search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமில் 597 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் ‘பிங்க் அக்டோபராக’ கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி பொதுமக்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்களுக்காக மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் கடந்த மாதம் முழுவதும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முகாமின் நிறைவு விழா, நேற்று கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்கினார். ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சாந்திமலர், கதிரியக்கத்துறை தலைவர் டாக்டர் தேவி மீனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது நர்சுகள், மார்பக பரிசோதனை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாத கால பரிசோதனை முகாமில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள் குழுவினருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமில் 597 பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 18 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 210 பெண்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் கடந்த 2½ ஆண்டுகளில் 8 ஆயிரத்து 433 பேர் மார்பக பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் 221 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பெண்கள் ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து, மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கான சிகிச்சை பெற்றுக்கொண்டால், முழுவதுமாக குணமடைந்து விட முடியும். எனவே பெண்கள் அனைவரும் தயக்கம் காட்டாமல், கட்டாயம் மார்பக பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். மார்பக புற்றுநோயை கண்டறியும், அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய ‘மேமோகிராம்’ கருவி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில்தான் உள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள பெண்கள் இந்த ஆஸ்பத்திரியில் மார்பக பரிசோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:

    2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாட்டின் நலன் சார்ந்த வழக்கு என்பதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

    இந்த வழக்கை ஜூலை 30-ந்தேதி ஐகோர்ட்டு விசாரிக்க உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.
    தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் ஏற்படுத்திட முடியாது என்றும் மக்களுக்கு பின்னால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம் என்றும் கனிமொழி எம்.பி.பேசினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தூத்துக்குடி மக்களின் உரிமைகளுக்காக, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நிச்சயமாக தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

    இங்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வரமுடியுமோ அதற்கு நிச்சயமாக பாடுபடுவேன். இங்கு மிக முக்கியமாக இருக்கக் கூடியது தண்ணீர் பிரச்சனை. தண்ணீர் இல்லாத நேரத்தில் குளங்களை தூர்வார வேண்டியது முக்கியமானது. இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியை முன்னெடுப்போம். அதனை தாண்டி மக்கள் பிரச்சனைகள் பல உள்ளன.

    தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யாராக இருந்தாலும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். எல்லோரையும் அரவணைத்து கொண்டு, இந்தியா என்பது எல்லோருக்கும் சொந்தம் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தை உருவாக்கி நடத்த வேண்டும். இந்த முறையாவது மகளிர் மசோதாவை கொண்டுவர வேண்டும். பொருளாதாரத்தில் இருக்கும் சரிவு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை சரிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் உள்ள தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் போல்பேட்டை கிழக்கு, மேற்கு, நந்தகோபாலபுரம், செல்வநாயகபுரம், சக்தி விநாயகர்புரம், அழகேசபுரம், அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம், கிருஷ்ண ராஜபுரம், பொன்னகரம், முத்துகிருஷ்ணாபுரம், பூபால்ராயர்புரம், எஸ்.எஸ்.மாணிக்கபுரம், முருகன் தியேட்டர், லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, திரேஸ்புரம், குரூஸ்புரம், மட்டக்கடை, எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், 2-ம் கேட், சிவன் கோவில் தெரு, ரங்கநாதபுரம், பால விநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், கே.வி.கே.நகர், அண்ணாநகர் பகுதிகளில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:-

    எத்தனையோ எதிர்ப்புகள், அச்சுறுத்துதல்கள், மிரட்டல்களுக்கு மத்தியில் தமிழகத்தில் மாபெரும் வெற்றியை தி.மு.க கூட்டணிக்கு தந்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் தனித்துவமான வெற்றியை பெற்று உள்ளது. தமிழகத்தில் சுமூகமான சூழ்நிலையை, நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல விரும்புகிறோம்.

    ஆனால் அவர்கள் தோல்வியடைந்த பின்பும் மக்களை மிரட்டுகின்றனர். என்னுடைய தோல்விக்காக வருத்தப்படுவீர்கள் என்று அச்சுறுத்தும் வகையில் பேசுகின்றனர். தூத்துக்குடி மக்களுக்கு எந்த தீங்கையும் அவர்கள் ஏற்படுத்திட முடியாது. மக்களுக்கு பின்னால் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் நிற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தோல்விக்கான காரணத்தை கேட்டு கட்சி தலைமை என்னிடம் அறிக்கை எதையும் கேட்கவில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. போட்டியிட்டது. இந்த கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. ஒரு இடத்தில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. போட்டியிட்ட 5 இடங்களிலும் கடுமையான சரிவை கண்டது. இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி பெற்று வந்த நிலையில், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெற முடியாமல் போனது. அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து மத்திய பா.ஜ.க. தலைமை, தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    அகில இந்திய பா.ஜ.க. தலைமைக்கு தமிழகத்தின் நிலைமை நன்றாகவே தெரியும். தேர்தலை நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலிமையாகவே எதிர்கொண்டோம். இதுவும் கட்சியின் தலைமைக்கு தெரியும். கூட்டணி கட்சி தலைவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள்.

    இன்னும் சொல்லப்போனால், இந்தியா முழுவதும் பா.ஜ.க. வெற்றி கோஷம் ஒலித்து கொண்டிருந்த நேரத்தில், பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த மாநிலங்களில் கட்சி தலைமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கவலைப்படாதீர்கள், தொண்டர்களை உற்சாகமாக இருக்க சொல்லுங்கள் என்று தெரிவித்தார்கள்.

    ஆனால் சிலர் வேண்டுமென்றே இதுபோன்று பரப்புகிறார்கள். கட்சி தலைமை எங்களிடம் தோல்விக்கான விளக்க அறிக்கை எதையும் கேட்கவில்லை. இது முற்றிலும் தவறானது. 2 ஜி ஊழல் வழக்கில் சிக்கிய, பண பலத்துடன் தேர்தலை சந்தித்த கனிமொழியை எதிர்கொண்ட என்னை கட்சி தலைமை பாராட்டத்தான் செய்தது.

    பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு நான் தான் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து செல்ல இருக்கிறேன். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    பாராளுமன்றத்தில் தூத்துக்குடி மக்களின் குரலாக ஒலிப்பேன் என தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் கணவர் அரவிந்தனுடன் நேற்று காலை கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி சான்றிதழை வைத்து ஆசி பெற்றார். அப்போது கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் கருணாநிதியின் நினைவுகளை மனதில் தாங்கி கொண்டு, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நான் பெற்றிருக்கும் வெற்றியை அவரது காலடியில் சமர்ப்பிக்க வந்துள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றிபெற செய்த தூத்துக்குடி வாக்காளர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். தொடர்ந்து பாராளுமன்றத்திலும் அவர்களது குரலாக ஒலிப்பேன். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அத்தனை முயற்சிகளையும் முன்வைப்பேன். தமிழகம் மற்றும் கேரளா மக்கள் மாற்று சிந்தனை உள்ளவர்கள் என நிரூபித்து விட்டார்கள். தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் உழைப்பு இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் வேட்பாளர் ஜி.செல்வம், மயிலாடுதுறை வேட்பாளர் ராமலிங்கம், தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருப்போரூர் வேட்பாளர் இதயவர்மன் உள்ளிட்டோரும் தங்களது சான்றிதழ்களை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து ஆசி பெற்றனர்.

    மேலும் கனிமொழி எம்.பி. அண்ணா அறிவாலயத்தில் தன்னுடைய வெற்றி சான்றிதழை மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். 
    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் யார் என்பதை பார்ப்போம்...
    சென்னை:

    தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசியல் வாரிசுகள் பலர் வெற்றிபெற்றுள்ளனர்.

    தூத்துக்குடி தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான கனிமொழி வெற்றிபெற்றார். அவர் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை விட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    மத்திய சென்னை தொகுதியில் முரசொலி மாறன் மகன் தயாநிதி மாறன் பா.ம.க. வேட்பாளர் சாம்பாலை விட 3 லட்சத்து 1520 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

    தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெயவர்தனைவிட 2 லட்சத்து 62 ஆயிரத்து 223 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

    வடசென்னை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை விட 4 லட்சத்து 60 ஆயிரத்து 691 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


    தேனி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத் குமார் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை விட 76 ஆயிரத்து 693 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

    ஆரணி தொகுதியில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் அ.தி.மு.க. வேட்பாளர் ஏழுமலையை 2 லட்சத்து 30 ஆயிரத்து 806 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை விட 3 லட்சத்து 32 ஆயிரத்து 142 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி, தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை விட 3 லட்சத்து 99 ஆயிரத்து 919 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    தர்மபுரி தொகுதியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மகன் அன்புமணி தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமாரை விட 63 ஆயிரத்து 460 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    மதுரை தொகுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்யன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்து 395 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்தார்.

    திருநெல்வேலி தொகுதியில் சட்டசபை முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகன் மனோஜ் பண்டியன் தி.மு.க. வேட்பாளர் ஞான திரவியத்தை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
    திமுக எம்.பி. கனிமொழி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திண்டிவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இவ்வழக்கில் ஜூன்4ம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.  இந்நிலையில் இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. 
    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.
    சென்னை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைவிட 3 லட்சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றார்.

    நேற்று பின்னிரவு இறுதியான தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி கனிமொழியிடம் அளித்தார்.



    இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்த கனிமொழி தனது கணவர் மற்றும் தாயாருடன் மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்றார்.

    அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்திய கனிமொழி, தனக்கு வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையைவிட 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று கனிமொழி வெற்றி பெற்றுள்ளார்.
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்று வந்தது. 

    தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

    இதில், கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்றார். தமிழிசையைவிட கனிமொழி 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 49,222 வாக்குகள் பெற்றார்.
    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசையை விட கனிமொழி ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார்.
    மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறது. தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

    தற்போது வரை கனிமொழி 2,18,377 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் 80,215 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழிசையைவிட கனிமொழி ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 162 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 18143 வாக்குகள் பெற்றுள்ளார்.
    பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ந்தேதி நடந்தது. இந்த தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    தூத்துக்குடி தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., அ.ம.மு.க. சார்பில் வக்கீல் புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொன்குமரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 37 பேர் போட்டியிட்டனர்.

    தொகுதியில் மொத்தம் 14,25,401 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 4,77,393 ஆண் வாக்காளர்களும், 5,06,578 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 28 பேர் என மொத்தம் 9,83,999 பேர் தேர்தலில் வாக்களித்தனர். இது 69.03 சதவீத வாக்குப்பதிவாகும்.

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி வ.உ.சி. என்ஜினீயரிங் கல்லூரியில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் நியமிக்கப்பட்டிருந்த ஊழியர்கள் வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    முதலில் தபால் ஓட்டுகள் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் காலை 8.30 மணிக்கு எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. அதில் முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடக்கத்தில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி 3 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலையில் இருந்து வந்தார்.
    பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் உள்ள முக்கிய வேட்பாளர்களை பார்ப்போம்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. நாடு முழுவதிலும் துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது.

    தமிழகத்தில் திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. துத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள கொ.ம.தே. கட்சியின் ஈஸ்வரன், பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர், கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கவுதம் சிகாமணி, அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன், ஓசூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலை பெற்றனர்.ங



    வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித் ஷா, காசியாபாத்தில் வி.கே.சிங் (பாஜக) ஆகியோர் முன்னிலை பெற்றனர். ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் ஆசம் கானை விட பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா பின்தங்கினார். போபால் தொகுதியில் சாத்வி பிரக்யாவைவிட காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் பின்தங்கினார்.

    வடமேற்கு டெல்லியில் பாஜக வேட்பாளர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் முன்னிலை பெற்றார். இதேபோல் கோரக்பூரில் பாஜக வேட்பாளர் ரவி கிஷன், அனன்சோல் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாபுல் சுபிரியோ முன்னலை பெற்றார். முசாபர்நகரில் தற்போதைய பாஜக எம்பி சஞ்சீவ் பால்யன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். பாட்னா சாகிப் தொகுதியில் மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்கா பின்தங்கினார்.
    ×