search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். #TrumpPutinmeeting #Helsinkimeeting
    அஸ்டோரியா:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

    இதற்கிடையே, இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
    உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு எனது வாழ்த்துக்கள். மேலும், உலக கோப்பை கால்பந்து தொடரை சிறப்பாக நடத்திய ரஷியாவுக்கும், அதிபர் புதினுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #Helsinkimeeting 
    அடியலா சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோரை அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர். #NawazSharif #Maryam
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் லண்டனில் ‘அவென்பீல்டு’ சொகுசு வீடுகள் வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரும், அவரது மகள் மரியமும், மருமகன் கேப்டன் சப்தாரும் தண்டிக்கப்பட்டனர்.

    ராவல்பிண்டி அடியலா சிறையில் கேப்டன் சப்தார் ஏற்கனவே அடைக்கப்பட்ட நிலையில், நவாஸ் ஷெரீப்பும், அவரது மகள் மரியமும் 13-ந் தேதி இரவு லண்டனில் இருந்து திரும்பிய நிலையில், அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறையில் ‘பி’ வகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் தம்பி ஷாபாஸ் ஷெரீப், அவரது தாயார், மரியம் மகள் மெஹருன்னிஷா, ஷாபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு தனி விமானத்தில் வந்தனர். அங்கிருந்து நேராக ராவல்பிண்டி அடியலா சிறைக்கு வந்தனர்.

    அங்கு சிறை சூப்பிரண்டு அறையில் வைத்து நவாஸ் ஷெரீப், மரியம், கேப்டன் சப்தார் ஆகியோரை அவர்கள் சந்தித்து பேசினர். அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெற்று இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    முன்னதாக லாகூரில் நிருபர்களிடம் ஷாபாஸ் ஷெரீப் பேசுகையில், “‘அவென்பீல்டு வழக்கில் ஐகோர்ட்டில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.  #NawazSharif #Maryam #tamilnews 
    பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் இரவு உணவை முடித்து கவர்னரை சென்று சந்தித்தனர். #BJP #AmitShah #NitishKumar
    பாட்னா:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பீகாரில் பாஜக கூட்டணி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கூட்டணியில் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இணைந்துள்ளது.

    இதற்கிடையே, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறார்.
      
    அதன் ஒரு பகுதியாக, பாஜக தலைவர் அமித் ஷா இன்று பீகார் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறுகையில், பீகாரில் எங்கள் கூட்டணி ஆட்சி தொடரும் என தெரிவித்தார். 

    இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் நிதிஷ்குமார். அதன்பின்னர், இருவரும் இரவு உணவை முடித்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் ராஜ்பவனுக்கு சென்று கவர்னரை சென்று சந்தித்தனர்.

    தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் இணைந்த பிறகு அமித்ஷா பாட்னா வருவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah #NitishKumar
    சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று காலை நடிகர் ரஜினியுடன் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். #Rajinikanth #TamilaruviManian
    சென்னை:

    அரசியல் பிரவேசம் செய்துள்ள ரஜினிகாந்த் புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மேற்கு வங்காளத்தில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி ரஜினிகாந்த் அதிரடி அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிட உள்ளார்.

    புதிய கட்சியின் பெயரையும் ரஜினிகாந்த் அறிவிக்கிறார். இது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள இல்லத்தில் ரஜினி காந்தை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் ரஜினியுடன் அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார்.


    ‘ஒரு மாதம் கழித்து ரஜினி சென்னை வந்துள்ளதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன்.

    விரைவில் மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார். எந்தவித சோர்வும் இல்லாமல் அவர் உற்சாகமாக இருக்கிறார்’.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #Rajinikanth #TamilaruviManian
    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பூடான் பிரதமரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சந்தித்து பேசினார். #RahulGandhi
    புதுடெல்லி:

    பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 5 ஆம் தேதி இந்தியா வருகை தந்தார். இந்தியா வருகை தந்த டோப்கேவை, வெளியுறவுத்துறை இணை மந்திரி விகே சிங் வரவேற்றார். அதன்பின்னர் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து டோப்கே ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பூடான் பிரதமர் டோப்கேவை சந்தித்து பேசியுள்ளார்.


    இந்த சந்திப்பு குறித்த தகவலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, “பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கேவை சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையேயான உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் ராகுல் வெளியிட்டுள்ளார். #RahulGandhi #RahulMeetsBhutanPM
    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். #TrumpPutinMeet #JonHuntsman
    வாஷிங்டன்:

    உலகின் வல்லரசு நாடுகளாக திகழ்வது அமெரிக்கா மற்றும் ரஷ்யா. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இரு நாட்டு அதிபர்கள் இடையிலான முதல் சந்திப்பு ஜூலை 16-ல் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் நடக்க உள்ளது என வெள்ளை மாளிகை கடந்த மாதம் அறிவித்தது.

    அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜான் பால்டன், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், இந்த சந்திப்பின்போது தேசிய பாதுகாப்பு, சிரியா, உக்ரைன் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு உலகளவில் நிலவி வரும் பதட்டத்தை தணிக்க உதவும் என ரஷியாவுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹெல்சின்கியில் நடக்கவுள்ள டிரம்ப்-புடின் சந்திப்பு இரு நாடுகளுக்கு இடையிலான பதட்டத்தை குறைக்கும். அத்துடன், உலகளவிலும் நிலவி வரும் பெரும் பதட்டத்தை தணிக்க உதவும் என தெரிவித்துள்ளார். 
    #TrumpPutinMeet #JonHuntsman
    நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    சென்னை:

    நேபாளத்தில் தவித்தபோது மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக தமிழகம் திரும்பிய பக்தர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இமயமலையில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில், நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். கடந்த மாதம், தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை சென்றவர்கள் மோசமான பருவநிலை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிப்பதாக தகவல் அறிந்து, அவர்களை பாதுகாப்புடன் மீட்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    அதன்படி, தமிழக அரசு அதிகாரிகள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் அமைந்துள்ள இந்திய தூதரகத்திடம் தொடர்பு கொண்டு, சிமிகோட் பகுதியில் சிக்கி தவித்த 18 பக்தர்களை அங்கிருந்து நேபாள்கஞ்ச் என்ற இடத்துக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் அதிகாரிகள் நேபாள்கஞ்ச் சென்று, இந்திய தூதரகம் மற்றும் நேபாள அரசின் ஒத்துழைப்போடு, பக்தர்களை பாதுகாப்பாக தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.

    தமிழக அரசின் உதவியால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பக்தர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், எல்.ஹரிஹரன், சி.என்.ரவி, டி.வி.சாந்தமூர்த்தி, கே.எஸ்.விஜயலட்சுமி, பி.அன்னபூர்ணா, ஜி.ஆனந்தம், வி.கோபாலகிருஷ்ணன், பி.பிரேமலதா, டி.எம்.சுப்பிரமணியம், ஏ.எஸ். லட்சுமி, ஆர்.சுப்பிரமணி, எஸ்.மீனாட்சி, என்.சக்திவேல் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை இன்று (நேற்று) தலைமைச்செயலகத்தில் சந்தித்து, தங்களை பாதுகாப்பாக மீட்டு, சொந்த ஊர் திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததற்காக நன்றி தெரிவித்தனர்.

    இந்த நிகழ்வின்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பேரிடர் மேலாண்மைத் துறை கமிஷனர் ராஜேந்திர ரத்னூ, சென்னை மாவட்ட கலெக்டர் வி.அன்புச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AnilBaijal #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் துணை நிலை கவர்னருக்கு சுதந்திரமாக முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. மந்திரி சபையின் அறிவுரையின் பேரில்தான் அவர் செயல்பட முடியும் என்று சுப்ரீம்  கோர்ட் சமீபத்தில் அதிரடியாக தீர்ப்பளித்தது.

    நிலம், சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட 3 துறைகள் தவிர மற்ற அனைத்தின் மீதும் சட்டம் இயற்றி ஆட்சி செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கே இருப்பதாக தெரிவித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் டெல்லியில் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

    இதற்கிடையே, புதுடெல்லியில் ஆட்சி சுமுகமாக நடைபெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலை சந்தித்துப் பேச முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கோரி கடிதம் எழுதியுள்ளார்.  

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக, டெல்லி கவர்னர் அனில் பைஜாலை நாளை மதியம் 3 மணிக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #AnilBaijal #ArvindKejriwal
    ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார். #CMChandrasekharRao #DeveGowda
    ஐதராபாத்:

    தேசிய அளவில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை கடந்த மாதம் சந்தித்த சந்திரசேகர் ராவ் இது தொடர்பாக தீவிரமாக விவாதித்தார். 

    இதைத்தொடர்ந்து, தி.மு.க., ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கும் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார். கடந்த மாதம் சென்னை வந்த சந்திரசேகர் ராவ், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் பயணம் செய்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா அங்கு தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுதொடர்பாக சந்திசேகர் ராவ் மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியான கே டி ராமா ராவ் டுவிட்டரில் கூறுகையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா முதல் மந்திரி சந்திரசேகர் ராவை சந்தித்து பேசினார். அப்போது தானும் உடனிருந்ததாக பதிவிட்டுள்ளார். #CMChandrasekharRao #DeveGowda
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் - நளினி ஆகியோர் போலீசார் பலத்த காவலுடன் வேலூர் ஜெயிலில் சந்தித்து பேசினர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி வருகின்றனர்.

    அதன்படி, நேற்று காலை ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகனை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஆயுதப்படை போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நளினியை காலை 7.50 மணி முதல் 8.50 மணி வரை சந்தித்து முருகன் பேசினார்.

    பின்னர் அவர் மீண்டும் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 
    புதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவிதுள்ளார். #DonaldTrump #RussianElection
    நியூஜெர்சி:

    அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வரும் டிரம்ப், விசாரணை கமிஷனையும் குறைகூறி வருகிறார். இந்த புகாரை ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை வருகிற 16-ந்தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து பேசுவீர்களா? என டிரம்பிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘நான் அவரிடம் (புதின்) அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். தேர்தல்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். அமெரிக்க தேர்தலை யாரும் சீர்குலைப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    உக்ரைனை இணைத்துக்கொண்டது, சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருவது போன்ற ரஷியாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், புதினுடனான சந்திப்பில் இந்த விஷயங்கள் குறித்தும் பேச இருப்பதாக டிரம்ப் கூறினார்.

    இதைப்போல ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிவிதிப்பது குறித்து 3 அல்லது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று கூறிய டிரம்ப், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். #DonaldTrump #RussianElection  #tamilnews 
    பிரிட்டன் நாட்டின் இளவரசர் வில்லியம்ஸ், இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி நேதன்யாகுவை ஜெருசலேம் இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து பேசினார். #PrinceWilliam #Netanyahu #Israel
    ஜெருசலேம்:

    பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் முதன்முறையாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு அரச குடும்ப உறுப்பினராக பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று இஸ்ரேல் பிரதம மந்திரி நேதன்யாகுவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பிரிட்டன் பிரதமரின் வருகையையொட்டி இஸ்ரேலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இஸ்ரேல் நாட்டின் தலைவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட ஜெருசலேம் இல்லத்தில் இவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது.

    இந்த சந்திப்பு குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. #PrinceWilliam #Netanyahu #Israel
    ×