search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98745"

    • மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளான கழிவறை வசதி, அவற்றில் போதிய அளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கக் கோரியும் 12 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாற்றப்படாததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
    • இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பாலப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான கழிப்பிட வசதி, போதிய அளவு தண்ணீர் வராமல் இருப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தலைமையாசிரியரை அவரது அறையில் வைத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மாணவர்களுக்கான அடிப்படை தேவைகளான கழிவறை வசதி, அவற்றில் போதிய அளவு தண்ணீர் வசதி செய்து கொடுக்கக் கோரியும் 12 ஆண்டுகளாக பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் மாற்றப்படாததை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 10-ந் தேதிக்குள் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாணவ மாணவியர்களின் கழிவறைக்கள் குறித்த பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைமை ஆசிரியர் உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள், கடந்த 22-ந்தேதி நகராட்சி வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    காரைக்கால்:

    உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்க ளுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடி யாக ஊதியம் வழங்க வலியு றுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    காரைக்கால் மாவட்ட உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார ர்களுக்கு, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க வலியுறுத்தி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள், கடந்த 22-ந்தேதி நகராட்சி வாயிலில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். 4 நாட்களாக போராட்டம் நடைபெற்றும், அரசு சார்பில் யாரும் பேச்சு வார்த்தை நடத்த வரவில்லை.

    இந்நிலையில், நேற்று 4-ம் நாள் போராட்டமாக காத்திருப்பு போராட்டத்தை நடத்திவந்த ஊழியர்கள், திடீரென, காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தை முற்றுகையிட சென்ற னர். விபரம் அறிந்த, காரைக்கால் நகர போலீ சார், கலெக்டர் அலு வலக வாயிலில் தடுப்பு வேலிகள் அமைத்து ஊழியர்களை, கலெக்டர் அலுவல கத்திற்குள் நுழையாவி டாமல் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் கலெக்டர் அலுவலக வாயிலில், ஊழி யர்களுக்கும், போலீசாரு க்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகை போராட்ட த்திற்கு, காரைகால் மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனர் அய்யப்பன் தலைமை தாங்கினார்.

    காரைக்கால் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க ப்படும், என்ற முதல மைச்சர் ரங்கசாமி வாக்குறு தியை உடனே நிறை வேற்ற வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை களை அரசு ஊழியர்க ளுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும்.

    பொதுவான பணிநிலை அரசாணையை அம ல்படுத்தி, ஒருமுறை நிகழ்வாக அடாக் நிரந்த ரம் செய்து, பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. போலீ சாரின் எச்சரிக்கையை மீறி ஊழியர்கள் முற்றுகையை தொடர்ந்ததால், முற்று கையில் ஈடுபட்ட சுமார் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சாலைப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாக தவறாக சித்தரித்ததாக புகார்
    • போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே வாக்குவாதம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் சாலை பணிகள் நிறைவு பெறும் முன்பே அப்பணிகள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தவறாக சித்த ரித்து போஸ்டர் அடித்து பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளார். மேலும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவதூறு செய்துள்ளார்.

    மேலும் இதில் இந்த சாலைப்பணியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அந்த நபர் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 5 பேர் மீது புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பான விசாரணைக்கு நேற்று இரவு புகார் தெரிவிக்கப்பட்ட 5 பேருடன் காங்கிரசார் பலரும் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.அப்போது புகார் அளித்த நபரை விசாரணைக்கு அழைக்கா மல் காங்கிர சாரை மட்டும் விசாரணைக்கு அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    பின்னர் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மாமன்ற உறுப்பினர்கள் பிரவின் சிஜுன், சந்தியா சுப்ரமணியன், அருள் சபிதா உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆசாரிப்பள் ளம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    போலீசார் போராட்டத் தில் ஈடுபட்ட காங்கிரசாரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் காங்கிரசார் செல்ல மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீ சாருக்கும் காங்கிரசா ருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    பின்னர் எதிர் புகார் மனுதாரரை அழைத்து பேசுவதாக போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது. இதை யடுத்து காங்கிரசார் மீது புகார் அளித்த நபர் மீது காங்கிரசார் ஆசாரிப்பள் ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    • வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது .இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.

    நேற்று நகை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- விவசாயம் செய்ய வேண்டி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். நகைகளை மீட்க வந்தபோது மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம், கடந்த 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர். ரசீது இருந்தும், வங்கியில் உள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக கூறினர் .இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • அரசுக்கு சொந்தமான நிலத்தில் 300-க்கும் மேற்பட்ட லோடு மணல் டிராக்டர், பொக்லைன் மூலம் அள்ளப்பட்டது.
    • இதை தடுத்த அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை சிலர் தாக்கி யதாக தெரிகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி உப்புக்குளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் 300-க்கும் மேற்பட்ட லோடு மணல் டிராக்டர், பொக்லைன் மூலம் அள்ளப்பட்டது. இதை தடுத்த அந்த பகுதியை சேர்ந்த குப்புசாமி என்பவரை சிலர் தாக்கி யதாக தெரிகிறது. மேலும் குப்புசாமியின் காட்டிற்கு செல்லும் பைப் லைன்களை உடைத்து உள்ளனர்.

    அதனை சரி செய்து கொண்டிருந்த போது தங்கராஜ், ஜெயபிர காஷ், சரவணன், அம்ச வேணி ஆகியோர் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் குப்புசாமிக்கு கால் முறிவு, மண்டையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில் அவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். குப்புசாமி யின் பேத்தி தீப்தியை தாக்கி யதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இந்த சம்பவம் குமார பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து குமாரபாளையத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். மூத்த நிர்வாகி ராமசாமி தலைமையில் குமாரபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் ஒன்றிய செயலாளர் சந்திரமதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகி துரைசாமி, தனேந்திரன், சேகர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர்.


    செஞ்சி பிரசித்தி பெற்ற ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் கமலக்கண்ணி அம்மன் சிலை உள்ளது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.வழக்கம் போல் பூஜைக்கு சென்ற பூசாரி ராமச்சந்திரன் இதனை பார்த்து கோட்டை அலுவலருக்கும் அறங்காவலர் அரங்க ஏழுமலைக்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டனர். அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து செஞ்சி கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மேலும் இது குறித்து அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திரா ரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கோட்டை கோவிலில் உள்ள சிலை உடைக்கப்பட்டது இப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமங்கலம் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள புல்லமுத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் இருக்கிறது. மாணவ-மாணவிகள் இங்கு தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் திருமங்க லம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், இதனால் வெளியில் வைத்து சமைப்பதாகவும், மழை காலங்களில் மாணவ-மாணவிகள் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் மின்விளக்குகள் இல்லை. பள்ளி முன்பு மழை நீர் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரியிடம் தெரிவித்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    • 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
    • பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பல்லடம் :

    பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர்,கோவை,மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. இதுபோல் இந்தத் திட்டத்தில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் அதிக அளவு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில் ஆழியாற்றில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வது என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதற்கு பரம்பிக்குளம்- ஆழியாறு பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுக்கும் திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்ய கோரியும் பி.ஏ.பி. திட்டம் உருவான போது விடுபட்டு போன ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வலியுறுத்தியும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஏ.கே.சண்முகம் தலைமை வகித்தார். மாநில செயல்தலைவர் என்.எஸ்.பி. வெற்றி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,வட்டார தலைவர் வேலுமணி, நகர தலைவர் மைனர் தங்கவேல், கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர் காவி.பழனிசாமி, எலவந்தி ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன்,வாவிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி,உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இன்னும் 1 மாதத்திற்குள் இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் பொள்ளாச்சி பி.ஏ.பி அலுவலகத்தில் கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்லடம் பொதுப்பணித்துறை அலுவலர், பல்லடம் தாசில்தார், திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அத்துடன் முதலமைச்சர் தனிப்பிரிவு, தலைமை நிலைய செயலாளர், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோருக்கு திட்டத்தை ரத்து செய்யக் கோரி பதிவுத்தபால் மூலமாகவும் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

    • இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார்.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8வது வார்டு உறுப்பினராக உள்ள சுகன்யா ஜெகதீஸ்.(31) இவர் பல்லடம், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அன்னதானம் வழங்குவதற்கு ஏற்கனவே கோயில் கமிட்டியாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்று இருந்ததாகவும், தற்போது, அவரையும் அவரது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும், அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கோவில் நிர்வாகத்தினர் கூறுவதாகவும். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில்,நேற்று, பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்; பச்சாபாளையம் பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்றாக போராடி வருகிறோம். இந்தப் பிரச்சினையை திசை திருப்புவதற்காக கோவிலிக்குள் வரவேண்டாம் என்று சொன்னதாக கோவில் நிர்வாகிகள் மீது புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்பதற்காக இங்கே வந்தோம் என்றனர். பின்னர் இரு தரப்பினரையும், அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவிலில் வழிபட யாரையும் தடை செய்யக்கூடாது.

    ஒற்றுமையாக இருந்து கோவில் விழாவை நடத்த அறிவுறுத்தினார். இருதரப்பும் ஏற்றுக்கொண்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரை மணி நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

    • டாஸ்மாக் கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது.
    • பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு கே.வி.ஆர். நகர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும். எனவே அந்த கடையை அகற்ற வேண்டுமென மாகராட்சி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை அன்பகம் திருப்பதி தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்றனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து அன்பகம் திருப்பதி கூறுகையில், கே.வி.ஆர்.நகர் டாஸ்மாக் கடையால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடையை அகற்ற வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாமல் உள்ளது. 10 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • 100 நாள் வேலையில் பாரபட்சம் யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதாவது 800 பேர் உள்ள சாரம் கிராமத்தில் 140 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் 150க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களும் வசித்து வருகின்றனர் அவர்க ளுக்கும் நூறுநாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறாது.

    ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என சேர்மன் உறுதி அளித்த பெயரில்பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்க னக்கான பெண்கள் போராட்டத்தில் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர் இன மக்கள் முற்றுகையிட்டனர்.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    அப்போது தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் காரை ஆர்.சுப்ரமணியன் தலைமையில், ஆலத்தூர் தாலுகா மலையப்ப நகரை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களில் சிலர் சென்று கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் பெரம்பலூர் அருகே விஜயகோபாலபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை, இரவு நேரத்தில் வெளியேறும் கரும்புகையினால், அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தற்போது ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்களை இயக்குவதற்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம் முடிந்தவுடன் நிலக்கரி மூலம் அனைத்து எந்திரங்களையும் இயக்குவதற்கு ஆலை தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுகளால் ஏற்கனவே நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆலையை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும், குடிநீரும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலையின் பின்புறம் உள்ள காரை ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்ப நகரில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களும், ராமலிங்க நகரில் வசித்து வரும் கலைக்கூத்தாடிகள் குடும்பங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    நரிக்குறவர்கள் வீட்டிற்கு சென்று உணவருந்தி குறைகளை கேட்டு வரும் முதல்-அமைச்சர், ஆலையில் நிலக்கரி மூலம் எந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் அந்த ஆலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் நாளை (புதன்கிழமை) ஆலையில் நிலக்கரி பயன்பாட்டை மிகப்பெரிய அளவில் தொடங்கி வைக்க நடைபெற்ற வரும் விழா ஏற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்த டயர் தொழிற்சாலையில் எப்போதுமே நிலக்கரியை பயன்படுத்தக்கூடாது. மேலும் இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    ×