search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99351"

    யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
    கோவை:

    “தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த ட்வீட்டுடன் சேர்த்து வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம்.

    ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல. 

    யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள். வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக, நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

    அவரது தீபாவளி வாழ்த்து செய்தியில், "அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான் காலங்கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம் என தமிழ் மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    சென்னை:

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் வணக்கம், நம் தமிழ் மாநிலத்தில் இருக்கும் எல்லா தமிழ் அன்பர்களுக்கும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். இந்த தேர்தல் நேரத்தில் நாம் நம் பொறுப்பை நல்லப்படியாக கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. இதை நாம் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும், தேர்தல் நாளான 18-ந் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் நான் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்து விட்டு மீண்டும் உடனே இங்கு திரும்ப வேண்டி உள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்கு காரணம், இது மிக மிக முக்கியமான பொறுப்பு.

    நம் நாட்டின் முன்னேற்றம், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் நம்கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு என்பது ஒரு சாமானியமான வி‌ஷயம் அல்ல. ஜனநாயகம் வருவதற்கு முன் நாட்டின் தலைவரை நிர்ணயிக்கும் சக்தி கிடையாது. இப்போது தான் இந்த சக்தி நம் கையில் இருக்கிறது. இதை நீங்கள் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் மக்கள் எல்லாரும், ஒருவர் விடாமல், உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டு போடுங்கள். பிறர் சொல்வதை வைத்தும், ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மாட்டு பொங்கலை முன்னிட்டு கோ பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
    கோவை:

    தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகள் கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் விழா 112 அடி ஆதியோகி முன்பு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, ஈஷா மாட்டுமனையில் வளர்க்கப்படும் காங்கேயம், உம்பாளச்சேரி, ஆலம்பாடி, வெச்சூர், கிர், சாஹிவால், ஓங்கோல் உள்ளிட்ட 16 வகையான நாட்டு மாடுகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுற்று வட்டார கிராம மக்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஈஷா தன்னார்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து மண் பானை களில் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தாராபுரத்தைச் சேர்ந்த கலைஞர்களின் பறையாட்டம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விழாவுக்கு வருகை தந்து நாட்டு மாடுகளுக்கு வெல்லம், கரும்பு, தானியங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். பின்னர், கோ பூஜை நடைபெற்றது.

    பொங்கல் விழா குறித்து சத்குரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மகர சங்ராந்தி என்பது மிகவும் முக்கியமான ஒரு நாள். இந்த நாளில் சூரியனுக்கும் பூமிக்குமான தொடர்பில் ஒரு மாற்றம் நடக்கிறது. நம் உயிருக்கு மூலமான சக்தி என்றால் அது சூரிய சக்தி தான். பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் சூரிய சக்தியால் தான் இயங்குகின்றன.

    மகர சங்கராந்தி நாளில் இருந்து வெயில் சற்று அதிகரிக்க துவங்கும். அந்த வெயிலால் மக்கள் கொஞ்சம் கஷ்டப்படுகிறார்கள். இந்த கஷ்டம் வெயிலால் வரவில்லை. வெயிலால் உயிர் நடக்கிறது. வெயிலால் மரம், செடி, கொடிகள் எல்லாம் வளர்கிறது.

    நிழல் இல்லாததால் தான் மக்கள் கஷ்டப்படுகின்றனர். அந்த கஷ்டத்தில் இருந்து விடுபட அதிகளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.

    பொங்கல் நாளில் ஈஷாவில் 16 வகையான நாட்டு மாடுகளை கண்காட்சிக்கு வைத்துள்ளோம். அதற்கு காரணம், நம் நாட்டில் இத்தனை வகையான நாட்டு மாடுகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதற்குதான். நாம் டிராக்டர் போன்ற கருவிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துகிறோம். டிராக்டரை கொண்டு உழவ வைத்து கொள்ளலாம்.

    ஆனால், மண்ணை வளப்படுத்த முடியாது. கடந்த 40, 50 வருடங்களில் ஏராளமான வெளிநாட்டு மாடுகளை நம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம். இதனால், நம் நாட்டு மாடுகளுக்கு தற்போது போதிய மதிப்பில்லாமல் செய்துள்ளோம். வணிக நோக்கத்திற்காக செய்யப்பட்ட இந்த செயல் நமக்கு எதிர்மறையாக மாறி உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

    நம் நாட்டில் 12 ஆயிரம் வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக சொல்கிறார்கள். ஆனால், அடுத்த 30 வருடங்களில் நம் நாட்டில் தோராயமாக 25 சதவீதம் நிலங்களில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு இருக்காது என சொல்கிறார்கள்.

    விவசாயம் செய்வதற்கு மண் வளமாக இருக்க வேண்டும். மண் வளமாக இருக்க வேண்டுமானால், நாட்டு மாடுகளும் மரங்களும் மிகவும் அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நம் நாட்டு மாடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு சத்குரு கூறினார்.
    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சியாச்சினில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யோகா நிகழ்சியில் ராணுவ வீரர்களுக்கு, ஜக்கி வாசுதேவ் யோகா பயிற்சி அளித்தார். #InternationalYogaDay2018
    ஸ்ரீநகர் :

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சர்வதேச யோகா தினத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாநிலம், சியாச்சினில் 350 ராணுவ வீரர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்சியில், ஈஷா யோகா மையம் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார்.

    காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் சியாச்சின் சிகரம் உள்ளது.  உலகின் மிக உயரமான ராணுவ தளத்தை இந்தியா சியாச்சனில் அமைத்துள்ளது.

    குளிர்காலத்தில் மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவும் சியாச்சின் பனிச்சிகத்தை, தரை முகாமில் இருந்து இந்திய வீரர்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #InternationalYogaDay2018
    ×