search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை"

    கோவை அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை இருகூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 31). இவருக்கும் லிஷி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் ராஜேஷ் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் 3 வயது பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சரவணம்பட்டடி:

    கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் முருகன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தினசரி நடைபயிற்சி செல்வது வழக்கம். அதே போல இன்று சிலர் மலைப்பாதையில் நடை பயிற்சி சென்றனர். அப்போது முள்புதர்களுக்கு இடையே 3 வயது மதிக்க தக்க பெண் குழந்தை கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினரிடம் குழந்தை யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது நேற்று மாலை இந்த குழந்தையுடன் ஒரு ஆண் அந்த பகுதியில் சுற்றித்திரிந்ததாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் பெண் ஒருவர் தனது குழந்தையை காணவில்லை என அந்த பகுதிக்கு தேடி வந்தார். இதனை பார்த்த போலீசார் பெண்குழந்தை இறந்து கிடக்கும் பகுதிக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றனர். பின்னர் இறந்து கிடப்பது உங்கள் குழந்தையா? என அடையாளம் காட்டும்படி கூறினர். அப்போது அந்த பெண் இறந்து கிடப்பது தனது குழந்தைதான் என கூறி குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்த தமிழ் என்பவரது மனைவி ரூபி என்பதும், இறந்து கிடந்தது இவர்களின் குழந்தை தேவிஸ்ரீ (வயது 3 ) என்பது தெரிய வந்தது.

    தொடந்து போலீசார் குழந்தையின் தாய் ரூபியிடம் குழந்தை இங்கு எப்படி வந்தது? குழந்தை எப்போது காணாமல் போனது. குழந்தையை இங்கு யார் அழைத்து வந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை இருகூரில் பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிங்காநல்லூர்:

    கோவை இருகூர் கண்ணப்பன் நகரில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது.

    இந்த குடோனை பீளமேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் வாடகைக்கு எடுத்துகழிவு பஞ்சு தரம் பிரிக்கும் தொழில் செய்து வருகிறார். இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். கோடை விடுமுறை என்பதால் 10-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு சென்றனர்.

    இன்று காலை 8 மணியளவில் பஞ்சு குடோனில் இருந்து கரும் புகை கிளம்பியது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அங்கிருந்த 30 தொழிலாளர்கள் வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் மேற்பார்வையில் சூலூர் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துக்குமாரசாமி தலைமையிலான 20 தீயணைப்பு வீரர்கள் பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சென்றனர்.

    அங்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது தவிர தனியார் நிறுவனங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இருந்தாலும் பஞ்சு குடோன் முற்றிலும் எரிந்து சாம்பலானது. சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ முற்றிலும் அணைக்க வீரர்கள் போராடினர். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    முன்னதாக தீ பிடித்ததால் 30 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.கம்பெனி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் தீ பற்றியதால் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தீ விபத்துக்கான காரணம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை அருகே வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை புதூர் அருகே உள்ள பச்சாப்பள்ளியை சேர்ந்தவர் லியோ (40). துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி மற்றும் குழந்தைகள் இங்கு வசித்து வருகிறார்கள். அவர்கள் விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இது குறித்து லியோவின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வந்த பின்னர் தான் வீட்டில் இருந்த நகை, பணம் எவ்வளவு கொள்ளை போய் இருக்கிறது என்பது தெரிய வரும்.

    கோவை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாயவேல். இவரது மகன் விஜயகுமார் (வயது23). இவர் கே.ஜி. சாவடியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை- பாலக்காடு ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    கோவையில் பட்டப்பகலில் நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #jewelryrobbery

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சந்திப்பு அருகே வணிக வளாகத்தின் முதல் மாடியில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இங்கு போத்தனூரை சேர்ந்த ரேணுகா(28), செல்வபுரத்தை சேர்ந்த திவ்யா(23) ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    நேற்று மாலை 4 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் முகமூடி அணிந்து கொண்டு உள்ளே வந்தார். இதைப் பார்த்த பெண் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீங்கள் யார்? எதற்காக வந்தீர்கள்? என்று விசாரித்தனர்.

    அதற்கு பதிலளிக்காத வாலிபர் திடீரென்று ரேணுகா, திவ்யா ஆகியோரை சரமாரியாக அடித்து தாக்கினார். இதில் இருவரும் மயங்கி கீழே விழுந்தனர். உடனே அந்த வாலிபர் நிறுவனத்துக்குள் இருந்த லாக்கர்களை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்தார்.

    நிறுவன மேஜைகளில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

    வெகுநேரம் கழித்து ரேணுகா, திவ்யா ஆகியோருக்கு மயக்கம் தெளிந்தது. அவர்கள் கண் விழித்து பார்த்த போது நிறுவனத்தின் லாக்கர்களை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் விரைந்து சென்றனர்.

    மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. நிதிநிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முகத்தை கைக்குட்டையால் மறைத்தபடி ஒரு வாலிபர் உள்ளே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதேபோல வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் உள்ள கடைகளின் முன்புறமும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதிலும் கொள்ளையடித்த வாலிபர் உள்ளே செல்லும் காட்சிகள் தெளிவாக தெரிந்தது.

    நிதிநிறுவன அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் விவரங்களை சேகரித்தனர். லாக்கர்களில் இருந்து மொத்தம் ரூ.2 கோடி மதிப்புடைய 812 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    தனி ஆளாக ஒரே ஒரு வாலிபர் துணிச்சலாக இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் அதிகாரிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரின் பின்னணியில் பெரிய கும்பல் இருக்கலாம் அல்லது நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் துணையாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. #jewelryrobbery

    கோவை அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை பேரூர் அருகே உள்ள காலாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சில மர்மநபர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பச்சாபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 31), தீத்திபாளையத்தை சேர்ந்த சுஜித்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1ž கிலோ கஞ்சா, ரூ. 1,200 பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ. 50 லட்சம் காரில் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருத்தலா போலீஸ் அதிகாரி சித்த ரஞ்சன் தலைமையில் போலீசார் நேற்று மாலை அங்குள்ள பஸ் நிலையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.50 லட்சத்து 87 ஆயிரம் பணம் இருந்தது. அவை புத்தம் புதிய ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டு கட்டுகளாக இருந்தது.

    அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனை தொடர்ந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.காரில் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அவர்கள் மலப்புரம் மாவட்டம் பொன்னானி அருகே உள்ள சந்தைக்குடியை சேர்ந்த சஞ்சையன் (30), மலப்புரம் சதிஷ் (31) என்பது தெரிய வந்தது.

    கோவையில் இருந்து மலப்புரத்திற்கு பணத்தை கடத்தி சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஏகாம்பர குப்பத்தை சேர்ந்தவர் யேகநாதன். இவரது மகன் சீனிவாசன் (வயது 27). இவர் சென்னை வீராபுரம் 3-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சீனிவாசன் கடந்த 5 நாட்களுக்கு முன்பு தேர்தல் பணிக்காக கோவைக்கு வந்தார்.

    சம்பவத்தன்று இவர் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்க்கும் குப்புராஜ் (37) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தார்.

    மோட்டார் சைக்கிளில் உக்கடம் பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது வலது பக்கமாக திரும்பினார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ்காரர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீஸ்காரர்கள் உள்பட 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் போலீஸ்காரர் சீனிவாசன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் போலீஸ்காரர் சீனிவாசனின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக 50 போலீஸ்காரர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர்.

    துணை கமி‌ஷனர் பெருமாள் போலீஸ்காரர் சீனிவாசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

    கடந்த பாராளுமன்ற தேர்தலை விட கோவை, பொள்ளாச்சி, திருப்பூரில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே பதிவாகி இருந்தது. #LokSabhaElections2019
    கோவை:

    கோவை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

    மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்து 70 வாக்குச்சாவடி மையங்களில் காலையிலேயே திரண்ட வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மதியம் சுட்டெரித்த வெயிலில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாகவே இருந்தது.

    மாலை 3 மணிக்கு பிறகு மீண்டும் வாக்குச்சாவடிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை 6 மணிக்கு வரிசையில் காத்து நின்ற வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, ஓட்டுப் போட்டனர்.

    மொத்தம் 19 லட்சத்து 58 ஆயிரத்து 577 வாக்காளர்கள் கொண்ட கோவை பாராளுமன்ற தொகுதியில் பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இதில் இறுதி நிலவரப்படி பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 66.69 சதவீதமும், சூலூரில் 72.43 சதவீதமும், கவுண்டம்பாளையத்தில் 64.60-ம், கோவை வடக்கில் 58.91, கோவை தெற்கில் 60.28, சிங்காநல்லூரில் 60.11 சதவீதம் என சராசரி யாக 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    15 லட்சத்து 20 ஆயிரத்து 278 வாக்காளர்கள் கொண்ட பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

    இதில் இறுதி நிலவரப்படி தொண்டாமுத்தூரில் 66.39, கிணத்துக்கடவு தொகுதியில் 69.36, பொள்ளாச்சியில் 75.79, வால்பாறையில் 71.27, உடுமலையில் 71.61, மடத்துக்குளத்தில் 72.36 என சராசரியாக 70.78 சதவீதம் வாக்குகள் பதிவானது.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத் தம் 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதியில் இறுதி நிலவரப்படி பெருந்துறையில் 81.66 சதவீதமும், பவானியில் 79.81, அந்தியூரில் 77.86, கோபியில் 80.67, திருப்பூர் வடக்கில் 62.67, திருப்பூர் தெற்கில் 62.08 என மொத்தம் 72.94 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 65 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பவானிசாகரில் 79.1, உதகையில் 66.9, கூடலூரில் 73.1, குன்னூரில் 71.7, மேட்டுப்பாளையத்தில் 74.3, அவினாசியில் 74.9 சதவீதம் என மொத்தம் 73.7 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் 68 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தேர்தலில் 4 சதவீதம் குறைந்து 64 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளது.

    பொள்ளாச்சி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இம்முறை 2.2 சதவீதம் குறைந்து 70.78 சதவீதம் மட்டுமே பதிவாகி உள்ளது. திருப்பூர் தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் 76.27 சதவீதம் பதிவாகி இருந்த நிலையில் இம்முறை 3.33 சதவீதம் குறைந்துள்ளது. #LokSabhaElections2019
    கோவை அருகே டெம்போ டிரைவரை மிரட்டி ரூ.6½ லட்சம் மதிப்புள்ள பான்மசாலா பண்டல்களை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    ராஜஸ்தானை சேர்ந்தவர் தேஜஸ்குமார் (வயது 22). இவர் கோவை ஆர்.ஜி.தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார்.

    நேற்று நிறுவனத்தில் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்புடைய பான் மசாலா பண்டல்களை டெம்போவில் ஏற்றி செல்வபுரத்தில் ஒரு கடைக்கு எடுத்து சென்றார். கடைக்காரர் பான் மசாலா பண்டல்களை பேரூரில் உள்ள உறவினர் குடோனில் இறக்கி வைக்குமாறு கூறினார்.

    இதைத்தொடர்ந்து தேஜஸ் குமார் பான்மசாலா பண்டல்களை பேரூருக்கு எடுத்து சென்றார். போஸ்டல் காலனி அருகே சென்ற போது காரில் வந்த 6 பேர் கும்பல், டெம்போவை வழி மறித்து தேஜஸ்குமாரை மிரட்டினர். பின்னர் அவரை டெம் போவுடன் கடத்தி சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பான் மசாலா பண்டல்களை வேறு வாகனத்தில் ஏற்றிய கும்பல் தேஜஸ்குமாரை செட்டிப்பாளையம் பகுதியில் விட்டு விட்டு சென்றனர்.

    இதுகுறித்து தேஜஸ்குமார் பேரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை- சேலம் இடையே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 5½ பவுன் நகை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் காமராஜ்.

    இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு பழக்கடையில் கேஷியராக உள்ளார். இவரது மனைவி சிவகாமி (வயது 48).

    இவர் சேலத்தில் நடக்கும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார்.

    கோவை ரெயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரெயிலில் ஏறினார். கைப்பையில் நெக்லஸ். மோதிரம், தங்க நாணயம் என 5½ பவுன் மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 வைத்திருந்தார்.

    சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கி பேக்கை சோதனை செய்தபோது அதில் இருந்த கைப்பையை காணவில்லை. மர்ம நபர்கள் அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து சிவகாமி அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவை ரெயில் நிலைய போலீசில் புகார் செய்தார்.

    கோவை ரெயில் நிலைய போலீசார் இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    ×