என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 99481"
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
- தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கிவரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமில்லாமல் பாடல் பாடுவதிலும், பாடல் எழுதுவதிலும், படம் தயாரிப்பதிலும் சிவகார்த்திகேயன் கவனம் செலுத்தி வருகிறார். இவர் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்சின் அடுத்த பட அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரிப்பில் வெளியாகி விருதுகளை வென்ற கூழாங்கல் திரைப்படத்தை இயக்கியிருந்த பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கவுள்ளார். இதில் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு கொட்டுக்காளி என்று பெயரிடப்பட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, "ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க 'டைகர் அவார்ட்' வென்று, 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குனர் பி.எஸ் வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
Extremely happy to announce our @SKProdOffl's next film with the highly talented and award winning filmaker @PsVinothraj.
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 10, 2023
Starring my dearest @sooriofficial annan & an incredible performer @benanna_love.
Here's the firstlook of #Kottukkaali. pic.twitter.com/nM6jYrVSB8
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி 3மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் சமீபத்தில் வெளியானது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
மாவீரன்
இந்நிலையில், 'மாவீரன்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
We're glad to announce @PrimeVideoIN as our digital partner for #Maaveeran/#Mahaveerudu ?@Siva_Kartikeyan #MaaveeranOnPrime #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @iYogiBabu @dineshmoffl pic.twitter.com/Dtxuqx7kGC
— Shanthi Talkies (@ShanthiTalkies) March 8, 2023
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு இப்படத்தின் முதல் பாடலை வெளியிட்டது. மேலும், இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.
மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ரசிகர்கள் செல்பி எடுக்க ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் நேற்று வெளியானது. கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் ஒரே நாளில் 3மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
3M Real Time Views for #SceneAhSceneAh ???#Maaveeran #HBDPrinceSK
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 17, 2023
▶️ https://t.co/vW1YjJBehO
A @bharathsankar12 Musical!?
?️ @anirudhofficial
? @shobimaster
✍? #Kabilan & @CMLOKESH @Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl pic.twitter.com/5245TLilBc
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாவீரன்’.
- இப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
மாவீரன்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீனா சீனா' பாடல் இன்று மதியம் 12.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
மாவீரன்
கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் வரிகளில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’.
- இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
மாவீரன் போஸ்டர்
இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மாவீரன் படத்தின் முதல் பாடலான 'சீன்னா சீன்னா' பாடல் வருகிற 17-ம் தேதியன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டை கொடுத்து வருகிறது.
மாவீரன் போஸ்டர்
அதன்படி, 'சீன்னா சீன்னா' பாடலை கவிஞர்கள் கபிலன் மற்றும் லோகேஷ் எழுதியுள்ளனர். மேலும், இந்த பாடலுக்கு சோபி பவுல்ராஜ் நடன இயகுனராக பணிபுரிந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
#Maaveeran First Single #SceneAhSceneAh Choreographed by fans favourite @shobimaster ?
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 16, 2023
A @bharathsankar12 musical!??@Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @dineshmoffl @saregamasouth
Next update at 5:30PM pic.twitter.com/ZVB6ltfu1O
- நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடிக்கும் திரைப்படம் ‘மாவீரன்’.
- இந்த படத்தில் அதிதி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
மாவீரன் போஸ்டர்
'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முதல் பாடல் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Get ready folks..!? #Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @DirectorMysskin @iamarunviswa @iYogiBabu @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @LokeshJey @sivadigitalart @DoneChannel1 @UrsVamsiShekar pic.twitter.com/xMvyKTMaFJ
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 14, 2023
- சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
"டாக்டர்", "டான்" படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். 'மாவீரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.
'மாவீரன்' திரைப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் இனையத்தில் வைரலாகி வருகிறது.
- ஹீரோ படத்திற்காக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பெற்ற ரூ. 5 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ. 6.92 கோடியாக வழங்க கோரி டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
- ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் நிறுவனம் கூடுதல் மனு தாக்கல் செய்தது.
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திற்காக கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பெற்ற ரூ. 5 கோடியை வட்டியுடன் சேர்த்து ரூ. 6.92 கோடியாக வழங்க கோரி 2019-ல் டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் பணத்தை திருப்பித் தராததால், ப்ரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் நிறுவனம் கூடுதல் மனு தாக்கல் செய்தது.
சிவகார்த்திகேயன்
இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்த போது, டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், ப்ரின்ஸ் படத்தில் பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்தும்படி உத்திரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ப்ரின்ஸ் படத்தில் நடிகர் என்ற முறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்ததாகவும், தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். திரைத்துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடனும், துன்புறுத்தும் வகையிலும் இந்த மனுவை டேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
சிவகார்த்திகேயன்
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு, சான்றிதழ்களை ஆராய்ந்த நீதிபதி ப்ரின்ஸ் படத்தின் தயாரிப்பு பணிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்படுவதால், அவரது சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
- திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
- அவரை கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன் குகன் ஆகியோருடன் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். அவரை கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு, கோ-பூஜை, கஜபூஜை செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானோர் அவரை காண கோவிலில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- நடிகர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்தனர்.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், தலைவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... பல்லாண்டு, பல்லாண்டு வாழ்க... என்றும் உங்கள் ரசிகன் என்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
- நடிகர் அஜித் தற்போது ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.
துணிவு
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
அஜித் - சிவகார்த்திகேயன்
இந்நிலையில், அஜித்தை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சிவகார்த்திகேயன், "நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் சாரை சந்தித்தேன். உங்களுடைய பாசிட்டிவான வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு அடுத்த திட்டம் என்ன? என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Met AK sir after long time ❤️ yet another meeting with sir, to cherish for life 🙏👍 Thank you for all the positive words and wishes sir ❤️❤️🤗🤗 pic.twitter.com/yVaYIc3Ca5
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) November 23, 2022
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்