search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99005"

    இன்ஸ்டாகிராமில் வழங்கப்பட்டுள்ள புது அப்டேட் மூலம் உங்களது பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். #instagram



    இன்ஸ்டாகிராம் செயலியின் புது அப்டேட் மூலம் யுவர் ஆக்டிவிட்டி (Your Activity) எனும் அம்சம் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் கொண்டு இன்ஸ்டாகிராம் செயலியை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றீர்கள் என்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

    இதுமட்டுமின்றி தினமும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அம்சங்களும் புது அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. இவற்றுடன் புஷ் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்யும் அம்சம் வழங்கப்படுகிறது. எனினும் மியூட் செய்யும் வசதி சிறிது நேரத்திற்கு மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்ஸ்டா செயலியை பயனர்கள் அதிகளவு இயக்குவதற்கான வசதிகள் சேர்க்கப்படும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய வசதி செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் நிறுவனம் போன்ற அறிவிப்பை ஃபேஸ்புக் நிறுவனமும் அறிவித்து இருந்தது, எனினும் இதற்கான அப்டேட் அந்நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை வழங்கப்படவில்லை.



    “ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவையை மக்கள் பயன்படுத்தும் போது, அவர்கள் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தச் செய்ய வேண்டும்,” என இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் வெல்-பீயிங் பிரிவு தலைவர் அமீத் ரனடைவ் தனது வலைதள பக்கத்தில் எழுதியிருந்தார்.

    புது வசதிகளை இயக்க விரும்பும் பயனர்கள் தங்களது ப்ரோஃபைல் பக்கத்திற்கு செல்ல வேண்டும், இனி ஹேம்பர்கர் ஐகானை கிளிக் செய்தால் யுவர் ஆக்டிவிட்டி அம்சம் காணப்படும். இந்த ஆப்ஷனை கிளிக் செய்ததும் நீங்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சாதனத்தில் நீங்கள் எவ்வளவு நேரம் செயலியை பயன்படுத்தி இருக்கின்றீர்கள் என்ற விவரங்களை பார்க்க முடியும்.

    டேஷ்போர்டின் கீழ் தினசரி ரிமைன்டர் செட் செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தியதும், நீங்கள் செட் செய்த காலம் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தலாம். பின் அந்த நாளுக்கான நேரம் நிறைவுற்றதும், இன்ஸ்டாகிராம் உங்களுக்கு நினைவூட்டும். எனினும், இந்த ஆப்ஷனை எந்நேரமும் நிராகரிக்கவோ அல்லது மாற்றியமைக்கவும் முடியும்.

    இதேபோன்று நோட்டிஃபிகேஷன் செட்டிங்ஸ் சென்றால் மியூட் புஷ் நோட்டிஃபிகேஷன்ஸ் செட்டிங் காணப்படும். இதை செயல்படுத்தியதும், இன்ஸ்டாகிராம் நோட்டிஃபிகேஷன்கள் நீங்கள் விரும்பும் சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தப்படும்.
    வாட்ஸ்அப் செயலியில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற அம்சம் சோதனை செய்யப்படுகிறது. #Whatsapp



    வாட்ஸ்ப் செயலியில் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செயலியில் புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. புதிய வசதியின் மூலம் விரைவில் பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

    இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் நேம்டேக் (Nametag) அம்சம் போன்றே இயங்கும் என தெரிகிறது. மேலும் செயலியில் இருந்து நேரடியாக கான்டாக்ட் சேர்க்கும் அம்சத்தினை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஷேர் கான்டாக்ட் இன்ஃபோ வியா கியூ.ஆர். (share contact info via QR) அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் நேடம்டேக் அல்லது ஸ்னாப்சாட் செயலியில் ஸ்னாப்கோட் இயங்குவதை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


    புகைப்படம் நன்றி: WABetaInfo

    வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். பதிப்பில் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வியாபார ரீதியாக வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    புதிய அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நியூ கான்டாக்ட் (New Contact) ஷார்ட்கட் அம்சத்திற்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் நியூ கான்டாக்ட் அம்சம் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் மே மாதம் வழங்கப்பட்டது.
    திரிஷாவின் ட்விட்டர் கணக்கை தொடர்ந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். #RakulPreetSingh
    சூர்யா நடிக்கும் என்ஜிகே மற்றும் கார்த்தி நடிக்கும் தேவ் படங்களில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என வலம் வரும் அவர் இந்தியில் தற்போது அஜய் தேவ்கன் நடிக்கும் தே தே பியார் தே படத்திலும் தபுவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

    டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களில் பிசியாக இயங்கி வரும் அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அந்த பதிவில், “ எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது. எனவே எனது கணக்கிலிருந்து வரும் எந்த லிங்கிற்கும், மெசேஜிற்கும் கணக்கு மீட்டெடுக்கப்படும் வரை பதிலளிக்க வேண்டாம். நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.



    பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் இதுபோல ஹேக் செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. ஹேக்கர்கள் அந்தக் கணக்குகளிலிருந்து தேவையற்ற பதிவுகள், மெசேஜ்களையும் பதிவிடும் போது அது பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது.

    சில தினங்களுக்கு முன்பு நடிகை திரிஷா வின் டுவிட்டர் கணக்கும் இதே போல ஹேக் செய்யப்பட்டது.
    இன்ஸ்டாகிராம் சேவையில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அந்நிறுவனம் மேலும் சில அம்சங்களை சோதனை செய்கிறது. #instagram #Apps



    இன்ஸ்டாகிராம் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை இன்ஸ்டா பயனர்களை மற்றவர்களுடன் இணைய வைக்கும் வகையில் இருக்கிறது.

    இரண்டு அம்சங்களில் ஒன்றாக நேம்டேக்ஸ் (nametags) இருக்கிறது. இந்த அம்சம் பயனர் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய கிராஃபிக்ஸ் படங்கள் ஆகும். இது கியூ.ஆர். கோடுகளை போன்று வேலை செய்கின்றன. செயலியினுள் இவற்றை ஸ்கேன் செய்ததும், பயனர் குறிப்பிட்ட பயனரின் ப்ரோஃபைலுக்கு நேரடியாக செல்ல முடியும்.



    நேம்டேக்ஸ்-களை பல்வேறு விதங்களில் மாற்றிக் கொள்ள முடியும். பயனர்கள் நேம்டேக் நிறம், எமோஜி அல்லது புகைப்படம் உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளலாம். பயனர்கள் நேம்டேக்ஸ்-ஐ இன்-ஆப் கேமரா மூலம் ஸ்கேன் செய்யவோ அல்லது நேம்டேக் வியூ பட்டனை கிளிக் செய்து பெற முடியும். இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்கனவே நேம்டேக்ஸ் இருக்கிறது.

    மற்றொரு அம்சம் டைரக்டரி போன்று வேலை செய்கிறது. இது பயனர்களை அவரவர் படித்த கல்லூரிகளின் அடிப்படையில் பிரிக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அவர்களது கல்லூரி தோழமைகளுடன் இணைப்பில் இருக்க முடியும். மாணவர்கள் தங்களது நண்பர்களை இன்ஸ்டாகிராமில் கண்டறிய இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். 



    துவக்கத்தில் இன்ஸ்டாகிராம் பயனர்களை கல்லூரி கம்யூனிட்டி ஒன்றில் இணையக் கோரும், பின் மற்ற மாணவர்களுடன் இணைக்கும் ஆப்ஷனை வழங்கும். எனினும் கம்யூனிட்டியை பயனர் தேர்வு செய்தால், அவர்களது பட்டப்படிப்பு ஆண்டு அவர்களின் ப்ரோஃபைலில் சேர்க்கப்படும். மேலும் மாணவர்களை அவரவர் படிக்கும் வகுப்புவாரியாகவும் பிரிக்கிறது.

    பயனர்கள் தங்களது நண்பர்களை வீடியோவில் டேக் செய்யும் ஆப்ஷனையும் இன்ஸ்டாகிராம் வழங்குகிறது. போட்டோக்களில் இருப்பதை போன்று இல்லாமல், புதிய அம்சம் டேக் செய்யப்பட்ட அனைவரையும் காண்பிக்கும் தனி பக்கத்திற்கு கொண்டு செல்லும்.

    தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சில பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய தலைவராக ஆடம் மொசேரி பொறுப்பேற்பார் என இணை நிறுவனர்களான கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் அறிவித்துள்ளனர். #instagram



    சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற அம்சங்களை வழங்கும் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் தளத்தில் தங்களது சமீபத்திய புகைப்படங்களை பல பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராமின் துணை நிறுவனர்களாக இருந்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் கடந்த வாரம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.



    இந்த நிலையில் இன்ஸ்டாகிராமின் புதிய தலைவராக ஆடம் மொசேரி பதவியேற்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்களது நிறுவனத்தின் துணை தலைவராக உள்ள ஆடம் மொசேரி இன்றிலிருந்து இன்ஸ்டாகிராமின் தலைவராக பொறுப்பேற்கிறார் என அறிவித்து கொள்கிறோம்' என தெரிவித்துள்ளது.

    வடிவமைப்பாளராக தனது பணியை தொடங்கிய மொசேரி கடந்த 2008ம் ஆண்டு ஃபேஸ்புக் வடிவமைப்பு குழுவில் தன்னை இணைத்து கொண்டார்.

    ஆடமின் தலைமைத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவரது தலைமையின் கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து, தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என இன்ஸ்டாகிராம் முன்னாள் துணை நிறுவனர்களான சிஸ்ட்ரோம் மற்றும் கிரீகர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
    இன்ஸ்டகிராம் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக எமோஜி ஷார்ட்கட் சேர்க்கப்பட்டுள்ளது. #instagram #emojis



    இன்ஸ்டாகிராம் செயலியில் அவ்வப்போது புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் இம்முறை தனித்துவம் வாய்ந்த எமோஜி ஷார்ட்கட்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. 

    இந்த அம்சத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எமோஜி கீபோர்டின் மேல் வைக்கப்படும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் புதிய அம்சம் இன்னும் இரு தினங்களில் வழங்கப்பட இருக்கிறது.



    எனினும் இந்த அம்சம் கமென்ட்ஸ் பகுதியில் மட்டுமே வேலை செய்கிறது. அந்த வகையில் ஸ்டோரிக்கள் மற்றும் சொந்த போஸ்ட்களில் புதிய அம்சம் பயன்படுத்த முடியாது.

    செயலியை லாப நோக்கில் தொடர்ந்து இயங்கச் செய்ய பல்வேறு புதிய விஷயங்களை இன்ஸ்டாகிராம் முயன்று வருகிறது. இதேபோன்று இன்ஸ்டாகிராம் ஷாப்பிங் செய்வதற்கென பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. ஐ.ஜி. ஷாப்பிங் என்ற பெயரில் இந்த செயலி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    பயனர்கள் இன்ஸ்டாவில் பின்தொடரும் பக்கம் அல்லது விற்பனையாளரிடம் இருந்து நேரடியாக பொருட்களை வாங்கிட முடியும் என கூறப்படுகிறது. முன்னதாக பெற்றோர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த ஏதுவாக பேரென்ட்ஸ் கைடு அறிமுகம் செய்தது. 

    இந்த கைடு கொண்டு தனியுரிமை, இன்டராக்ஷன்கள் அல்லது நேரத்தை இன்ஸ்டாகிராமில் எவ்வாறு இயக்க வேண்டும் போன்று மூன்று அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ஸ்டோரிக்களில் இசையை அறிமுகம் செய்தது, இதில் ஸ்டோரியில் இசையை சேர்க்க முடியும். 
    இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிதாக ஷாப்பிங் ஆப் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #instagram



    இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய செயலி ஐ.ஜி. ஷாப்பிங் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் பிரத்யேகமாக ஷாப்பிங் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் அம்சம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதிய செயலி சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

    உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வரும் இன்ஸ்டா செயலியில் ஷாப்பிங் மிகமுக்கிய அங்கமாக இருந்து வருகிறது. முன்னதாக செயலினுள் ஷாப்பிங் செய்ய ஏதுவான அம்சங்களை வழங்க முடிவு செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தற்சமயம் பிரத்யேக செயலியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பிரத்யேக செயலியில் பயனர்கள் பின்பற்றும் வியாபார மையங்களின் கணக்குகளில் இருந்து பொருட்களை தேடி, அவற்றை வாங்க இன்ஸ்டாகிராம் வழி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் இந்த செயலி சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

    சோதனை செய்யப்படுவதால் இன்ஸ்டாவின் ஷாப்பிங் செயலி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் அல்லது பொது அறிவிப்புக்கு முன் ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்த இன்ஸ்டாகிராம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இன்ஸ்டாவாசிகளை கவரும் நோக்கில் பல்வேறு வியாபார மையங்களும், இன்ஸ்டாவில் தங்களை விளம்பரப்படுத்திக்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே சுமார் 2.5 கோடிக்கும் அதிகமான வியாபாரிகள் தங்களது பொருட்களை விளம்பரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்களை நீக்கும் பணியினை ஃபேஸ்புக் துவங்கியது. அதன்படி போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கவுன்ட்கள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. #Facebook


    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 ப்ரோஃபைல்கள் மற்றும் 8 பக்கங்கள்) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீக்கப்பட்ட போலி அக்கவுண்ட் எவ்வித குழுவுக்கும் தொடர்புடையது கிடையாது என்றாலும், இவை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற ரஷ்ய இன்டர்நெட் ஏஜென்சி மூலம் இயக்கப்பட்ட பிரச்சாரங்களை போன்று இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு சார்ந்த விவகாரம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகம் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கான செலவு அதிகரித்த நிலையில் கடந்த வாரம் ஃபேஸ்புக் பங்குகள் அதிகபட்சம் 20% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.


    கோப்பு படம்

    மக்களோ அல்லது நிறுவனங்களோ அக்கவுன்ட்களை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வழக்கம் ஃபேஸ்புக்கில் அனுமதிக்கப்படுவதில்லை. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    "போலி நடிகர்கள் ஃபேஸ்புக்கில் இயங்குவிடாமல் செய்திருக்கிறோம்," என ஃபேஸ்புக் மூத்த அலுவலர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்தார். 

    "இதன் பின் யார் இயங்குகிறார்கள் என்பது குறித்து எங்களது ஆய்வின் இந்த சூழலில், எங்களிடம் போதுமான தொழில்நுட்ப ஆதாரம் இல்லை," ஃபேஸ்புக்கின் சைபர்செக்யூரிட்டி திட்டங்களுக்கான தலைவர் நதேனியல் லெய்ச்சர் தெரிவித்தார்.

    17 ப்ரோஃபைல்கள், எட்டு பக்கங்கள் மற்றும் ஏழு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் அக்கவுன்ட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டும், சமீபத்திய அக்கவுன்ட் மே மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தேகப்பட்டதில் ஒரு பக்கங்களை சுமார் 2,90,000 அக்கவுன்ட்களை பின்தொடரப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபாளோவர்களை நீக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



    இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

    நீண்ட காலமாக பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பப்ளிக் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.



    புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது, எனினும் இதன் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மேலும் ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    முன்னதாக மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு ஒருவரை பின்தொடரும் போது அவர்களது போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை முழுமையாக தவிர்க்க முடியும். புதிய அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்வோரை முழுமையாக இயக்க முடியும்.

    இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள, உங்களது ஃபாளோவர்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும். #instagram #Apps
    இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான் அம்சம் ஒருவழியாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



    இன்ஸ்டாகிராம் சேவையை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய சமூக வலைத்தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 270 கோடி பயனர்களுடன் ஃபேஸ்புக் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

    சீரான இடைவெளியில் புதுப்புது அம்சங்களை வழங்கி வரும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஸ்டிக்கர் மூலம் கேள்விகளை ஸ்டோரியில் கேட்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் இல் அந்நிறுவனம் அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்து இருக்கிறது. 

    இத்துடன் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக வெரிஃபை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் வெரிஃபிகேஷன் செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருக்கிறது.

    ஆல்ஃபா ஆன்ட்ராய்டு அப்டேட் 55.0.0.0.33 மூலம் இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களது சாதனம் வழங்கும் சப்போர்ட்-க்கு ஏற்ப ஐகான் வடிவம் மாறும். முன்னதாக இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது. தற்சமயம் அடாப்டிவ் ஐகான் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இன்ஸ்டா ஐகான் வடிவம் மாறும்.



    அனைத்து சாதனங்களிலும் புதிய அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும், எனினும் பயனர்கள் ஏ.பி.கே. மிரர் (APK Mirror) மூலம் முன்கூட்டியே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பொது மக்களும் வெரிஃபிகேஷன் பேட்ஜ் பெற விண்ணப்பிக்க எளிமையான வழிமுறையை இன்ஸ்டாகிராம் உருவாக்கி வருவாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் உருவாக்கப்படுவதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்திருப்பதாகவும், "இந்த அம்சம் மூலம் இன்ஸ்டா வாசிகள் தங்களுக்கான வெரிஃபிகேஷனை அவர்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும், இன்ஸ்டாவில் வெரிஃபைடு பெறும் வழிமுறையை புரிந்து கொள்ள முடியும். பொது மக்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்குவதன் மூலம் இன்ஸ்டாவாசிகளை பாதுகாக்க முடியும்." என இன்ஸ்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

    இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் வெரிஃபிகேஷன் பெற விண்ணப்பிக்கும் படிவம் சேர்க்கப்படுவதாகவும், இந்த படிவம் ஆஸ்திரேலியாவில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும், மேலும் சில பெயர் தெரிவிக்கப்படாத நாடுகளில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அம்சம் வரும் வாரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #instagram #InstaStories

    புகைப்படம்: நன்றி Android Police
    இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இன்டராக்டிவ் ஸ்டிக்கர் சேர்க்கும் புதிய வசதி ஸ்டோரிக்களில் அறிமுகம் செய்துள்ளது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் கேள்விகளை புதுவிதமாக ஸ்டிக்கர் வடிவில் கேட்கச் செய்யும் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு இன்ஸ்டா ஸ்டோரிக்களில் ஸ்டிக்கர் வடிவில் கேள்விகளை கேட்க முடியும்.

    புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டா வாசிகள் தங்களை பின்தொடர்வோரிடம் மிக எளிமையாக உரையாட முடியும். முன்னதாக மே மாதத்தில் இன்டராக்டிவ் எமோஜி ஸ்லைடரை ஸ்டிக்கரில் கருத்து கணிப்பு வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டோ அல்லது வீடியோவை எடுத்ததும் ஸ்டிக்கரில் உங்களது கேள்வியை சேர்க்க வேண்டும். இனி கேள்வியை புகைப்படம் அல்லது வீடியோவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். 

    அடுத்து உங்களை பின்தொடர்வோர், நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் உங்களது ஸ்டோரியை பார்த்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். ஒரு கேள்விக்கு அவர்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் பதில் அனுப்ப முடியும். 



    பின்தொடர்வோர் உங்களுக்கு அனுப்பும் பதில்களை ஸ்டோரி வியூவரில் பார்க்க முடியும். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அனுப்ப, குறிப்பிட்ட கேள்வியை க்ளிக் செய்ய வேண்டும். பதில் அனுப்பும் பட்சத்தில் உங்களது பதில் ஸ்டோரி பகுதியில் இடம்பெறும். 

    உங்களின் பதில்களை கேள்வி கேட்டிருப்போரின் வியூவர் பட்டியலில் அனுப்ப முடியும் என்றாலும், இதனை ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளப்படும் போது உங்களது நண்பரின் புகைப்படம் மற்றும் யூசர்நேம் தெரியாது.

    இன்ஸ்டாகிராம் புதிய அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.
    இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    இன்ஸ்டாகிராம் செயலியில் அடிக்கடி ஸ்டோரி பதிவிடுவோர் இனி, அவற்றின் பின்னணியில் இசையை சேர்க்க முடியும். இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இந்த வசதியை தெரிவித்து இருக்கிறது. புதிய அம்சம் மூலம் ஸ்டோரிக்களில் சரியான பின்னணி இசையை சேர்த்து, இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பயனர்களை கவர முடியும்.

    முன்னதாக இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க மொபைலில் உள்ள பாடல்களை ஒலிக்க செய்ய வேண்டிய நிலை இருந்தது. இனி பயனர்கள் மிக எளிமையாக தங்களுக்கு விருப்பமான இசையை ஸ்டோரியில் சேர்த்துக் கொள்ள முடியும். ஸ்டோரியில் ஸ்டிக்கர், போட்டோ அல்லது வீடியோவை சேர்க்க கோரும் ஐகானை அடுத்த இடத்தில் மியூசிக் ஐகான் காணப்படுகிறது.

    இன்ஸ்டாவில் உள்ள புதிய மியூசிக் ஐகானை க்ளிக் செய்தால் ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய லைப்ரரி திறக்கும். இங்கு உங்களுக்கு விருப்பமான பாடல், மனநிலைக்கு ஏற்றதை பிரவுஸ் செய்தோ அல்லது இன்ஸ்டா சார்பில் பரிந்துரைக்கப்படும் பிரபல இசை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.



    விரும்பிய பாடல் அல்லது இசையை தேர்வு செய்ததும் அவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு அல்லது ரீவைன்ட் செய்து, உங்களின் ஸ்டோரிக்கு ஏற்றவாரு அதனை செட் செய்து கொள்ள முடியும். மேலும் ஸ்டோரியில் இசையை சேர்த்தபின் அதனை நேரடியாக போஸ்ட் செய்யும் முன் பிரீவியூ செய்ய முடியும்.

    இன்ஸ்டாவில் வீடியோவை பதிவு செய்யும் முன் பாடல் அல்லது இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யவும் முடியும். எனினும் இந்த வசதி தற்சமயம் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. உங்களது ஸ்டோரியை பார்க்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் புகைப்படம் அல்லது வீடியோவில் உள்ள இசையை கேட்க முடியும். இத்துடன் பாடலின் தலைப்பு மற்றும் பெயரை குறிப்பிடும் ஸ்டிக்கரும் தெரியும்.

    ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ஆயிரக்கணக்கான இசையை வழங்கியுள்ள நிலையில், தினமும் புதிய பாடல்களை சேர்க்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு தளங்களில் தற்சமயம் மியூசிக் ஸ்டிக்கர் 51 நாடுகளில் கிடைக்கிறது. தினசரி அடிப்படையில் சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
    ×