என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soldier"

    • காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.
    • அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

    பஞ்சாப் மாநிலம் ஜலத்தினரில் யுடியூபர் ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் மர்ம நபர் கையெறி குண்டை (GRENADE) வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. குண்டு வீசிய மர்ம நபர் ஹர்திக் காம்போஜ் என்று அடையாளம் காணப்பட்டார்.

    காம்போஜிடம் பஞ்சாப் போலீஸ் நடத்திய விசாரணையில் அவருக்கு GRENADE தயாரிக்க ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுக்சரண் சிங் என்பவர் ஆன்லைனில் பயிற்சி அளித்தது தெரியவந்தது.

    காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று ராணுவ வீரர் சுக்சரண் சிங் பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பஞ்சாபில் சமீக காலமாக குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
    • உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நெல்லை:

    தென்காசி அருகே உள்ள அழகப்பபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பையா(வயது 61). இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் 21-ந்தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பையாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்தஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    • இவருக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துமகேசுவரன்(35). இவர் 2005-ம் ஆண்டு ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள 10-வது என்ஜினீயர் ரெஜிமெண்டில் ஹாவில்தா ராக பணியாற்றினார்.

    ராணுவவீரர் முத்து மகேசுவரனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உடல் ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு முத்துமகேசுவரன் உடலுக்கு ராணுவ அதி காரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராணுவவீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மரணமடைந்த ராணுவவீரர் முத்துமகே சுவரனுக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    • கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேவி நகரை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). ராணுவ வீரர்.

    இவர் புனேயில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள கூர்க்கா படை பிரிவுக்கு பணியிட மாறுதல் செய்யப்படடார்.

    இதையடுத்து 20 நாள் விடுமுறையில் காரமடையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு கடந்த 4-ந் தேதி சிக்கிம் புறப்பட்டு சென்றார்.

    அங்கு பங்கர் பகுதியிலுள்ள இந்தியா-சீனா ராணுவ எல்லை பகுதியில் 17,000 மலை உச்சியில் பனிப்பொழிவு நிறைந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு நிலவிய கடும் குளிரான காலநிலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் காரமடையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை-ஊட்டி சாலையில் உள்ள ஆர்.சி.கல்லறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூர்க்கா ரெஜிமென்ட் முன்னாள் கமென்டிங் அதிகாரி கர்ணல் லலித்ஜெயின், கோவை வடக்கு கோட்டாட்சியர் ரூபா, தாசில்தார் மாலதி மற்றும் அரசு அதிகாரிகள், உறவினர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினர்.

    கோவை ராணுவ பிரதேச படை லெப்டனென்ட் ஜென்ரல் சாந்தனு தலைமையில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு அனிதா ஜோசி(58) என்ற மனைவியும், மோனிகா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ வீரர் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்டத்திலேயே ‘‘குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக’’ மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 74-ஆவது குடியரசு தின விழா நடந்தது. செயல் அலுவலர் வே.கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் அ.புசலான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், நகரின் தூய்மை குறித்து பேசினார்.

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் ராணுவ வீரர் சூரியகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டலர் துரைராஜ், கவுன்சிலர்கள் கண்ணன், தனபாக்கியம், சேக்கப்பன், அழகு, அமுதா, நிகார்பானு, சித்ரா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மாவட்டத்திலேயே ''குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக'' மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்

    புதச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல் துறையில், ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர் நேற்று முன்தினம், காரைக்கால் காத்தா பிள்ளை கோடி சிக்னலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ரூ. 75 ஆயிரம் மதிப்புடைய தங்க செயின் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டெடுத்த ராஜேஷ் கண்ணா, உரிய விசாரணை மற்றும் காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், உரியவரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ராஜேஷ் கண்ணாவை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ராஜேஷ் கண்ணாவை பாராட்டி வருகின்றனர். இந்த விவரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பிஸ்மி அல்மேரிஸ்.

    நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் நேராக மோதுவது போல வந்துள்ளார்.

    இதனை பிஸ்மி அல்மேரிஸ் அவரை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் போலீசை தாக்கியவர் அரூர் அருகேயுள்ள பொய்யப்பட்டியை சேர்ந்த கருணாநிதி (எ) காளிதாஸ் (வயது 29) என்பதும், ராணுவ வீரரான அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை ராணுவ வீரர் தாக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார்.
    • அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கவுகாத்தி:

    அருணாசலபிரதேசத்தின் தவாங் பகுதியில் மராட்டியம் மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தை சேர்ந்த ராணுவவீரரான தாகலே உள்ளிட்ட குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரரான தாகலே இடிபாடுகளில் சிக்கி கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அங்கு சிறப்பு உபகரணங்களுடன் மீட்பு குழுவினர் விரைந்து சென்று ராணுவவீரர் தாகலேவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மீட்புகுழுவினரின் தீவிர போராட்டத்தின் காரணமாக 5 நாட்களுக்கு பிறகு தாகலே சடலமாக மீட்கப்பட்டார். உடலை பிரேத பரிசோதனைக்காக தவாங்கில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பலியான ராணுவவீரர் தாகலேவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    • ரூ.11½ லட்சம் மோசடி செய்த ராணுவ வீரர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
    • ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆத்தங்குடி கிராமத்ைத சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது கப்பலூரில் ஐ.ஓ.சி. நிறுவனத்தில் பணி யாற்றி வருகிறார்.

    இவர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தண்டுகுளத்தை சேர்ந்த ராணுவ வீரர் சிவக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது வெளிநாட்டு நிறு வனத்தில் முதலீடு செய்தால் சில மாதங்களில் இருமடங்கு தொகை கிடைக்கும் என சிவக்குமார் கூறினார்.

    இதனை நம்பி பல தவணைகளில் ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்தை சிவக்குமா ரிடம் கொடுத்தேன். பல மாதங்கள் ஆனபின்பும் பணம் கைக்கு வரவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது மோசடி என தெரியவந்தது. இதையடுத்து பணத்ைத திரும்பித்தருமாறு சிவக்குமா ரிடம் கேட்டேன்.ஆனால் அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார். எனவே உரிய நடவடிக்ை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப்படை யில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.
    • சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலம் தர்ராங் களத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது குண்டுவெடித்து சந்தீப் குமார் என்கிற ராணுவ வீரர் உயிரிழந்தார். நேற்று ரேஞ்சில் காவல் பணியில் அவர் ஈடுபட்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    குண்டுவெடி விபத்தில் சந்தீப் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, ரேஞ்சில் இருந்த மருத்துவ அதிகாரி மூலம் அவருக்கு உடனடியாக மருத்துவ முதல் உதவி வழங்கப்பட்டது.

    பின்னர் அவர் குவாஹாட்டியில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சந்தீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சந்தீப் குமாருக்கு மனைவி மற்றும் ஒரு வயது மகன் உள்ளனர்.

    ராணுவ வீரரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்பதாகவும், சம்பவம் குறித்த உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராணுவ வீரர்-காவலாளி திடீரென இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலப்பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊருக்கு வந்தவர் செவல்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் இருந்து இறங்கியபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உறவிர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் மணக்கன். அரசு பணியாளர் நற்பணி சங்க கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மாடியில் இருந்து தவறி விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மணக்கன் மகள் மரகதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி தலைமறைவு
    • மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்

    கண்ணமங்கலம்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரரின் மனைவியிடம், நேற்று மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்தார்.

    மேலும் கடை சம்மந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ராணுவ வீரர் வீடியோ

    இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி சைலேந்தி ரபாபுவை வலியுறுத்தினார். இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட வீசாரணையில் தெரிந்தது.

    இதனை அடுத்து சந்தவாசல் காவல்நிலையத்தில் இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி சம்பவம் நடந்த படவேடு கோவில் பகுதிக்கு சென்றார்.

    அங்குள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரித்தார். இதனை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர் மனைவியிடம் மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த சம்பவத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பிலும் கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவலர்களை நியமித்துள்ளோம். பாதிக்க பட்ட பெண்ணுக்கு அனைத்து துறை அரசு மருத்துவர்களும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை முறையாக விசாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். தற்போதைக்கு மருத்துவமனையில் மட்டும் பாதுகாப்பு கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் கேட்டால் அவர்கள் வீட்டிற்கும் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    இது சம்பந்தமாக நேற்று ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:-

    'ஜீவா அடி ஆட்களை ஏன் அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதில் 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.

    இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள்' என்றும் ராணுவ வீரர் பிரபாகரன் வினோத்திடம் தொலை பேசியில் தெரிவித்துள்ளார்.

    இந்த ஆடியோ வெளியானதால் ராணுவ வீரரின் வழக்கு திசை திரும்பி உள்ளது. அதற்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதில் கடந்த சில நாட்களாக கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் நேற்று அடுக்கம்பாறை வந்ததார். அங்கு மனைவி கீர்த்தியை மாலை 5 மணி அளவில் டிர்சார்ஜ் செய்து அவரது கணவர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது உடன் இரண்டு பெண் போலீசார் பாதுகாப்புக்காக பைக்கில் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

    கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து பிரபாகரன் பைக்கை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் வேலூர் நோக்கி தப்பி சென்று விட்டனர். இது குறித்து பெண் போலீசார் சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் தலைமுறைவான ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி கீர்த்தியை தேடி வருகின்றனர்.

    விசாரணைக்கு பயந்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவியது போல் தம்பதி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×