search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Smart card for fueling police vehicles"

    • எஸ்.பி. வழங்கினார்
    • ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாச்சல் கிராமத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் வாகனங்களுக்கு தணிக்கை செய்து வாகனங்களுக்கு எரிபொருளுக்கான ஸ்மார்ட் கார்டு வழங்கினார்.

    மேலும் மாவட்ட காவல்துறை சார்பில் பயன்படுத்தப்படும் வழி காவல் வாகனம், ஆய்வாளர் வாகனம், ரோந்து வாகனம், இருசக்கர வாகனம், மற்றும், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு அதனை தொடர்ந்து அதற்கு உண்டான ஸ்மார்ட் கார்டு வழங்கினார் மேலும் போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படை காவலர்களின் குறைகளை கேட்டு உடனடியாக நிவர்த்தி செய்ய ஆணையிட்டார்

    அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம், ஆய்வுப்படை இன்ஸ்பெக்டர் சரண்யா, சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், முரளிதரன், உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    ×