search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    காரிமங்கலம் அருகே வீட்டில் மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொன்னம்பட்டி கலைஞர் நகர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கவி (16). இவர் சேலம் தனியார் டிப்ளமோ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் பயின்று வந்தார். இவரது சகோதரி மலர்வேணி மற்றும் மாலதி ஆகியோர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்ற காரணத்தினால், இவர்களது தாயார் சாந்தி சேலம் அம்மாபேட்டையில் தனியாக வாடகை வீடு எடுத்து அங்கேயே தற்காலிகமாக குடியிருந்து வருகின்றார். 

    இந்நிலையில் நேற்று (29-ந் தேதி) மாலை குடும்ப பிரச்சினை காரணமாக சங்கவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சாந்தி இறந்த சங்கவியை இரவோடு இரவாக காரிமங்கலத்தை அடுத்த சொன்னம்பட்டி கிராமத்திற்கு எடுத்து வந்து சொந்த வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது.

    காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சங்கவி பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழனி தனியார் விடுதியில் தம்பதி போல் அறை எடுத்து தங்கி எல்.சி.டி. டி.வி.க்களை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி:

    பழனி பைபாஸ் ரோட்டில் இடும்பன் கோயில் எதிரே தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கால் ஊனமுற்ற நபர் ஒருவரும் ஒரு பெண்ணும் வந்துள்ளனர்.

    அங்கிருந்த பணியாளரிடம் கொடைக்கானலுக்கு காரில் சென்று விட்டு வரும்போது கார் ரிப்பேராகி விட்டதாகவும், அருகே உள்ள கார் மெக்கானிக்கிடம் வேலைக்கு விட்டுள்ளதாகவும் கூறி அவர்தான் இருசக்கர வாகனம் கொடுத்து உதவியதாகவும் தங்க அறை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து பணியாளர் அதை நம்பி அறையை காட்டியபோது தங்களுடன் மகன்களும் வந்துள்ளதால் இரு அறை வேண்டும் என கேட்டுள்ளனர். இரு அறைகளுக்கான சாவியை கொடுத்த போது அறைகள் திருப்தியாக இருப்பதாக கூறிய அவர்கள் கலைஅழகன், கீழேவேளூர், நாகை என்ற பெயரில் பதிவு செய்து விட்டு உணவு வாங்கி வருமாறு பணியாளரை கேட்டுள்ளனர்.

    அவர் உணவு வாங்க வெளியே சென்ற அடுத்த நிமிடம் தம்பதிபோல வந்த இருவரும் மின்னல் வேகத்தில் இரு அறைகளிலும் இருந்த எல்சிடி., டிவிக்களை எடுத்துக்கொண்டு அறையை பூட்டி வந்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பினர். உணவு வாங்கி வந்த பணியாளர் மாலை வரை அவர்கள் வராததால் மறுநாள் காலை விடுதி உரிமையாளரிடம் தகவல் சொல்லி அறையின் பூட்டை உடைத்து உள்ளே பார்த்த போதுதான் இருவரும் டி.வி.யை திருடி சென்றது தெரியவந்தது. 

    விடுதியின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் இவை அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனையடுத்து விடுதி மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே குழந்தையை கடத்த முயன்றதாக வாலிபரை தாக்கியதாக 4 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவரது 2-வது மகள் பிரித்தீகா (4). இவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது கோடியக்கரையில் தங்கி மீன்பிடிக்கும் ராமநாபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் (24) என்பவர் குழந்தையை கடத்தும் நோக்கத்தோடு தூக்கி சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து துரத்தி உள்ளனர். இதனால் பயந்த அங்குகுமார் குழந்தையை அங்குள்ள புதர் பகுதியில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்ட குழந்தைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    இதுகுறித்து குழந்தையின் தந்தை சிவக்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அங்குகுமாரை தாக்கியதாக கோடியக்கரையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குத்துக்கால் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அங்குகுமார் என்பவர் தன்னிடம் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும், சம்பவத்தன்று அவர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தபோது பிரிதீகா என்ற குழந்தை தூக்கி வைத்துக்கொண்டு விபரம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

    ஆனால் அவர் குழந்தை கடத்த வந்துள்ளார் என கருதி கோடியக்கரையை சேர்ந்த ரெங்கசாமி, பரமானந்தம், சசிக்குமார், மகேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து அங்குகுமாரை தரகுறைவாக பேசி கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

    தலையில் படுகாயம் அடைந்த அங்குகுமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாகவும் வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    திண்டுக்கல் அருகே கடவூர் செல்லும் பிரிவில் மில் தொழிலாளி பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை போலீஸ் சரகம் ஸ்ரீரங்க வுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டி(வயது32). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலைபார்த்து வந்தார். அவரது மனைவி தேவி. இவர்களுக்கு மகன் மணி, மகள் பிருந்தியா ஆகியோர் உள்ளனர்.

    மில் வேலைக்கு செல்லும் அலெக்ஸ்பாண்டி தினந்தோறும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று மாலை வழக்கம்போல் வேலைக்கு அலெக்ஸ்பாண்டி சென்றார். இன்றுஅதிகாலை வீட்டுக்கு வரவேண்டும். ஆனால் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    ஆனால் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் கடவூர் செல்லும் பிரிவில் அலெக்ஸ்பாண்டி பிணமாக கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் எட்டியது. அதிர்ச்சியடைந்த அவரது மனைவி தேவி மற்றும் குடும்பத்தினர் அங்கு விரைந்தனர்.

    பிணமாக கிடந்த அலெக்ஸ் பாண்டி உடலைபார்த்து கதறி துடித்தனர். இந்த தகவல் வடமதுரை போலீசாருக்கு எட்டியது. தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் விரைந்தனர்.

    உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அலெக்ஸ்பாண்டி உடலில் ரத்தகாயங்கள் இருந்தது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் அவர் எப்படி இறந்தார்?. அதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் பெற்றோர் படிக்கும் படி கூறியதால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் பாரதி தாசன் நகரை சேர்ந்தவர் திருமுகம். இவரது மகள் அகிலா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அகிலாவிடம் அவரது பெற்றோர் நன்றாக படிக்குமாறு அறிவுரை கூறினார்.

    இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் மனவேதனை அடைந்த அகிலா வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மளிகை கடையின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதர்கள் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

    பரமக்குடி:

    பரமக்குடி பாரதி நகரில் பாலமுருகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து பலசரக்கு பொருட்கள் வாங்கிச் செல்வதுண்டு.

    நேற்று வியாபாரம் முடிந்ததும் பாலமுருகன் கடையை பூட்டிச் சென்றார். இன்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறந்தார்.

    அப்போது பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் யாரோ புகுந்திருப்பதை அறிந்த பாலமுருகன், நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து கடையை பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது கூடையின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதன்வழியே யாரோ உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    கடையின் கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் சி.சி.டி.வி. பதிவு கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க் கொள்ளை போயிருப்பதாக பாலமுருகன் போலீசாரிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மரகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி (21). இவர் தளியைச்சேர்ந்த பார்வதி என்பவரை கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பதறிபோன கணவர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் பார்வதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் முரளிக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே அங்கு சென்று பார்வதியின் உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். குடும்ப தகராறு காரணமாக பார்வதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில் பார்வதி தூக்குபோட்டு இறந்ததால் ஓசூர் சப்-கலெக்டர் விமல்ராஜ் மற்றும்  அவரது கணவர் முரளி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
    ஆலங்குளம் அருகே கல்லூரியில் சான்றிதழ் வாங்க சென்ற தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அகரத்தை சேர்ந்தவர் உலகு. இவரது மகள் முத்துலட்சுமி (வயது23). இவர் கோவையில் தனியார் கண் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் கல்லூரியில் சான்றிதழ் வாங்க போவதாக கூறி சென்றார். 

    அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முத்துலட்சுமி எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஜோலார்பேட்டை ரெயிலில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 25). வடமாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவிஹோரா இவர்கள் இருவரும் சம்பவத்தன்று சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    காட்பாடி ஜோலார்பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது இருவரது செல்போன்களும் காணாமல் போயிருந்தது இது குறித்து இருவரும் ஜோலார்பேட்டை ரெயில் வே போலீசில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் ரெயிவே போலீசார் நேற்று மாலை 3 பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாணியம்பாடியை சேர்ந்த ஹர்‌ஷன் அஹமது என்பது தெரியவந்தது. மேலும் ரெயிலில் ராஜேஷ்கண்ணா, ஸ்ரீவிஹோரா ஆகியோரது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம் அருகே இன்று மூதாட்டியிடம் 7 பவுன் நகையை மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் பூச்சிக்காடு ஆர்.சி. கோவில்தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மனைவி தெரசம்மாள் (வயது 68). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தோட்டத்தில் இலை பறிப்பதற்காக இன்று காலை தெரசம்மாள் சென்றார். 

    அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டான். 

    இது குறித்து அவர் தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்து விட்டு தப்பி சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். 
    காயல்பட்டிணத்தில் 2 மீனவர்கள் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டிணம் சிங்கித்துறை வடக்குகாலனியை சேர்ந்தவர் சகாயதேவன். இவரது மகன் ஹாலன்ராய் (வயது 16). இவன் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தந்தையுடன் மீன் தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் மகன் ஆகாஷ் (18). மீனவர். 

    நண்பர்கள் இருவரும் சம்பவத்தன்று கடற்கரைக்கு சென்று வருவதாக கூறி சென்றனர். ஆனால் அவர்கள் திரும்பிவரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் நண்பர், உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை. 

    இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் எங்கு சென்றார்கள்? அவர்களை யாரும் கடத்தி சென்றார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த நெருப்பூர் அருகே உள்ள குறுகாவியனூரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுமதி (வயது 42). 

    இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து சுமதி குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×