என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தொழில்நுட்பம்
X
புதிய அம்சத்திற்காக கொள்கைகளை மாற்றிய வாட்ஸ்அப்
Byமாலை மலர்24 Jun 2018 7:33 AM GMT (Updated: 24 Jun 2018 7:33 AM GMT)
வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படும் நிலையில், கொள்கை மற்றும் விதிமுறைகளை அந்நிறுவனம் மாற்றியுள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்றங்களை செய்யும் வசதி இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப்-இல் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி முழுமையாக வெளியிடப்படும் முன், தனது கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்றியிருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்சமயம் சுமார் பத்து லட்சம் பேர் வாட்ஸ்அப் செயலியின் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றனர். உலகம் முழுக்க சுமார் 150 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நிலையில், இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடி பேர் வாட்ஸ்அப் பயன்பத்துகின்றனர்.
வாட்ஸ்அப் பணப்பரிமாற்றங்களுக்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மாற்றி, எளிய மொழியில் பணப்பரிமாற்றம் செய்யும் அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை குறிப்பிட்டிருக்கிறோம். இத்துடன் பீட்டா பதிப்பில் பணப்பரிமாற்றம் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்ட விவரங்களும் அடங்கும்.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்திய அரசு, தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் மற்றும் பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பரிமாற்ற வசதியை தனது செயலியில் வழங்க இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் பணப்பரிமாற்ற வசதி வழங்குவதற்கான சரியான தேதி இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், கொள்கை மற்றும் விதிமுறை மேம்படுத்தப்பட்டு இருப்பது, வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என வாட்ஸ்அப் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
பேடிஎம் போன்ற பல்வேறு டிஜிட்டல் வாலெட் சேவைகளுக்கு போட்டியாக பார்க்கப்படும் வாட்ஸ்அப் பணப்பரிமாற்ற சேவை கடந்த சில மாதங்களாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X