என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புகார்"
பழனி:
பழனி பைபாஸ் ரோட்டில் இடும்பன் கோயில் எதிரே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கால் ஊனமுற்ற நபர் ஒருவரும் ஒரு பெண்ணும் வந்துள்ளனர்.
அங்கிருந்த பணியாளரிடம் கொடைக்கானலுக்கு காரில் சென்று விட்டு வரும்போது கார் ரிப்பேராகி விட்டதாகவும், அருகே உள்ள கார் மெக்கானிக்கிடம் வேலைக்கு விட்டுள்ளதாகவும் கூறி அவர்தான் இருசக்கர வாகனம் கொடுத்து உதவியதாகவும் தங்க அறை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பணியாளர் அதை நம்பி அறையை காட்டியபோது தங்களுடன் மகன்களும் வந்துள்ளதால் இரு அறை வேண்டும் என கேட்டுள்ளனர். இரு அறைகளுக்கான சாவியை கொடுத்த போது அறைகள் திருப்தியாக இருப்பதாக கூறிய அவர்கள் கலைஅழகன், கீழேவேளூர், நாகை என்ற பெயரில் பதிவு செய்து விட்டு உணவு வாங்கி வருமாறு பணியாளரை கேட்டுள்ளனர்.
அவர் உணவு வாங்க வெளியே சென்ற அடுத்த நிமிடம் தம்பதிபோல வந்த இருவரும் மின்னல் வேகத்தில் இரு அறைகளிலும் இருந்த எல்சிடி., டிவிக்களை எடுத்துக்கொண்டு அறையை பூட்டி வந்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பினர். உணவு வாங்கி வந்த பணியாளர் மாலை வரை அவர்கள் வராததால் மறுநாள் காலை விடுதி உரிமையாளரிடம் தகவல் சொல்லி அறையின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்த போதுதான் இருவரும் டி.வி.யை திருடி சென்றது தெரியவந்தது.
விடுதியின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் இவை அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து விடுதி மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவரது 2-வது மகள் பிரித்தீகா (4). இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் (24) என்பவர் குழந்தையை கடத்தும் நோக்கத்தோடு தூக்கி சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து துரத்தி உள்ளனர். இதனால் பயந்த அங்குகுமார் குழந்தையை அங்குள்ள புதர் பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட குழந்தைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து குழந்தையின் தந்தை சிவக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அங்குகுமாரை தாக்கியதாக கோடியக்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் என்பவர் தன்னிடம் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது பிரிதீகா என்ற குழந்தை தூக்கி வைத்துக்கொண்டு விபரம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
ஆனால் அவர் குழந்தை கடத்த வந்துள்ளார் என கருதி கோடியக்கரையை சேர்ந்த ரெங்கசாமி, பரமானந்தம், சசிக்குமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்குகுமாரை தரகுறைவாக பேசி கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
தலையில் படுகாயம் அடைந்த அங்குகுமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாகவும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை போலீஸ் சரகம் ஸ்ரீரங்க வுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி(வயது32). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலைபார்த்து வந்தார். அவரது மனைவி தேவி. இவர்களுக்கு மகன் மணி, மகள் பிருந்தியா ஆகியோர் உள்ளனர்.
மில் வேலைக்கு செல்லும் அலெக்ஸ்பாண்டி தினந்தோறும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று மாலை வழக்கம்போல் வேலைக்கு அலெக்ஸ்பாண்டி சென்றார். இன்றுஅதிகாலை வீட்டுக்கு வரவேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டனர்.
ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடவூர் செல்லும் பிரிவில் அலெக்ஸ்பாண்டி பிணமாக கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் எட்டியது. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தேவி மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்தனர்.
பிணமாக கிடந்த அலெக்ஸ் பாண்டி உடலைபார்த்து கதறி துடித்தனர். இந்த தகவல் வடமதுரை போலீசாருக்கு எட்டியது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விரைந்தனர்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலெக்ஸ்பாண்டி உடலில் ரத்தகாயங்கள் இருந்தது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அவர் எப்படி இறந்தார்?. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை ராமநாதபுரம் பாரதி தாசன் நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் அகிலா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அகிலாவிடம் அவரது பெற்றோர் நன்றாக படிக்குமாறு அறிவுரை கூறினார்.
இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனவேதனை அடைந்த அகிலா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரமக்குடி:
பரமக்குடி பாரதி நகரில் பாலமுருகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து பலசரக்கு பொருட்கள் வாங்கிச் செல்வதுண்டு.
நேற்று வியாபாரம் முடிந்ததும் பாலமுருகன் கடையை பூட்டிச் சென்றார். இன்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறந்தார்.
அப்போது பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் யாரோ புகுந்திருப்பதை அறிந்த பாலமுருகன், நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து கடையை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது கூடையின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்வழியே யாரோ உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கடையின் கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் சி.சி.டி.வி. பதிவு கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க் கொள்ளை போயிருப்பதாக பாலமுருகன் போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 25). வடமாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவிஹோரா இவர்கள் இருவரும் சம்பவத்தன்று சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
காட்பாடி ஜோலார்பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது இருவரது செல்போன்களும் காணாமல் போயிருந்தது இது குறித்து இருவரும் ஜோலார்பேட்டை ரெயில் வே போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ரெயிவே போலீசார் நேற்று மாலை 3 பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாணியம்பாடியை சேர்ந்த ஹர்ஷன் அஹமது என்பது தெரியவந்தது. மேலும் ரெயிலில் ராஜேஷ்கண்ணா, ஸ்ரீவிஹோரா ஆகியோரது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்