என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கபடி"
- அரியலூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் காவலர் அணி முதலிடம் பிடித்தனர்
- வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் அரசு துறை சார்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என 50 போட்டிகள் நடைபெற்றது. தற்போது ஜனவரி, பிப்ரவரி மாதம் மாவட்ட அளவிலான போட்டிகள், மே மாதம் மாநில அளவிலான போட்டிகளும் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தற்போது மாவட்ட அளவிலான போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி, போக்குவரத்து ஆய்வாளர் சாஹிரா பானு தலைமையிலான கபடி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தனர். தொடர்ந்து எரிதல் போட்டியில் போக்குவரத்து காவலர் அஞ்சலி முதல் இடமும், வாலிபாலில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற காவலர்கள் அணிக்கு ஊக்குத் தொகையாக ரூ.36 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ராஜா, சோமசுந்தரிடம் வாழ்த்து பெற்றார்.
- கந்தர்வகோட்டை அருகே கபடி போட்டி நடைபெற்றது
- இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரவம்பட்டியில் 26 ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி வெற்று முதல் இடத்தை பிடித்த சென்னம்பட்டி அணியினருக்கு ரூபாய் 40 ஆயிரத்தை பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ராமச்சந்திரன் வழங்கினார். இரண்டாம் இடத்தை முதுகுளம் அணியினரும், மூன்றாம் இடத்தை கோமாபுரம் அணியினரும், நான்காம் இடத்தை அரவம்பட்டி அணியினரும் பிடித்தனர். போட்டியில் விளையாடிய அணிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி சசிகுமார், துணைத் தலைவர் அருண் பிரசாத், சந்திரன், அரவை மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், கிராம இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள்.
- 3-ம் பரிசாக ரூ.1000-ம் வழங்கப்படுகிறது.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மற்ற பிரிவுகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது.
அதன்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் (12 வயது முதல் 19 வயது வரை) நாளை ( வெள்ளிக்கிழமை ) பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
ம மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு கிடையாது. மாற்றுத்திறனாளிகளுக்கு 50மீட்டர் ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தம், எறிபந்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.
கபடி விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 13-ந்தேதி அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான தடகள போட்டிகள் (17 முதல் 25 வயது வரை), 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
பொதுப்பிரிவினருக்கு (15 முதல் 35 வயது வரை), ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 17-ந்தேதி கபடி, சிலம்பம், இறகுப்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கிலும், கிரிக்கெட் பூண்டி புஷ்பம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது.
அரசு ஊழியர்களுக்கு (வயது வரம்பு இல்லை) கபடி, இறகுப்பந்து, கையுந்துபந்து, செஸ், தடகளம் ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.1000-ம், வழங்கப்படுகிறது.
மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்குஅழைத்துச்செல்லப்படுவார்கள்.
இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, 10ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
- சிறப்பிடம் பெற்ற மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் பாராட்டினர்.
ஆலங்குளம்:
குடியரசு தினவிழா குழு போட்டிகள் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், 17 வயதுக்குட் பட்டோருக்கான பெண்கள் பிரிவில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் மேற்கு நெல்லை மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2-வது இடம் பிடித்தனர்.
இதே போன்று, 32-வது தேசிய சப்-ஜுனியர் கபடிப் போட்டியில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழக அணியில், இப்பள்ளி மாணவியும், காளத்திமடம் தென்றல் அணியின் வீராங்கனையுமான ரோபோ அஜி மாய்ஷா இடம்பிடித்திருந்தார்.
போட்டிகள் நிறைவு பெற்றதையடுத்து, இந்த மாணவிகள் ஊருக்கு திரும்பினர். அப்போது ஆலங்குளம் பிரதான சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது, போட்டியில் சிறப்பிடம் பெற்ற அம்மாணவிகளுக்கு ஆலங்குளம் பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து, பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.டி.ஜாண்ரவி, பரணி சில்க்ஸ், ஆர்த்தி ஜவுளி ரெடிமேட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் பொன்னாடை அணிவித்து, பரிசுகள் வழங்கி கவுரவித்தனர்.
சிறப்பிடம் பெற்ற இம் மாணவிகளை, பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி ஜான்சிராணி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், காளத்திமடம் தென்றல் அணியின் தலைவர் செல்வகுமார், செயலாளர் உதயசூரியன், மேலாளர் கருணாகரன், தலைமை பயிற்சியாளர் ஆசீர்ராஜா, பயிற்சியாளர்கள் மணி டேவிட், ஸ்டீபன், கரிகாலன் உள்ளிட்ட முன்னாள் கபடி வீரர்கள் பாராட்டினர்.
- பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது.
- இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.
பரமத்திவேலூர்:
நாமக்கல்மாவட்டம் பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியில் உடற் கல்வித் துறை சார்பில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளை சேர்ந்த 50 அணிகள் கலந்து கொண்டன.
இப்போட்டிக்கு கந்தசாமி கண்டர் கல்லூரி முதல்வர் தங்கராஜ் தலைமை தாங்கினார். கலந்து கொண்ட அணிகளை உடற்கல்வித்துறை இயக்குனர் சிவகுமார் வரவேற்று பேசினார். பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
கபடி போட்டிகளை கந்தசாமி கண்டர் அறநிலையத்துறை தலைவர் சோமசுந்தரம் தொடங்கி வைத்தார். போட்டிகள் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்றது. இப்போட்டியில் சேலத்தைச் சேர்ந்த கணேஷ் கல்லூரி முதல் பரிசையும், சேலத்தைச் சேர்ந்த ஏ.வி.எஸ் கல்லூரி 2-ம் பரிசையும், பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி 3-ம் பரிசையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி நிர்வாகம் செய்திருந்ததது.
- கபடி போட்டியில் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்
- மாவட்ட அளவில் நடந்தது
கரூர்:
கரூர் மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டி கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி மன்ற தலைவி சேதுமணி மகாலிங்கம் அவர்கள் தொடங்கி வைத்தார்.கிருஷ்ணராயபுரம் வார்டு உறுப்பினர்கள் ராதிகா கதிரேசன், சசிகுமார், இளங்கோ, சிவகாமி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதியழகன் ஆகியோர் போட்டிகளில் பங்கேற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 14 வயது உட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், இரண்டாம் இடம் எ. உடையாபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் என். புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியும் பெற்றது.
17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் வாங்கல் எஸ்டி மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியும் , இரண்டாம் இடம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் காக்காவடி பி.ஏ.வித்யாபவன் பள்ளியும் பெற்றன.
19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டியில் முதலிடம் பஞ்சப்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியும் , இரண்டாம் இடம் கீழவெளியூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் , மூன்றாம் இடம் வெள்ளியணை பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும்வெ ற்றி பெற்றுள்ளன.
வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கிருஷ்ணாபுரம் பேரூராட்சி மன்ற தலைவி சேதுமதி மகாலிங்கம் பரிசுகள் வழங்கி பாராட்டி னார். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் செந்தில்வேலன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மாநில அளவிலான கபடிபோட்டி நடந்தது
- மாநில அளவிலான கபடிபோட்டி நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கலிபுல்லா நகரில் இளைஞர்களால் நடத்தப் பட்ட மாநில அளவிலான கபடிபோட்டியில் தமிழக த்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அணியினர் பங்கேற்றனர். ஒவ்வொரு போட்டியிலும் கபடி வீரர்கள் ஆக்ரோசத்துடன் சீறிப்பாய்ந்து விளையாடினர். வீரர்களின் ஆக்ரோஷத்தை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசை கல்லணையை சேர்ந்த அணியினரும், இரண்டாவது பரிசை ஆலங் குடி அணியினரும், மூன்றாவது பரிசை சிவகங்கை அணியினரும், நான்காவது பரிசை புதுக்கோட்டை மாவட்ட அணியினரும் தட்டிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பரிசும், சுழற் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
- கபடி போட்டியில் அரசு பள்ளிகள் முதலிடம் பிடித்தது.
- மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவையொட்டி நடந்த பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கபடி, கோ-கோ, கால்பந்து ஆகிய குழு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தது. 14, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் எறையூர் அரசு நிதியுதவி பெறும் நேரு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் பெரம்பலூர் மரகத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தன.
- திருவாலவாயநல்லூரில் கபடி போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
- இதில் 85 அணிகள் கலந்து கொண்டன.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள திருவாலவாயநல்லூர் ஊராட்சியில் அருண் மற்றும் சாலினி நினைவு கபடி குழு இணைந்து கபடி போட்டியை நடத்தியது. 85 அணிகள் கலந்து கொண்டன. சோழவந்தான் வெங்கடேசன் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
முதல் பரிசை குருவித்துறை வல்லவன் பார்ட்னர்ஸ் அணியும், 2-வது பரிசை காடுபட்டி அணியும், 3-வது பரிசை செல்லூர் அணியும், 4-வது பரிசை பேட்டை கிராம அணியும் பெற்றது. பரிசுகளை ஊராட்சி மன்ற செயலாளர் சகுபர்சாதிக், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சேகர், முத்தையா, பாசறை மற்றும் ஜே.பி.கிளப் உள்ளிட்டோர் இணைந்து வழங்கினார். முன்னதாக போட்டிகளை சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் தொடங்கி வைத்தார்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், சித்தாலங்குடி ஒன்றிய கவுன்சிலர் தனபால் முன்னிலை வகித்தனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் என்பதை தெரிவித்தார்.
- கபாடி போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் முதல் இடத்தையும், இலக்கியத்துறை மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 75-வது சுதந்திரதினத்தைச் சிறப்பிக்கும் வகையில், கவிதை, பேச்சு, கட்டுரை, சிலம்பம், நாடகம், இசைக் கருவி இசைத்தல், தனிநபர் பாடல், குழுப்பாடல், தனிநபர் நடனம், குழு நடனம், ஓவியம், ரங்கோலி, குழு வியைாட்டு, தடகள விளையாட்டு எனும் போட்டிகள் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துறைகளுக்கு இடையில் நடத்தப்படும் இப்போட்டிகளின் தொடக்க நாளில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் ஆடவர்களுக்கான கபாடிப் போட்டியையும் மகளிர்களுக்கான எறிபந்துப் போட்டியையும் தொடங்கிவைத்தார்.
போட்டிகளைத் தொடங்கிவைத்து மாணவர்களை வாழ்த்திய துணைவேந்தர், உடல் நலன், மனநலன் எனும் இவற்றை மேம்படுத்தும் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொள்ள வேண்டும். பாதுகாப்பாகப் போட்டித் திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் விளையாட வேண்டும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் 15.8.2022 அன்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்தார்.
முதல்நாள் நடைபெற்ற ஆடவர் கபாடிப் போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள் முதல் இடத்தையும் இலக்கியத்துறை மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மகளிர்களுக்கான எறிபந்துப் போட்டியில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை மாணவியர்கள் முதல் இடத்தையும் இலக்கிய–த்துறை மாணவியர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். இந்நிகழ்வில் புலத்தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கபடி போட்டி நடைபெற்றது.
- முதல் பரிசு மற்றும் கோப்பையை ஆசீர்வாதபுரம் அணி வென்றது.
கடையம்:
கடையம் பெரும்பத்து வெய்க்கால்பட்டியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் வழிகாட்டுதலின்படிதி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கபடி போட்டி நடைபெற்றது.
போட்டியினை ஊராட்சி தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
போட்டியில் முதல் பரிசு மற்றும் கோப்பையை ஆசீர்வாதபுரம் அணியும், இரண்டாம் பரிசை வெய்க்கால்பட்டி அணியும் வென்றது. தொடர்ந்து 10 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியில் கலந்து கொண்ட கபடி வீரர்கள் அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர். முடிவில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்