search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snake meat"

    • வனத்துறையினர் அதிரடி சோதனை.
    • வனத்துறையினர் பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு தளியகோணம் பகுதியில் ஒருவர் மலைப்பாம்பை பிடித்துச் சென்றிருப்பதாக வனத்துறையிருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மலைப்பாம்பை பிடித்ததாக கூறப்பட்ட அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ்(வயது42) என்பவரின் வீட்டுக்கு பாலப்பல்லி வனச்சரக அதிகாரி ரதீஷ் தலைமையிலான வனத்துறையினர் அதிரடியாக சென்றனர்.

    அப்போது அங்கு ராஜேஷ் இல்லை. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த கவுன்சிலர் முன்னிலையில் வனத்துறையினர் சோதனை செய்தனர். இதில் ராஜேஷ் வீட்டின் சமையலறையில் மலைப்பாம்பு சமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், பாம்பு இறைச்சியை கைப்பற்றினர்.

    பின்பு தணியகோணம் பகுதியில் பதுங்கியிருந்த ராஜேசை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது தளியகோணம் வயல் பகுதியில் மலைப்பாம்பை பிடித்ததாகவும், அதனை வைத்து "ஸ்பெஷல் டிஷ்" தயாரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேசை கைது செய்தனர்.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மலைப்பாம்பு இறைச்சி அறிவியல் பரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி பயோலேபுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராஜேஷ் இரிஞ்சாலக்குடா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    வனச் சட்டங்களின்படி பாம்புகளை கொல்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

    ×