search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    மல்லை சத்யா மாமனாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதால் இது குறித்து அவர் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் அளித்துள்ளார். #mallaisathya #mdmk

    சென்னை:

    ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் மாமனார் சிவசங்கரன் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    நீலாங்கரையில் எனக்கு சொந்தமான காலிமனையை திருவான்மியூர் பிரஷ்நேஷ், பாலவாக்கம் விஜயபாரதி ஆகியோருக்கு மூன்று வருட காலத்துக்கு கார் நிறுத்துவதற்காக வாடகைக்கு விட்டேன்.

    ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை மீறி வாகனம் கழுவும் இடமாக மாற்றி நிலத்தை மாசுபடுத்தினர். ஒப்பந்த காலம் முடிந்துவிட்ட நிலையில் இடத்தை காலி செய்யாமல் அத்துமீறி செயல் பட்டு வருகின்றனர். தகாத வார்த்தையால் திட்டியும், குண்டர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டியும் வருகிறார்கள்.

    எங்களை கொலை செய்யும் திட்டத்தோடு இருக்கும் பிரஷ்நேவ், விஜய பாரதி மற்றும் அவரது கூட்டாளிகள் மகேஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை மீட்டுத் தந்து எங்கள் குடும்பத்துக்கு தக்க பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது.  #mallaisathya #mdmk

    ஆண்டிப்பட்டி அருகே மாயமான பிளஸ்-2 மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே ராஜதானியை சேர்ந்தவர் சிங்கராஜ் மகள் மீனா (வயது16). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். காலை நேரத்தில் வெளியே சென்ற மீனா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் ராஜதானி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினையில் மீனா வீட்டை விட்டு வெளியேறினாரா? அல்லது யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    சின்னமனூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி குளத்துப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் பவித்ரா (வயது 15). காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் வனம் இது குறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அவர் அளித்த புகாரின் பேரில் அழகாபுரி காலனியைச் சேர்ந்த சிகாமணி மகன் விஜய் (22) என்பவர்தான் தனது மகளை கடத்திச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    ராதாபுரம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள மகேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனுவேல். இவரது மகள் சிவபிரியா (வயது26). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்தார். 

    கடந்த 13-ந்தேதி வேலைக்கு சென்ற சிவபிரியா, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து அவரது அண்ணன் சிவபாலன் ராதாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவ பிரியாவை தேடி வருகிறார்கள். 
    தேனி அருகே பிளஸ்-2 மாணவி உள்பட 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் ஹரிணிபிரியா (வயது 17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஹரிணி பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளனர். இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஹரிணி பிரியா தன்னை தேட வேண்டாம் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

    இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பூவரசு என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிணி பிரியாவை தேடி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் குள்ளப்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ரவி மகள் அபிதா (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். தாய் கண் விழித்த போது அபிதா மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஜெய மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கோட்டார் பட்டியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    பாகூர்:

    புதுவை வீராம்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேலு, மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது33). இவர்களுக்கு  3 மகன்கள். இதில் மூத்த மகன் லோகேஷ் (வயது15) மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதற்கிடையே  ஞானவேலுவுக்கும் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை  ஏற்பட்டு அடிக்கடி  தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று அதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சீதாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள  முடிவு செய்தார்.  தான் இறந்து விட்டால்  மனநிலை பாதிக்கப்பட்ட மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என கருதிய சீதாலட்சுமி  மகனை கொன்று விட்டு  தானும் தற்கொலை  செய்து கொள்ள  எண்ணினார். சம்பவத்தன்று உணவில் எலிமருந்தை (விஷம்)  கலந்து லோகேஷ்க்கு கொடுத்து விட்டு மீதி இருந்த எலி மருந்தை சீதாலட்சுமி குடித்து விட்டார்.

    இதில் மயங்கி கிடந்த மனைவி மற்றும் மகனை ஞானவேலு மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர அளித்தும் பலனின்றி தாய்-மகன்  இருவரும் நேற்று மாலை இறந்து போனார்கள். 

    இது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி  வருகிறார்.  இந்த சம்பவம்  வீராம்பட்டினம் பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    நெட்டப்பாக்கத்தில் கடைக்கு சென்ற பி.டெக் பட்டதாரி பெண் மாயமானார்.
    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அம்மா பேட்டை வீதியை சேர்ந்தவர் பழனி. கூலித்தொழிலாளி. இவரது மகள் பரமேஸ்வரி (வயது 24). பி.டெக் பட்டதாரி.

    நேற்று மாலை இவர் கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிச்சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 
    உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் பரமேஸ்வரி இல்லை. 

    இதையடுத்து பழனி தனது மகள் மாயமானது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பரமேஸ்வரியை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை அருகே பூச்சி மருந்து குடித்து கல் உடைக்கும் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே இருதுகோட்டை அடுத்துள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது30). இவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி முனிரத்தினம். இவர்களுக்கு சரண் என்ற 8 வயதில் மகனும், புனிதா என்ற 5 வயதில் மகளும் உள்ளனர்.

    நேற்று வீட்டில் முனிரத்தினம் தனது குழந்தையை அடித்ததாக தெரிகிறது. இதனை காத்தவராயன் தனது மனைவியை தட்டி கேட்டார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

    இதையடுத்து மனமுடைந்த காத்தவராயன் நேற்று மாலை மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து விட்டு ஐயூர் சாலையில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற காத்தவராயன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பவுன்ராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    மதுரையில் வீட்டின் கதவை உடைத்து 24 பவுன் மற்றும் ரூ.36 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    மதுரை:

    மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் சரகத்திற்குட்பட்ட விராட்டிபத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அழகுமீனா (வயது 41). இவர்களது மகள் அபிநயா கல்லூரி மாணவி. செல்வராஜ், கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். மகளுடன் வசித்து வந்த அழகுமீனா, கடலாடியில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். நேற்று காலை அபிநயா வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தாயார் அழகுமீனாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 24 பவுன் தங்க நகைகள், ரூ.36 ஆயிரம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில், அழகு மீனா புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரையில் கல்லூரி மாணவிகள் 3 பேர் மாய மானார்கள். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகள் ஜெனிபர் ஷிமா (வயது 21). அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த 9-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற ஜெனிபர் ஷிமா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் தாரணி (19). இவர் நத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

    கடந்த 8-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற தாரணி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி திருமால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ரேவதி (23), இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

    திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கருப்பையா திண்டுக்கல் சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரேவதியை காணவில்லை.

    இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேர்தல் தொடர்பான முறைகேடுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வசதியாக 94441 23456 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. #ParliamentElection #EC
    சென்னை:

    தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குதல், தடையை மீறி சுவர் விளம்பரங்கள் செய்தல், கட்டுப்பாடுகள் மற்றும் நேரம் கடந்து பிரசாரம் செய்தல், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் போன்ற தேர்தல் விதிமுறை மீறல்கள், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.

    எனவே தேர்தல் தொடர்பான முறைகேடுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வசதியாக 94441 23456 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செல்போன் எண்ணில் பொதுமக்கள் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.  #ParliamentElection #EC
    திருபுவனையில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    திருபுவனை:

    விழுப்புரம் அருகே வளவனூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது48) திருமணமாகாத இவர் கடந்த  6 மாதங்களாக திருபுவனையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.

     நேற்று ரஞ்சித்குமார் திருபுவனையில் தங்கி இருந்த வீட்டில் மர்மமான முறையில்  இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது தாய் வசந்தா கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் வழக்குபதிவு செய்து அதிக குடிபோதையில் ரஞ்சித்குமார் இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×