search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    ஒட்டன்சத்திரம் அருகே வீடுகள் மற்றும் இ-சேவை மையத்தில் நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 60). இவர் தனது வீட்டின் அருகிலேயே சலூன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஜெயவேல் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஜெயவேல் வீட்டுக்கு அருகே குடியிருக்கும் நாச்சாத்தாள் (வயது 65) என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து 3 பவுன் நகை, ரூ.35 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து சத்திரப்பட்டியில் உள்ள இ-சேவை மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். அடுத்தடுத்து 3 இடங்களில் நடந்த இந்த கொள்ளை குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சங்கரன்கோவில் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த லட்சுமியா புரத்தை சேர்ந்தவர் பெரிய முருகன் (வயது40), தொழிலாளி. இவர் நேற்று விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித் தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பெரிய முருகன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    புகார் கொடுக்க வந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சோனைமுத்து. இவர்களுக்கு சொந்தமான கார் 2016-ல் திருட்டு போனது.

    இதுகுறித்து ஜெயலட்சுமி ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். மேலும் போலீசார் வெளி ஆட்களான ஆறுமுகம் மற்றும் சிலரை வைத்தும் மிரட்டல் விடுத்தனர்.

    மிரட்டல் விடுத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவரது தூண்டுதலின் பேரில் செயல்பட்ட ஆறுமுகம் உள்பட சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெயலட்சுமி மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தது உண்மையாக இருந்தால் மதுரை மாநகர போலீஸ் கமி‌ஷனர், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையாளர் பாஸ்கரன் விசாரணை நடத்தி, சம்பவத்தன்று ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரமணி, சப்-இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார் மற்றும் ஆறுமுகம் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
    அரவக்குறிச்சியில் இன்று காலை வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி சீத்தபட்டி பழையகாலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவர் இன்று காலையில் அதே பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரத்தில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று மூர்த்தி உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன மூர்த்திக்கு மனைவியும் 1 மகன்,1 மகள் உள்ளனர். அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    விருதுநகர் அருகே அரசு அரசு பஸ்சில் ஜேப்படி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்:

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 47). இவர் மதுரை வந்து விட்டு அரசு பஸ்சில் நெல்லைக்கு புறப்பட்டார்.

    விருதுநகர்-சாத்தூர் சாலையில் உள்ள வச்சக்காரப்பட்டி அருகே பஸ் சென்றபோது ராமநாதனிடம் 2 பேர் ஜேப்படி செய்ய முயன்றனர். இதனை உணர்ந்த அவர், டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ராமநாதன் புகாரின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் இருந்து ரூ.1,370-ஐ பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது பெயர் மணிமாறன் (21) சுடலை (24) என்பதும், சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.

    மிளகு வியாபாரியிடம் ரூ. 9 லட்சம் மோசடி செய்ததாக வடமாநில வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை அய்யர் பங்களா, அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் அருணாசலம். இவர் பலசரக்கு சாமான்களை மொத்த கொள்முதல் செய்து வியாபாரம் செய்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரைச் சேர்ந்த சர்மா என்பவர் அருணாசலத்திடம் தனக்கு 2 ஆயிரத்து 310 கிலோ மிளகு வேண்டும் என கேட்டுள்ளார். அவரும் இங்கிருந்து மொத்தமாக மிளகை அனுப்பியுள்ளார்.

    சரக்குகளை பெற்றுக் கொண்ட பின் சர்மா அதற்கான தொகை ரூ. 8 லட்சத்து 79 ஆயிரத்து 900 தர வேண்டியிருந்தது. ஆனால் பணத்தை தராமல் சர்மா காலம் கடத்தி வந்தார். மேலும் உரிய பதிலும் அளிக்கவில்லை.

    தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அருணாசலம், தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே தனியார் மில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 39). தனியார் மில் பஸ் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது மேல் மங்கலம் ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் வழி மறித்து தகராறு செய்தார். இதை அர்ஜூணன் தட்டிக் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தார். மேலும் அர்ஜூணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    தஞ்சை அருகே தூக்கு மாட்டி மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த நடுக்காவேரி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகள் ஸ்ரீசாரா(வயது16). இவர் அப்பகுதி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீசாரா தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீசாராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் வழக்குப்பதிவு செய்து மாணவி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை செய்து வருகின்றனர்.

    பொள்ளாச்சி சம்பவம் போல் பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #girlmolestation

    பெரம்பலூர்:

    பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், பெரம்பலூரிலும் இளம்பெண்களை கொடுமைப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆளுங்கட்சி பிரமுகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. திஷா மித்தலிடம் வக்கீல் அருள் என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    சமூக வலைதளங்களில் நண்பர்கள் போல் பழகி பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது போல் பெரம்பலூரிலும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இணைய தளங்கள் மூலம் வந்த தகவலின் அடிப்படையில் தெரிய வருகிறது.

    மேலும் இந்த தகவலில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர், தன்னை நிருபர் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் ஆகியோர் குழுவாக இச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. அவர்களால் பல குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று இளம்பெண்களை தங்களின் காம இச்சைக்கு இணங்க வைப்பதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் அதனை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, மீண்டும் மீண்டும் பாலியல் இச்சைக்கு பணிய வைப்பது, தங்களிடம் அடி பணிய மறுக்கும் பெண்களின் வீடியோவை வெளியிடுவோம் என்றும், அதனை பார்க்கும் அவர்களது குடும்பத்தினர் அவமானத்தில் தற்கொலை செய்வார்கள் என பெண்களை மிரட்டி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    தற்போது வரை சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த கும்பலிடம் சிக்கி வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருவதும் தெரிய வருகிறது. இந்த சம்பவங்கள் பெரம்பலூரில் உள்ள நட்சத்திர விடுதியில் வைத்து நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமலும், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் மற்றும் கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெண்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட எஸ்.பி. தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. திஷாமித்தல், ஏ.டி. எஸ்.பி. ரெங்கராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படையினர் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #girlmolestation

    முக்கூடல் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குளம்:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது23). டிராக்டர் டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இசக்கிபாண்டி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. 

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இசக்கி பாண்டி விஷத்தை குடித்து விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இசக்கிபாண்டி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 
    எல்லைப்பிள்ளை சாவடியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குபோட்டு இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை எல்லைப் பிள்ளைச்சாவடி மணக்குள விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் மரிஜான் (வயது 45). இவருக்கு ஜோஸ்பின் (39) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    புதுவையில் இண்டர்நெட் சென்டர் நடத்தி வந்த ராஜேஷ் மரிஜான் அதில் நஷ்டம் ஏற்படவே இண்டர்நெட் சென்டரை மூடி விட்டு சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    விடுமுறை நாட்களில் புதுவை வந்து மனைவி- மகன்களை பார்த்து விட்டு செல்வது வழக்கம். புதுவை வரும் போது ராஜேஷ் மரிஜான் அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதுபோல் நேற்று வாக்களிக்க புதுவை வந்த ராஜேஷ் மரிஜான் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் வேதனை அடைந்த ராஜேஷ் மரிஜான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் மின் விசிறி கொக்கியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் நாகமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேந்தமங்கலம் அருகே வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சேந்தமங்கலம்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் பேளூக் குறிச்சி அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்த செங்கோட்டையன்- சிந்தாமணி தம்பதியின் மகள் செல்வி (வயது 17). இவர் பேளுக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் செல்விக்கும், அவரது உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக நாமக்கல் குழந்தைகள் நல அலுவலருக்கு கிடைத்த தகவலின்பேரில் அவர்கள் செல்வி மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வியை நாமக்கல் காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    இதன்பின்னர் செல்வி தனது உறவினர் வீடான தம்மநாயக்கனூருக்கு சென்று தங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் செல்வி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த பேளூக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×