search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேட்ச்சுகளை தவற விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா கூறியுள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல் போட்டியில் லக்னோவிடம் வீழ்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாசை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் ஆடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப் புக்கு 210 ரன் குவித்தது.

    உத்தப்பா 27 பந்தில் 50 ரன்னும் ( 8 பவுண்டரி , 1 சிக்சர் ), ஷிவம் துபே 30 பந்தில் 49 ரன்னும் (5 பவுண்டரி , 2 சிக்சர் ), மொய்ன் அலி 22 பந்தில் 35 ரன்னும் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அவேஸ்கான், ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 3 பந்து எஞ்சி இருந்த நிலையில் 211 ரன் இலக்கை எடுத்தது. அந்த அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    குயின்டன் டி காக் 45 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி), இவின் லீவிஸ் 23 பந்தில் 55 ரன்னும் ( 6 பவுண்டரி , 3 சிக்சர் ), கேப்டன் லோகேஷ் ராகுல் 26 பந்தில் 40 ரன்னும் ( 4 பவுண்டரி , 3 சிக்சர் ) எடுத்தனர். பிரிட்டோரியஸ் 2 விக்கெட்டும் , பிராவோ , தேஷ்பாண்டே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை அணி தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது.

    நேற்றைய ஆட்டத்தில் சி.எஸ்.கே. வீரர்களின் பீல்டிங் மோசமாக இருந்தது. பல கேட்ச்சுகளை தவற விட்டனர். குயிண்டன் டி காக் கேட்சை மொய்ன்அலி தவற விட்டார்.

    கேட்ச்சுகளை தவற விட்டதால் தோல்வி ஏற்பட்டதாக சி.எஸ்.கே. கேப்டன் ஜடேஜா குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

    ராபின் உத்தப்பாவும், ஷிவம்துபேயும் பிரமாதமாக விளையாடினார்கள். எங்களது தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பீல்டிங்கில் கேட்ச்சுகளை தவற விட்டோம். கேட்ச் பிடித்தால்தான் போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

    நாங்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருக்க வேண்டும். கேட்ச்சுகளை தவற விட்டது. பனி துளி போன்ற காரணங்களால் தோல்வி ஏற்பட்டது.

    எங்கள் அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. முதல் 6 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. பந்து வீச்சாளர்கள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியமாகும்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    சென்னை அணி 3-வது ஆட்டத்தில் பஞ்சாப்கிங்சை ஏப்ரல் 3-ந்தேதி எதிர் கொள்கிறது லக்னோ அணி முதல் வெற்றியை பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று இருந்தது. லக்னோ 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4-ந்தேதி சந்திக்கிறது. 

    கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது என ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஸ்காட்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது.

    தொடக்க வீரர் ஜார்ஜ்மன்சே அதிகபட்சமாக 24 ரன்னும், மைக்கேல் லெஸ்க் 21 ரன்னும் எடுத்தனர். முகமது ‌ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அபாரமாக பந்துவீசி 15 ரன் கொடுத்து தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். பும்ராவுக்கு 2 விக்கெட்டும், அஸ்வினுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

    பின்னர் விளையாடிய இந்திய அணி 81 பந்துகள் எஞ்சிய நிலையில் 86 ரன் இலக்கை எடுத்தது. இந்தியா 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லோகேஷ் ராகுல் 19 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் சர்மா 16 பந்தில் 30 ரன்னும் (5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர்.

    இந்திய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே ஆப்கானிஸ்தானை 66 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. இந்திய அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. முதல் 2 ஆட்டத்தில் பாகிஸ்தான் (10 விக்கெட்), நியூசிலாந்து (8 விக்கெட்) தோற்று இருந்தது.

    இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நமீபியாவை வருகிற 8-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், இந்திய அணி அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பு குறைவே.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நாளைய ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றால் மட்டுமே இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. 2-வது நாடாக நியூசிலாந்து தகுதி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் ஒரு சில ஆட்டங்களின் மோசமான நிலையை வைத்து இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக இந்திய அணி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்த அணிதான் தற்போது ஒன்று அல்லது 2 ஆட்டங்களில் மோசமான நிலையை வெளிப்படுத்தி உள்ளது.

    இதை வைத்துக்கொண்டு இந்திய அணியை தவறாக மதிப்பிட வேண்டாம். அதில் எந்தவித நியாயமும் இல்லை.

    20 ஓவர் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் ஒருசில ஆட்டங்கள் மோசமாக அமையலாம். ஆனால் அந்த தோல்விகளை பற்றி அதிகம் சிந்திக்க முடியாது. அடுத்த ஆட்டத்திற்கான வாய்ப்புகள் குறித்து யோசித்து முன்னேறி செல்ல வேண்டும்.

    நான் வழக்கமாக எப்படி பந்து வீசுகிறேனோ அதுபோல்தான் ஸ்காட்லாந்துக்கு எதிராகவும் பந்து வீசினேன். எனது திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றுவதே எனது பங்களிப்பாகும்.

    இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்வதற்கும், 2-வது பேட்டிங் செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. பனித்துளியால் பந்துவீச்சு தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் டாஸ் வெல்வது முக்கியமானதாகும்.

    இவ்வாறு ஜடேஜா கூறினார்.

    நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழத்தினால் என்ன செய்வீர்கள் என்று அவரிடம் ஒரு நிருபர் கேட்டார். அப்படி நிகழ்ந்தால் நாங்கள் பேக்கை தூக்கிக்கொண்டு வீட்டுக்கு போவோம். அப்புறம் என்ன மிச்சம் என்று சிரித்தபடி ஜடேஜா பதில் அளித்தார். 

    கே.எல். ராகுல், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ஸ்காட்லாந்துக்கு எதிரான 86 இலக்கை 6.3 ஓவரில் எட்டி இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12, குரூப்-2 லீக் ஆட்டத்தில் இந்தியா- ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 85 ரன்னில் சுருண்டது. இந்த அணி சார்பில் முகமது ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெடும் வீழ்த்தினர்.

    பின்னர் 86 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. 7.1 ஓவரில் இலக்கை எட்டினால், இந்தியாவின் ரன்ரேட் அதிக அளவில் உயரும் என்ற நிலை இருந்ததால் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    முதல் ஓவரில் ரோகித் சர்மா 1 பவுண்டரி அடிக்க 8 ரன்கள் கிடைத்தது. 2-வது ஓவரில் கே.எல். ராகுல் 2 பவுண்டரி விரட்ட 15 ரன்கள் கிடைத்தது. 3-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடிக்க, கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது.

    4-வது ஓவரில் ரோகித் சர்மா ஒரு இமாலய சிக்ஸ் விளாசியதுடன், இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைக்க, இந்தியா 3.5 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது.

    5-வது ஓவரில் கே.எல். ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். ரோகித் சர்மா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் கடைசி பந்தில் எல்.பி.டபிள்யூ மூலம் வெளியேறினார். அவர் 16 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்தார். இந்தியா 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்தது.

    6-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்த கே.எல். ராகுல் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 18 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

    7-வது ஓவன் 3-வது பந்தை சூர்யகுமார் யாதவ் சிக்சருக்கு தூக்க இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 89 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ஸ்காட்லாந்து அணிக்கெதிராக இந்திய பந்து வீச்சாளர்கள் ஜடேஜா, முகமது ஷமி அபாரமாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றது.

    இந்நிலையில் இந்திய அணி இன்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் விளையாடி வருகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த மூன்று போட்டிகளில் தொடர்ந்து டாஸ் தோற்ற விராட் கோலி இன்று டாஸ் வென்றார்.

    ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் முன்சே 19 பந்தில் 24 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கைல் கோயேட்ஜர் 1 ரன்னில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

    மிடில் ஆர்டர் ஓவரில் ஜடேஜா அபாரமாக பந்து வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். 17-வது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஒரு ரன்அவுட் உள்பட மூன்று விக்கெட்டுகளை ஸ்காட்லாந்து இழந்தது.

    ஜடேஜா

    பும்ரா அடுத்த ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மார்க் வாட் க்ளீன் போல்டாக ஸ்காட்லாந்து 17.4 ஓவரில் 85 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷமி 3 ஓவரில் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பும்ரா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    கிரிக்கெட் வீரர்கள் ஜடேஜா, ஷமி, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். #ArjunaAward #BCCI
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கி கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.

    இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த  வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.



    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி மற்றும் கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. #ArjunaAward #BCCI
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஜடேஜாவின் ‘நியூ லுக்’கை பார்த்து சக வீரர்கள் கிண்டல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. #IPL2019 #CSK
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் டோனி, ரெய்னா, ஜடேஜா, பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். இதில் ஜடேஜா தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றுவார். குறிப்பாக தாடி மீசையில் விதவிதமான ஸ்டைலை அறிமுகம் செய்வார். ரசிகர்களும் அதை ரசிப்பார்கள். நீண்ட காலமாக தாடியுடன் காட்சியளிக்கும் அவர் கடந்த முறை தாடியை சேவிங் செய்துவிட்டு, அதை ஒரு சவாலாக அறிமுகப்படுத்தினார்.

    தற்போது அவர் வெளிநாட்டுக்காரர்களை போல் தாடியை பிரவுன் கலரில் மாற்றியுள்ளார். இதை சக வீரர்கள் கிண்டல் செய்துள்ளனர். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
    தற்போது வெளிநாட்டு தொடருக்கான இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இருப்பார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். #TeamIndia
    இந்திய அணியின் நம்பர் ஒன் சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. அவருக்குப்பின் ஹர்பஜன் சிங் ஆதிக்கம் செலுத்தினார். அதன்பின் அஸ்வின் முதன்மை பந்து வீச்சாளராக இருந்தார். இங்கிலாந்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின், வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரில் மட்டுமே அஸ்வின் இடம்பிடித்தார். அதன்பின் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் அற்புதமாக பந்து வீச அஸ்வின் மற்றும் ஜடேஜாவை இந்திய அணி நிர்வாகம் தேடவில்லை.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற அஸ்வினின் பந்து வீச்சு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. அதன்பின் காயத்தால் கடைசி மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சிட்னி டெஸ்டில் குல்தீப் யாதவ் இடம்பிடித்தார்.

    அவர் முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெடுக்கள் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் வெளிநாட்டு தொடருக்கான இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்தான் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘இந்திய டெஸ்ட் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நடைமுறையில் இருப்பார்கள். ஏற்கனவே, குல்தீப் யாதவ் வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். ஆகவே, அவர் இந்திய அணியின் வெளிநாட்டு தொடருக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளராகியுள்ளார்.



    வரும் காலங்களில் நாங்கள் ஒரு சுழற்பந்து விச்சாளருடன் விளையாட முடிவு செய்தால், குல்தீப் யாதவை ஆடும் லெவன் அணியில் சேர்ப்போம். ஒவ்வொருவருக்கும் ஒரு நேரம் உண்டு. தற்போது குல்தீப் யாதவ் வெளிநாட்டு தொடருக்கான முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார்.

    சிட்னியில் அவர் பந்து வீசிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. வெளிநாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கூட இதுபோன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்களுடன் விளையாடலாம். சிட்னியில் அவர் பந்து வீசியதன் மூலம், எங்களின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராகியுள்ளார்’’என்றார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். #AUSvIND #ViratKohli
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக மயாங்க் அகர்வால், விஹாரி ஆகியோர் களம் இறங்கினர்.

    3-வது டெஸ்டில் விளையாடும் அணி விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், விஹாரி, புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரி‌ஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா, ஜடேஜா, முகமது சமி

    ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட். #AUSvIND #ViratKohli
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது. #AUSvIND #BoxingDayTest
    மெல்போர்ன்:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என முடிந்தது. தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்திலும் பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    3-வது டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இப்போட்டி ‘பாக்சிங் டே டெஸ்ட்’ என்று அழைக்கப்படுகிறது. முதல் டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 2-வது டெஸ்டில் அந்த உத்வேகத்தை தொடர தவறி விட்டது.

    2-வது போட்டியில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.



    கடந்த 2 டெஸ்ட்டில் இந்தியாவின் தொடக்க ஜோடியான முரளி விஜய் - லோகேஷ் ராகுல் ஆட்டம் மோசமாக இருந்தது. நல்ல தொடக்கம் கொடுக்க தவறினர். ராகுல் பெர்த் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ‘க்ளீன் போல்டு’ ஆனார்.

    இதற்கிடையே நாளை தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முரளி விஜய், லோகேஷ் ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் பெர்த்தில் விளையாடிய உமேஷ் யாதவும் நீக்கப்பட்டுள்ளார்.

    மயாங்க் அகர்வால், ரோகித், ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் மயாங்க் அகர்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கிறார். மேலும் பேட்டிங்கில் விராட் கோலி, புஜாரா, ரகானே, ரி‌ஷப் பந்த் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். காயத்தில் இருந்து குணம் அடைந்துள்ள ரோகித் சர்மா 6-வது வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. காயத்தில் இருந்து அஸ்வின் இன்னும் குணம் அடையாததால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.

    டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச், கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேலும் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் நீக்கப்பட்டு ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.



    இந்த டெஸ்டில் வெற்றி பெற்று பெற்றால் தொடரை இழக்க வாய்ப்பில்லை என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற முயற்சிக்கும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    3-வது டெஸ்டில் விளையாடும் அணி விவரம் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி (கேப்டன்), மயாங்க் அகர்வால், விஹாரி, புஜாரா, ரகானே, ரோகித் சர்மா, ரி‌ஷப் பந்த், பும்ரா, இஷாந்த் சர்மா.

    ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹசில்வுட்.
    சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா காயத்தால் அவதிப்பட்டார் என்ற ரவி சாஸ்திரியின் பேச்சு, பெரும் புயலை கிளப்பியது. அதற்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்தது. #AUSvIND #BCCI
    ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் வெற்றி பெற்றது. உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

    பெர்த் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வு முறைகளை முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கியது தவறு என்று கூறிய அவர்கள், அஸ்வின் காயம் அடைந்த நிலையில் ஜடேஜாவை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினர். இந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றதையும் சுட்டிக்காட்டினர்.

    இந்நிலையில் அணித்தேர்வு தொடர்பான சலசலப்புகளுக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நேற்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு குறை சொல்வதும், விமர்சிப்பதும் எளிது. அவர்களின் கருத்துகள் மிக தொலைவில் இருக்கிறது. ஏனெனில் நாங்கள் இப்போது புவியின் தென்துருவத்தில் இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை, அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதை செய்கிறோம் அவ்வளவுதான்.

    அஸ்வின் காயத்தில் சிக்கிய நிலையில் பெர்த் டெஸ்டில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவை சேர்த்து இருக்கலாம் என்று சொல்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அப்போது ரவீந்திர ஜடேஜா உடற்தகுதியுடன் இல்லை. தோள்பட்டை வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியா வந்து இறங்கியதும் 4 நாட்களுக்கு ஊசி போடப்பட்டது.

    இந்தியாவில் இருந்தபோதே தோள்பட்டையில் கொஞ்சம் ‘பிடிப்பு’ இருப்பதை அவர் உணர்ந்திருந்தார். மருந்தினை ஊசி மூலம் உடலில் செலுத்தினாலும், காயம் சரியாவதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகிவிட்டது.

    பெர்த் டெஸ்டின்போது அவர் 70 முதல் 80 சதவீதம் வரை உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்ந்தோம். அதனால் அந்த டெஸ்டில் நாங்கள் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. ஆனால் இங்கு (மெல்போர்ன்) 80 சதவீதம் உடல்தகுதியுடன் இருந்தால் கூட அவரை களம் இறக்குவோம்’’ என்றார்.

    ரவீந்திர ஜடேஜா இந்தியாவில் இருந்து கிளம்பும் போதே காயத்தில்தான் இருந்தார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படுத்திய தகவல் புதுவித சர்ச்சையை கிளப்பியது.

    காயமடைந்த வீரரை முக்கியமான இந்த தொடருக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு குழுவினர் எப்படி தேர்வு செய்தார்கள்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? காயத்துடன் இருந்தால் பெர்த் டெஸ்டில் எப்படி பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டார்? விராட் கோலி, ஏன் ஜடேஜா குறித்து நாங்கள் யோசிக்கவே இல்லை, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன்தான் களம் இறங்க முடிவு செய்தோம் என்று கூறினார்? என ரவி சாஸ்திரியின் பதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.



    இதற்கிடையில் இந்தியாவில் இருந்து புறப்படும்போது ஜடேஜா உடற்தகுதியுடன்தான் இருந்தார் என சவுராஷ்டிரா அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார். இதனால் இந்த விவகாரம் பெரிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் பிசிசிஐ, ஜடேஜா உடற்தகுதியுடன் இந்தியாவில் இருந்து சென்றார் என்று விளக்கம் அளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

    இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நவம்பர் 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடந்த ரஞ்சி கிரிக்கெட்டில் பங்கேற்ற ஜடேஜா எந்தவித காயப் பிரச்சினையும் இன்றி 64 ஓவர்கள் பந்து வீசினார். அதைத் தொடர்ந்தே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணிக்கு தேர்வானார்.

    சிட்னியில் நடந்த பயிற்சி கிரிக்கெட்டின்போது அவருக்கு இடது தோள்பட்டையில் பிரச்சனை ஏற்பட்டது. ஊசி போட்டு ஓய்வு கொடுத்த நிலையில் அவரது தோள்பட்டையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இப்போது 3-வது டெஸ்டில் விளையாட தயார் நிலையில் இருக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
    பெர்த் டெஸ்டில் எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியானது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    இந்த டெஸ்டில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி எங்களைவிட பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. இந்த ஆடுகளத்தில் இது அதிகமான ரன்னே. ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணியே.

    நாங்கள் நம்பிக்கையுடன் விளையாடியபோது ஆஸ்திரேலிய பவுலர்கள் எங்களுக்கு இடைவிடாது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் அதில் மிகுந்த திறமையுடன் செயல்பட்டனர்.

    ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது நாங்கள் ஜடேஜாவை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசினார். சுழற்பந்து வீரர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் யோசிக்கவில்லை. 4 வேகப்பந்து வீரர்கள் போதுமானது என்று கருதுதினோம்.

    நாங்கள் விரும்பிய முடிவை பெறாததால் ஆட்டத்திறன் குறித்து சொல்வது பொருத்தமற்றது. அடுத்த டெஸ்டில் கவனம் செலுத்துவதுதான் இனி நோக்கமாக இருக்கும்.



    எனக்கு கொடுக்கப்பட்ட முடிவு (சர்ச்சைக்குரிய கேட்ச்) குறித்து ஆடுகளத்தில் எடுக்கப்பட்டது. அது அங்கேயே முடிந்துவிட்டது. இதற்கு மேல் ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கூறும்போது, “இந்த வெற்றியால் நிம்மதி அடைகிறோம். எங்களது வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு என மைக்கேல் வாகன், சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளனர். #AUSvIND #Jadeja #SunilGavaskar #MichaelVaughan
    பெர்த்:

    பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.

    ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் விகாரி 2 விக்கெட் வீழ்த்தினார். இதனால் முதன்மை சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்து இருக்கலாம் என்று கருத்து எழுந்துள்ளது.

    இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது:-



    அணியில் ஜடேஜாவை சேர்க்காதது மிகப்பெரிய தவறு. அடுத்து சில நாட்களில் சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது பற்றி கோலி நிச்சயம் சிந்திப்பார் என்றார்.

    இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது,



    அஸ்வின் காயம் அடையாமல் இருந்தால் கண்டிப்பாக அணியில் இடம் பெற்று இருப்பார். ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்க்காதது தவறு. ஜடேஜா கூட பந்தை சுழற்றுவார். 4-வது நாளில் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவது கடினமானது என்றார். #AUSvIND #Jadeja #SunilGavaskar
    ×