என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்"
சென்னை:
ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவின் மாமனார் சிவசங்கரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
நீலாங்கரையில் எனக்கு சொந்தமான காலிமனையை திருவான்மியூர் பிரஷ்நேஷ், பாலவாக்கம் விஜயபாரதி ஆகியோருக்கு மூன்று வருட காலத்துக்கு கார் நிறுத்துவதற்காக வாடகைக்கு விட்டேன்.
ஆனால் அவர்கள் ஒப்பந்தத்தை மீறி வாகனம் கழுவும் இடமாக மாற்றி நிலத்தை மாசுபடுத்தினர். ஒப்பந்த காலம் முடிந்துவிட்ட நிலையில் இடத்தை காலி செய்யாமல் அத்துமீறி செயல் பட்டு வருகின்றனர். தகாத வார்த்தையால் திட்டியும், குண்டர்கள் மூலம் தொடர்ந்து மிரட்டியும் வருகிறார்கள்.
எங்களை கொலை செய்யும் திட்டத்தோடு இருக்கும் பிரஷ்நேவ், விஜய பாரதி மற்றும் அவரது கூட்டாளிகள் மகேஷ் உள்ளிட்டோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை மீட்டுத் தந்து எங்கள் குடும்பத்துக்கு தக்க பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளது. #mallaisathya #mdmk
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி குளத்துப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் பவித்ரா (வயது 15). காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் வனம் இது குறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் அழகாபுரி காலனியைச் சேர்ந்த சிகாமணி மகன் விஜய் (22) என்பவர்தான் தனது மகளை கடத்திச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் ஹரிணிபிரியா (வயது 17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஹரிணி பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளனர். இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஹரிணி பிரியா தன்னை தேட வேண்டாம் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பூவரசு என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிணி பிரியாவை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் குள்ளப்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ரவி மகள் அபிதா (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். தாய் கண் விழித்த போது அபிதா மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஜெய மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கோட்டார் பட்டியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் காஜாமொய்தீன். இவரது மகள் ஜெனிபர் ஷிமா (வயது 21). அந்தப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த 9-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற ஜெனிபர் ஷிமா பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிலைமான் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார். அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் தாரணி (19). இவர் நத்தத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 8-ந் தேதி கல்லூரிக்குச் சென்ற தாரணி பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி திருமால்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ரேவதி (23), இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
திருமண அழைப்பிதழ் அச்சடிக்க கருப்பையா திண்டுக்கல் சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரேவதியை காணவில்லை.
இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குதல், தடையை மீறி சுவர் விளம்பரங்கள் செய்தல், கட்டுப்பாடுகள் மற்றும் நேரம் கடந்து பிரசாரம் செய்தல், அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துதல் போன்ற தேர்தல் விதிமுறை மீறல்கள், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம்.
எனவே தேர்தல் தொடர்பான முறைகேடுகளை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து பொதுமக்கள் ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்க வசதியாக 94441 23456 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த செல்போன் எண்ணில் பொதுமக்கள் தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். #ParliamentElection #EC
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்