search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99004"

    நடிகை ஜெயலட்சுமிக்கு பாலியல் அழைப்பு விடுத்த விவகாரத்தில் கைதான வாலிபர்கள் பிரபல நடிகையுடன் உல்லாசமாக இருக்க இளைஞர்களிடம் ரூ.40 லட்சம் வரை பேசம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நடிகை ஜெயலட்சுமியை பாலியலுக்கு அழைத்து கைதான வாலிபர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடனும் உல்லாசமாக இருக்கலாம் என்கிற தகவலை பரப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ‘‘ரிலேசன்ஷிப் டேட்டிங் சர்வீஸ்’’ என்ற பெயரில் நட்பு வட்டாரத்தை ஏற்படுத்திக் கொண்ட இளைஞர்கள் இருவரும் அழகான பெண்கள் மற்றும் துணை நடிகைகள், பிரபலமான நடிகைகளின் போட்டோக்களை அனுப்பியும் வாலிபர்களுக்கு வலைவிரித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட புரோக்கர்களான முருகபெருமான், கவியரசன் ஆகியோரது செல்போன்களை ஆய்வு செய்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் பிரபல நடிகைகளின் போட்டோக்களும் அவர்களுக்கு என்ன விலை? என்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    குறிப்பாக தமிழ் திரை உலகின் இளம் முன்னணி நடிகை ஒருவரின் பெயரை இந்த கும்பல் வாடிக்கையாளர் ஒருவருக்கு அனுப்பி அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் ரூ.40 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளது.

    அதற்கு எதிர் முனையில் பதில் அளித்த வாடிக்கையாளர் ஒருவர் இது ரொம்ப அதிகம். ரூ.1 லட்சம் வேண்டுமானால் தரலாம் என்று கூறியுள்ளார். இது போன்று சுமார் 70 பெண்களின் கவர்ச்சி போட்டோக்களையும் அனுப்பி வைத்துள்ளனர். அதில் இந்த பெண் பிடித்திருந்தால் பதில் சொல்லுங்கள் என்று மெசேஜ் அனுப்பி ஒவ்வொருவருக்கும் ஒரு ‘ரேட்’டை வைத்துள்ளனர்.


    இந்த வாட்ஸ்-அப் உரையாடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நடிகை ஜெயலட்சுமிக்கு அனுப்பியது போல பல பெண்களுக்கும் லட்சங்களில் விபசார புரோக்கர்கள் பேரம் பேசியுள்ளனர். அதில் அரசியல் பிரமுகர்கள் பலர் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் மனசு வைத்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Jayalakshmi
    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்தால் சிக்கிக் கொள்வீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அப்டேட் மெசேஜ் ஃபார்வேர்டு செய்யப்படுவதை சுட்டிக்காண்பிக்கிறது. இதனால் உங்களுக்கு வரும் குறுந்தகவல்கள் உண்மையாக டைப் செய்யப்படுகின்றதா அல்லது மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    கடந்த மாதம் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் காணப்பட்ட இந்த அம்சம் உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களில் ஃபார்வேர்டெட் (forwarded) என்ற குறியீடு இடம்பெறும். தற்சமயம் இந்த அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.



    புதிய அம்சம் மூலம் செயலியில் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க இது காரணமாக இருக்கும். கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் (suspicious link detection) அம்சம் சோதனை செய்யப்படுவது தெரியவந்தது.

    இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப்-இல் பரப்பப்படும் இணைய முகவரிகள் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும். இதை கொண்டு போலி தளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைதளங்களை பயனர்கள் மிக எளிமையாக கண்டறிந்து கொள்ள முடியும்.

    புதிய ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சத்தை பெற உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும். #WhatsApp
    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

    வாட்ஸ்அப் சோதனை செய்யும் புதிய அம்சம் அதன் பயனர்களை போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும்.

    மேலும் வாட்ஸ்அப்-இல் அனுப்பப்படும் குறுந்தகவல்களில் வலைத்தள முகவரி கொண்டு வலைத்தளம் போலியானதா என்பதை வாட்ஸ்அப் தானாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது.



    சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் எப்படி உதவும்?

    இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப்-இல் மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரும் வலைத்தள முகவரியை வாட்ஸ்அப் பின்னணியில் சோதனை செய்யும். சோதனையில் ஏதேனும் கோளாறு இருக்கும் பட்சத்தில் வாட்ஸ்அப் பயனருக்கு எச்சரிக்கை செய்யும். “வாட்ஸ்அப் ஏதேனும் போலி வலைத்தள லின்க்-களை கண்டறிந்தால், குறிப்பிட்ட குறுந்தகவல் சிவப்பு நிறத்தில் குறியிடப்படும்,” என WaBetaInfo தெரிவித்து இருக்கிறது.

    சிவப்பு நிற குறியீடு கொண்டு பயனர்கள் குறிப்பிட்ட வலைத்தளம் போலியானதா, அதில் இருந்து மற்ற போலி வலைத்தளங்களுக்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்பதை பயனர்கள் புரிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் மூன்றாம் தரப்பு லின்க்-களும் மால்வேர் நிறைந்த வலைத்தளத்துக்கான முகவரியை (லின்க்) அனுப்பலாம்.

    வாட்ஸ்அப் பீட்டா 2.18.204 வெர்ஷனில் காணப்பட்டு இருக்கும் இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் போலி செய்திகளை முடக்கும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வந்தது குறி்ப்பிடத்தக்கது.



    இதுவரை போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் மேற்கொண்ட நடவடிக்கைகள்:

    - வாட்ஸ்அப் செயலியில் பயனர்களை பிளாக் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனருக்கு அறிமுகம் இல்லாதவர்களை வாட்ஸ்அப்-இல் பிளாக் செய்ய முடியும்.

    - க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் க்ரூப்களில் சேர்க்கச் செய்யும் வசதி முடக்கப்பட்டுள்ளது.

    - குறிப்பிட்ட க்ரூப்களில் யார் யார் தகவல் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்களே முடிவு செய்ய முடியும்.

    - க்ரூப் அட்மின்களை டீமோட் (Demote) செய்யும் வசதி. இந்த வசதியை கொண்டு ஏற்கனவே க்ரூப் அட்மினாக இருக்கும் ஒருவரை க்ரூப் உறுப்பினராக மாற்ற முடியும்.

    - ஃபார்வேர்டெட் (Forwarded) லேபல் அம்சம் கொண்டு பயனர்கள் தங்களுக்கு ஃபார்வேர்டு செய்யப்படும் குறுந்தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    ரிலையன்ஸ் ஜியோபோனில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நோக்கியாவும் தனது ஃபீச்சர்போனில் வாட்ஸ்அப் வசதியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.



    ரிலையன்ஸ் நிறுவன ஜியோபோனில் வாட்ஸ்அப் மற்றும் யூடியூப் சேவைகள் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நோக்கியா மொபைல்களை விற்பனை செய்யும் ஹெச்.எம்.டி. குளோபல் தனது நோக்கியா 8810 4ஜி போனில் வாட்ஸ்அப் வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

    சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8810 4ஜி போன் பனானா போன் என அழைக்கப்படுகிறது. கைஓஎஸ் (KaiOS) சார்ந்த ஸ்மார்ட் ஃபீச்சர் ஓ.எஸ் கொண்டிருக்கும் நோக்கியா 8810 மாடலில் கூகுள் அசிஸ்டண்ட், கூகுள் சர்ச் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

    இத்துடன் நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம், மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் நோக்கியா 8810 மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இதுவரை வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் உள்ளது. ஹெச்.எம்.டி. குளோபல் தலைமை அலுவலர் ஜூஹோ சர்விகாஸ் ட்விட்டரில், "Oh look, WhatsApp on KaiOS! Looking forward to going [banana]s!" என குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் ஜியோபோன் போன்றே விரைவில் நோக்கியா 8810 மாடலிலும் வாட்ஸ்அப் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.



    ஃபீச்சர்போன்களில் வாட்ஸ்அப் வசதி வழங்கப்படாமல் இருப்பதாலேயே பலர் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் 2.5 கோடி பேர் ஜியோபோன் பயன்படுத்தும் நிலையில், நோக்கியா 8810 மாடலில் வாட்ஸ்அப் வழங்கப்படும் பட்சத்தில் ஜியோபோனுக்கு நேரடியாக போட்டியாக நோக்கியா பனானா போன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ஜியோபோன் மற்றும் நோக்கியா 8810 மாடல்களில் வாட்ஸ்அப்-ஐ தொடர்ந்து பிரபல செயலிகள் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இவை பல்வேறு இதர விலை குறைந்த ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும். ஆன்ட்ராய்டில் இருப்பதை போன்றே கைஓஎஸ் வெர்ஷனிலும் வாட்ஸ்அப் இருக்குமா அல்லது சில அம்சங்கள் வேறுபடுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    நோக்கியாவின் பிரபல 8810 மாடலை புதுப்பித்து 4ஜி வோல்ட்இ கனெக்டிவிட்டியுடன் நோக்கியா 8810 4ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்த வரை நோக்கியா 8810 4ஜி போனில் 2.45 இன்ச் QVGA 240x320 பிக்சல், 1.12 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 சிப்செட், 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிரு்கும் நோக்கியா 8810 4ஜி மாடலில் 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் வைபை, ப்ளூடூத், மைக்ரோ-யுஎஸ்பி, எஃப்.எம். ரேடியோ, 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் 1500 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    படுகொலைகளுக்கு காரணமாகும் வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு இன்று எச்சரித்துள்ளது. #GovtwarnsWhatsApp
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

    குறிப்பாக, கீழ்சாதி பெண்கள் கற்பழிப்பு, இறைச்சிக்காக பசு மாடுகள் கடத்தல், பிள்ளைகளை கடத்தும் கும்பல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக  பரிமாறப்படும் தவறான தகவல்களும் வதந்திகளும் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி விடுகின்றன.

    இந்நிலையில், வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு இன்று எச்சரித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியதாக உள்ளது.

    நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GovtwarnsWhatsApp
    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த அம்சம் தாமதமாக இது தான் காரணமாக கூறப்படுகிறது.




    வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் எனப்படும் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி பீட்டா முறையில் குறிப்பிட்ட வாடிக்கைாயளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். 

    உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பயன்பத்துகின்றனர். சமீபத்தில் வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள செயலியின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய நடையில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அனைவருக்கும் வழங்குவதற்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் தடையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் எழுப்பப்பட்டு இருக்கும் சந்தேகங்களுக்கு தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பதில் அளிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது.



    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்ய தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற மையத்தை (UPI) வழங்குகிறது. புதிய யுபிஐ சார்ந்த சேவை ஆர்.பி.ஐ நிர்ணயித்திருக்கும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறதா என்ற வகையில் மத்திய தொழில்நுட்ப துறை சந்தேகங்கள் அமைந்திருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அனுமதியை தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் (NPCI) எப்போது வழங்கும் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இத்துடன் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை ஆர்.பி.ஐ. விதிகளுக்கு உட்படும் வகையில் இருக்கிறதா என்பது குறித்தும் எவ்வித தகவலும் இல்லை.

    முதற்கட்டமாக பீட்டா பயனர்களுக்கு வாட்ஸ்ப் பேமென்ட்ஸ் அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான வங்கி சப்போர்ட் உடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிலையில், கொள்கை மற்றும் விதிமுறைகளை அந்நிறுவனம் மாற்றியுள்ளது.



    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.

    வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் பீட்டா பதிப்பில் பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்ட விவரங்களும் அடங்கும்.



    வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்ற வசதி வழங்குவதற்கான சரியான தேதி இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், கொள்கை மற்றும் விதிமுறை மேம்படுத்தப்பட்டு இருப்பது, வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    பேடிஎம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வாலெட் சேவைகளுக்கு போட்டியாக பார்க்கப்படும் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை கடந்த சில மாதங்களாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.




    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது.

    சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52  மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது.

    இத்துடன் விண்டோஸ் தளங்களிலும் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் வரும் வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு பீட்டா பதிப்புகளில் க்ரூப் காலிங் வசதி சோதனை செய்யப்படுகிறது. இம்முறை இந்த அம்சம் அனைத்து சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த முதலில் வீடியோ அல்லது வாய்ஸ் கால் மேற்கொள்ள வேண்டும். பின் அழைப்பு இணைக்கப்பட்டதும், திரையில் ஆட் பெர்சன் (Add Person) ஐகான் வலதுபுறம் காணப்படும். இதை க்ளிக் செய்தால் பெயர் பட்டியல் தெரியும். 

    இனி நீங்கள் தேர்வு செய்யும் மூன்றாவது நபர் உங்களின் அழைப்பினை ஏற்கும் பட்சத்தில் இரண்டு பெயர்களும் திரையில் தோன்றும். உடனடியாக க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் பயன்படுத்த கூகுள் பிளே வாட்ஸ்அப் பீட்டா பதிப்புக்கு பதிவு செய்வது அவசியமாகும்.

    ஐபோனிலும் க்ரூப் கால்களை பெறவும், அழைக்கவும் முடியும். ஐஓஎஸ் தளத்தில் சரவர் சார்ந்த அப்டேட் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் இந்த அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்த அம்சம் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபேஸ்புக் மூலம் வெளியிடப்பட்டது.
    விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

    வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக அகற்றப்படும் முன் பெஹான்ஸ் மூலம் லீக் ஆகியுள்ளது. இது UWP வடிவமைப்பு சார்ந்த அக்ரிலிக் டிரான்ஸ்பேரென்சி கொண்ட விண்டோஸ் செயலி போன்று காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

    இத்துடன் இந்த செயலியை உருவாக்க வாட்ஸ்அப் மற்றும் மைக்ரோசாஃப்ட் இணைந்து தொடர் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி ஒன்று பயன்படுத்தப்படுகிறது. எனினும் இது வாட்ஸ்அப் வெப் செயலியாகவே இருக்கிறது.

    வாட்ஸ்அப் வெப் ஆப் பல்வேறு வசதிகளை வழங்கினாலும், வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதிகளை வழங்கவில்லை. புதிய ((UWP) திட்டத்தின் கீழ் அனைத்து அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து வாட்ஸ்அப்பில் இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.#ThoothukudiShooting #SterliteProtest
    அரியலூர்:

    அரியலூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் பால்பாண்டி. இவர் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குறித்து இழிவான தகவல்களை பரப்பியுள்ளார்.

    மேலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் செயல்பாட்டை நியாயப்படுத்தியும் கருத்து வெளியிட்டு உள்ளார். வாட்ஸ்அப் மூலம் பரப்பிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது.

    இதுகுறித்து அறிந்த அரியலூர் நகர வக்கீல் சங்க தலைவர் மாரிமுத்து, துப்பாக்கி சூடு குறித்து இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் பால்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரியலூர் போலீசில் புகார் மனு அளித்தார்.

    ஆனால் இதில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரியலூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி, வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பிய ஆயுதப்படை போலீஸ்காரர் பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ் பெக்டர் சுபா ஆகியோர், பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiShooting #SterliteProtest
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு தளத்துக்கான பீட்டா பதிப்பில் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் புதிய பீட்டா பதிப்பில் (2.18.179) உங்களுக்கு வரும் மெசேஜ்களை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் போது லேபெல் செய்யப்படுகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் ஃபார்வேர்டு மெசேஜ்களில் இனி ஃபார்டுடெடு (Forwarded) என்ற லேபெல் இருக்கும்.

    இந்த புதிய அம்சம் மூலம் இனி உண்மையான மெசேஜ்கள் மற்றும் ஃபார்வேர்டு செய்யப்பட்ட மெசேஜ்களுக்கு வித்தியாசப்படுத்திக் கொள்ள முடியும். இந்த லேபெல் மெசேஜை அனுப்புவோர் மற்றும் அதனை பெறுவோருக்கும் காணப்படும். முன்னதாக பீட்டா செயலியில் மீடியா விசிபிலிட்டி அம்சத்தை மறைக்கும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. இது கேலரியில் இருக்கும் வாட்ஸ்அப் மீடியாவை மறைக்கவோ அல்லது காண்பிக்கவோ செய்யும்.

    இந்த அம்சத்துடன் புதிய கான்டாக்ட் ஷார்ட்கட் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இது பீட்டா பயனர்களை மிக எளிமையாக கான்டாக்ட்களை சேர்க்க வழி செய்கிறது. 



    புதிய ஃபார்வேர்டெடு லேபிலை பார்க்க உங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் வரும் மெசேஜ்களை தேர்வு செய்து மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்-இல் ஃபார்வேர்டு செய்ய வேண்டும். இந்த லேபில் மெசேஜின் மேல்புறம் பார்க்க முடியும். குறிப்பாக இந்த லேபிளலை மறைக்கச் செய்யும் ஆப்ஷன் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மெசேஜ்களை மற்றவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் அதில் ஃபார்வேர்டடு லேபில் இருக்கும். 

    வாட்ஸ்அப் பீட்டா செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதி ஸ்பேம் மெசஜ்கள் அதிகம் பரப்பப்படுவதை தவிர்க்கவோ அல்லது தெரியப்படுத்தவோ ஏதுவாக இருக்கும். முன்னதாக ஃபார்வேர்டடு மெசேஜ் லேபெல் பிப்ரவரி மாத வாக்கில் காணப்பட்டது. தற்சமயம் பீடடா டெஸ்டிங்-இல் இருக்கும் இந்த அம்சத்தை உடனே பயன்படுத்த வாட்ஸ்அப் பீட்டா செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் டவுன்லோடு செய்ய வேண்டும்.

    மேலும் இந்த செயலி கூகுள் பிளே பீட்டா திட்டம் மற்றும் ஏபிகே மிரர் தளத்தின் ஏபிகே ஃபைல் வடிவிலும் கிடைக்கிறது. புதிய அம்சம் ஐஓஎஸ் தளத்தில் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    புகைப்படம்: Twitter
    சேலத்தில் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி குடும்பத்தார் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொண்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் சீலநயாக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் மோகன். ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ரங்கநாயகி (56) சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி கமி‌ஷனராகவும், கமி‌ஷனருக்கு உதவியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

    ரங்கநாயகி சங்ககிரியில் உள்ள தனது தங்கை விஜயசெல்வியின் செல்போனுக்கு தனது மகன் சசிதரன் (28) மூலம் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி விட்டு மகன் மற்றும் கணவருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார்.

    அதில் என்னையும், பெற்றோரையும் எனது மனைவி டார்ச்சர் செய்து வருவதால் நாங்கள் 3 பேரும் தற்கொலை செய்ய உள்ளோம் என்று சசிதரன் கூறி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயசெல்வி அன்னதானப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது ரங்கநாயகியின் குலதெய்வ கோவில் மைசூரில் இருப்பதால் அவர் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. மேலும் ஒரு தனிப்படை போலீசார் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதியிலும் தேடினர். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

    இதற்கிடையே ரங்கநாயகியின் மகன் சசிதரன் உருக்கமான வீடியோவை வெளியிட்டார். அதில், எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    எனது நண்பர்கள், உறவினர்கள் என்னடா இப்படி பண்ணிட்டியே என்று நினைப்பவர்களுக்கு வேறு வழி இல்லை. அதனால் தான் இப்படி பண்ணினேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். வீட்டு ஓனர்ஸ், பக்கத்தில் இருப்பவர்கள், எல்லோருக்கும் ரெம்ப சிரமம் கொடுத்து விட்டோம்.

    அவர்கள் வீட்டிற்கு முன்பு நின்று கத்தியதால் மானம், மரியாதை போய் விட்டது. அவங்க வீட்டிற்குள் நிறைய பிர்ச்சனை வந்து விட்டது. எங்களால் இனி மேல் இது போல நடக்காது. அதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்.

    ஓசூரில் எங்க வீட்டு ஓனருக்கு மிகவும் சிரமமாக தான் இருக்கும். உங்களிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். முடிந்த வரை நார்மலாக இருக்க நண்பர்கள் உதவி செய்யுங்கள். எவ்வளவு சந்தோ‌ஷமாக இருக்க ஆசைப்பட்டோமோ அது எல்லாம் முடிஞ்சுடுச்சி.

    இந்த ஒரு பெண்ணால, அந்த ஒரு குடும்பத்தால எங்கள் குடும்பம் முடுஞ்சிடுச்சி. இவ்வளவு அசிங்க, அசிங்கமாக பேசியதற்கு அப்புறம் உயிர் வாழ்வதை விட நாங்கள் போய் விடலாம், அதனால் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க என்று கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார். இதனால் அவர்களது நிலைமை என்ன ஆனது என்பது தெரியாமல் உள்ளதால் உறவினர்கள் தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மேட்டூர் மாதேஸ்வரன் மலை பகுதியில் சென்ற போது அவர்களது செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதனால் மாதேஸ்வரன் மலை, மேட்டூர், மேச்சேரி ஆகிய பகுதிகளில் 2-வது நாளாக சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையிலான ஒரு தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மற்றொரு சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான தனிப்படையினர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் தேடி வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் இன்று காலை வரை கிடைக்கவில்லை. மேலும் ரங்கநாயகியின் உறவினர்கள் மாயமான 3 பேரும் எங்கு உள்ளனர் என்பதை கண்டறிய ஜோதிடரை நாடியுள்ளனர்.

    இதனால் அவர்கள் எங்கு உள்ளனர் என்பதில் தற்போது வரை மர்மமாக உள்ளது. மேலும் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் தற்கொலை செய்திருப்பார்களா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து தேடி வரும் போலீசார் இன்று மாலைக்குள் இந்த விவகாரத்திற்கு முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். #Tamilnews
    ×