என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்"
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகிலேயே சலூன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஜெயவேல் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஜெயவேல் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் நாச்சாத்தாள் (வயது 65) என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து 3 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து சத்திரப்பட்டியில் உள்ள இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த இந்த கொள்ளை குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சோனைமுத்து. இவர்களுக்கு சொந்தமான கார் 2016-ல் திருட்டு போனது.
இதுகுறித்து ஜெயலட்சுமி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். மேலும் போலீசார் வெளி ஆட்களான ஆறுமுகம் மற்றும் சிலரை வைத்தும் மிரட்டல் விடுத்தனர்.
மிரட்டல் விடுத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவரது தூண்டுதலின் பேரில் செயல்பட்ட ஆறுமுகம் உள்பட சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தது உண்மையாக இருந்தால் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி, சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் மற்றும் ஆறுமுகம் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
விருதுநகர்:
நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 47). இவர் மதுரை வந்து விட்டு அரசு பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டார்.
விருதுநகர்-சாத்தூர் சாலையில் உள்ள வச்சக்காரப்பட்டி அருகே பஸ் சென்றபோது ராமநாதனிடம் 2 பேர் ஜேப்படி செய்ய முயன்றனர். இதனை உணர்ந்த அவர், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராமநாதன் புகாரின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் இருந்து ரூ.1,370-ஐ பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது பெயர் மணிமாறன் (21) சுடலை (24) என்பதும், சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
மதுரை:
மதுரை அய்யர் பங்களா, அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர் பலசரக்கு சாமான்களை மொத்த கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்மா என்பவர் அருணாசலத்திடம் தனக்கு 2 ஆயிரத்து 310 கிலோ மிளகு வேண்டும் என கேட்டுள்ளார். அவரும் இங்கிருந்து மொத்தமாக மிளகை அனுப்பியுள்ளார்.
சரக்குகளை பெற்றுக் கொண்ட பின் சர்மா அதற்கான தொகை ரூ. 8 லட்சத்து 79 ஆயிரத்து 900 தர வேண்டியிருந்தது. ஆனால் பணத்தை தராமல் சர்மா காலம் கடத்தி வந்தார். மேலும் உரிய பதிலும் அளிக்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணாசலம், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகே வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 39). தனியார் மில் பஸ் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது மேல் மங்கலம் ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் வழி மறித்து தகராறு செய்தார். இதை அர்ஜூணன் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தார். மேலும் அர்ஜூணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகள் ஸ்ரீசாரா(வயது16). இவர் அப்பகுதி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீசாரா தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீசாராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து மாணவி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.
பெரம்பலூர்:
பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தலிடம் வக்கீல் அருள் என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
சமூக வலைதளங்களில் நண்பர்கள் போல் பழகி பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது போல் பெரம்பலூரிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இணைய தளங்கள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் தெரிய வருகிறது.
மேலும் இந்த தகவலில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், தன்னை நிருபர் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் ஆகியோர் குழுவாக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அவர்களால் பல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று இளம்பெண்களை தங்களின் காம இச்சைக்கு இணங்க வைப்பதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் அதனை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, மீண்டும் மீண்டும் பாலியல் இச்சைக்கு பணிய வைப்பது, தங்களிடம் அடி பணிய மறுக்கும் பெண்களின் வீடியோவை வெளியிடுவோம் என்றும், அதனை பார்க்கும் அவர்களது குடும்பத்தினர் அவமானத்தில் தற்கொலை செய்வார்கள் என பெண்களை மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.
தற்போது வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கும்பலிடம் சிக்கி வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதும் தெரிய வருகிறது. இந்த சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமலும், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல், ஏ.டி. எஸ்.பி. ரெங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #girlmolestation
புதுச்சேரி:
புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மரிஜான் (வயது 45). இவருக்கு ஜோஸ்பின் (39) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
புதுவையில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வந்த ராஜேஷ் மரிஜான் அதில் நஷ்டம் ஏற்படவே இண்டர்நெட் சென்டரை மூடி விட்டு சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
விடுமுறை நாட்களில் புதுவை வந்து மனைவி- மகன்களை பார்த்து விட்டு செல்வது வழக்கம். புதுவை வரும் போது ராஜேஷ் மரிஜான் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
அதுபோல் நேற்று வாக்களிக்க புதுவை வந்த ராஜேஷ் மரிஜான் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் வேதனை அடைந்த ராஜேஷ் மரிஜான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்