search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98969"

    வடகொரியா மேற்கொண்ட அணுகுண்டு சோதனையின் தாக்கத்தால் அங்குள்ள ‘மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியாவின் ‘மேன்டேப்’ மலைப் பகுதியில் புங்கேரி அணு ஆயுத சோதனைக் கூடம் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கு வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தியது.

    அதனால் அப்பகுதியில் 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது முறையாக 4.1 ரிக்டரில் நில அதிர்வு உருவானது. அது ஜப்பானின் நாகசாகி நகரில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 மடங்கு சக்தி வாய்ந்தது என ஆய்வாளர்கள் கணக்கிட்டனர்.

    மேலும் அணு ஆயுத சோதனை நடந்த இடத்தில் சில மாதங்களாக தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சோதனை நடத்தப்பட்ட ‘மேன்டேப்’ மலை 11.5 அடி தூரம் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது என்றும், சுமார் 1.6 அடி பூமிக்குள் புதைந்துள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர்.

    ‘மேன்டேப்’ மலைப் பகுதியின் சோதனைக் கூடம் தற்போது செயல்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. அதனால் தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங்-யங் உலக நாடுகளின் கோரிக்கையை ஏற்று அதைமூட இருப்பதாக நாடகமாடுகிறார் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

    ஏற்கனவே சேதமடைந்து இனி பயன்பாட்டிற்கு உதவாத சோதனை கூடத்தை உலக நிபுணர்களின் முன்னிலையில் மூடுவிழா நாடகத்தை அவர் நடத்த இருப்பது அரசியல் தந்திரமாக கருதப்படுகிறது. #tamilnews

    வடகொரியா நாடு அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் தெரிவித்துள்ளார். #MikePompeo #NorthKorea #NuclearWeapons
    வாஷிங்டன்:

    தொடர் ஏவுகணை சோதனைகள், அணு ஆயுத பரிசோதனை என சர்வதேச நாடுகளை மிரட்டி வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், தற்போது தனது சேட்டைகளை மூட்டை கட்டி வைத்து மற்ற நாடுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறார்.

    கடந்த மாதம் தென்கொரியா அதிபர் மூன் ஜேஇன் உடன் கிம் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நடத்த உள்ள பேச்சுவார்த்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.



    இதற்கிடையே, ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு நடக்கவுள்ளது

    இந்நிலையில், வடகொரியா அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வந்தால் அந்த நாட்டுக்கு தேவையான நிதியுதவி செய்ய்ப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்ப்யோ தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மைக் பாம்ப்யோ கூறுகையில், வடகொரியா தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை திருப்பித்தர முன்வரவேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் அந்த நாட்டுக்கு தேவையான பொருளாதார உதவிகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார். #MikePompeo #NorthKorea #NuclearWeapons
    நல்லெண்ண அடிப்படையில் வடகொரிய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்கர்களும் இன்று தாயகம் வந்தடைந்ததை அடுத்து அவர்களை அதிபர் ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றுள்ளார். #Trump #NorthKorea
    வாஷிங்டன் :

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வடகொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக நேற்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றார்.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடம் மற்றும் தேதி இந்த சந்திப்பின்போது உறுதிசெய்யப்பட்டது. மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மைக் பாம்ப்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமெரிக்கர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மைக் பாம்ப்பியோ வாஷிங்டன் நகருக்கு புறப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.


    இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்துசேரும் மைக் பாம்ப்பியோவை நேரில் சென்று வரவேற்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், இன்று வாஷிங்டன் நகர் ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்தடைந்த அவர்கள் மூவரையும் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். “எங்களை தாயகம் அழைத்து வர உதவிபுரிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் அமெரிக்க மக்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என அவர்கள் மூவரும் தெரிவித்தனர்.

    அடுத்ததாக அவர்கள் மூவரும் அமெரிக்க ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்சியில் விடுதலை செய்யப்பட்ட மூவரின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #NorthKorea
    ×