search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கனிமொழி எம்பி பிரசாரத்தில் பேசியுள்ளார். #Kanimozhi #pollachiissue #dmk

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜனதா ஆட்சியில் மக்கள் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். ஸ்டெர்லைட் பிரச்சினையில் பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் மிக மோசமாக மக்களை நடத்தினர். ஆலைக்கு எதிராக போராடிய 13 பேர் கொல்லப்பட்டனர்.

    தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. பொள்ளாச்சி சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அ.தி.மு.க. அரசு தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நினைக்க வில்லை.

    மத்தியில் இருக்கும் பா.ஜனதா ஆட்சி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வை கொண்டு வந்து நமது பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய நிலைக்கு உருவாக்கி உள்ளது. நாம் அந்த பா.ஜனதா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அவர்களோடு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் இது. இதனை புரிந்து கொண்டு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்.

    தி.மு.க. வாக்குறுதி கொடுத்தால் அதனை நிறைவேற்றி தரக்கூடிய இயக்கம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாய கடன்களை ரத்து செய்து தருவதாக அறிவித்து உள்ளார். நிச்சயம் ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். 100 நாள் வேலை என்பது 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.

    1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பை மக்கள் எங்களுக்கு தர வேண்டும். பா.ஜனதா அரசின் ஜி.எஸ்.டி. வரியால் கடலைமிட்டாய், தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #pollachiissue #dmk

    மக்களுக்கு உழைக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார். #tamilisai #bjp #kanimozhi

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அரசு மற்றும் பெரிய நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுகிறவர்களுக்குத்தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மாறாக கடைக்காரர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காததால், பொருளாதாரத்தில் நலிவடைந்து முதுமையில் வாடினர். இவர்களின் துயரங்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி, 60 வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.

    தமிழகத்திலும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கினார். ஏழை-எளிய மக்களின் நலனில் அக்கறை கொள்கிற மத்திய-மாநில அரசுகள் தொடர தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    பெரும்பாலானவர்கள் அரசியலில் இருந்து கொண்டு படிக்காமலே பல டாக்டர் பட்டங்களை பெறுவார்கள். ஒருவேளை டாக்டராக சரியாக படிக்காததால் தமிழிசை அரசியலுக்கு சென்று விட்டாரோ? என்று சிலர் கருதலாம். ஆனால் நான் அவ்வாறு இல்லை. மகப்பேறு மருத்துவ உயர் சிறப்பு படிப்புகளை கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் சென்று படித்தேன். எனது மருத்துவமனையில் இரவு 2 மணி வரையிலும் கண்விழித்து பெண்களுக்கு மருத்துவம் பார்த்தேன்.

    கருவில் இருக்கும் குழந்தைக்கு குறைபாடுகள் இருந்தால், அதனை கருவிலே சரி செய்யக்கூடிய படிப்பு படித்து உள்ளேன். என்னிடம் சிகிச்சைக்காக வருகிறவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து காத்திருந்து சிகிச்சை பெற்றனர். நான் மருத்துவ கல்லூரியில் துணை பேராசிரியராக பணி புரிந்தேன். நான் நினைத்து இருந்தால் சுயநலமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் நான் எனது நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்துள்ளேன்.

    கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கடும் மின்வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி, தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றியது. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவது உறுதி. நாடு முழுவதும் தொழில்வளம் பெருக தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இங்கு எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் முறைகேட்டால் திகார் ஜெயிலில் இருந்தவர். ஆனால் நான் என்றும் மக்களுக்கு சேவையாற்றுவதையே கடமையாக கொண்டுள்ளேன். நான் என்றும் இந்த மண்ணின் சொந்தக்காரிதான். என்றும் உங்களின் சகோதரிதான். எனவே தாமரை சின்னத்தில் வாக்களித்து, என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilisai #bjp #kanimozhi

    பிரதமர் மோடியை நம்ப தமிழக மக்கள் தயாராக இல்லை என்று தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசியுள்ளார். #kanimozhi #pmmodi

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் ஆழ்வார்திருநகரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலானது மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தல், பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தல். சரக்கு, சேவை வரி விதித்ததாலும், உயர் பணமதிப்பு இழப்பு செய்ததாலும், சிறு குறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய பா.ஜனதா அரசு, ஏற்கனவே வேலை செய்தவர்களின் வேலையையும் பறிக்கின்ற நிலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் 5 லட்சம் பேர் வேலை இழந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலையே பா.ஜனதா சார்பில் ஒரு வேட்பாளரை களத்தில் நிறுத்தி உள்ளது. அந்த ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடியபோது, அவர்களிடம் முதல்-அமைச்சரோ, அமைச்சரோ, அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ சென்று பேசவில்லை. 100-வது நாளில் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொன்றனர்.

    1,000 பேரை காப்பாற்றுவதற்கு 13 பேரை கொல்வதில் தவறில்லை என்ற பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்தான் தற்போது இங்கு பா.ஜனதா வேட்பாளராக உள்ளார். மண்ணையும், மக்களையும் நேசித்தவர்களை சுட்டு கொல்வதில் தவறில்லையாம். பா.ஜனதா வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்வதுதான், துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நாம் செலுத்துகிற அஞ்சலியாக அமையும். வட மாநிலங்களில் மத கலவரங்களை ஏற்படுத்தி, மக்களை பிரித்தாளக்கூடிய தந்திரங்களை பா.ஜனதா அரசு செய்து வருகிறது. தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகத்தையே பா.ஜனதா அரசு செய்து வந்துள்ளது. தமிழகத்தில் புயல், வெள்ளம் வந்தபோதும் வராத பிரதமர் நரேந்திர மோடி, தற்போது தேர்தலுக்கு முன்னதாக 3 முறை வந்து விட்டார். இன்னும் எத்தனை முறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை.

    அதேபோன்று பா.ஜனதா அரசின் எடுபிடியாக கைப்பாவையாக செயல்படும் அ.தி.மு.க. அரசையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட பிரதமராக ராகுல்காந்தி விரைவில் வர உள்ளார். அதே நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும். அப்போது தமிழகத்தின் அனைத்து உரிமைகளும், நலன்களும் பாதுகாக்கப்படும்.

    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்படும். நான் என்றும் உங்களுடனே வாழ்ந்து உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #kanimozhi #pmmodi

    பா.ஜனதா- அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆறுமுகநேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி பேசியுள்ளார். #Kanimozhi #bjp #admk

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் கனிமொழி எம்.பி. பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களிடையே தி.மு.க. கூட்டணிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மத்திய மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த நாட்டின் பாதுகாவலன் என்று மோடி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் அவரால் ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்த ஆவணங்களை கூட பாதுகாத்துக் கொள்ள இயல வில்லை.

    இவரது ஆட்சிக் காலத்தில் தான் நமது நாட்டின் 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை எதிர் நாட்டின் ராணுவத்தினரும் தீவிரவாதிகளும் கொன்றுள்ளனர். இது தான் மோடி பாதுகாவலனாக இருப்பதின் லட்சணம். இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவதால் அந்த நாடுகளுக்கு வேண்டுமானால் பாதுகாவலான இருக்கலாம்.

    மக்களை பிளவுபடுத்தி ஆட்சி நடத்தி வரும் மத்திய பா.ஜ.க ஆட்சியையும், அதன் பினாமியாக நடந்து வரும் தமிழகத்தின் அ.தி.மு.க ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வர அனைத்து தரப்பு மக்களும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாசரேத் கே.வி.கே சாமி சிலை, சந்தி பஜார் பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சி வந்தவுடன் நிச்சயமாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்காக பணியாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள். கருணாநிதி ஆட்சியின் போது விவசாய கடன் ரத்து செய்யப்பட்டது. இப்போது விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய கடன் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும்.

    10-வகுப்பு படித்துள்ள 1 கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் வேலை, 50 லட்சம் மக்களுக்கு மக்கள் நலபணியாளர் வேலை வழங்கப்படும். பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு ரூ. 50 ஆயிரம் வட்டியில்லாத கடன் வழங்கப்படும். தி.மு.க. சொன்னதை செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #bjp #admk

    10-ம் வகுப்பு படித்த 50 ஆயிரம் மகளிருக்கு மக்கள் நலப்பணியாளர் வேலைக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கனிமொழி பிரசார கூட்டத்தில் கூறியுள்ளார்.
    நெல்லை:

    நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தற்போது நடைபெறும் தேர்தல் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது போல் இது 2-வது சுதந்திர போராட்டம் ஆகும். இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டால், இந்தியாவில் தற்போது சந்திக்கும் தேர்தல் கடைசி தேர்தலாக அமைந்து விடும்.

    பாரதிய ஜனதா கட்சி தனது அதிகாரத்தை தொடர்ந்து தக்க வைக்க எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்லும். மொழி, மதம், இனம், சாதி என ஏதாவது ஒரு வழியில் நம்மிடம் பிரிவினையை உருவாக்கி, அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை தொடர முயற்சி செய்யும். பல்வேறு மொழி, கலாசாரம் கொண்ட நாம் சகோதர, சகோதரிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் வேளையில் இந்தியா முழுவதும் ஒரே மொழி, ஒரே மதம் என்று மாற்ற துடிக்கிறார்கள். இதற்கு வாய்ப்பு வழங்கினால் நமது மண்ணின் அடையாளத்தை துடைத்து எறிந்து விடுவார்கள். அந்த எச்சரிக்கை உணர்வோடு சிந்தித்து தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

    பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் 50 நாட்களில் கருப்பு பணம் ஒழியும் என்று மோடி கூறினார். ஆனால் 50 நாட்களில் வங்கி வாசலில் காத்திருந்த 122 பேர் செத்து மடிந்தனர். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. மக்கள் விரோத செயல்களை செய்து வரும் மத்திய பாரதிய ஜனதா அரசின் நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல், தங்களை பாதுகாக்க அ.தி.மு.க. அரசும், எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். பெண்ணின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் அவர்கள் பொள்ளாச்சியில் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக, குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.

    இவ்வாறு பெண்களுக்கு, விவசாயிகளுக்கு, மக்களுக்கு எதிராக மத்திய அரசும், மாநில அரசும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு, சுயநல ஆட்சிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அவர் பேசியதாவது:-

    மத்தியில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் வண்ணம் ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும். 10-ம் வகுப்பு படித்த 50 ஆயிரம் மகளிர் மக்கள் நலப்பணியாளராக பணி, மத்திய, மாநில அரசு அலுவலகத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவையெல்லாம் நிறைவேற்றிட 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi
    தமிழகத்தில் தீப்பெட்டி-பட்டாசு பிரச்சினைகளை களைய ராகுல் காந்தி புரிந்து செயல்படுவார் என்று கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் கனிமொழி பேசியுள்ளார். #kanimozhi #rahulgandhi #congress

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    இதற்கு முன்பு நடந்த தேர்தல்களை விட இந்த தேர்தல் மிக முக்கியமானது. இதுவரை நாம் சந்தித்த தேர்தல், அரசியல் கட்சிகளை எதிர்த்து நின்று தேர்தல் களத்தில் களமாடிய தேர்தல். ஆனால் இன்று இந்தியா என்ற அமைப்பை பாதுகாக்க நாம் போராடிக்கொண்டிருக்கிற தேர்தல். ஒவ்வொருவரின் கருத்து சுதந்திரத்துக்காக போராடி வேண்டிய தேர்தல்.

    இந்த நாட்டில் இந்தி மொழி மட்டும் தான் பேசப்பட வேண்டும், வேறு மொழிகள் அதன் அடையாளங்களை இழந்து விட வேண்டும், தமிழகத்தில் தமிழ் இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் தான் மத்தியில் இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவினர். நாடு முழுவதும் ஒரே வரி என கூறி ஜி.எஸ்.டி. கொண்டு வந்தனர். அதில் ஆயிரம் குழப்பங்கள்.

    இங்கே கோவில்பட்டியில் கடலைமிட்டாய் செய்யக்கூடியவர்கள் கூட கிட்டத்தட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியால் பாதிக்கப்பட்டு அந்த சின்ன தொழிற்சாலைகளை மூடிவிட்டு போகும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசு ஒரு வரியை மக்கள் மீது திணித்து எல்லா சிறிய தொழில்களும், வியாபாரங்களும் நசிந்து போகும் நிலையை கொண்டு வந்திருக்கிறது.

    பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்ற பயன்படாமல் இந்த ஆட்சி, குற்றவாளிகளை காப்பாற்ற துடித்து கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் அரசு துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டு கொல்கிறது. இப்படி மக்களுக்கு எதிராக உள்ள இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தமிழகத்தில் வாக்கு வாங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போதெல்லாம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரவில்லை. இப்போது தேர்தலுக்காக வருகிறார். இந்த தொகுதியில் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்தவர் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக காட்டுவேன் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கக்கூடிய நிலையை பார்க்கிறோம்.

    தீப்பெட்டி, பட்டாசு சந்தித்துக்கொண்டிருக்கிற பிரச்சினைகளை களைய, தி.மு.க.வும், பிரதமராக வரக்கூடிய ராகுல் காந்தி நிச்சயமாக தமிழ் மண்ணின் பிரச்சினையை புரிந்து கொண்டு செயல்படுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #rahulgandhi #congress

    தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாக தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Kanimozhi #ADMK
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை எம்.எல்.ஏ. புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கனிமொழி, ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்குகிறார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் அப்போது உடன் இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேர்தல் விதிகளை மீறி இதுபோன்று பணம் கொடுப்பது குற்றமாகும். எனவே விதிமீறலில் ஈடுபட்ட கனிமொழியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்.

    இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பரிந்துரைக்க வேண்டும்.

    இவ்வாறுஅந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Kanimozhi #ADMK
    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துகளும், திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகளும் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். #LokSabhaElections2019 #BJP #DMK
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி.யும், பா.ஜனதா வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தொகுதி தேர்தல் அலுவலரான கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தனர். வேட்பு மனுக்களில் தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி ஆகியோர் தங்களது சொத்து விவரங்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியலில் தனக்கு ரூ. 1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 50 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாகவும், தனது கணவர் சவுந்தரராஜன் பெயரில் ரூ. 2 கோடியே 11 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனக்கு வங்கியில் ரூ. 1 லட்சத்து 87 ஆயிரம் கடன் இருப்பதாகவும், தன் மீது குற்ற வழக்குகள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்த சொத்து பட்டியலில் தனக்கு, ரூ. 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ. 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.

    வங்கிகளில் ரூ. 1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 கடன் இருப்பதாகவும், தனது தாய் ராஜாத்தி பெயரில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பிலான சொத்து இருப்பதாகவும், தன் மீதான 6 குற்றவியல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் முடிந்துவிட்டதாகவும், 4 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #BJP #DMK

    நடிகை நயன்தாரா பற்றி அவதூறு கருத்து தெரிவித்த ராதாரவிக்கு கனிமொழி, நடிகை குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi
    நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதாரவி நயன்தாரா பற்றி தெரிவித்த கருத்துகள் சர்ச்சையானது.

    நடிகர், நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து ராதாரவி தி.மு.க. கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ராதாரவிக்கு அரசியல், திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    ராதாரவியின் பேச்சு குறித்து கனிமொழி எம்.பி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    ‘ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது தொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. செய்யும் பணியை வைத்து ஒரு பெண்ணை விமர்சிப்பதையும் மரியாதை குறைவாக நடத்துவதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. தனிமனித சுதந்திரம், உரிமை, தன்மானத்தை பாதிக்கும் எந்த வி‌ஷயத்துக்கும் தி.மு.க. துணை போகாது.’

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ராதாரவியின் பேச்சு குறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தங்கள் அகம்பாவத்தை ஊக்கப்படுத்திக்கொள்ள ஆண்கள் எளிதில் கையாளும் வழி, ஒரு பெண்ணை இழிவுபடுத்துவது அல்லது அவளது குணத்தைக் கொச்சைப்படுத்துவது. ஒரு பெண் எப்படி வாழ்கிறாள், என்ன செய்கிறாள் என்பதை பற்றியெல்லாம் யாரும் பேசக்கூடாது. நயன் அகத்திலும் புறத்திலும் அழகானவர். அவரை அவமானப்படுத்துபவரும், அதைக் கைதட்டி ரசித்தவர்களும் திரைத்துறைக்கே அவமானச் சின்னங்கள்.’

    இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

    ராதாரவியின் பேச்சு குறித்து நடிகை டாப்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இது வெறுப்பை ஏற்படுத்துகிறது. நடிப்பதற்கான தகுதிகளைப் பற்றி விவரிக்க இவர் யார்? இவர் என்ன நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் தலைவரா? இந்தத் துறையின் மிக வலிமையான நடிகையைப் பற்றி இவர் இப்படி பேசுவார் என்றால், மற்றவர்களைப் பற்றி இவர் எப்படி எல்லாம் பேசுவார்?.’

    சாந்தனு பாக்யராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ராதாரவி ஒரு பெண்ணை மேடையில் அவமானப்படுத்துவது இது முதல் முறையல்ல. இப்படி பல சம்பவங்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கின்றன. ஆனால், நயன்தாரா அற்புதமான பெண்மணி, ஏன் அதற்கும் அப்பாற்பட்டவர். அவரது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை வைத்தே அவரது வளர்ச்சியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் இங்கே கூச்சல் போடலாம். ஆனால், சரியானவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.’

    நடிகை லட்சுமி ராம கிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘இதைவிடப் பெரிய வி‌ஷயம் ஒன்று இருக்கிறது. ராதாரவியாவது அவரது மனதில் பட்டதைப் பேசிவிடுகிறார். ஆனால், இது போன்ற வி‌ஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. இவைதானே பொள்ளாச்சி போன்ற எல்லா இடத்திலும் வெளிப்படுகிறது. அவர் பேசினது தப்பான வி‌ஷயம்.

    ஆனால் அந்த தப்பான வி‌ஷயம் தானே நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு நாம் என்ன பண்ணப் போறோம். ஒரு பெண்ணாக நயன்தாரா சூப்பர் ஸ்டார் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார்?. சாதிக்க வேண்டும் என வரக்கூடியப் பெண்களும் அவரை வைத்து இப்படியொரு தவறான வழிகாட்டுதலையா நாம் செய்ய வேண்டும். சினிமாத்துறையில் எத்தனை பேர் பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.

    ராதாரவியைத் தடைப் பண்ணினால் மட்டும் பயன் இல்லை. அங்கே இருந்தப் பெண்களே கைதட்டி சிரிக்கிறார்களே அவங்களுக்கு எப்போது தடை போடப் போகிறீர்கள்?. அவர்கள் ரசித்து சிரிச்சிட்டுத்தானே இருக்கிறார்கள்.


    இந்த வி‌ஷயங்கள் மாறுவதற்குப் பெண்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் பெண்களை மதிக்கத்தகுந்தவர்களாக நடத்த கண்டிப்பாக பெண்கள் வெளிவர வேண்டும்.

    ஆண்கள் எப்படி காரணமாக இருக்கிறார்களோ அதே போல சில பெண்களும் இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறார்கள்.

    அதனால் முழுக்க முழுக்க ஆண்களையே குற்றம்சாட்ட வேண்டியதில்லை என நினைக்கிறேன். எதையும் சமாதானப்படுத்திக் கொள்ளாதீர்கள். பெண்களை கீழ்த்தரமாக காண்பிக்கும் எந்த வி‌ஷயங்களிலும் பங்கு பெறாதீர்கள். பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கும், இப்போது நடக்கும் வி‌ஷயத்துக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #RadhaRavi #Nayanthara #Khushboo #Kanimozhi

    தூத்துக்குடி மக்களவை தொகுதியில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தந்தை குமரி அனந்தன் ருசிகரமாக பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. அனைத்துக்கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக 2 பெண் வேட்பாளர்கள், அதிலும் பிரபலமான பெண் தலைவர்கள் மோதும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.



    காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளும், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழியும் எதிர் எதிர் முகாமில் இருந்து களம் காண்கின்றனர். தூத்துக்குடி தொகுதி மக்கள் யாருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க போகிறார்கள் என்பது மே 23-ந்தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் தான் தெரியவரும் என்றாலும், இப்போதே அவர்கள் இருவரையும் ஆதரித்து, இரு கட்சிகளின் சார்பிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது.

    இதற்கிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனிடம், ‘தூத்துக்குடி தொகுதியில் உங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்தும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உங்கள் மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்தும் பிரசாரம் செய்வீர்களா? என்றும், கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறீர்களா? என்று நிருபர்கள் எடக்குமடக்காக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இருப்பினும் யார்? யார்? வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’ என்று பிடிகொடுக்காமல் பதில் அளித்தார். #KumariAnandan #ThoothukudiConstituency
    அதிமுக, பாரதிய ஜனதாவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளதாக கனிமொழி எம்பி கூறியுள்ளார். #kanimozhi
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே வேம்பாரில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கலைஞர் கருணாநிதி எப்போதும் சொல்லுவார், எனது குடும்பத்தை ஒரு புகைப்படத்தில் அடக்க முடியாது. என் குடும்பம் என்பது எல்லா தமிழர்களையும் அடக்கியது. தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக இருந்தாலும் சரி, நமது கூட்டணி கட்சியின் வேட்பாளராக இருந்தாலும் சரி நாடும் நமதே 40-ம் நமதே என்ற உணர்வோடு தேர்தலில் பணியாற்ற வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சி மக்களை படாதபாடு படுத்திக்கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் கூலிப்படை போல் அ.தி.மு.க. செயல்படுகிறது. மோடியின் பெயரை சொன்னாலே மக்கள் மத்தியில் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்று நன்கு தெரிகிறது.

    விளாத்திகுளம் இடைத்தேர்தல் மிக முக்கியமான தேர்தலாகும். அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜனதாவிற்கு எதிராக மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.



    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விளாத்தி குளம்எட்டயபுரம் ரோட்டில் தேர்தல் அலுவலகத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். #kanimozhi
    தனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பாரதிய ஜனதாவுக்கு உரிமை கிடையாது என தமிழிசை கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். #Kanimozhi #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு உள்ளார். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பெரியார், அண்ணா பெற்றுத் தந்து இருக்கக்கூடிய உரிமை. இதில் கை வைக்கக்கூடிய அதிகாரம் பா.ஜனதாவுக்கு கிடையாது.



    இங்கே மேடையில் இருக்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து தலைவர்களும், தி.மு.க. என்ற மாபெரும் இயக்கமும் என்னுடன் உள்ளது. ஆகையால் என்னுடைய கருத்து சுதந்திரத்தை பற்றி நான் பேசவில்லை. மாணவி சோபியாவின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதே? அதைப்பற்றி கேட்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் எத்தனையோ பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #TamilisaiSoundararajan
    ×