-க்கு விற்கப்படுவதால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே குறைந்த விலையில் தக்காளி விற்கப்படுகிறது.

    கர்நாடகாவில் தக்காளியை அதிக விலைக்கு வாங்கி வந்து நஷ்டத்திற்கு தான் கூட்டுறவு சங்கங்கள் தற்போது தக்காளியை விற்கின்றன. இதனால் குறைந்த அளவில் தான் ரேஷன் கடைகளில் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. காலை 10 மணிக்கு விற்பனைக்கு வரும் தக்காளி 11.30 மணிக்குள் விற்று விடுகின்றன.

    இதனால் ரேஷன் கடைகளில் தக்காளி கிடைப்பது இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் சென்றால் இல்லை என்று சொல்லி விடுவதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர்.

    அடையார், மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே.நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதுகுறித்து கூட்டுறவு சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, 60 டி.யு.சி.எஸ். நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கடைக்கு 42 கிலோ தக்காளி வினியோகம் செய்கிறோம். அவை 11 மணிக்குள் விற்று விடும். தக்காளி அதிக விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு கிலோ ரூ.60-க்கு விற்பதால் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை நஷ்டம் ஏற்படுகிறது. அரசின் முடிவை ஏற்று விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

    • இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது.
    • ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது மீண்டும் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.

    போரூர்:

    தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக உச்சத்தில் இருந்து வருகிறது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இந்த நிலையில் தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக சற்று குறைய தொடங்கியது. வெளிமார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்பட்டது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80க்கு விற்பனை ஆனது. இதனால் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து மேலும் குறைந்தது. ஏற்கனவே வழக்கமான நாட்களை விட 50 சதவீத தக்காளி லோடுகளே வரும் நிலையில் இன்று 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது.

    இதன் காரணமாக தக்காளி விலை மீண்டும் சற்று அதிகரித்து சதம் அடித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டிலேயே இன்று காலை தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்பனை ஆனது வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் மீண்டும் தக்காளி விலை உயர்ந்து ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வரும். இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 34 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது.

    ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது மீண்டும் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரத்து குறைந்து விட்டது. வரும் நாட்களில் தக்காளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்றனர்.

    • ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.
    • மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர்.

    புதுச்சேரி:

    பொதுவாக எந்த மதத்தில் திருமணம் நடந்தாலும் மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவது வழக்கம்.

    தற்போது தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் குடும்ப தலைவிகள் தக்காளி வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர். மேலும் ஓட்டல்களில் தக்காளி சட்னியும் நிறுத்தி விட்டனர்.

    இந்த நிலையில் தக்காளி விலை உயர்வை சுட்டி காட்டும் வகையில் மணமகனுக்கு அவரது நண்பர்கள் 2 கிலோ தக்காளி பரிசாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

    காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியைச் சேர்ந்த நசீர் என்பவருக்கும் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரஹமத் நிஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

    திருமணத்தில் பங்கேற்ற கருக்கங்குடியைச் சேர்ந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் 2கிலோ தக்காளியை மணமகனுக்கு பரிசாக வழங்கினர். ஆப்பிளுக்கு பதிலாக தக்காளியை பரிசளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். தக்காளியை மண மகனுக்கு பரிசு அளிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.
    • கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    போரூர்:

    தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக ஏறுமுகமாகவே இருந்தது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    இந்த நிலையில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வழக்கமாக கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 33 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் பாதிப்பு இல்லாததால் வரும் நாட்களில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்போது தக்காளி விலை மேலும் சரிந்து பழைய நிலைக்கு வரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைந்து இருந்தாலும் வெளிஇடங்களில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி விலை குறையவில்லை. கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

    • விவசாயி மல்லேஷ் ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பெங்களூரு :

    நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளிக்கு மவுசு கூடி உள்ள நிலையில், தற்போது அவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ் என்பவர் தான் விளைவித்த 2 டன் தக்காளியை கடந்த 8-ந்தேதி சரக்கு வாகனத்தில் கோலார் மாவட்டத்திற்கு விற்பனைக்கு எடுத்து சென்றார்.

    அந்த சரக்கு வாகனம் பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்மகும்பல் வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து இறங்கிய கும்பல், விவசாயி மல்லேஷ் மற்றும் டிரைவரை தாக்கி கீழே தள்ளினர். இதையடுத்து 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். அப்போது போலீசார் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) மற்றும் அவரது மனைவி சிந்துஜா(36) என்பது தெரிந்தது. அவர்கள் தங்கள் கூட்டாளிகள் உதவியுடன் தக்காளி பாரத்துடன் வந்த சரக்கு வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அதை விற்பனை செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர்.

    அதன்படி அவர்கள் சென்னைக்கு கொண்டு வந்து 2 டன் தக்காளியையும் விற்று ரூ.1½ லட்சம் சம்பாதித்து உள்ளனர். மேலும் அந்த பணத்தை தம்பதி உள்பட 5 பேரும் பங்குபோட்டு கொண்டு மீண்டும் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, அவர்கள் சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், போலீசார் காலி சரக்கு வாகனத்தை மீட்டனர். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும்.
    • தக்காளி விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது.

    நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    உ.பி.அரசு சார்பில் நடைபெற்ற பாரம்பரிய மரம் நடும் திட்டத்தின் கீழ் தோட்ட இயக்கத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சுக்லா மரக்கன்றுகளை நட்டார்.

    பின்னர் அமைச்சர் சுக்லா கூறியதாவது:-

    தக்காளி விலை அதிகமாக இருந்தால், மக்கள வீட்டிலேயே தக்காளி செடியை வளர்க்க வேண்டும். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையும் பயன்படுத்தலாம். தக்காளியை யாரும் சாப்பிடாமல் இருந்தால் விலை தானாக குறைந்துவிடும். எது விலை அதிகமாக இருந்தாலும் அதை நிராகரிக்கவும். அது தானாகவே மலிவாகிவிடும்.

    அசாஹி கிராமத்தில் சத்துணவுத் தோட்டம் செய்துள்ளோம். கிராமத்தில் உள்ள பெண்கள் சத்துணவுத் தோட்டத்தை அமைத்துள்ளார்கள். அதில் தக்காளியும் நடலாம். இந்த விலையேற்றத்துக்கு தீர்வு இருக்கிறது. தக்காளி எப்பொழுதும் விலை உயர்ந்தது. தக்காளி விலை உயர்வது புதிதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.
    • தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

    இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் தக்காளி உட்பட மொத்தம் 450-க்கும் மேற்பட்ட லாரிகளில் இன்று காய்கறிகள் விற்பனைக்கு குவிந்தன.

    ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பரவலாக பெய்த மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து பாதியாக குறைந்து போனதால் கடந்த மாத இறுதியில் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.130ஐ கடந்து விற்கப்பட் டது. தற்போது தக்களியின் விலை மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளது. மொத்த விற்பனையில் அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்து விற்கப்படுகிறது.

    நேற்று 40 லாரிகளில் இருந்த தக்காளியின் வரத்து இன்று 35லாரிகளாக குறைந்து உள்ளது. இதனால் இன்று மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ110-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் வரத்து குறைவால் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றின் விலை தற்போது படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.70-க்கும், இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பச்சை காய்கறிகளான கத்தரிக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பெரிய வெங்காயம் விலையும் சரிந்து மொத்த விற்பனையில் கிலோ ரூ.20-க்கும், சில்லரை விற்பனையில் ரூ.25-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இனி வரும் நாட்களில் மழை பாதிப்பு ஏதுமின்றி உற்பத்தி நடக்கும் பட்சத்தில் தக்காளி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் விலை அடுத்த வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தக்காளி விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்துக்கு நிகராக தக்காளிக்கு மவுசு கூடி உள்ளது. இந்த நிலையில் தக்காளியை திருடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

    தக்காளி திருட்டை தடுக்க விவசாயிகள் தக்காளி பயிரிட்டுள்ள நிலங்களில் கடுமையான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் தக்காளியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த தம்பதி பெங்களூருவில் இருந்து தக்காளியை வாகனத்துடன் கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்துள்ளனர்.

    பெங்களூரு அருகே உள்ள சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி மல்லேஷ். இவர் தோட்டத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார். விளைச்சல் அதிகரித்த நிலையில் அவற்றை அறுவடை செய்தார். இதில் அவருக்கு 2 டன் தக்காளி சேர்ந்தது. பின்பு அவற்றை கோலார் மாவட்டத்திற்கு சரக்கு வாகனத்தில் விற்பனைக்கு எடுத்து வந்தார். பெங்களூரு எலகங்கா அருகே ஹெப்பால் சாலையில் வந்தபோது ஒரு இடத்தில் தக்காளி வாகனத்தை அவரும், டிரைவரும் டீ குடிப்பதற்காக நிறுத்தினர். பின்னர் வாகனத்தில் புறப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை வழி மறித்தனர். தங்களது மோட்டார் சைக்கிளில் சரக்கு வாகனம் மோதியதாக கூறி அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கூட்டாளிகள் 3 பேர் அங்கு வந்தனர். 5 பேரும் சேர்ந்து பின்னர் மல்லேசையும், டிரைவர் சிவண்ணாவையும் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் 2 டன் தக்காளியை சரக்கு வாகனத்துடன் அவர்கள் கடத்தி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லேஷ், ஆர்.எம்.சி. யார்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் தக்காளி இல்லாமல் வாகனம் மட்டும் தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. உடனே போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

    விசாரணையில் சரக்கு வாகனத்துடன் தக்காளியை கடத்தியது தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), அவரது மனைவி சிந்துஜா(36) உள்ளிட்ட 5 பேர் கும்பல் என்று தெரிந்தது. தக்காளியை வாகனத்துடன் கடத்திய கும்பல் அதை சென்னைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    சென்னையில் 2 டன் தக்காளியையும் ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளனர். மேலும் அந்த பாஸ்கர், சிந்துஜா உள்ளிட்ட உள்பட 5 பேரும் பணத்தை ஆளாளுக்கு பிரித்துக்கொண்டனர். அதன்பின்னர் சரக்கு வாகனத்தை பெங்களூருவுக்கு எடுத்து வந்துள்ளனர். போலீசிடம் இருந்து தப்பிக்க, சரக்கு வாகனத்தை தேவனஹள்ளி புறநகர் பகுதியில் நிறுத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து பாஸ்கர், சிந்துஜாவை வாணியம்பாடிக்கு வந்தனர். அங்கு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களுடன் வந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது.
    • தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.

    ஓமலூர்:

    ஓமலூர்,காடையாம் பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகள வில் செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை

    காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. அதனால், பெரும்பா லான விவசாயிகள் குறு கிய கால பயிர்களை தவிர்த்து நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து காய்கறி வருகின்றனர்.

    இந்த நிலையில் குறைந்த நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருந்ததால் விவசாயிகள் தக்காளி அதிகளவில் பயிரிடுவதை தவிர்த்து வந்தனர். சில விவசாயிகள் மட்டும் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். அதனால், சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.

    கடந்த மாதம் தக்காளி விலை பன்மடங்கு உயர்ந்து தற்போது கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. அதனால் மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்குகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது ஓமலூர் வட்டாரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள நாட்டு தக்காளி தற்போது நல்ல விளைச்சல் கொடுத்து வருகிறது. இந்த தக்காளி அளவில் சிறியதாக இருப்பதாலும், 4,5 நாட்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும் என்பதாலும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.

    விலை குறைவு மற்றும் நாட்டு தக்காளி என்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    • ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.
    • வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும்.

    பவானி:

    ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சசிகலா நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

    பவானி அந்தியூர்-மேட்டூர் பிரிவு ரோட்டில் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா பிரச்சார வேனில் அமர்ந்தபடி பேசினார்.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என்ற கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பிடத்தக்கதாக சத்துணவு திட்டமாகும். அதன் பின்னர் ஜெயலலிதா மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்தார்.

    2 ஆண்டுகளை கடந்த தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டு வருகிறது. மகளிருக்கு பஸ்சில் பயணம் செய்யும் போது இலவசம் எனக்கூறி விட்டு அதில் பயணிக்கும் உங்களை பார்த்து ஓசியில் பயணம் செய்கிறீர்களே என ஒரு அமைச்சர் பேசுகிறார்.

    அதே போல் தேர்தல் வாக்குறுதியின் போது பெண்களுக்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது அந்த திட்டத்தில் பல்வேறு தடைகள் போடப்பட்டு உள்ளது.

    மின்சார கட்டணம் உயர்வு காரணமாக தற்போது ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம் என்பதை பொது மக்கள் நீங்கள் தான் நினைத்து பார்க்க வேண்டும்.

    அதேபோல் வேளாண்மை துறைக்காக முதன் முதலில் தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

    வேளாண்மை துறை முன்கூட்டியே தயார் நிலையில் இதற்கான ஆலோசனை செய்திருந்தால் தக்காளி, வெங்காயம் விலையை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தான் தி.மு.க.வின் நிலை என்ன என்பது தெரிய வரும். அதுவரை தமிழக மக்களை தி.மு.க.வினரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    தற்போது தமிழ்நாட்டில் வருவாய்த்துறையினர் மூலம் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். அதேபோல் சாலை வரி 5 சதவீதம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளதால் பொது மக்கள் மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்சி. தண்ணீரை பெற்று தர தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
    • தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.

    தக்காளி விலை உயர்வின் காரணமாக, அவற்றை மர்ம நபர்கள் திருடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சுழற்சி முறையில் காவல் காத்து வருகின்றனர்.

    மேலும் தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    ×