search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலி அக்கவுன்ட்களை களையெடுக்க துவங்கிய ஃபேஸ்புக்

    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்களை நீக்கும் பணியினை ஃபேஸ்புக் துவங்கியது. அதன்படி போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அக்கவுன்ட்கள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. #Facebook


    ஃபேஸ்புக் தளத்தில் இருந்து ஒருங்கிணைந்த போலி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 32 போலி அக்கவுண்ட் மற்றும் பக்கங்கள் (17 ப்ரோஃபைல்கள் மற்றும் 8 பக்கங்கள்) நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடவடிக்கை அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் இடைக்கால தேர்தலையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீக்கப்பட்ட போலி அக்கவுண்ட் எவ்வித குழுவுக்கும் தொடர்புடையது கிடையாது என்றாலும், இவை 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது நடைபெற்ற ரஷ்ய இன்டர்நெட் ஏஜென்சி மூலம் இயக்கப்பட்ட பிரச்சாரங்களை போன்று இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    2016 அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு சார்ந்த விவகாரம் மற்றும் ஃபேஸ்புக் பயனர்களின் தனியுரிமை தகவல்களை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக அதிகம் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஃபேஸ்புக் பயனர் வளர்ச்சி, பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கான செலவு அதிகரித்த நிலையில் கடந்த வாரம் ஃபேஸ்புக் பங்குகள் அதிகபட்சம் 20% வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.


    கோப்பு படம்

    மக்களோ அல்லது நிறுவனங்களோ அக்கவுன்ட்களை உருவாக்கி மற்றவர்களை தவறாக வழிநடத்தும் வழக்கம் ஃபேஸ்புக்கில் அனுமதிக்கப்படுவதில்லை. என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    "போலி நடிகர்கள் ஃபேஸ்புக்கில் இயங்குவிடாமல் செய்திருக்கிறோம்," என ஃபேஸ்புக் மூத்த அலுவலர் ஷெரில் சான்ட்பெர்க் தெரிவித்தார். 

    "இதன் பின் யார் இயங்குகிறார்கள் என்பது குறித்து எங்களது ஆய்வின் இந்த சூழலில், எங்களிடம் போதுமான தொழில்நுட்ப ஆதாரம் இல்லை," ஃபேஸ்புக்கின் சைபர்செக்யூரிட்டி திட்டங்களுக்கான தலைவர் நதேனியல் லெய்ச்சர் தெரிவித்தார்.

    17 ப்ரோஃபைல்கள், எட்டு பக்கங்கள் மற்றும் ஏழு இன்ஸ்டாகிராம் அக்கவுன்ட்கள் நீக்கப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இவற்றில் முதல் அக்கவுன்ட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவாக்கப்பட்டும், சமீபத்திய அக்கவுன்ட் மே மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தேகப்பட்டதில் ஒரு பக்கங்களை சுமார் 2,90,000 அக்கவுன்ட்களை பின்தொடரப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. #Facebook
    Next Story
    ×