search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98969"

    வடகொரியா எப்போதுமே உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்தாலும் கொரோனா பெருந்தொற்று நிலைமையை மிக மோசமாக்கி உள்ளது.
    சியோல் :

    உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டுகளை சோதித்து வந்துள்ளது. அத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவி பரிசோதித்து வருகிறது.

    இதன் காரணமாக அந்த நாட்டின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    இதனால் அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.

    இந்த சோதனைக்கு மத்தியில் அங்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    தற்போதையை நிலைமையை வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன், 1990-களில் அங்கு நிலவிய பஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளார். ‘ஆர்டியஸ் மார்ச்’ என்று அழைக்கப்பட்ட அந்த பஞ்சத்தில் லட்சக்கணக்கானோர் செத்து மடிந்தது வரலாற்றின் கரும்புள்ளியாக பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று கிம் ஜாங் அன் சமீபத்தில் உத்தரவிட்டது, மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

    அங்கு குளிர்காலம் வருகிற நிலையில் இப்போதே மக்கள் பட்டினி கிடப்பதாகவும், பட்டினிச்சாவுகள் நேரிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு தாவி உள்ள குடும்பங்கள், தங்கள் குடும்பத்தினர் வடகொரியாவில் பட்டினியால் தவிக்கின்றனர் என கூறி உள்ளனர்.

    ‘டெய்லி என்.கே.’ பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் இதுபற்றி குறிப்பிடுகையில், “தெருக்களில் அனாதை குழந்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பட்டினியால் இறப்பது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன. அடித்தட்டு மக்கள் மென்மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பொருட்கள் பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளது” என தெரிவித்தார்.

    வடகொரியா எப்போதுமே உணவு பொருட்கள் பற்றாக்குறையால் தத்தளித்து வந்தாலும் கொரோனா பெருந்தொற்று நிலைமையை மிக மோசமாக்கி உள்ளது.

    வரக்கூடிய அறுவடையை வட கொரிய மக்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    அறுவடை மூலம் கிடைக்கிற ஒவ்வொரு அரிசியையும் சோளத்தையும் பத்திரமாக சேகரிக்குமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வயல்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

    அறுவடையின்போது இழப்புகளை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக ‘டெய்லி என்.கே.’ பத்திரிகை ஆசிரியர் லீ சாங் யாங் தெரிவித்துள்ளார்.

    அறுவடையின்போது திருட்டு போனாலோ, ஏமாற்றினாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் வடகொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சீனாவும், ரஷியாவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருகின்றன.
    நியூயார்க்:

    வட கொரியா, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளையும், ஐ.நா. சபை தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரிசோதித்து வந்துள்ளன.

    இவற்றை தற்காப்பு நடவடிக்கை என்று அந்த நாடு கூறி வந்தாலும்கூட இது உலகளாவிய அச்சுறுத்தல் என்று வளர்ந்த நாடுகள் கருதுகின்றன.

    வடகொரியா முதன்முதலாக 2006-ம் ஆண்டு அணுக்குண்டு சோதனை நடத்தியபோதுதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முதலில் பொருளாதார தடை விதித்தது. அதன்பின்னர் தொடர்ந்து வடகொரியா அணு ஆயுதங்களை சோதித்தபோது, ஏவுகணைகளை ஏவி பரிசோதித்தபோது பொருளாதார தடைகளை மென்மேலும் இறுக்கியது.

    இதன் காரணமாக அந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.

    மற்றொரு புறம் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க அந்த நாடு தனது எல்லைகளை மூடி வைத்திருப்பதால் உணவுப்பொருட்கள் வினியோகச்சங்கிலி முறிபட்டுள்ளது. இதனால் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பொதுமக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டிருப்பது அங்கு பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் வடகொரியா மீதான முக்கிய பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொருளாதார வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷியாவும் கூட்டாக குரல் கொடுத்துள்ளன. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளன.

    இதையொட்டி ஒரு வரைவுத்தீர்மானத்தை தயார் செய்து அதை உறுப்பு நாடுகளுக்கு சுழற்சியில் விட்டுள்ளன.

    இந்த தீர்மானத்தில், வடகொரியாவின் பொருளாதார சிக்கல்கள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன. மேலும், அந்த நாட்டு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும், கொரிய தீபகற்பத்தில் நீடித்த அமைதி ஏற்படுவதற்கு அமெரிக்காவும், வடகொரியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதே போன்றதொரு தீர்மானத்தை இவ்விரு நாடுகளும் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்து சுழற்சியில் விட்டன. ஆனால் மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பால் அது ஓட்டெடுப்பு வரை போகவில்லை.

    இந்த முறையாவது ஓட்டெடுப்புக்கு போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அமெரிக்காவும் வடகொரியா மீது கடுமையான எதிர்ப்பு மனப்பாங்கை கொண்டிருக்கவில்லை என்பதால் இந்த தீர்மானம் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    முக்கிய பொருளாதார தடைகள் விலக்கப்பட்டால், வடகொரியாவில் இருந்து கடல் உணவுகள், ஜவுளி ஏற்றுமதியில் இருந்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, வெளிநாட்டில் வேலை பார்க்கும் வடகொரிய நாட்டினர் தங்கள் வருவாயை வீட்டுக்கு அனுப்புவதற்கான தடை வரை அகலும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    டோக்கியோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார்.

    இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.  இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  
    ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
    அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
    நியூயார்க்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளையும் கண்டுகொள்ளவில்லை.

    இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியை கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இது தொடர்பாக இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்பின்னர் ஆயுத சோதனைகளை வடகொரியா நிறுத்தியது.

    அமெரிக்காவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத  நிலையில், வடகொரியா மீண்டும் ஆயுத சோதனையை தொடங்கி உள்ளது. சமீபத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்தது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இது தற்காப்புக்காக நடத்தப்பட்ட பயிற்சிதான் என வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.



    இந்நிலையில், வடகொரியாவின் இந்த செயல் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அது தொடர்பான சோதனை திட்டங்களை கைவிட வேண்டும் என்று 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

    இதுதொடர்பாக பிரான்ஸ் நாடு கொண்டு வந்த இந்த வரைவு அறிக்கையில், அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 70 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. வடகொரியாவை ஆதரிக்கும் சீனாவும் ரஷியாவும் இந்த அறிக்கையில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வட கொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது.
    வாஷிங்டன்:

    வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை முழுமையாக கைவிடவேண்டுமென்று தொடர்ந்து அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், தங்கள் நாட்டின் மீது உள்ள பொருளாதார தடைகள் உள்ளிட்ட பல சர்வதேச தடைகளில் இருந்து விலக்கு மற்றும் நிவாரணம் கோருகிறது வடகொரியா.

    இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில், வியட்நாமின் தலைநகர் ஹனோயில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசினர். இருநாட்டு தலைவர்களின் இந்த 2-வது சந்திப்பு எந்த உடன்படிக்கையும் எட்டப்படாமல் முடிந்தது.

    இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையிலான உறவு மீண்டும் மோசமடைந்துள்ளது. இந்த சூழலில் 4-ந் தேதி குறுகிய தொலைவு சென்று தாக்கக்கூடிய பல ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை நடத்தியது.

    வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவை அதிரவைத்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் மீண்டும் வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்தது.

    அணு ஆயுத பேச்சுவார்த்தையில் தங்களுக்கு சலுகைகள் வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் தரவே வடகொரியா இந்த சோதனைகளை நடத்தியதாக பார்க்கப்படு கிறது.

    வடகொரியாவின் இந்த ஆயுத சோதனைகள் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், “இந்த சோதனைகளால் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை. அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறார்கள் என்றும், அது குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இன்னமும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவில்லை என்றே நான் எண்ணுகிறேன்” என கூறினார்.

    இந்த நிலையில், சர்வதேச தடைகளை மீறியதாக கூறி வடகொரியாவின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றி உள்ளது. வடகொரியா அதிக அளவில் ஏற்றுமதி செய்துவரும் நிலக்கரியை கொண்டு செல்ல இந்த கப்பல் பயன்படுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த போக்குவரத்து ஐ.நா.வின் ஏற்றுமதி தடையை மீறியுள்ளதாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

    வைஸ் ஹானஸ்ட் என பெயர் கொண்ட இந்த கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவில் சிக்கியது. அதனை தொடர்ந்து, இந்த கப்பலை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா தரப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் இந்தோனேசியா தற்போது வடகொரியாவின் வைஸ் ஹானஸ்ட் சரக்கு கப்பலை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது. தற்போது வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தியதற்கும், இந்த கப்பலை கைப்பற்றியதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    இரு குறைந்த தூர ஏவுகணைகளை வடகொரியா இன்று சோதனை செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. #NorthKorea #Missiles
    சியோல்:
     
    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.

    இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தினர். அதுமட்டுமின்றி, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இதையொட்டி இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு வடகொரியா ஆக்கப்பூர்வமான வகையில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காதபோதும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.



    கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இதனால் இருதரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

    இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.  இவை 270 மற்றும் 420 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன. கடந்த ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை இது என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. #NorthKorea #Missiles
    ஓட்டோ வாம்பியருக்கு சிகிச்சை அளித்த வகையில் தங்களுக்கு 2 மில்லியன் டாலர் பணம் தர வேண்டும் என, வடகொரிய அரசு, அமெரிக்காவுக்கு பில் அனுப்பி உள்ளது. #NorthKorea #OttoWarmbier
    பியாங்யாங்:

    அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான ஓட்டோ வாம்பியர், கடந்த 2015-ம் ஆண்டு வடகொரியாவுக்கு கல்வி சுற்றுலா சென்றார். அதன் பின்னர் 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் வடகொரியாவில் புறப்பட இருந்த நிலையில், பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

    வடகொரியா குறித்த ரகசிய தகவல்களை திருடியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட ஓட்டோ வாம்பியர் கோமா நிலைக்கு சென்றார். அதன் பின்னர் அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் பேரில், ஓட்டோ வாம்பியர் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கப்பட்டு, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி அமெரிக்கா அனுப்பிவைக்கப்பட்டார்.

    ஆனால் அமெரிக்கா வந்து சேர்ந்த சில நாட்களில் கோமா நிலையிலேயே ஓட்டோ வாம்பியர் பரிதாபமாக இறந்தார். வடகொரியாவில் அவர் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. ஆனால் வடகொரியா அதனை மறுத்தது.

    இந்த நிலையில், ஓட்டோ வாம்பியரின் மருத்துவ சிகிச்சைக்காக தாங்கள் செலவு செய்த 20 லட்சம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.14 கோடியே லட்சத்து 23 ஆயிரம்) திருப்பி தரும்படி அமெரிக்காவை வடகொரியா வலியுறுத்தி உள்ளது. இதற்கான பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டோ வாம்பியரை அவரது நாட்டிற்கு அனுப்பும் முன்னரே அவரின் மருத்துவ செலவுகளை அமெரிக்கா ஏற்க வேண்டும் என்று, வடகொரியா கேட்டதாகவும், அதற்கு அமெரிக்கா ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது. #NorthKorea #OttoWarmbier
    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் 25ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 25ம் தேதி ரஷியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    டிரம்ப்-கிம் ஜாங் அன் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்த நிலையில், வடகொரியா அதிநவீன ஆயுத சோதனை நடத்தி அதிர வைத்துள்ளது. #NorthKorea #TacticalWeapon #KimJongUn #DonaldTrump
    சியோல்:

    ஐ.நா. சபையின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக சோதனை செய்து, சர்வதேச நாடுகளை கலங்கடித்து வந்தது வடகொரியா.

    உலக நாடுகள் இதனை வன்மையாக கண்டித்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தைகளால் யுத்தம் நடத்தினர்.

    இந்த சூழலில் தென்கொரியாவில் நடந்த குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் வடகொரியா-தென்கொரியா இடையே அமைதியை ஏற்படுத்த வழிவகை செய்தது. இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டினர்.



    அதனை தொடர்ந்து தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்கா-வடகொரியா இடையே சமாதானத்தை ஏற்படுத்தம் முயற்சிகளை முன்னெடுத்தார். இதன் பயனாக உலகின் இரு எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர்.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்புக்கு பிறகு, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது. வடகொரியா அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.

    எனினும் வடகொரியா அணு ஆயுதங்கள் அனைத்தையும் முழுமையாக கைவிட்டுவிட்டு, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. அதே சமயம் தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என அமெரிக்காவிடம் வடகொரியா கோரிக்கை வைத்தது.

    இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக டிரம்பும், கிம் ஜாங் அன்னும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எதிர்பாராத வகையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கிம் ஜாங் அன்னை 3-வது முறையாக சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டால் இந்த சந்திப்பு சாத்தியமாகும் என கிம் ஜாங் அன்னும் கூறினார்.

    இந்த நிலையில், வடகொரியா அணுகுண்டுடன் கூடிய அதிநவீன ஆயுதம் ஒன்றை நேற்று முன்தினம் சோதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையை அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் பார்வையிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அந்நாட்டு அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள செய்தியில், “நிலம், கடல் மற்றும் விமானத்தில் இருந்து செலுத்தும் வகையிலான ஆற்றல் மிக்க ஆயுதம் சோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஆயுதம் பல்வேறு இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனினும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயுதம் அணு ஆயுத வகையை சேர்ந்ததா அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ரகத்தை சார்ந்ததா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அதே சமயம் இது ஒரு குறுகிய தொலைவிலான ஆயுதம் என வடகொரியாவை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்துவரும் நிலையில் வடகொரியா புதிய ஆயுத சோதனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடகொரியா அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இந்த சோதனையை நடத்தி இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.  #NorthKorea #TacticalWeapon #KimJongUn #DonaldTrump
    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    சியோல்:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    இதற்கிடையில், டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற 24-ந் தேதி புதின் வடகொரியா செல்கிறார் என்றும், அந்த பயணத்தின் போது இருநாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்றும் தென்கொரியா அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

    எனினும் இந்த தகவலை ரஷியாவோ, வடகொரியாவோ உறுதிப்படுத்தவில்லை.   #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn

    கொரியா தீபகற்பத்தில் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில் தென்கொரியாவில் அமைக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா அதிகாரிகள் வெளியேறுகின்றனர். #NorthKorea #interKoreanliaison #SouthKorea
    சியோல்:

    பகைநாடான தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடுக்க விரும்பிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கடந்த ஆண்டு மனம்மாறி வெள்ளைக்கொடி காட்டினார்.

    தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனதுநாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.

    இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேச ஹாட்லைன் தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டது. தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்ய கூட்டுறவு அலுவலகம் ஒன்றும் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது.



    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் சமீபத்தில் நடத்திய இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த பின்னர் வடகொரியா அதிபரின் மனப்போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் உள்ள கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் முன்னர் இருந்ததுபோல் தீராத பகை நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. #NorthKorea  #interKoreanliaison #SouthKorea
    ×