என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snake"

    • பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
    • ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.

    சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.

    ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.

    இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.

    இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-

    எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.

    • கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.
    • நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெண்டுர்தி எனும் பகுதியை சந்திர நாராயணன். இவரது வீட்டில் உள்ள ஏசியில் பாம்பு இருப்பதாக பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அனுப்பினர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் ஏசிக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்புகளை பிடித்தார். பின்னர் அந்த பாம்புகளை பத்திரமாக மீட்டு பைக்குள் போட்டு எடுத்து சென்றனர். நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏசியின் மேல் இருக்கும் மூடியை ஒருவர் கழற்றி அதிலிருந்து கயிறு போன்ற ஏதோ ஒன்றை எடுக்கிறார். கொஞ்சம் உற்று பார்த்த பிறகுதான் தெரிகிறது அது பாம்பு என்று. ஒரு பாம்பு அல்ல, கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.

    இதை பார்த்த பலர் தங்கள் வீடுகளிலும் ஏசி இருப்பதாகவும், இனி அதை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் ஏசி வைத்திருக்கும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    • நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
    • பாம்பு கடித்த தீணணைப்பு வீரர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    நெல்லை, அக்.27-

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தரைதளத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.

    இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ேநற்று ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரி ஒருவரின் காலின் அருகில் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை அறிந்தார். பின்னர் அது பாம்பு என்று அறிந்ததும் சுதாரித்து கத்தி கூச்சலிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் பதறியபடி வெளியே சென்றனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செனறு பாம்பை தேடும்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ஆனால் அதற்குள் அந்த பாம்பு மறைவிடத்திற்கு சென்றது. எனினும் வெகுநேரமாக பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை தேடினர். ஆனால் அது சிக்கவில்லை.

    இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் அச்சமுடன் வாசலிலேயே வெகுநேரம் காத்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சாரைப்பாம்பு நிற்பதை பார்த்தனர். அதனை தீயணைப்பு வீரர் அமல்ராஜ் என்பவர் பிடிக்க முற்பட்டார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே சகவீரர்கள் அந்த பாம்பை பிடித்து சென்றனர்.

    • கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.
    • கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம், தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை.

    இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர். காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

    கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

    இதன்காரணமாக அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.

    சைவ உணவை சாப்பிடுவதால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் ஆடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளையும் வளர்ப்பதில்லை.

    இதுபற்றி அக்கிராம மக்கள் கூறும்போது, எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இங்குள்ள யாராவது அசைவம் சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக கடவுளின் தண்டனையை அனுபவிப்பார் என்றனர்.

    • பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா் .
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

    அவினாசி :

    சேவூா் அருகே சாலைப்பா ளையம் அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்குள்ள சத்துணவுக் கூடத்துக்குள் திங்கள்கிழமை மதியம் திடீரென 3 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது.

    இதைப் பாா்த்த சத்துணவுப் பணியாளா்கள், சமூக ஆா்வலரும், பாம்பு பிடிப்பதில் பழக்கப்ப ட்டவருமான விஜய்க்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த விஜய் பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா்.

    • பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது.
    • பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேந்தவர் சிவா. இவரது நண்பர் ரகு. இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று இரவு எஸ் ஆர் கேட் பகுதிக்கு வீட்டு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்.

    பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் ஏற முயன்றனர். அப்போது பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்து சென்றது. இதனை பார்த்து அவர்கள் கூச்சலிட்டனர்.

    பைக்கை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது. அதற்குள் அங்கு ஏராளமான கூட்டம் கூடியது.

    கம்பு மற்றும் சில பொருட்களைக் கொண்டு பைக்கை சுற்றி தேடிப் பார்த்தனர்.

    பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர். ஆனால் பாம்பு அவர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியது.

    பின்னர் முன் பகுதியில் உள்ள கைப்பிடி நடுவில் உள்ள மேல் பாகத்தை கழட்டியபோது 2 அடி நீளமுள்ள பாம்பு அங்கு பதுங்கி இருந்தது. அதனை பிடித்து வெளியில் எடுத்தனர்.

    இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள்.
    • மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

    பல்லடம் :

    பாம்பு வகைகளில் மண்ணுளி பாம்பும் ஒன்று. நச்சுத்தன்மை இல்லாத இந்த வகை பாம்பு இரட்டை தலை பாம்பு என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் மண்ணுக்குள்ளேயே இருந்து உணவை தேடிக் கொள்ளும்.

    இதனால் மண் உள்ளே இருக்கும் பாம்பு என அழைக்கப்பட்டு மண்ணுளிப் பாம்பு என மருவி அழைக்கப்படுகிறது. இவை விவசாய நிலங்களில் உள்ள எலிகள், பூச்சிகள் போன்றவற்றை பிடித்து உண்ணும், விவசாயிகளின் நண்பனான இந்த மண்ணுளிப் பாம்புக்கு விஷம் கிடையாது. எனினும் மனிதர்களை இந்தப் பாம்பு நாக்கு மூலம் தீண்டினால் அலர்ஜி ஏற்படும். இந்த நிலையில், பல்லடம் மங்கலம் ரோடு செந்தோட்டம் பகுதியில் வசிக்கும் 10வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சபீனா வீட்டில் புகுந்த மண்ணுளிப் பாம்பு அங்கிருந்த பூச்செடிக்குள் புகுந்து கொண்டது. இதனைப் பார்த்த சபீனா குடும்பத்தினர். அதனை சாக்கு பைக்குள் வைத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் பல்லடம் வந்தார். அவரிடம் சுமார் 4 அடி நீளம் உள்ள மண்ணுளிப் பாம்பு பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.

    • மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.
    • பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

    8 நாட்கள் கடந்தும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

    மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.

    சீர்காழி, தொடுவாய், வைத்தீஸ்வரன் கோவில், திருநகரி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், தோட்டங்களில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த கொடிய விஷம் கொண்ட நாகம், கோதுமை நாகம், கருநாகம் உள்ளிட்ட 8 பாம்புகளை பாம்பு பிடிக்கும் வீரரான சீர்காழி பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.விஷம் கொண்ட பாம்புகள் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    • திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
    • வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அகிழ்மனைத்தெரு முத்தையா பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார் காத்த பெருமாள் மனைவி சொர்ணத்தம்மாள். இவரின் வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.

    உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியம் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் பாம்பு பிடிக்கும் உபகரண கருவிகள் கொண்டு சுமார் 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

    • சிவன் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பக்தர்கள் சிலர் விரட்ட முயன்றனர்

    புதுக்கோட்டை

    விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே வன்னிமரத்தடியில் சிவன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலுக்கு வெளியே சுமார் 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு ஒன்று கோவில் சுற்றுச்சுவரின் ஓரமாக இருப்பதை கண்ட பக்தர்கள் சிலர் அந்த பாம்பை விரட்ட முயன்றனர். அப்போது அங்கிருந்து சென்ற பாம்பு கோவில் முன்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றது. பின்னர் சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றிய பாம்பு கோவிலின் பின்புறமாக வெளியே சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்பநாயக்கனூரை அடுத்த திம்மநத்தத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவருக்கு மனைவி பிரேமா உள்ளார். விவசாயியாக வேலை பார்த்து வந்த ரஞ்சித்குமார் சம்பவத்தன்று மதியம் கொப்பிலிப்பட்டி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கி விழுந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளத்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.
    • நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது. அப்போது அங்கு நல்ல பாம்பு ஒன்று வந்தது.

    அந்த நல்ல பாம்பு நாய் குட்டிகளை பாதுகாத்து வருகிறது. பொதுமக்கள் யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் கம்பீரமாக நாய்க்குட்டிகளின் முன்னால் நின்றது. அப்போது அங்கு வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய் நாய் நீண்ட நேரமாக குரைத்துக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக நாய் குரைத்துகொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு குட்டிகளை பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பிரமிப்புடன் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

    மேலும் இது குறித்து தகவல் அறிந்த கடலூர் வன அலுவலர் செல்லா சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து கொண்டு பாதுகாப்பாக காட்டில் விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×