search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    தீபாவளி பண்டிகையையொட்டி இன்று அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபோத்சவம் நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறியுள்ளது. #AyodhyaDeepostav
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி (இன்று) வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது.

    இறுதி நாளான இன்றிரவு அயோத்தி நகரில் சரயு நதிக்கரையில் 3 லட்சத்து ஓராயிரத்து 152 அகல் விளக்குகளை ஏற்றி உற்சாகமாக தீப ஒளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அம்மாநில கவர்னர், துணை முதல் மந்திரி உள்ளிட்ட இதர மந்திரிகள் மற்றும் இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தீபங்களின் ஒளிவெள்ளத்தில் அயோத்தியா நகரம் ஜொலிக்கும் இந்த தீபோத்சவம் காட்சியை கண்டு களித்தனர்.



    இந்நிலையில், இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாகவும் மாறியுள்ளது. இதை காண வந்திருந்த உலக சாதனை புத்தகமான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த சாதனையை அங்கீகரிக்கும் சான்றிதழை உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்திடம் வழங்கினர். #AyodhyaDeepostav #DeepostavGuinnessRecord #301152earthenlamp 
    அயோத்தி நகரில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் மற்றும் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று திறந்து வைத்தனர்.

    இந்த திறப்பு விழாவின்போது உரையாற்றிய யோகி ஆதித்யாநாத், அயோத்தி நகரம் அமைந்துள்ள ஃபைஸாபாத்  மாவட்டத்துக்கு அயோத்தி மாவட்டம் என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

    அயோத்திக்கு யாராலும் அநீதி இழைக்க முடியாது. நமது பெருமை, கவுரவம், பெருமிதம் ஆகியவற்றின் அடையாளமாக திகழும் அயோத்தியில் ராமர் பெயரில் விமான நிலையமும் தசரத மன்னர் பெயரில் மருத்துவ கல்லூரியும் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். #Ayodhyamedicalcollege #KingDasharatha #KingDasharathamedicalcollege #YogiAdityanath
    கொரியா நாட்டு மன்னரை மணந்த அயோத்தி இளவரசிக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அயோத்தி நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை தென்கொரியா அதிபரின் மனைவி இன்று திறந்து வைத்தார். #YogiAdityanath #KimJungSook
    லக்னோ:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது.

    இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் நேற்று பிரதமர் நரேந்திர மோடிம் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

    நேற்றிரவு உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேர்ந்த அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரித்தார்.

    அயோத்தி இளவரசியான சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். வரலாற்று குறிப்புகளில் அவரது பெயர் ஹூ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி நகரில் ஹூ-வின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரை ஓரத்தில் உள்ள பூங்காவுக்குள் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத்துடன் இன்று அயோத்தி நகருக்கு வந்த தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் இன்று அந்த நினைவிடத்தை திறந்து வைத்தார்.



    இந்த திறப்பு விழாவின்போது இந்தியா மற்றும் தென்கொரியா நாட்டு கலைக்குழுவினர் நடத்திய நடன நிகழ்ச்சியை யோகி ஆதித்யாநாத், கிம் ஜங்-சூக் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர்.

    இன்றிரவு சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார். பின்னர், டெல்லி திரும்பும் அவர் தனிவிமானத்தில் தென்கொரியாவின் சியோல் நகருக்கு புறப்பட்டு செல்கிறார். #YogiAdityanath #KimJungSook #QueenHuh #QueenHuhMemorial 
    நேபாள நாட்டு மக்கள் இன்று தங்களது வளர்ப்பு நாய்களுக்கு மாலை சூட்டி, திலகமிட்டு நன்றி பாராட்டி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். #NepalPeople #KukkurTihar #Diwalicelebrations #NepalDiwali
    காத்மாண்டு:

    இந்தியாவின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை என்பது இருநாள், மூன்றுநாள் கொண்டாட்டமாக இருப்பதுபோல் இந்து மக்கள் அதிகமாக வாழும் நமது அண்டைநாடான நேபாளத்தில் தீபாவளியை மக்கள் ஐந்துநாள் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.



    இந்த கொண்டாட்டத்தின் இரண்டாவதுநாள் நாய்களுக்கான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ’குக்குர் திஹார்’ (நாய் பண்டிகை) என்ற பெயரில் இன்று அங்கு நடைபெற்றுவரும் தீபாவளி கொண்டாட்டத்தில் தங்கள்மீது ஆயுள்வரை நன்றி பாராட்டும் வளர்ப்பு நாய்களுக்கு மக்கள் மாலை சூட்டி, திலகமிட்டு, தீப ஆராதணை காட்டி நன்றி பாராட்டி மகிழ்கின்றனர். #NepalPeople #KukkurTihar #Diwalicelebrations #NepalDiwali
    விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்று அரியலூர், பெரம்பலூர் கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் என மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும்.

    மாசில்லா சுற்றுச்சூழலை...

    மேலும் மாசில்லா சுற்றுச் சூழலை பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

    மேலும் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.

    இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர். 
    மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென கலெக்டர் வேண்டுகோள் கொடுத்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கி உள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும். மாசில்லா சுற்றுச்சூழலை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

    இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார். #tamilnews
    தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். #VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
    பெங்களூரு:

    காற்றுமாசு மற்றும் ஒலிமாசுவை குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதன்படி, கர்நாடக மாநிலத்தில் இரவு 8 மணி முதல் 10 மணிவரை பட்டாசுகள் வெடிக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தீபாவளிக்கு வெடிக்கப்படும் பட்டாசுகளின் மீது சுற்றப்பட்டிருக்கும் சாமி படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பட்டாசுகளில் இருந்து வெடித்துச் சிதறிய காகித குப்பைகளில் தெய்வங்களின் படங்கள் இடம்பெற்றிருப்பது இந்து மதத்தின்மீது பக்தி வைத்திருக்கும் மக்களின் மன உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் அமைவதாக குறிப்பிட்டுள்ளார்.



    எனவே, இனி பட்டாசுகளின் மீது சாமி படங்களை ஒட்டி விற்கப்படுவதை அரசு தடை செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் இதற்காக நாங்கள் கோர்ட்டில் வழக்கு தொடரவும் தயாராக இருக்கிறோம்.

    ஏற்கனவே, சாமி படங்களுடன் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வெடிகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து தவிர்க்க வேண்டும் எனவும் சசிகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

    பஜ்ரங் தள், இந்து ஜக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளின் தலைவர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    #VHPleader #crackerswithgodphotos #SasikantSharma
    அயோத்தி தீபவிழாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். #SouthKoreanFirstLady #KimJung-sook #Modi
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.



    இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். #SouthKoreanFirstLady #KimJungsook #Modi
    தருமபுரியில் தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. 1 கிலோ குண்டு மல்லி ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.
    தருமபுரி:

    தருமபுரி டவுன் பேருந்து நிலையத்தில் பூ மார்கெட் அமைந்துள்ளது. இந்த பூ மார்கெட்டில் இன்று தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை தீபாவளி என்பதால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பூக்களின் விலை விவரம் வருமாறு:-

    குண்டு மல்லி 1 கிலோ ரூ.700க்கும், சன்ன மல்லி 1 கிலோ ரூ.600க்கும், ஜாதி மல்லி 1 கிலோ ரூ.300க்கும், சம்பங்கி 1 கிலோ ரூ.80க்கும்,  கனகாமரம் 1 கிலோ ரூ.700க்கும், பட்டன் ரோஸ் 1 கிலோ ரூ.80க்கும், ரோஸ் 1 கிலோ ரூ.100க்கும், காக்கடா பூ 1 கிலோ ரூ.450க்கும், சாமந்தி 1 கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    அயோத்தியில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்கொரியா அதிபரின் மனைவி இன்று டெல்லியில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார். #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்கள் தீபஉற்சவம் நடைபெறுகிறது. இதில் உ.பி. கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
     
    நாளை சுமார் 3 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி வழிபாடு நடத்தப்படும் பிரமாண்டமான தீப உற்சவத்தில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் மனைவி கிம் ஜங்-சூக் பங்கேற்கிறார்.

    இதற்காக சிறப்பு விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி வந்து சேர்ந்த கிம் ஜங்-சூக் இன்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசினார்.

    பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள ஏ.எஸ்.என் பள்ளிக்கு சென்றார். அங்கு உள்ள மாணவ- மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.

    இன்று மாலை உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ வந்து சேரும் அவருக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரவு விருந்து அளித்து உபசரிக்கிறார்.



    லக்னோவில் இருந்து நாளை அயோத்திக்கு செல்லும் கிம் ஜங்-சூக், சரயு நதிக்கடையில் நடைபெறும் பிரமாண்ட தீப உற்சவத்தில் பங்கேற்கிறார்.

    பின்னர், அயோத்தியில் ராணி ஹர் ஹூவாங்-ஓக் நினைவிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி இளவரசியான சூரிரத்னா என்பவர் தென் கொரியாவுக்கு சென்று அந்நாட்டு மன்னரை மணந்த பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    உ.பி.யில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு கிம் ஜங்-சூக் 7-ம் தேதி காலை சிறப்பு விமானம் டெல்லி சென்று, அங்கிருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறார்.

    தென்கொரிய அதிபரின் மனைவி வருகையையொட்டி அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  #Ayodhya #DiwaliCelebrations #KoreaFirstLady
    ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    தீபாவளிக்கு முதல் நாள் இரவே சுவாமி அறையை சுத்தம் செய்து கோலமிட்டு ஒரு மணைப்பலகையில் சிறிது மஞ்சள் தூள், குங்குமம், மறுநாள் தேய்த்துக் குளிப்பதற்கான எண்ணெய், சிகைக்காய்ப்பொடி ஆகியவற்றை எடுத்து வைத்து விட வேண்டும். வெந்நீர் போட்டுக்குளிப்பதற்கான பாத்திரத்தினையும் நன்கு கழுவி, விபூதி பூசி, குங்குமம் இட்டு வைத்துக்கொள்ளலாம்.

    தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விட வேண்டும். சுவாமி முன் வைத்துள்ள எண்ணெயை வீட்டிலுள்ள பெரியவர்கள் எடுத்து, சிறியவர்களுக்கு தலையில் தேய்த்து விட வேண்டும்.

    வெந்நீரை பொறுக்கும் சூட்டில் எடுத்துக்கொண்டு குளிப்பதற்கு முன் கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று கொண்டு, கொஞ்சம் நீரைக்கையில் எடுத்துக்கொண்டு

    கங்கேச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
    நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னதிம் குரு!
    என்ற சுலோகத்தை சொல்லிவிட்டு பின் நீராட வேண்டும்.

    தீபாவளி நாளில் எல்லா நீரிலும் கங்கை வாசம் செய்வதாக ஐதீகம். புண்ணிய நதிகளான கங்கை, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகிய சப்த தீர்த்தங்களும் நான் குளிக்கும் இந்த நீரில் வாசம் செய்யட்டும் என்ற பொருள் உள்ள இந்த சுலோகத்தினை சொல்லிவிட்டு நீராடுவதால், சாதாரணக் குளியலும் புனித நீராடலாக மாறி விடும். இந்த நீராடல் நற்பலன் தரும்.

    நீராடியபின் புத்தாடை அணிந்து சுவாமி முன் கோலமிட்டு மஞ்சள் தூள், வெற்றிலை,பாக்கு,பழம், தேங்காய், பூ, புத்தாடை, பட்டாசு, பல காரங்கள் போன்றவற்றை வைத்து, தெரிந்த சுலோகங்களைச் சொல்லி( விஷ்ணு லட்சுமி, சிவ பார்வதி, குபேரன் துதிகளைச் சொல்வது சிறப்பு) தூப தீபம் காட்டி வணங்குதல் வேண்டும். அதன் பின்னர் பெற்றோர், பெரியோரை வணங்கி ஆசிபெற வேண்டும். பிறகு அவரவர் வழக்கப்படி முதலில் இனிப்பையோ அல்லது சிறிதளவு தீபாவளி லேகியத்தினையோ உண்ண வேண்டும்.

    இவை அனைத்தையும் விட முக்கியமானது எது தெரியுமா? ஏழை எளியோர் தீபாவளி கொண்டாட உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். தீபாவளித்திருநாள் தித்திக்கும் திருநாளாக அமைய ஏழை எளியவர்களுக்கு மறக்காமல் தானம் செய்யுங்கள்.
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு.
    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. மற்ற பண்டிகைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு தீபாவளிக்கு உண்டு. ஒருவனுடைய பிறந்த நாளை நினைவு நாளாகக் கொண்டாடுவதுதான் வழக்கம். அந்த வழக்கத்திலிருந்து மாறுபட்டு இறந்த நாளை பண்டிகையாகக் கொண்டாடுகிறோமென்றால் அது தீபாவளி மட்டமே.

    மகாவிஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் நரகாசுரன். பூமாதேவி அவனைச் சிறந்த முறையில் வளர்த்து வந்தாள். தீயவர்களோடு பழகாமல் இருக்கும் பொருட்டு, வீட்டிலேயே வைத்து பாதுகாத்தாள். நாராயணனின் நாமத்தைச் சொல்லிக் கொடுத்து, அதை தினமும் ஜபம் செய்யவும் பயிற்சி அளித்தாள். ஆனால் அவளின் எண்ணம் ஈடேறவில்லை. இறைவனுக்கு மகனாகப் பிறந்திருந்த போதும், நரகாசுரனிடம் அசுர குணம் தலைதூக்கியது. தாயின் கட்டுப்பாட்டில் இருந்து வெளி உலகிற்கு வந்து அசுரர்களுடன் சேர்ந்து பலவித போர் பயிற்சிகளையும் பெற்றான். நாளடைவில் அசுரர்களுக்கு தலைவனானதோடு, தவங்கள் பல செய்து அளவில்லா வரங்களை பெற்றான்.

    தன் தாயைத் தவிர, வேறு எவராலும் தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரத்தைப் பிரம்மாவிடம் இருந்து பெற்ற நரகாசுரன், ஆணவச் செருக்கினால் மக்களைப் பலவாறு துன்புறுத்தினான். தவம் செய்யும் முனிவர்கள், தவச்சீலர்கள், தேவர்கள் என எவருமே அவனுடைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை. அவனுடைய கொடுமைகள் அதிகமானதால் அதற்கும், அவனுக்கும் முடிவு ஏற்பட வேண்டிய நேரம் நெருங்கியது.

    தேவர்களின் தலைவன் இந்திரன், கிருஷ்ணரிடம் சென்று நரகாசூரனின் கொடுமைகளைக் கூறி முறையிட்டார். ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனுடன் போர் புரியச் சென்றார். அவரது தேருக்குச் சாரதியாக பூமாதேவியின் அம்சமான சத்தியபாமா இருந்தாள். போர் கடுமையாக நடந்தது. இருவரும் பலவித அஸ்திரங்களை ஏவுவதும், தடுத்து நிறுத்துவதுமாக இருந்தனர். அந்த சமயத்தில், நரகாசுரன் எய்த அம்பு பட்டு, மயக்கம் அடைந்த கிருஷ்ணர் தேரிலேயே சரிந்தார்.

    இதைக் கண்டு சாரதியாகச் சென்ற சத்தியபாமா, தானே வில்லை ஏந்தினாள். தன் தாயின் அன்புக்கு அடிபணியாது அசுரனான நரகாசுரன் அவளின் அம்புக்கு இரையானான். பிரம்மாவிடம் தான் பெற்ற வரப்படி தன் தாயாலேயே மரணமடைந்தான். தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளி பண்டிகையின் விசேஷம். அறம் தவறாது இருப்பது மனித குணம். அதைத் தவறி நடப்பவன் மகனேயானாலும் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதால் பெற்ற தாயே போரிட்டுக்கொன்றாள்.

    தன் தாயின் அம்புக்கு அடிப்பட்டு வீழ்ந்த நரகாசுரன் தவறுக்கு வருந்தியதோடு, தன்னுடைய இறந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என வேண்டிக் கேட்டான். அவனுடைய பெற்றோர்களும் அதை அங்கீகரித்தனர். மக்களும், மற்றோரும் அசுரனின் துன்பங்களிலிருந்து விடுபட்ட நாளை, அவன் விருப்பப்படியே “தீபாவளி” பண்டிகையாக நாம் கொண்டாடுகின்றோம்.இது தென்மாநில மக்கள் தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம்.

    இதே தீபாவளிப் பணிடிகையை, வடமாநில மக்கள் வீடு முழுவதும் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, தீபத் திருநாளாக கொண்டாடுகின்றனர். தன் தந்தை கொடுத்த வரத்தை நிறைவேற்றுவதற்காக வனவாசம் செய்ய ஸ்ரீராமர் காட்டிற்குச் சென்று விடுகிறார். அதன் பின்னர் ராவணனைக் கொன்று வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் வனவாசத்தையும் முடித்துக் கொண்டு காட்டை விட்டு அயோத்தி நகருக்கு வருகிறார்.

    ஆண்டுகள் பல பார்க்காமலிருந்த ஸ்ரீராமபிரானைக் காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். ராமர் காட்டில் இருந்து நாட்டிற்கு வரும் நாளை வீடுகள் தோறும் தீபங்களை ஏற்றி வைத்துக் கொண்டாடுகின்றனர். அந்த நாளையே “தீபாவளி” என்று வடமாநில மக்கள் அழைக்கின்றனர். தென்னகத்தில் நரகாசுரன் என்ற அசுரனின் அழிவும், வடமாநிலத்தில் ஸ்ரீராமபிரான் என்ற அவதாரப் புருஷனின் வருகையும் தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.

    தீபாவளியன்று, அதிகாலையில் எழுந்து மூலிகை போட்டுக் காய்ச்சிய நல்லெண்ணையை தலையில் வைத்து, கதகதப்பான வெந்நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரானாலும், குழாய் நீரானாலும், கிணற்று நீரானாலும், அதில் தீபாவளியன்று கங்கை பிரசன்னமாவதாக ஐதீகம். பின்னர், வீட்டிலுள்ள பூஜை அறையில் திருமால், மகாலட்சுமி ஆகிய படங்களின் முன் புத்தாடைகளுக்கு மஞ்சள் தடவி வைக்க வேண்டும். அன்று செய்த பலகாரங்களையும், இனிப்புப் பண்டங்களையும் நைவேத்தியமாக படைத்து, பூஜைகள் செய்து திருமாலையும், மகாலட்சுமியையும் வணங்கி, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று புத்தாடைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து மகிழ, பெரியவர்களோ, சுற்றத்தார்களையும் நண்பர்களையும் வீட்டிற்கு அழைத்து வருதல், தன்னிடம் வேலை செய்யும் வேலையாட்களுக்குப் புத்தாடைகள், பட்டாசுகள், பரிசுகள் தருதல் என மற்றவர்களை மகிழ்வித்து கொண்டிருப்பார்கள். அன்று மாலை குடும்பத்தினரோடு ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.
    ×