search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேதார்நாத்"

    இன்னும் 6 மாத காலத்திற்கு கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் சிவாலயம் உள்ளது. இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டு பலன் பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதியின் கரையோரம் அமைந்துள்ள இந்த கோவில், குளிர்காலத்தின்போது கடும் பனிப்பொழிவு நிலவுவதால் நடை சாத்தப்படும்.

    அவ்வகையில் குளிர்காலத்தை ஒட்டி இன்று கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று காலையில் சிறப்பு வழிபாட்டு விழாவிற்கு பின்னர் காலை 8 மணிக்கு நடை சாத்தப்பட்டது. இன்னும் 6 மாத காலத்திற்கு கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும் என சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.

    உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட நான்கு புராதன யாத்திரைத் தலங்களை தரிசிப்பது சார் தாம் யாத்திரை எனப்படும். 

    இந்த சார் தாம்களில் பத்ரிநாத் கோவில் வரும் 20ம் தேதி நடை சாத்தப்படுகிறது. கங்கோத்ரியில் நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நடை சாத்தப்பட்டது.

    இந்த ஆண்டு சார் தாம் யாத்திரை செப்டம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது. அக்டோபர் 22ம் தேதி வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டதாக சார் தாம் தேவஸ்தான நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது.

    கேதார்நாத் ஆலயத்தின் ஒரு பகுதியில் ஆதி சங்கரரின் 12 அடி உயர பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவரது சமாதியும் சீரமைக்கப்பட்டு உள்ளது.
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உலக புகழ்பெற்ற கேதார்நாத் சிவாலயம் உள்ளது.

    இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டு பலன் பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தியானத்துக்கும் கேதார்நாத் பகுதி மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

    கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதியின் கரையோரம் கேதார்நாத் தலம் அமைந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கால் கேதார்நாத் ஆலயம் மிக கடுமையாக சேதம் அடைந்தது. அங்கிருந்த ஆதி சங்கரரின் சமாதி, சிலை மற்றும் முக்கிய சன்னதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து கேதார்நாத் ஆலயத்தை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் சுமார் ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்று உள்ளன.

    கேதார்நாத் ஆலயத்தின் ஒரு பகுதியில் ஆதி சங்கரரின் 12 அடி உயர பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவரது சமாதியும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இவற்றின் திறப்பு விழாவும், கேதார்நாத் ஆலயத்தின் புதிய 5 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை நடைபெற்றது.

    ஆதி சங்கரர் சிலை

    பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ஆதி சங்கரரின் சிலையை திறந்து வைத்தார். இதுதவிர 5 புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

    மேலும் ஏ.டி.எம். மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லியில் இருந்து விமானத்தில் டேராடூனுக்கு புறப்பட்டு வந்தார். அவரை உத்தரகாண்ட் கவர்னர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித்சிங், முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

    பிறகு பிரதமர் மோடி, முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி மற்றும் அதிகாரிகள் கேதார்நாத்துக்கு சென்றனர். 8 மணிக்கு கேதார்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி தன் கையால் ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அவர் கேதார்நாத் லிங்கத்துக்கு மகா ருத்ர அபிஷேகமும் செய்தார்.

    8.35 மணிக்கு ஆதி சங்கரர் சமாதி மற்றும் சிலைகளை திறந்து வைத்தார். சிலை தனி கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு திரைச்சீலையை தன் கையால் அகற்றி ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார். சீரமைக்கப்பட்ட கேதார்நாத் ஆலயத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

    அதன்பிறகு 9.40 மணிக்கு அங்கு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.130 கோடிக்கு கேதார்நாத்தின் உள்கட்டமைப்பு பணிக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    புதிய திட்டங்கள் தொடக்க விழா நிறைவு பெற்ற பிறகு அங்கு நடந்த கூட்டத்திலும் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ஆதி சங்கரரின் ஆன்மிக சேவையை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.


    விருந்தினர் மாளிகைகள், மருத்துவமனை உள்பட ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
    டேராடூன்: 

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை டேராடூன் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு, அம்மாநில ஆளுநர் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர். 

    இதையடுத்து, கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார். சிவபெருமானுக்கு ஆரத்தி காண்பித்து தரிசனம் செய்தார்.

    பிரதமர் மோடி வழிபாடு

    கடந்த 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 12 அடி உயர ஆதி சங்கரரின் சிலை அடித்து செல்லப்பட்டது. ஆதி சங்கரர் சமாதியும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2019ம் ஆண்டு முதல் அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு 12 அடி உயர, 35 டன் எடைக் கொண்ட ஆதி சங்கரரின் சிலையை  பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

    மேலும், கேதார்நாத் கோவிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும் மோடி ஆய்வு செய்தார். இதேபோல்,  மந்தாகினி ஆற்றில் பாலம், தடுப்புச் சுவர், புரோகிதர்களுக்கான வீடுகள், விருந்தினர் மாளிகைகள், மருத்துவமனை உள்பட ரூ.400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
    உத்தரகாண்ட் கேதார்நாத் குகையில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்து வருகிறார்.
    புதுடெல்லி

    பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலை முடிவடைந்தது. பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் வழிபாடு செய்தார்.

    முன்னதாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சென்றடைந்த பிரதமர் மோடி, பாரம்பரிய உடையில் கோவிலுக்கு நடந்து சென்றார். 4-வது முறை கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார். தொடர்ந்து இங்கு அவர் 20 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொள்வார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேதார்நாத்தில் இன்று தங்கும் அவர் நாளை இங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் செல்கிறார். நாளை மாலை அவர் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.
    ×