search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜடேஜா"

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4-வது ஆட்டம் இன்று மதியம் 1.30 மணிக்கு மும்பையில் தொடங்குகிறது.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் சாஹல், ரிஷப் பந்த் ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, கேதர ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

    3-வது ஆட்டம் புனேயில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் 1 மணிக்கு சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் சுண்ட, வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அஹமது ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    பனிப்பொழியும் போது பந்து வீசுவது கடினம் என்று விசாகப்பட்டினம் போட்டி குறித்து குல்தீப் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதத்தால் (157) 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது.

    பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. ஷாய் ஹோப் (123 அவுட் இல்லை), ஹெட்மையர் (94) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நெருங்கியது. ஆனால் போட்டி வெற்றித் தோல்வியின்றி ‘டை’யில் முடிவடைந்தது.

    இந்திய பந்து வீச்சாளர்கள் ஷமி 59 ரன்னும், உமேஷ் யாதவ் 78 ரன்களும், குல்தீப் யாதவ் 67 ரன்களும், ஜடேஜா 49 ரன்களும், சாஹல் 63 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    விசாகப்பட்டினத்தில் இந்தியா 2-வது பந்து வீசும்போது கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பவுலர்கள் பந்தை இருக்கமாக பிடிக்க முடியவில்லை. இதனால் பந்தை டர்ன் செய்ய கஷ்டப்பட்டனர்.

    குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினாலும் 67 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நிலவிய சூழ்நிலையில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.



    இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘பனிப்பொழிவின் போது பந்து வீசுவது மிகவும் கடினமானது. பனியால் பந்து ஈரப்பதமானது. பந்தை பிடிக்க கடினமாக இருந்தது. ஆனால், இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக விளையாட வேண்டுமென்றால், அதிக அளவில் பயிற்சி பெறுவது அவசியமானது.

    இந்த சூழ்நிலையில் ஜெட் வேகத்தில் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, அதன்பின் திணறியது. இதனால் பந்து வீச்சு யுனிட்டான நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். பனிப்பொழிந்த நிலையிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்’’ என்றார்.
    பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு அவருக்கு நெருக்கடி அளிக்கக் கூடாது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ViratKohli #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் அறிமுகமான இளம் வீரரான பிரத்வி ஷா அறிமுக இன்னிங்சிஸ்லேயே சதம் அடித்து அசத்தினார். அதுவும் 99 பந்தில் சதம் விளாசினார். அவரது ஸ்டைல், ஆட்டம் ஆகியவற்றை வைத்து சேவாக் மற்றும் சச்சின் தெண்டுல்கருடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் பிரித்வி ஷாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு நெருக்கடி அளிக்க வேண்டாம் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நாம் பிரித்வி ஷாவை யாருடனும் ஒப்பிடக் கூடாது. அவருக்கு நெருக்கடி உண்டாகும் வகையில் நாம் ஒரு இடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. அதில் இருந்து விலகி அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும். மெதுவாக அவர் வளர வேண்டும். அதில் நமக்கு நம்பிக்கை வேண்டும்.



    இதுவரை அவரை ஒரு வீரருடன் ஒப்பிட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், இளம் வீரர்களுக்கு அவருடைய திறமையில் வளர்ந்து வர நாம் இடம் அளிக்க வேண்டும். பிரித்வி ஷா அபாரமான திறமையை பெற்றுள்ளார். அதை நாம் எல்லோரும் பார்த்துள்ளோம்.

    அவர் முதல் ஆட்டத்தில் என்ன செய்தாரோ அதை எல்லா போட்டிகளிலும் செய்ய வேண்டும் என்பதை நான் எல்லோரும் நினைக்க வேண்டும். அவர் சூழ்நிலையை நன்றாக அறிந்துள்ளார். அவருடைய விஷயத்தில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம்’’ என்றார்.
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. மேலும் ஒரு பெரிய வெற்றிக்கு இந்தியா ஆயத்தமாகிறது. #INDvWI
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (12-ந்தேதி) தொடங்குகிறது. முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று இந்தியா தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் இந்திய அணி பலவீனமான வெஸ்ட் இண்டீஸை எளிதில் மீண்டும் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டை ‘டிரா’ செய்தாலே இந்தியா தொடரை கைப்பற்றி விடும்.



    2013-ம் ஆண்டில் இருந்து இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது இல்லை. அந்த சாதனை வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராகவும் நீடிக்கும். கடந்த டெஸ்டில் கேப்டன் விராட் கோலி, புதுமுக வீரர் பிரித்வி ஷா, ஜடேஜா ஆகியோர் சதம் அடித்து முத்திரை பதித்தனர். இதேபோல் புஜாரா, ரி‌ஷப் பந்த் ஆகியோரும் சாதித்தனர். பந்து வீச்சில் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது‌ ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த டெஸ்டில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆடா விட்டால் ரகானே கேப்டனாக பணியாற்றுவார். கோலி இடத்தில் மயாங்க் அகர்வால் இடம் பெறலாம்.  ராஜ்கோட் டெஸ்டை போலவே இந்த போட்டி யிலும் இந்தியா தனது ஆதிக் கத்தை செலுத்தும்.



    வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தவரை தொடரை இழக்காமல் இருக்க இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அனுபவமற்ற அந்த அணி இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடும் சவாலானது. 1994-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவில் டெஸ்டை வென்றது கிடையாது.

    காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் ஹோல்டர் இந்த டெஸ்டில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வெஸ்ட் இண்டீஸ் முன்னேற்றம் அடைவது அவசியம். முதல் டெஸ்டில் ‘பாலோ-ஆன்’ ஆகி தோற்ற அந்த அணி இந்த டெஸ்டில் கடுமையாக போராடுவார்கள்.



    இரு அணிகளும் நாளை மோதுவது 96-வது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை நடந்த 95 போட்டியில் இந்தியா 19-ல், வெஸ்ட் இண்டீஸ் 30-ல் வெற்றி பெற்றுள்ளன. 46 டெஸ்ட் ‘டிரா’ ஆனது.

    நாளைய டெஸ்ட் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    ராஜ்கோட்டில் வெஸ்ட் இண்டீஸை இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுதான் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 181 ரன்னிலும், 2-வது இன்னிங்சில் 196 ரன்னிலும் சுருண்டது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    இந்த வெற்றிதான் இந்தியாவின் மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியாகும். இதற்கு முன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுதான் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.



    டாக்காவில் நடைபெற்ற வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்களிலும், நாக்பூரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது.
    ராஜ்கோட்டில் இந்தியா 649 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ததே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.



    பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.



    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இந்தியாவின் 7-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா சதத்தால் இந்தியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது #INDvWI #Jadeja #ViratKohli
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தால் இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது. விராட் கோலி 72 ரன்னுடனும், ரிஷப் பந்த் 17 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக விளையாடி தனது 24-வது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 84 பந்தில் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த ஜடேஜா தனது சொந்த மைதானத்தில் ஆதிரடியை வெளிப்படுத்தினார். விராட் கோலி (139), அஸ்வின் (7), குல்தீப் யாதவ் (12), உமேஷ் யாதவ் (22) ஆதரவு கொடுக்க ஜடேஜா 128 பந்தில் 99 ரன்னை தொட்டார். 150-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து தனது முதல் சதத்தை அடித்தார் ஜடேஜா.

    149.5 ஓவரில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜடேஜா 100 ரன்னுடனும், முகமது ஷமி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தேவேந்திர பிஷூ அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
    ஆசிய கோப்பை தொடரில் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ்க்கு தவறான முறையில் அவுட் வழங்கியதாக கூறி விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேச ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். #ViratKohli #AsiaCup2018 #LitonDas
    புதுடெல்லி :

    சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியின் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.  

    அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ், 117 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார். இவரது சதத்தின் உதவியுடன் வங்கதேச அணி 222 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் முறையில் அவுட் செய்யப்பட்டார். முதலில் களத்தில் இருக்கும் நடுவருக்குக் குழப்பம் வரவே, முடிவு மூன்றாவது நடுவருக்கு மாற்றப்பட்டது. நீண்ட நேர ஆய்வுக்குப் பின்னர் நடுவர் அவுட் என்று அறிவித்தார்.  

    இருப்பினும் வங்காளதேச ரசிகர்கள் நடுவர் தவறாக அவுட் கொடுத்து விட்டார், இதுவே தங்கள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது என புலம்பி வந்தனர்.


    இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். அதில், ’டியர் ஐசிசி, கிரிக்கெட் ஜெண்டில்மேன்கள் விளையாடும் விளையாட்டு இல்லையா ?. இது எப்படி அவுட் என்று கூறுங்கள். தவறாக அவுட் வழங்கிய நடுவர் மீது நடவடிக்கை எடுத்து இந்த உலகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    அவ்வாறு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இணையதள பக்கங்கள் மீண்டும் மீண்டும் முடக்கப்படும். இந்திய சகோதர சகோதரிகளே, உங்களை அவமானப்படுத்தும் நோக்கில் நாங்கள் இதை நாங்கள் செய்யவில்லை. உங்கள் அணிக்கு இப்படி ஒரு அநீதி நடந்தால் உங்களது உணர்வுகள் எப்படி இருக்கும் என நீங்களும் சிந்தித்துப் பாருங்கள்.

    கிரிக்கெட் விளையாட்டில் அனைத்து அணிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதற்காக இறுதி வரை நாங்கள் போராடுவோம்’ என முடக்கப்பட்ட இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோலியின் இணையதள பக்கத்தை வங்காளதேசத்தை சேர்ந்த சி.எஸ்.ஐ சைபர் போர்ஸ் எனும் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இத்தனைக்கும், ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி ஓய்வில் இருந்தார் ரோகித் சர்மா தான் கேப்டனாக அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #ViratKohli #AsiaCup2018 #LitonDas
    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது, உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று ரோகித்சர்மா கூறியுள்ளார்.#AsiaCup2018 #INDvBAN

    துபாய்

    துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

    ஆசிய கோப்பையை கைப்பற்றியது குறித்து இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஆசிய கோப்பை போட்டித் தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். கடின உழைப்புக்கு கிடைத்த பரிசாக இருந்தது. இந்தப் போட்டித் தொடரில் ஆதிக்கம் செலுத்தியதற்கு நல்ல வெகுமதி கிடைத்தது. வீரர்களின் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றோம். அனைத்து வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் கோப்பையை வென்று இருக்க முடியாது. எல்லா பெருமையும் அவர்களை சேரும்.


    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கள் (நடுவரிசை வீரர்) நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடியது முக்கியமானது. அவர்கள் ஆட்டத்தை முடித்த விதம் அருமையானது.

    அதோடு வங்காளதேச அணியையும் பாராட்டியே ஆக வேண்டும். அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடினார்கள். முதல் 10 ஓவரில் கடுமையான நெருக்கடி கொடுத்தார்கள். பந்து பழசாகிவிட்டால் எல்லாம் மாறும் என்று தெரியும். ரசிகர்களும் திரளாக வந்து தங்களது சிறப்பான ஆதரவை அளித்தார்கள். இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.. #AsiaCup2018 #INDvBAN
    துபாய் :

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. 17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார். மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள்.

    சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து, இந்திய அணி சேசிங் செய்ய தொடங்கியது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள்.

    இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 15 ரன்கள் அடித்திருந்த தவான், நஸ்முல் இஸ்லாம் பந்துவீச்சில் சவுமியா சர்காரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு 2 ரன்களில் மோர்டாசா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா ரூபல் ஹூசைன் பந்தில் நஸ்முல் இஸ்லாமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளில் 3 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உள்பட 48 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் களமிறங்கிய தோனி, 4-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்தார். வங்காளதேச வீரர்களின் பந்துகளை பொறுப்பான முறையில் எதிர்கொண்ட இவர்கள் அணியின் எண்ணிக்கையை சீரான வேகத்தில் உயர்த்தினர். ஆனால், மகமதுல்லா வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் 37 ரன்கள் அடித்திருந்த போது எல்.பி.டபல்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    தோனி - தினேஷ் கார்த்திக் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் குவித்தது. கார்த்திக் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே 36 ரன்களில் முஸ்தாபிசூர் ரஹ்மான் பந்தில் தோனி அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய கேதர் ஜாதவுக்கு ஆரம்பத்திலேயே தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில்  பாதி ஆட்டத்திலேயே வெளியேறிவிட்டார்.

    இதனால், 169 ரன்களுக்குள் 5 விக்கெட்டுக்களை இழந்ததால் இந்திய அணியின் ரன் ரேட் விகிதம் குறைந்து ஆட்டத்தில் வங்காளதேச அணியின் கை ஓங்கியது.

     

    இருந்தாலும் அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் புவனேஷ்வர் குமார் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையையும் உயர்த்தினர். இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் இருந்த பதட்டம் தனிந்து வெற்றியை நோக்கி இந்தியா பயணித்தது.

    ஆனால் வெற்றிக்கு 11 ரன்களே தேவை என்ற நிலையில் 23 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த புவனேஷ்வர் குமாரும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தசைப்பிடிப்பினால் வெளியேறிய ஜாதவ் மீண்டும் களமிறங்கினார்.

    இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 223 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. கேதர் ஜாதவ் 23 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 48 ரன்கள், தினேஷ் கார்த்திக் 37 ரன்கள், தோனி 36 ரன்கள் குவித்தனர். வங்காளதேச அணியில் முஸ்தாபிசூர் மற்றும் மோர்டாசா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்கள்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. இதில் இருந்து பின்னர் வங்காள தேசத்தால் மீள இயலவில்லை. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார்.



    மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள். 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த வங்காள தேசம் 44 ஓவரில்தான் 200 ரன்னைத் தொட்டது. சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ×