search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98643"

    • கடலில் விழுந்து தத்தளித்தவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.
    • கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கோவளத்தில் இருந்து இன்று அதிகாலை ஒரு வள்ளத்தில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

    அவர்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. அதில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்தனர். அவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

    இருப்பினும் கவிழ்ந்த வள்ளத்தின் என்ஜின் மற்றும் மீன்கள் கடலில் மூழ்கியதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    • சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்
    • குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய கடலோர கிராமங்களை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் கோடிமுனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.

    அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் பாரம்பரியமாக தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடல் பகுதியில் சங்கு குளிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்.இதனால் குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர். தொழில் ரீதியாக குமரி மீனவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்களுடன் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது ஒரு சில மீனவர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி இங்கு நீங்கள் தொழில் செய்யக்கூடாது என விரட்டி உள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.காலங்காலமாக செய்து வரும் எங்கள் தொழில் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குமரி மீனவர்கள் தொடர்ந்து திரேஸ்புரத்தில் சங்கு குளிக்கும் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின் மற்றும் ஊராட்சி காங்.நிர்வாகிகள் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடனிருந்தனர்.

    • கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை, இலங்கை கடற்படை விரட்டியடித்தது.
    • அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

    ராமேசுவரம்

    கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது, தமிழக மீனவர்களின் விசைபடகுகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் ஏராளமான பிளாஸ்டிக் படகுகளில் ரோந்து வந்தனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாது என்றும், திரும்பி செல்லுமாறும் ராமேசுவரம் மீனவர்களை எச்சரித்துள்ளனர்.

    மேலும் அவர்களது வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை சேதப்படுத்தி அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரைக்கு திரும்பினர். அவர்கள் இன்று காலை ராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தனர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை வெட்டி மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும், இதனால் ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ராமேசுவரம் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

    கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற் படை–யால் சிறைபிடிக்கப் பட்டு வருவது மீனவ மக்களி–டையே பெரும் கொந்த–ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை திரும்ப ஒப்ப–டைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சக மீனவர்கள் மற்றும் அவர் களின் குடும்பத்தினர் வலி–யுறுத்தி உள்ளனர்.

    • 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றி தெரிவித்தார்
    • இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (7-9-2022) கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், கடந்த 9 மாதங்களில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த 6-9-2022 அன்று புதுச்சேரியைச் சேர்ந்த விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்களும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 9 விசைப்படகுகள் மீன்கள் இறக்க முடியாமல் முகத்துவாரத்தில் நிறுத்தம்
    • தடயை மீறி சிறிய வள்ளங்களில் சிலர் செல்வதால் குழப்பம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி மீன வர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணி தொடங்கும் வரை துறைமுகத்தை மூட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை அரசு தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடித் துறைமுகத்தை தற்காலிகமாக மூடினர். இதனால் நேற்று முன்தினம் மீன் பிடித்து வந்த 3 விசைப்படகுகள் மீன்களை இறக்க முடியாமல் முகத்து வாரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மேலும் 6 விசைப்படகுகள் வந்துள் ளது. இந்த 9 விசைப் படகுகளில் பிடித்து வந்த மீன்களை இறக்கி விற்பனை செய்வதற்கு தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் முயற்சித்துள்ளனர்.

    இதற்கு மீனவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டதை தொடர்ந்து விசைப்படகுகள் துறை முக ஓரத்தில் நிறுத்தப்ப ட்டுள்ளது. இந்த விசைப்படகுகளில் ரூ.1 கோடி மதிப்புள்ள மீன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் பிடித்து வந்த மீனை விற்க நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் துறைமுக கட்டுமானப் பணிகள் தொடங்கும் வரை துறைமுகத்தை திறக்க கூடாது என கூறியுள்ளனர்.

    அதே நேரம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் சின்ன முட்டம், குளச்சல் போன்ற துறைமுகங்களில் சென்று மீன்பிடிப்பதற்கு கடினமாக இருக்கிறது என கூறி இந்த துறைமுகத்தை உடனே திறக்க வேண்டும் என கூறுகின்றனர். இதனால் இரு மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மாறி மாறி கருத்துக்களை தெரிவிப்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மீனவர் குறை தீர்ப்பு கூட்டத்திலும் எதிரொலித்தது.

    தற்பொழுது துறைமுக நுழைவாயிலில் உள்ள செக்போஸ்டை மூடி உள்ளதால் இருசக்கர வாகனங்களும் கார் டெம்போ போன்ற எந்த வாகனங்களையும் உள்ளே விடாமல் அடைத்து வைத்துள்ளதால் மீனவர்கள் துறைமுகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தற்பொழுது வானிலை மிகவும் மோசமாக உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என வலியுறுத்தியும் அதைக் கேட்காமல் சிலர் சிறிய வள்ளங்களில் சென்றுமீன் பிடிப்பதும் மீனவர்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள தேங்காப்பட்டணத்தில் தூத்தூர், இனையம் மண்ட லத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு வசதியாக. மீன்பிடித் துறைமுகம் கட்டப்பட்டது.

    ஆனால் துறைமுகம் சரியான கட்டமைப்புடன் கட்டப்படாததால் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து மீனவர்கள் பலியாவது தொடர் கதை யாக நடந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 25-க்கும் மேற்பட்ட மீன வர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூத்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற சைமன் என்பவர் முகத்துவாரத்தில் சிக்கி பரிதாபமாக பலி யானார். அவரது இறப்பைத் தொடர்ந்து மீனவர்கள் தொடர்ந்து 8 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடந்த சில தினங்க ளுக்குமுன்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இனயம் புத்தன் துறை கடற்கரை கிரா மத்தைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 67) வள்ளம் கவிழ்ந்து கடலில் விழுந்தார். சக மீனவர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும், முடிய வில்லை. 2 நாட்களாக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் அமல்ராஜை தேடி வருகின்றனர். ஆனால் அவரைப் பற்றிய தகவல் இன்று வரை கிடைக்க வில்லை.

    இந்த சூழலில் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமு கத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் அமைப்புகள் சார்பில் அறிவிக்க ப்பட்டது. இதையடுத்து இன்று காலை இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 மீனவ கிராம மக்கள் தேங்கா பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்தனர்.

    காலை முதல் கொட்டி தீர்த்த மழையை பொருட்ப டுத்தாமல் உண்ணா விரதத்தில் மீன வர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், பங்கு பணியாளர்கள் உட்பட ஏராளமான பேரும் இதில் பங்கேற்றனர்.

    • அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.
    • இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் சேகர் (வயது 54).

    மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சேகர் நேற்று முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அப்பகுதி மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.

    அப்பொழுது அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.

    அப்போது சேகர் திடீரென்று தடுமாறி விழுந்து நீரில் மூழ்கினார்.

    இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, மகன் தினேஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பலியான சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • 4 அரசு பஸ்கள் சிறை பிடிப்பு
    • நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார்.

    கன்னியாகுமரி:

    கைதவிளாகம் முதல் ஹெலன் நகர் வரை சீரமைக்கப்படாமல் போடப்பட்டுள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி மேல்மிடாலம் சந்திப்பில் மீனவர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 அரசு பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.

    உதயமார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து கைதவிளாகம், மேல்மிடாலம் வழியாக கடலோரச்சாலை செல்கிறது. இச்சாலையை குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனயம், புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவர் கிராமங்களை சார்ந்த மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை மக்கள் பயன் படுத்த முடியாத வகையில் குண்டுகுழிகள் நிறைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதன்பயனாக தமிழக அரசு ரூ.1.30 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்க ஒதுக்கீடு செய்தது. இத்தொகையில் சாலை சீரமைக்கும் பணியை சில மாதங்கள் முன் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பணி தொடங்கிய சில நாட்களில் பணி கிடப்பில் போடப்பட்டது.

    இதனால் அப்பகுதி வழியாக மக்கள் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனத்தில் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மேல்மிடாலம் மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டடனர். அப்போது அவ்வழியாக வந்த தடம் எண் 302 மணக்குடி - இரயும்மன்துறை பஸ் மற்றும் நாகர்கோவில் செல்லும் 9 எ பஸ், மார்த்தாண்டம் செல்லும் 87 இ, பி ஆகிய 4 அரசு பஸ்களையும் சிறை பிடித்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாக ஹெலன்நகர் மக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் அருட்பணி யாளர்கள் ஹென்றி பிலிப், ஆன்றனி கிளாரட், ஜினிஸ் ஆகியோர் பேசினர்.

    தகவல் அறிந்து வந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. பின்னர் அங்கு வந்த நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட் செப்டம்பர் இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார். அதன் பின் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. போராட்டம் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போராட்டத்திற்கு ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு
    • டிரஜ்ஜர் என்ற மணல் உறிஞ்சு எந்திரம் மூலம் தான் மணல் அகற்ற வேண்டும்

    கன்னியாகுமரி:

    தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் என்பவர் பைபர் வள்ளத்தில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த போது வள்ளம் முகத்துவாரத்தில் கவிழ்ந்ததில் பரிதாபமாக பலியானார்.

    துறைமுக முகத்து வாரத்தில் குவிந்துள்ள மண் குவியலை அப்புறப்படுத்தாதது தான் விப த்துக்கு காரணம் என்ற குற்றசாட்டுகளை முன் வைத்து தூத்துர், இனையம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துறைமுகத்தைச் சுற்றி யுள்ள சிறு, சிறு கடைகள் உட்பட அனைத்து கடை களும் அடைக்கப்ப ட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் துறைமுக நுழைவு வாயில் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தற்காலிக மணல் அள்ளும் எந்திரத்தை இறக்கியது. இந்த எந்திரம் மீனவர்களை ஏமாற்ற கண்துடைப்புக்காக இறக்கப்பட்டதாகவும், டிர ஜ்ஜர் என்ற மணல் உறிஞ்சு எந்திரம் மூலம் தான் மணல் அகற்ற வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (16-ந் தேதி) முதல் மீன் பிடிக்க செல்வதில்லை எனவும், மணல் அள்ளும் வரை மீன்பிடி துறைமுகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. ஆனால் தடையையும் மீறி இன்று காலையில் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த மீன் விற்பனை சங்கம், மீன் வியாபாரிகள் சங்கம், மீன் வணிகர்கள் சங்கம், ஐஸ் வியாபாரிகள் சங்கம், டீசல் வியாபாரிகள் சங்கம் போன்றவை இணைந்து மீன்பிடி துறைமுகத்தில் தொடர் ஆர்ப்பாட்ட போராட்டம் துவங்கினர்.

    தூத்தூர் மீன் விற்பனையாளர் சங்க தலைவர் லியோ ஸ்டோன்ஸ்டாய் தலைமை வகித்தார். தேங்கா பட்டணம் துறைமுக வணிகர் சங்க ஒருங்கிணைப்பாளர் சந்திர ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில், பங்கு பணியாளர் ஜாண்பிரிட்டோ கலந்து கொண்டனர்.

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி ஜாண் உட்பட பல்வேறு மீனவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் மீனவர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என மீனவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகினையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் 6-8-2022 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 10-8-2022 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையிலுள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.  

    • நாட்டிற்கு திரும்ப வழியின்றி தவித்த இந்த மீனவர்களின் நிலைமை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
    • அபராதம் எதுவும் விதிக்காமல் அவர்கள் இந்தியா திரும்புவர் எனவும் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    விஜய்வசந்த் எம்.பி. அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓமன் நாட்டில் வேலைக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களது பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை வேலைக்கு அழைத்துச் சென்ற நிறுவனம் அபகரித்து வைத்திருந்தது.

    நாட்டிற்கு திரும்ப வழியின்றி தவித்த இந்த மீனவர்களின் நிலைமை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவர் 8 மீனவர்களையும் தாயகம் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டார். இது குறித்து ஓமன் நாட்டிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமையை கேட்டறிர் தார்.

    மேலும் வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்த போதும் இந்த பிரச்சனையை எடுத்து கூறினார்.

    இந்த நிலையில் தூதரக அதிகாரிகள் விஜய் வசந்த் எம்.பி. யை தொடர்பு கொண்டு மீனவர்களின் நிலைமை குறித்து விளக்கினர். மீனவர்கள் நலமாக தூதரக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அவர்கள் வேலை செய்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 8 மீனவர்களும் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர். அபராதம் எதுவும் விதிக்காமல் அவர்கள் இந்தியா திரும்புவர் எனவும் தூதரக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.

    வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. 


    ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

    ×