search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈராக்"

    • ஐ.எஸ். கமாண்டர் தலைக்கு 5 லட்சம் டாலர் நிர்ணயித்திருந்தது அமெரிக்கா.
    • ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து கூட்டு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

    ஈராக்கில் ஈராக் படைகள் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற. கடந்த மாதம் இறுதியில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக கூட்டாக அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    ஈராக்கின் மேற்கு பிராந்தியமான அன்பர் மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஈராக்கின் தேசிய புலனாய்வு சர்வீஸ் மற்றும் ஈராக் விமானப்படை ஆகியவை அமெரிக்க படைகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சண்டையில் ஈராக்- அமெரிக்கா கூட்டு ஆபரேசனில் ஐ.எஸ். கமாண்டர் அபு அலி அல-துனிசி கொலை செய்யப்பட்டார் என ஈராக் தெரிவித்துள்ளார். மேலும், ஐ.எஸ். துணை கமாண்டர் அகமது ஹமீத் ஸ்வெயினும் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பலர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

    அபு அலி அல்-துனிசி துனிசியாவில் இருந்து ஈராக்கிற்கு வந்தவர். இவரது தலைக்கு அமெரிக்கா 5 மில்லியன் டாலர் அறிவித்திருந்தது.

    ஐ.எஸ். ஸ்லீப்பர் செல் ஈராக் மற்றும் சிரியாவில் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. ஸ்லீப்பர் செல்கள் அடிக்கடி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் உயிர்ப்பலி அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இரண்டு வாரங்ளுக்கு முன்னதாக அமெரிக்க ராணுவம் மற்றும் ஈராக் படைகள் இணைந்து ஈராக்கின் மேற்கு பாலைவன பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த 7 வீரர்கள் காயம் அடைந்தனர்.

    நேற்று நடைபெற்ற ஆபரேசனில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்ன்கள், 10 வெடிப்பொருள் பெல்ட்கள் கைப்பற்றப்பட்டதாக ஈராக் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே உள்ள அமெரிக்க ராணுவ தள வளாகத்தில் நள்ளிரவில் குண்டுவெடித்தது. அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் இன்று பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஈரான் ஆதரவு ஈராக்கிய போராளிகள் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் தளங்களை அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.
    • தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும்.

    தற்போதுவரை ஈரானில் பெண்களின் திருமணத்துக்கான சட்டப்பூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது முமொழியப்பட்டுள்ள மசோதவைன்படி, பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதத்தில், 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம்.

    சட்டப்பூர்வ வயது 18 ஆக இருந்தாலும் ஏற்கனவே ஈராக்கில் 28 சதீவீத பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்பே திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான UNICEF தெரிவித்துள்ள நிலையில், தற்போதய இந்த வயது தளர்வு, ஈராக்கில் அதிகப்படியான குழந்தைத் திருமணத்தை ஊக்குவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த மசோதவனுக்கு எதிராக ஈராக் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

     

    • அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது
    • ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே, ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 31ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் மத்திய கிழக்கு மற்றும் இஸ்ரேலுக்கிடையில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையில் லெபனானில் செய்யப்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலிய தளங்களின் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

    இந்த குழப்பங்களுக்கு மத்தியில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் விமானப்படைத்தளத்தில் அமெரிக்கப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைத்தளத்தைக் குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை ஈரான் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.
    • எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர்.

    ஈராக்கின் குர்திஸ்தானில் உள்ள ஒரு குகையில் கடந்த 2018-ம் ஆண்டு பழமையான உடைந்த மண்டை ஓட்டை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

    இந்த மண்டை ஓடு 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தனர். அந்தப் பெண்ணுக்கு ஷானிதர் இசட் (மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட குகையின் பெயர்) என்று பெயரிடப்பட்டது.

    இந்த நிலையில் நியாண்டர்தால் இனத்தைச் சேர்ந்த பெண் உயிருடன் இருந்தபோது எப்படி இருந்திருப்பார் என்பதை விஞ்ஞானிகள் உருவகப்படுத்தி உள்ளனர். மண்டை ஓட்டின் தட்டையான, உடைந்த எச்சங்களை அடிப்படையாக வைத்து அப்பெண்ணின் முகம் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த அந்த மண்டை ஓட்டின் எலும்புகள் மிகவும் மென்மையாக இருந்தன.

    அந்த எலும்புத் துண்டுகளை மீண்டும் ஒன்று சேர்த்து இணைப்பதற்கு முன்பு, முதலில் அவற்றை வலுப்படுத்தினர். பின்னர் வரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையைச் சித்தரிக்கும் பேலியோ-ஆர்ட் நிபுணர்கள்நியாண்டர்தால் பெண்ணின் 3டி மாதிரியை உருவாக்கினர்.

    • புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது.
    • சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல்.

    ஈராக் அரசாங்கம் சார்பில் இயற்றப்பட்டு இருக்கும் புதிய சட்டம், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    அதன்படி ஈராக் அரசு இயற்றியிருக்கும் புதிய சட்டத்தின்படி தன்பாலின ஈர்ப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். புதிய சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

    புதிய சட்டம் அந்நாட்டில் வசிக்கும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது தாக்குதலாக அமைந்துள்ளது. தன்பாலின  ஈர்ப்பு திருமணங்களை சட்டவிரோதமாக அறிவிக்கும் சட்டம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் இற்றப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த சட்டம் ஈராக் சமூகத்தை ஒழுக்க சீர்கேடுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்டுள்ளது.

    தன்பாலின ஈர்ப்பு திருமணங்கள் மற்றும் விபச்சாரத்தை ஒழிக்கும் புதிய சட்டத்தை மீறுவோருக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள், அதிகபட்சம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தன்பாலின ஈர்ப்பு அல்லது விபச்சாரத்தை ஊக்குவிப்போருக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 

    • கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார்.
    • ஓம் பகத் மர்ம நபரால் சுடப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    பாக்தாத்:

    ஈராக்கை சேர்ந்த டிக்-டாக் பெண் பிரபலம் ஓம் பகத். பாப் இசைக்கு நடனமாடும் வீடியோக்களை டிக்-டாக்கில் பகிர்ந்து வந்தார்.

    மேலும் பல்வேறு வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். இவரை சமூக வலைதளங்களில் 5 லட்சம் பேர் பின்தொடருகிறார்கள்.

    இந்த நிலையில் ஓம் பகத், மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிழக்கு பாக்தாத்தின் ஜோயோனா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டு முன்பு காரில் ஓம் பகத் அமர்ந்திருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென்று துப்பாக்கியால் ஓம் பகத்தை நோக்கி சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த மர்ம நபர் தப்பி சென்றார்.

    ஓம் பகத் மர்ம நபரால் சுடப்படும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரவியது. இக்கொலை தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளதாக ஈராக்கின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஓம் பகத்தின் இயற்பெயர் குப்ரான் சவாதி. கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீடியோக்களில் பொது ஒழுக்கத்தை குறைக்கும் அநாகரீகமான பேச்சு இருப்பதாக கூறி ஓம் பகத்துக்கு 6 மாத சிறைத் தண்டனையை கோர்ட்டு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடைபெற்ற டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • அமெரிக்க வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

    ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள், கிளர்ச்சி குழுக்கள் ஈராக், சிரியா போன்ற நாடுகளில் உள்ளன. இந்த குழுக்கள் அமெரிக்கப்படைகள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    சில தினங்களுக்கு முன் ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அமெரிக்கா வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஒருமுறை மட்டும் தாக்குதல் நடத்தப்படாது. பதிலடியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.

    இந்த நிலையில ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களை குறிவைத்து 12-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. நீண்டதூரம் சென்று தாக்கும் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ளது.

    இந்த தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "அமெரிக்க வீரர்களுக்கு தீங்கி விளைவித்தால், அதற்கு சரியான பதில் கொடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

    அதேவேளையில் இந்த தாக்குதல் இறையாண்மை மீறல் என ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • தீ விபத்து வேகமாக பரவி வெளிப்பட்ட புகையால் மூச்சு திணறலில் பலர் உயிரிழந்தனர்
    • நினெவே மற்றும் குர்திஸ்தான் மருத்துவமனைகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    மத்திய கிழக்கு அரபு நாடுகளில் ஒன்றான ஈராக்கின் வடக்கே உள்ளது நினெவே (Nineveh) பிராந்தியம். இங்குள்ள ஹம்தனியா (Hamdaniyah) மாவட்டத்தில், அல்-ஹைதம் கூடம் (al-Haitham Hall) எனும் பெரிய திருமண மண்டபத்தில் நேற்று மாலை ஒரு திருமண விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேற்று முன்னிரவு சுமார் 10:45 மணியளவில் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் விருந்தில் கலந்து கொள்ள வந்த பெரியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடினர். தீ விபத்தினால் ஏற்பட்ட புகையில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வருவதற்குள் தீ மளமளவென பரவியதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

    மூச்சு திணறல், பலமான தீக்காயங்கள் உட்பட்ட காரணங்களால் தற்போது வரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு அவர்கள் அனைவரும் நினெவே மற்றும் குர்திஸ்தான் பகுதி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னமும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என நினெவே பிராந்திய கவர்னர் நஜிம் அல்-ஜுபோரி தெரிவித்துள்ளார்.

    முதற்கட்ட விசாரணையில் விருந்து நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியதாகவும், அதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இருந்தாலும், இது தற்போது வரை உறுதிபடுத்தபடவில்லை. தீயணைப்புக்கான உபகரணங்கள் அந்த அரங்கில் முறையானபடி இல்லாததால், தீ பரவுதலை தடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது.

    இதையடுத்து, அந்த திருமண அரங்கத்தின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையில் காவல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மகிழ்ச்சியான திருமண கொண்டாட்டம் விபத்தில் முடிந்தது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர்.
    • இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர். இது பயங்கர கலவரமாக வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்கினர். இந்த மோதலில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் மார்பிலும், ஒருவர் தலையிலும் சுட்டு கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆணைய இயக்குனர் ஜியாத் கலப் தெரிவித்தார். இந்த இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    • பாக்தாத்தில் நேற்று தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
    • இஸ்லாமிய நாடுகளில் அமைப்பு ஐ.நா.வில் கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளது

    சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் குர்ஆன் எரிப்பு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு ஐ.நா. சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, நேற்று ஈராக் பாக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதோடு, தீ வைத்து சேதமாக்கினர். இந்த நிலையில் சுவீடன் தூதர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

    வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 டிரோன்கள் மூலம் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றை குறிவைத்து ராக்கெட் வீசி தாக்குதல் நடத்துகிறார்கள்.

    இந்த நிலையில் ஈராக் பிரதமர் வீடு மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் ஈராக் பிரதமர் முஸ்தபா- அல்-காதிமியின் வீடு உள்ளது. மேலும் இங்கு அமெரிக்க தூதரகம், முக்கிய தலைவர்களின் வீடுகள் உள்ளன. 

    இதற்கிடையே இன்று அதிகாலை ஈராக் பிரதமர் முஸ்தபா - அல்- காதிமியின் வீடு மீது டிரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் காயம் அடைந்தனர்.

    பிரதமர் முஸ்தபா- அல்- காதிமியை கொல்ல வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை ஈரான் ஆதரவு போராளிகள் ஏற்க மறுத்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தாக்குதல் நடந்த சிறிது நேரத்துக்கு பிறகு பிரதமர் முஸ்தபா -அல்- காதிமி டுவிட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ளார். அதில், தான் நலமாக இருப்பதாகவும் கடவுளுக்கு நன்றி என்றும் தெரிவித்தார். பின்னர் அவர் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, கோழைத்தனமான ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்கள் தாயகத்தை உருவாக்காது மற்றும் எதிர் காலத்தை உருவாக்காது என்றார்.

    தாக்குதல் குறித்து அரசு தரப்பில் கூறும்போது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 டிரோன்கள் மூலம் பிரதமர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாசவேலை முறியடிக்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்று தெரிவித்தது.

    ஈராக் பிரதமர் வீடு மீது டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    ×