search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனிமொழி"

    பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. உறுப்பினர் கனிமொழி மாநிலங்களவையில் இன்று வலியுறுத்தினார். #RajyaSabha #DMK #Kanimozhi #WomensQuotaBill
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மாநிலங்களவையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசியதாவது:

    கடந்த 9 ஆண்டுகளாக இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருப்பது நியாயமற்றது. பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்களின் முடிவுக்கு கட்டுப்பட்டே இருக்கும் நிலை நீடிக்கிறது.



    சட்டம் இயற்றப்படும் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திலும் கூட பெண்களுக்கும் சேர்த்து ஆண்களே முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர்.

    சபரிமலை உள்பட பல இடங்களில் பெண்கள் மோசமாக நடத்தப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தொடர்ந்து திமுக ஆதரவு தெரிவித்து வருகிறது. மத்திய அரசு இந்த சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். #RajyaSabha #DMK #Kanimozhi #WomensQuotaBill
    அரசியல்வாதிகள் குறைகூறி அரசு ஆஸ்பத்திரிகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக் கூடாது என டாக்டர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனைகள் செயல்படும் விதத்தை திமுக தலைவர் முகஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோர் விமர்சித்தனர்.

    இதை கண்டித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஏழை, எளிய மக்கள் தங்கள் உடல் உபாதைகளுக்காக செல்லும் ஒரே புகலிடம் அரசு மருத்துவமனைகள்தான். அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    நிகழ்ந்துவிட்ட ஒரு தவறுக்காக ஒட்டுமொத்தமாக அரசு ஆஸ்பத்திரிகளை அரசியல்வாதிகள் குறை சொல்லி மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைத்து விடகூடாது.

    அரசு ஆஸ்பத்திரிகளை குறை சொல்லும் அரசியல்வாதிகள் அரசு ஆஸ்பத்திரி வாசலைக் கூட மிதிப்பது கிடையாது என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். #kanimozhi #HIVBlood #PregnantWoman
    சென்னை:

    திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    எச்ஐவி குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னும், சுகாதாரத் துறை ஊழியர்களின் கவனக் குறைவால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், ஒரு மாதத்தில் குழந்தை பெற உள்ளார்.

    இந்த வைரஸ் அக்குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கும், அப்பெண்ணின் நலனை பாதுகாப்பதற்கும் அரசு உயரிய சிகிச்சை வழங்குவதோடு, உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். 

    சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தது போதுமானதல்ல.  உடனடியாக அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  #kanimozhi #HIVBlood  #PregnantWoman
    அ.தி.மு.க.வில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். #ADMK #SellurRaju
    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 76-வது வார்டான பழங்காநத்தத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம், ஆழ்துளை கிணறுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிரிகள் வலுவாக இருந்தால் தான் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வசதியாக இருக்கும். அந்த வகையில் கருணாநிதி வலுவான தலைவர் என்பதால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அவரை எதிர்த்து அரசியல் செய்தார்கள்.

    ஆனால் இன்றைக்கு உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலுவான தலைவராக எங்களுக்கு தெரியவில்லை. அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் அரசியலுக்கு வந்துவிட்டார். அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.


    ஆனால் தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளிலும், எம்.பி.யாகவும் உள்ள கனிமொழிக்கு முக்கியத்துவம் இல்லை. வாரிசு அரசியலை தி.மு.க தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

    பிரியாணி கடை, அழகு நிலையம் போன்ற இடங்களில் தி.மு.க.வினர் ரவுடித்தனத்தை காட்டி வருகின்றனர். இது போன்ற அராஜகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். மதுரை ஆவின் நிறுவனத்தில் வெளியான புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அ.தி.மு.க.வினர் புடம் போட்ட தங்கம் போன்றவர்கள். ஆனால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை நிச்சயம் உண்டு.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே யார் தவறு செய்தாலும் தயவு தாட்சண்யம் இருக்காது.

    மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் அண்மையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்தார்.

    கட்சி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் அனுமதியோடு இந்த கூட்டம் நடத்தப்பட்டதால் நானும் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன்.

    அதே நாளில் பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எய்ம்ஸ் தொடர்பாக வேறு ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். இதில் எங்களுக்குள் எந்த பூசலும் இல்லை. மற்ற வி‌ஷயங்களை வெளியே பேச முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அ.தி.மு.க. அரசு ஒரு போதும் அனுமதிக்காது.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #SellurRaju
    டெல்லியில் பாராளுமன்ற வாதி என்ற விருதை பெற்று திரும்பிய கனிமொழி எம்.பி.க்கு சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மகளிர் அணியினர் வரவேற்பளித்தனர். #DMK #Kanimozhi
    சென்னை:

    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் “பாராளுமன்ற வாதி” என்ற விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

    விருது பெற்ற அவர் இன்று சென்னை திரும்பினார். அதையொட்டி அவருக்கு தி.மு.க. மகளிர் அணி சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எனக்கு சிறந்த பெண் பாராளுமன்ற வாதி விருதை அளித்த "லோக் மக்" பத்திரிகைக்கும், பாராளுமன்ற உறுப்பினர் குழுவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நேரத்தில் கலைஞரை தான் நினைத்துக் கொள்கிறேன்.


    அவர் மட்டும் இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெருமைப்பட்டிருப்பார். இந்த நேரத்தில் தி.மு.க.வுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும், பாராளுமன்ற மூத்த உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    நான் இன்னும் அதிகமாக பணியாற்ற இந்த விருது உத்வேகம் அளித்துள்ளது. அனைவரையும் இணைத்து மத சார்பற்ற இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்றுக் கொள்கிறேன்.

    மேகதாது பிரச்சனை குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகிறோம். இப்பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

    நடுவர்மன்ற கருத்து கேட்காமல் அணைக்கட்ட முடிவு எடுத்தது சரியானது அல்ல. பாராளுமன்றத்தில் ரபேல் விமான ஊழல் குறித்தும் கேள்வி எழுப்பப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #DMK #Kanimozhi
    மன்மோகன் சிங்கை திமுக ஆதரோவடு தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களை எம்பி-யாக தேர்வு செய்வதற்கு சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார். #DMK #SoniaGandhi
    சென்னை:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பிரதமராக 10 ஆண்டுகள் பதவியில் இருந்தவர் மன்மோகன் சிங். கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் அவர் பிரதமராக இருந்துள்ளார்.

    தற்போது மன்மோகன்சிங் மாநிலங்களவை எம்பி-யாக உள்ளார். அசாம் மாநிலத்தில் இருந்து கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸ் சார்பில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங்கின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் 14-ந்தேதியுடன் முடிகிறது. அசாமில் 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவி அந்த மாதமே காலியாகிறது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 25 எம்எல்ஏ-க்களே உள்ளனர்.

    இதனால் மன்மோகன் சிங் மீண்டும் அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் இருந்து மன்மோகன் சிங்கை மாநிலங்களவை எம்பி-யாக தேர்வு செய்வதற்கு சோனியா காந்தி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 97 எம்எல்ஏக்- கள் உள்ளனர். திமுகவு-க்கு 88 பேரும், காங்கிரசுக்கு 8 பேரும் உள்ளனர். முஸ்லிம் லீக் சார்பில் ஒரு எம்எல்ஏ உள்ளார்.



    தற்போதைய சூழலில் 20 தொகுதிகள் காலியாக இருப்பதாலும், அதிமுக-வில் தினகரனை பலர் ஆதரிக்கும் நிலை உள்ளதாலும் திமுக-வுக்கு 3 எம்பி-க்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. எனவே இதனை பயன்படுத்தி மன்மோகன் சிங்கை மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்து விட வேண்டும் என்பதில் சோனியாகாந்தி தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி ஆகியோரிடம் சோனியா காந்தி பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அசாமில் இருந்தே மன்மோகன் சிங் எம்பி-யாக தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
    டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மாறும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். #Kanimozhi #DMK
    சென்னை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி சென்று சோனியா காந்தியை சந்திக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதுடன் 16-ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் கலைஞரின் சிலை திறப்பு பத்திரிகை வழங்கி அழைப்பு விடுக்கிறார்.

    அதன்பிறகு டெல்லியில் 10-ந்தேதி நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டம் பா.ஜனதா கட்சிக்கு எதிரான வலிமையான கூட்டணியாக மாறும்.



    பேரறிவாளன் உள்பட நீண்ட காலமாக சிறையில் உள்ள 7 பேர் விடுதலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினால் 7 பேரும் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான விவகாரத்தை தி.மு.க. எழுப்பி விவாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi
    மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார் என்று கனிமொழி எம்.பி. டுவிட்டரில் புகழாராம் சூட்டியுள்ளார். #Kanimozhi #Jayalalithaa
    சென்னை:

    கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Kanimozhi #Jayalalithaa
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. தான் இரட்டை வேடம் போடுகிறது என்று கனிமொழிக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார். #Kanimozhi #KadamburRaju #sterlite
    தூத்துக்குடி:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு ஆலை இயங்க வேண்டும் என்றால் அதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்க வேண்டும். ஆனால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நியாயத்தை உணர்ந்து, போராட்டம் தொடங்கிய 40 நாட்களிலேயே ஸ்டெர்லைட் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்காமல் ஆலையை மூடிவிட்டோம். அதன்பிறகு மக்களிடம் போராட்டத்தை கைவிட பல்வேறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அப்போது போராட்டம் அமைதியாகத்தான் இருந்தது. சில சமூக விரோத அமைப்புகள் மக்களை திசை திருப்பி தவறான வழியில் தூண்டிவிட்டு, மக்களுக்கு தவறான வழிகாட்டியதால் கடந்த மே மாதம் 22-ந் தேதி விரும்பத்தகாத சம்பவம் நடந்தது. அதன்பிறகு அமைக்கப்பட்ட ஆணையத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நாங்கள் தவறுதலாக வழிநடத்தப்பட்டு விட்டோம் என்று கருத்து தெரிவித்தார்கள்.

    அந்த சம்பவத்துக்கு பிறகு அரசின் அவசரகால நடவடிக்கையாக ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அங்கு தி.மு.க. ஆட்சியில் ஆலை விரிவாக்கத்துக்காக 245 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த ஆணையும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கனிமொழி எம்.பி, ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு இரட்டை வேடம் போடுகிறது என்கிறார்.

    இரட்டை வேடம் போடுவது தி.மு.க.தான். ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். அதன்பிறகு விரிவாக்கத்துக்கு நிலம் ஒதுக்கியதும் தி.மு.க. தான். ஆலை தொடங்கும் போது அதற்கு எதிர்ப்பாக அ.தி.மு.க. இருந்தது. ஆகையால் இரட்டை வேடம் போடுகிறவர்கள் யார்? என்பது மக்களுக்கு தெரியும்.

    மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க கருத்து சுதந்திரம் இருக்கிறது. அமைதியாக போராட்டம் நடக்கும் வரை அவர்களுக்கு அனைத்து அனுமதியும் வழங்கினோம். போராட வேண்டாம், மக்களின் உணர்வுகளை தெரிவிக்க வேண்டாம் என்று அரசு கூறவில்லை.

    அவர்களின் கோரிக்கையை ஏற்றதால்தான் ஆலை மூடப்பட்டது. அந்த வகையில் தற்போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது. மக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Kanimozhi #KadamburRaju #sterlite
    பட்டேல் சிலைக்கு 3000 கோடி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியா? என்று கனிமொழி டுவிட்டரில் கேள்வியெழுப்பியுள்ளார். #Kanimozhi #GajaCyclone
    சென்னை:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பிரச்சினை என்பது புதிய வி‌ஷயம் என்று சுப்பிரமணியசாமி சொல்லி இருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்.

    இங்கே இருக்கிற மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினையை உணர்ந்தவர்கள் பேசலாம். இவர் பேசுவதை பெரிய வி‌ஷயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

    மேகதாது பகுதியில் அணை கட்டும் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். மற்ற கட்சிகளின் ஆதரவையும் கோருவோம். மேகதாது பிரச்சினையை தி.மு.க. ஒரு முக்கியமான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். கஜா புயல் பாதிப்பு பற்றியும் குரல் எழுப்புவோம்.

    இந்நிலையில் உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம்! என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


    கஜா புயலால் ஏற்பட்ட மக்களின் பிரச்சினையை அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை. அங்கிருக்கும் மக்கள் உணவு சமைக்கக் கூட முடியாத சூழல்கள் இருக்கின்றன. மின்சாரம், குடிநீர் இன்னும் கிடைக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்திருக்கிறது. இதெல்லாம் எத்தனை நாளில் சரியாகும் என்று அரசால் சொல்ல முடியவில்லை. இதை மத்திய அரசோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #Kanimozhi #GajaCyclone
    தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது என்றும் இப்பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும் கனிமொழி தெரிவித்தார். #DMK #Kanimozhi #GajaCyclone
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று நெல்லை வந்தார். தாழையூத்து தனியார் விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2008-ம் ஆண்டில் தி.மு.க. தலைவர் கலைஞர் கொண்டுவந்த அரசாணையின் படி இரண்டு வருடம் பணிபுரிந்த மாற்றுத்திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். ஆனால் இப்போதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காதது குறித்து முதலில் அமைச்சர் சரோஜா பேச வேண்டும்.


    கஜா புயல் பாதிப்புகள் குறித்து முழு அளவில் தமிழக அரசு ஆய்வு செய்யவில்லை. தமிழக அரசிற்கே பாதிப்புகளுக்கான முழு அளவீடுகள் தெரியவில்லை. உண்மை நிலையை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை. எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் பதவிகளை காப்பாற்றி கொள்ளும் நிலையிலேயே தமிழக அரசு செயல்படுகிறது.

    சிலை அமைப்பதற்கு 3000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது. இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘கேரள கழிவுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளின் கழிவுகளும் இந்தியாவில் வந்துதான் கொட்டப்படுகின்றன’ என்றார். #DMK #Kanimozhi #GajaCyclone
    “மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும்” என சென்னையில் நடந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி. பேசினார். #DMK #Kanimozhi
    சென்னை:

    டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் சென்னையில் ‘மாற்றுத்திறனாளிகள் அரசியல் மாநாடு’ நடந்தது. இதில் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருணையோடு நிறைவேற்றித்தர வேண்டிய அவசியமில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. மாற்றுத்திறனாளிகளுக்காக பல நல்ல திட்டங்களை தி.மு.க. நிறைவேற்றி தந்திருக்கிறது.

    ஆனால் என்று எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் என்ன பிரச்சனை? என்று கேட்கக்கூட நாதியில்லாத ஒரு சூழலில் தமிழக மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

    மாற்றுத் திறனாளிகள் கடவுளின் குழந்தைகள் என்கிறார்கள். ஆனால் காலில் ‘காலிபர்’ சாதனம் போட்டிருக்கும் காரணத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு பல கோவில்களில் அனுமதி இல்லை. கடவுளின் குழந்தைகளுக்கு கடவுளை காணக்கூட உரிமை இல்லையா? பெண்களை தெய்வங்கள் என்று போற்றும் அளவுக்கு மதிப்பு தருவதில்லை. கடவுளின் குழந்தை என்றெல்லாம் அழைக்க வேண்டாம். மனிதர்களாக மதித்தால் போதும்.

    இதற்கு மாற்றுத்திறனாளிகளை மதிக்கும் அரசு மலர வேண்டும். உங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க தி.மு.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #DMK #Kanimozhi
    ×