search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுட்டுக்கொலை"

    சத்தீஸ்கரில் மத்திய படை போலீசார் 4 பேரை சுட்டுக்கொன்ற சக வீரரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சுக்மா மாவட்டம் லிங்கம் பள்ளி என்ற இடத்தில் துணை ராணுவ படை முகாம் அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தங்கி இருந்தனர். இரவு நேரம் என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பணியில் இருந்த ஒரு வீரர் தனது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இதில் 4 வீரர்கள் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கி பிடித்தனர்.

    அவரை உயர் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என்று உயர் அதிகாரிகள் கூறினார்கள்.

    காயம் அடைந்த வீரர்கள் உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் மத்திய படை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



    முன்னாள் மத்திய மந்திரியான ஸ்மிரிதி இரானியின் ஆதரவாளர் மர்ம நபர்களால் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அமேதி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்வியுற்றார்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது இங்குள்ள பரவுலியா கிராமத்தின் குடியிருப்புவாசிகளிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் இரானி என்று காங். கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார்.



    கிராம மக்களுக்கு காலணிகளை வழங்கிய பணியில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுரேந்திரா சிங் (50) ஈடுபட்டார்.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் சுரேந்திரா சிங்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணிக்கு உயிரிழந்தார்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், இதில் தொடர்புடைய 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
    ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வருபவர் மீனா மங்கள் என்ற பெண்மணி. பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். 

    இந்நிலையில், மீனா மங்கள் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இவரது உடலை கைப்பற்றி, படுகொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 15 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே நாளில் பலியானதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
    சேலம் அருகே ரவுடி என்கவுண்டரில் உள்ள சந்தேகங்களை விசாரித்து உண்மை நிலையை அறிய மனித உரிமை ஆர்வலர்களை கொண்ட உண்மை அறியும் குழு துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இன்று விசாரணையை தொடங்கியது. #SalemRowdy
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்தவர் சேட்டு மகன் கதிர்வேல் (32). இவர் மீது 2 கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    கடந்த மாதம் காட்டூர் பகுதியை சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேசன் (32) கொலை வழக்கில், ரவுடி கதிர்வேலு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் இவரை காரிப்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    அப்போது காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கடந்த 2-ந் தேதி குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி கதிர்வேலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றார்.

    அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் துப்பாக்கியால் சுட்டதில், ரவுடி கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மாஜிஸ்திரேட் தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ரவுடியை என் கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டு, கொலையுண்ட கதிர்வேலின் ரத்தக்கறை படிந்த உடைகள், சம்பவ இடத்தில் சிதறிக்கிடந்த ரத்த மாதிரிகள் மற்றும் கதிர்வேல் தாக்கியதில் காயமடைந்த இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரின் உடைகள், ரத்த மாதிரிகள் உள்ளிட்ட தடயங்கள் அனைத்தும் வாழப்பாடி குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி சந்தோ‌ஷத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தடயங்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்து உறுதிபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கதிர்வேலின் என்கவுண்டரில் சில மர்மங்கள் நிலவுவதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியதால் இந்த வழக்கில் பரபரப்பு நிலவி வருகிறது.

    கதிர்வேலின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரித்து உண்மை நிலையை அறிய மனித உரிமை ஆர்வலர்களை கொண்ட உண்மை அறியும் குழு துப்பாக்கி சூடு நடத்திய இடத்தில் இன்று விசாரணையை தொடங்கியது.

    அந்த குழுவினர் கதிர்வேல் உறவினர்கள், முறுக்கு வியாபாரி கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பழனிசாமி, முத்து மற்றும் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர். மேலும் மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு, துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ் அதிகாரி, சம்பவ இடத்தில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை இன்றும் நாளையும் நடக்கிறது.

    இந்த குழுவில் சென்னை மனித உரிமை மக்கள் கழக பேராசிரியர் மார்க்ஸ், வக்கீல் அரிபாபு உள்பட பலர் இடம்பெற்றுள்ளனர். #SalemRowdy

    ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர்கள் 7 பேர் பலியானார்கள். #ISleaderskilledinIraq
    பாக்தாத்:

    ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு ஐ.எஸ். அமைப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவ வீரர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
     
    இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு மறைந்திருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த சிலரை சரமாரியாக சுட்டனர்.

    இந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 7 தலைவர்கள் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். #ISleaderskilledinIraq
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் மாவட்டத்தில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாட்டர்கம் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத்தொடங்கினர்.

    அவர்களின் தாக்குதலுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் பயங்கர்வாதீ ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியுள்ளார்களா என தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். #MilitantKilled
    சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு நக்சலைட்டை சுட்டுக் கொன்றனர். #Encounter
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்தும் ஆர்ச்சா காவல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இந்த தாக்குதலில் ஒரு நக்சலைட் சுட்டுக் கொல்லப்பட்டான் என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். #Encounter
    சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக்கொன்றனர். #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வரும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இன்னமும் உள்ளது.



    இந்நிலையில், சுக்மா மாவட்டம் பீமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #ChhattisgarhNaxals #ChhattisgarhEncounter

    லெபனான் நாட்டில் உள்ளூர்வாசி ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
    பெய்ரூட்:

    லெபனான் நாட்டின் கிழக்கு பகுதியில் பெக்கா நகரம் உள்ளது. இங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். நேற்று காலை இந்திய தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, உள்ளூர்வாசி ஒருவர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதில் இந்திய தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்டவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 
    வங்காளதேசம் நாட்டில் மாவட்ட நிர்வாகங்களுக்கு இன்று நடந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது கோஷ்டி மோதலில் தேர்தல் அதிகாரி உள்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence
    டாக்கா:

    வங்காளதேசத்தில் உள்ள மாவட்ட நிர்வாக அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்வு செய்ய பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி மாவட்டங்களில் இன்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 

    இந்நிலையில், இங்குள்ள ரங்கமாட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று மாலை எண்ணும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இந்த குழுவினர் நொய்மேலி பகுதி வழியாக வந்தபோது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தேர்தல் அலுவலர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரங்கமாட்டி மாவட்ட போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  #Bangladeshdistrictpolls #Bangladeshpollviolence  
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter #MilitantsNeutralised
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டம், கோபால்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. #JKEncounter #MilitantsNeutralised
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TMCMLAshotdead
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ்ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ. சத்யஜித் பிஸ்வாஸ் புல்வாரியில் உள்ள தனது வீட்டின் அருகில் நடந்த சரஸ்வதி பூஜையில் இன்று பங்கேற்றார்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. சுட்டுக்கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TMCMLAshotdead
    ×