search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு"

    தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 946 பேர் ஆகும். இவர்களது வாக்குகள் சில தொகுதிகளில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிக்க கூடிய வகையில் இருக்கும். #Parliamentelection
    சென்னை:

    தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 91 லட் சத்து 13 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரத்து 400 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 944 பேர்.

    ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் சுமார் 6 லட்சம் பேர் அதிகமாக இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6 கோடி வாக்காளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் இளம்வாக்காளர்கள் ஆவார்கள். 18-19 வயதுகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 759 பேர் இருக்கிறார்கள்.

    இவர்கள் இந்த தேர்தலில் முதன் முதலில் வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வாக்குகள் சில தொகுதிகளில் வெற்றி- தோல்விகளை நிர்ணயிக்க கூடிய வகையில் இருக்கும்.



    வாக்காளர்களில் 1 கோடியே 18 லட்சத்து 37 ஆயிரத்து 274 பேர் 20 முதல் 29 வயது உடையவர்கள் ஆவார்கள். அதுபோல 1 கோடியே 38 லட்சத்து 55 ஆயிரத்து 913 பேர் 30 முதல் 35 வயது உடையவர்கள்.

    மொத்தத்தில் தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 65 லட்சத்து 93 ஆயிரத்து 946 பேர் ஆகும். இவர்கள் வாக்குகள் எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அந்த கட்சி தான் அதிக இடங்களில் வெற்றிகளை குவிக்க இயலும்.

    40 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே இளைஞர்களை கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்கும் என்று கருதப்படுகிறது. #Parliamentelection

    தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #ByElection2019 #SatyabrataSahoo
    சென்னை:

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மார்ச் 9-ம் தேதி நிலவரப்படி காலியாக உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் அந்தந்த மாநிலங்களில் மக்களவை தேர்தல் நடைபெறும் அதே நாளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என செய்திகள் வெளியாகின.

    இந்நிலையில், இன்று இரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. #ByElection2019 #SatyabrataSahoo
    பாராளுமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா அடுத்த வாரம் தமிழகம் வருகிறார். #ParliamentElection #SunilArora
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகளை மேற்கொள்ள வருகிற 23 மற்றும் 24 ஆகிய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 31 ஆயிரத்து 931 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சென்னையில் அதிக பட்சமாக 14,221 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த வாரம் சென்னை வருகிறார்.

    அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்ட பிறகு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார்.



    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 21 சட்டசபை தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் அது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. ஓசூர் தொகுதி இன்னும் காலி இடம் என அறிவிக்கப்படவில்லை. எனவே மீதம் உள்ள 19 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ParliamentElection #SunilArora
    தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்தில் தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Lokayukta #SC
    புதுடெல்லி:

    அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஊழலில் ஈடுபட்டால் அவர்களை விசாரணை வரம்புக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றியது.

    இதன் மூலம் அனைத்து மாநில அரசுகளும் லோக் ஆயுக்தா அமைப்பை நிறுவ வழிவகை செய்யப்பட்டது. தமிழக அரசு இதுவரை லோக் ஆயுக்தாவை அமைக்கவில்லை. தமிழகத்தில் இன்னும் லோக் ஆயுக்தா ஏன் அமைக்கவில்லை? என்று சுப்ரீம் கோர்ட்டு பலமுறை கண்டனம் தெரிவித்தது.

    இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டுமே தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணியும் விரைவில் முடிந்துவிடும். எனவே 8 வார கால அவகாசம் வேண்டும்” என்று கோரப்பட்டு இருந்தது.



    இதை சுப்ரீம் கோர்ட்டு இன்று ஏற்றுக் கொண்டது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்துக்குள் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அதற்கு அடுத்த 4 வாரத்துக்குள் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Lokayukta #SC

    தமிழ்நாட்டுக்கு விடிவு காலம் பிறக்க பா.ஜனதா மற்றும் அதிமுக ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஒன்றியம் தணக்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்திலும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    மம்தா பானர்ஜி போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். அவர் மேற்கு வங்கத்தின் முதல்வர் மற்றும் இரும்புப் பெண்மணி என்று பெயர் பெற்றவர். நானும் அவர்கள் 15 நாட்களுக்கு முன்பு நடத்திய மாநாட்டிற்கு சென்றுவிட்டுதான் வந்தேன். அவ்வளவு செல்வாக்குள்ள ஒரு முதலமைச்சர் அவர். அங்கு பி.ஜே.பி உள்ளே நுழைய முடியாது. அதனால் மோடிக்கு ஆத்திரம் வந்து அந்த அம்மையாரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, பல அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கின்றார்.

    அங்கு ஒரு சம்பவம் நடந்துள்ள காரணத்தினால் அதற்காக தர்ணா போராட்டத்தை முதல்-மந்திரி மம்தா பானர்ஜி துவங்கியிருக்கிறார்.

    மோடி இப்பொழுது பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு ஒரு பொய்யைச் சொல்லி இருக்கின்றார். என்ன பொய் என்று கேட்டால், விவசாயிகளுடைய வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்தப்போகிறேன் என்று புதிதாக ஒரு கதை விட்டிருக்கின்றார். விவசாயினுடைய கோவணத்தை அவிழ்த்து விட்டு ஓடவிட்டவர்கள், மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள். அது உங்களுக்கு தெரியும்.

    மோடி ஒரு பம்மாத்து வேலை செய்யத் துவங்கியிருக்கின்றார். அவரே சொல்லி இருக்கின்றார் இந்த பட்ஜெட் என்பது ஒரு ட்ரெய்லர். இப்பொழுதுதான் ட்ரெய்லர் வந்திருக்கின்றதாம். ட்ரெய்லர் என்பது பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஒரு ட்ரெய்லர் வெளியிடுவார்கள். அதைப்பார்த்து விட்டு அனைவரும் சென்று சினிமா பார்ப்பார்கள்.

    அதுபோல் சொல்கின்றார் மோடி. எனவே, ஒரு ட்ரெய்லர் தயாரிக்கவே 5 வருடம் ஆகிறது என்றால், மக்களுக்கான திட்டங்கள் தீட்டுவதற்கு, அதனை செயல்படுத்துவதற்கு எத்தனை காலம் ஆகும் என்று நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன். ஆகவே, நாடே இன்றைக்கு ஒரு சுடுகாடாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றது.

    மத்தியில் அப்படி ஒரு ஆட்சி. மாநிலத்தில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

    அதற்காகத்தான் நாங்கள் உங்கள் எல்லோரையும் தேடி வந்திருக்கிறோம். நாங்கள் தேடிவந்து இருக்கின்றோம் என்று சொல்வதை விட, இந்த இரு கட்சிகளையும் அப்புறப்படுத்த நாங்கள் தயார் என்று நீங்கள் எங்களைத் தேடி வந்து இருக்கின்றீர்கள், அதுதான் உண்மை.

    தி.மு.க. தயவு இல்லாமல் யாரும் மத்தியிலே ஆட்சி நடத்த முடியாது. ஆகவே, விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரப்போகிறது. அதோடு சேர்த்து 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரப்போகிறது. எங்களுக்கு எல்லாம் என்ன உணர்வு என்றால், ஏன் எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வு என்ன என்று கேட்டீர்கள் என்றால், நாடாளுமன்றத் தேர்தல், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகிய வற்றோடு சேர்த்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் வந்தால் நாடு நன்றாக இருக்கும் என்ற உணர்வு தமிழ்நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது. அப்படி வந்தால், எடப்பாடி அரசையும் ஒழித்து விடலாம், மோடி அரசையும் வீழ்த்தி விடலாம்.

    இந்த இரண்டு கட்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டால் நிச்சயமாக உறுதியாக சொல்கின்றேன். நாட்டிற்கும், தமிழகத்திற்கும் விடிவு காலம் பிறக்கும்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin
    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பாஜக தலைவர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். #BJP #TNElectionIncharge
    சென்னை:

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதைத்தொடர்ந்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    தமிழகத்திலும் அ.தி.மு.க., தி.மு.க, அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் வேலைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் 28 பேரை நியமனம் செய்து பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியின் துறை வாரியாக 28 பேர் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வானதி ஸ்ரீனிவாசன், மோகன் ராஜுலு, நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன், ஏ.பி.முருகானந்தம், கரு.நாகராஜன், கனக சபாபதி, ஜி.கே.நாகராஜ் உள்பட 28 பேரை நியமனம் செய்து உத்தரவிட்டார். #BJP #TNElectionIncharge
    தமிழ்நாட்டின் இந்த ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். #SatyabrataSahoo #VoterList
    சென்னை:

    1.1.2019 தேதியன்று 18 வயதை முடித்துள்ளவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்று, தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ளும்படி இந்தியத் தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    அதைத் தொடர்ந்து கடந்த 1.9.2018 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் 2 கோடியே 88 லட்சத்து 76 ஆயிரத்து 791 பேர் ஆண்கள்; 2 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 404 பேர் பெண்கள்; 5,184 பேர் மூன்றாம் பாலினத்தவராகும்.

    இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அது இன்று காலையில் வெளியிடப்படுகிறது. சென்னை மாநகராட்சியிலும், மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.



    கடந்த ஆண்டு 31.8.2018 வரையிலான வாக்காளர் பட்டியல் திருத்தக்காலத்தில் 1.82 லட்சம் வாக்காளர் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இறந்த வாக்காளர் பெயர்கள், இடம் பெயர்வு மற்றும் இருமுறை பதிவு ஆகிய காரணங்களால் 5.78 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன.

    வாக்காளர் பட்டியலில் காணப்பட்ட இரட்டை பெயர் பதிவு, போலி பெயர் பதிவு, இறந்தவர் பெயர் நீக்காத நிலை ஆகியவற்றைகளைய 2018-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுருக்க முறை திருத்த பணியின்போது நவீன தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டன. எனவே இன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் அதுபோன்ற பெயர்கள் நீக்கப்பட்டு பெரும்பாலும் குறையில்லாத வாக்காளர் பட்டியலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #SatyabrataSahoo #VoterList
    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். #JactoGeo

    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று தொடங்கியது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    தமிழகத்தில் 6.5 லட்சம் அரசு ஊழியர்கள், 4.5 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். ஜாக்டோ-ஜியோவின் முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை.

    பல மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. சில இடங்களில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்களே பாடம் நடத்தினார்கள்.

    அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கலெக்டர் அலுவலகம், தாசில்தார், பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

    சென்னையிலும் எழிலகம், பனகல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின.

    அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் முடங்கின. பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்களிலும், வேன்களிலும் அழைத்து சென்றனர். பல இடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் மறியலில் ஈடுபட்டனர்.

    சென்னையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு மறியலில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குவிந்தனர்.

    சென்ட்ரல், பாரிமுனை, எழும்பூர், கோயம்பேடு போன்ற பகுதிகளின் மையமாக திகழும் இந்த சாலையில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

    மறியல் போராட்டத்தையொட்டி அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் சிறிது சிறிதாக கூடத் தொடங்கிய கூட்டம் பின்னர் அதிகரித்தது. கைதாகி சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ஊழியர்கள் குவிந்தனர்.

    போலீசார் எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் மாநகராட்சியின் பக்கவாட்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து கைதானார்கள்.

    நேற்றை விட இன்று போராட்டம் தீவிரமானது. சென்னையில் உள்ள அனைத்து துறை ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர். இன்றைய போராட்டத்தில் அரசு பணிகள் மேலும் பாதிக்கப்பட்டன.

    தலைமை செயலகம் தவிர பிற அலுவகங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வேலைக்கு செல்லவில்லை.

    சென்னையில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் குறைந்த அளவில் வந்திருந்தனர். இதனால் வழக்கமான பணிகள் முடங்கின.

    போராட்டம் குவித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் 300 இடங்களில் இன்று மறியல் நடக்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் கைது ஆவார்கள். அரசு எங்களை கைது செய்து சிறையில் அடைப்பது பற்றி கவலைப்படவில்லை. எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை முடிப்பது இல்லை.

    நாளை மீண்டும் அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றியங்கள் முன்பாக மறியல் நடைபெறும். நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் நடக்கும்.

    26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னையில் கூடி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்து அறிவிப்போம். எங்களை அழைத்து அரசு பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo

    கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்துக்கு சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Fishermanboat

    கொச்சி:

    கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றது.

    மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளத்தனமாக பயணம் செய்வது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள போலீசாரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதியில் இருந்து 70 பைகள் மீட்கப்பட்டன. அந்த பைகளில் நீண்ட தூரத்துக்கு பயணம் செய்வதற்கான அத்தியாவசிய பொருட்கள் இருந்தன.

    மேலும் 20 அடையாள ஆவணங்களும் அந்த பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. அதை வைத்து விசாரணை நடத்திய அதிகாரிகள் பிரபு தண்டபாணி என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.

    மீன்பிடி படகில் கள்ளத்தனமாக செல்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. டெல்லியைச் சேர்ந்தவர்களும் அந்த படகில் செல்வதாக கூறப்படுகிறது. 100 முதல் 200 பேர் வரை அந்த படகில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    பெண்கள், குழந்தைகளும் அந்த படகில் இருக்கிறார்கள். 12-ந்தேதி இரவு புறப்பட்ட அந்த படகு நடுக்கடலுக்கு சென்றது. அதன் பிறகு அந்த படகு மாயமாகி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த படகில் கள்ளத்தனமாக செல்பவர்கள் நியூசிலாந்து நாட்டை நோக்கி செல்வதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. கேரளாவில் இருந்து நியூசிலாந்துக்கு 7 ஆயிரம் மைல்கள் கடல் பயணம் செய்ய வேண்டும். அந்த பயணப்பாதை ஆபத்தானது என்று கூறப்படுகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் அந்த கடல் மார்க்கத்தில் கடுமையான சூறாவளிகளும், கடல் கொந்தளிப்பும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா இடையே அந்த படகு கடும் கடல் கொந்தளிப்பை சமாளிக்க வேண்டியது இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த படகில் செல்லும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.  #Fishermanboat

    தம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #ThambiDurai #TTVDhinakaran

    திருச்சி:

    திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

    தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

    திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க. ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி பெற்றேன். இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

    கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த வி‌ஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபா சிட் கூட கிடைக்காது.தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு அனைத்து கட்சிகளுமே புதிய கட்சிகள் போல் தான் உள்ளது.

     


    பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் வெளி மாநிலம் சென்று உள்ளார். உள்ளூரில் விலை போகாததால் வெளி மாநிலத்தில் மார்க்கெட்டிங் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது நாற்காலியை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் உள்ளார்.

    கொடநாடு விவகாரத்தில் அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? இந்த ஆட்சி ஏஜெண்ட் ஆட்சி. பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்வது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தினகரன் பதில் அளித்து கூறியதா வது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்- அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்- அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.

    எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார்.தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் ஆடுகிறார் என்றார். #ThambiDurai #TTVDhinakaran

    தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் தமிழகத்தில் தானாகவே அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதோடு அக்கட்சியே இல்லாமல் போய்விடும் என காங்கிரஸ் பிரமுகர் கூறியுள்ளார். #ADMK #Congress
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் கலியபெருமாள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகனுக்கு புதுவை காங்கிரஸ் ஆட்சியை பற்றி பேசுவதற்கு தகுதிகள் இல்லை.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் படிப்படியாக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசின் நிதி நிலைமைக்கேற்றவாறு நிறைவேற்றி வருகிறது.

    மக்களுக்கு திட்டங்களை நிறைவேற்ற முதலமைச்சர் நாராயணசாமி எந்த அளவுக்கு போராடி வருகிறார் என்று புதுவை மக்கள் நன்கு அறிவர். திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது யார்? என்றும் நன்கு அறிவர்.

    ஆனால், தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க. ஆட்சி அல்ல. அங்கு மோடியின் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதனால் அங்கு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கவர்னர் துணையாக இருந்து வருகிறார்.

    ஆனால், புதுவையில் அந்த மாதிரி இல்லை. அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு தைரியம் இருந்தால் பொங்கல் பரிசு பொருட்கள் ஏன் அனைத்து கார்டுகளுக்கும் வழங்க கவர்னர் அனுமதி வழங்கவில்லை என கவர்னரை எதிர்த்து போராட வேண்டும்.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சி விரைவில் அகற்றப்படும் என்று அன்பழகன் கூறுகிறார். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் தமிழகத்தில் தானாகவே அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவதோடு அக்கட்சியே இல்லாமல் போய்விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.

    புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் ஆட்சியை விட்டுக்கொடுத்தார் என்று கூறியுள்ளார். அது கூட்டணி முடிவு. காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து வாக்குகளை பெற்றதால் தான் தமிழகத்தில் அப்போது ஆட்சி அமைக்க அ.தி.மு.க.வால் முடிந்தது என்பது யாவரும் அறிந்தது.

    இதுபோல் அரசியல் பேசாமல் தமிழகத்துக்கு சென்று அரசியல் கற்று பின்னர் புதுவையில் அரசியல் பேச வந்தால் ஏற்புடையதாக இருக்கும்.

    இவ்வாறு கலியபெருமாள் கூறியுள்ளார். #ADMK #Congress
    தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 31-ந் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். #ElectionCommission
    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தவறாக பெயர் குறிப்பிடப்பட்டவர்கள், அதை திருத்தம் செய்துகொள்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாதங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்துகொள்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இம்மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைத்தளம் புதிதாக உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதில் தொய்வு ஏற்பட்டது.

    மேலும், இந்த புதிய வலைத்தளம் மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இருந்தால், அதை உடனடியாக கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில், தமிழகத்தில் சுமார் 10 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெயர்களை இனங்கண்டு நீக்கும் முறை தற்போது நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக, குறிப்பிட்ட வீடுகளில் ஆய்வு செய்யும் பணியில் தேர்தல் பணி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட ஜனவரி 10-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க தமிழக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

    இந்த நிலையில், இறுதி வாக்காளர் பட்டியலை வரும் 21-ந் தேதி (நாளை மறுநாள்) வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இடையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வேறு வந்ததால், வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவை நீக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தற்போது, மீண்டும் அந்த பணி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், வரும் 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க 1-1-2019-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, தீவிர முறையிலான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் முதலியவற்றுக்கான படிவங்கள் 1-9-2018 முதல் 31-10-2018 வரை பெறப்பட்டன.

    முன்பு அறிவித்த நீட்டித்த கால அட்டவணையின்படி, இறுதி வாக்காளர் பட்டியல்கள் 21-1-2019 அன்று வெளியிடப்பட்டிருக்க வேண்டும். பிழைகளற்ற வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், சேர்த்தல், நீக்கல் குறித்த தகவல்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ளுவதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    இதன் தொடர் நடவடிக்கையாக வாக்காளர் பட்டியல்களில் காணப்படும் தவறுகள், ஒன்று போலுள்ள பதிவுகள் ஆகியவற்றை கண்டறிந்து உரிய களவிசாரணை மேற்கொண்டு இரட்டைப்பதிவுகளை நீக்கி, இந்திய தேர்தல் ஆணையத்தின் “ஈஆர்ஓ நெட்” மென்பொருள் மூலம் அச்சிடும் பணியை மேற்கொள்ளவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இப்பணிகளுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்படுவதால் இறுதி வாக்காளர் பட்டியல்களை 31-1-2019 அன்று வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 31-1-2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #ElectionCommission
    ×