என் மலர்
நீங்கள் தேடியது "son"
- பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.
மாகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பேரனை அடித்ததற்காக மகனை தாத்தா ரைஃபிள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர், வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார்.
நாகபூரில் சிந்தாமணி நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், நேற்று இரவு 4 வயதான தனது பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, முதியவர் லைசன்ஸ் பெற்று தான் வைத்திருந்த ரைஃபிள் துப்பாக்கியால் மகனை நோக்கி சுட்டுள்ளார்.
இதனால் மகனின் காலில் குண்டு பாய்ந்தது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.காலில் குண்டு பாய்ந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்றார். மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் இருந்து குதித்து சேத் தற்கொலை செய்துகொண்டார்.
- தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் நடத்திய 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
மும்பை:
காட்கோபரில் வசிக்கும் பவேஷ் சேத், பால் பேரிங்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இவர்நேற்று மாலை 3.15 மணியளவில் பாந்த்ரா-ஒர்லியை இணைக்கும் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மகன் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற பாந்த்ரா போலீசார் சேத் உடலைக் கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக பாந்த்ரா போலீசார் கூறியதாவது:
இறந்தவரின் மகன் மாலை 4:30 மணியளவில் எங்களை அணுகினார். வாட்ஸ்அப் வீடியோ காலில் தந்தை அழைத்ததையும், கடலில் குதித்ததையும் தெரிவித்தார்.
தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் நடத்திய 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
ஒரு வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டு பாந்த்ரா-ஒர்லி பாலத்தின் தென் பகுதியில் இறங்கிய அவர், மகனுக்கு வீடியோ கால் செய்து பாலத்தில் இருந்து குதிக்கப் போவதாகவும், குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மகனுக்கு வீடியோ கால் செய்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
- மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 வயதான நிலேஷ், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா. நான் உங்களை கொன்றுவிட்டேன். மிஸ் யூ' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது தாயை கொலை செய்துவிட்டு அவரது சடலத்தின் பக்கத்தில் அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்தனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்த தாய், மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மகனுக்கும் தாய்க்கும் அவ்வப்போது முரண்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முரண்பாடு வாக்குவாதமாய் மாறி கடைசியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்துள்ளார்.
தாயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பெண்ணின் முன்னாள் கணவரிடம் உடலை பெற்றுக்கொள்ள சொல்லி போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் உடலை பெற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டதால், அப்பெண்ணின் உடலுக்கு போலீசாரே இறுதி சடங்குகள் மேற்கொண்டனர்.
- தாய் தந்தையை பொதுவெளியில் தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை.
- கடந்த 1 வருடமாக வீட்டிற்குள் விடாமல் கொடுமைப்படுத்தியதாக மகன் மீது தாய் குற்றச்சாட்டு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பொதுவெளியில் தனது தாய் தந்தையை மகன் ஒருவர் செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பெற்றோரை பொதுவெளியில் தாக்கிய மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தாய் தாஜா பேகம் அளித்த புகாரின் பேரில் அவரது மகன் முகமது அஷ்ரப் வானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அந்த புகாரில், கடந்த 1 வருடமாக தனது வீட்டிற்குள் விடாமல் வெளியே துரத்தி கொடுமைப்படுத்தியதாக அவரது மகன் மீது தாஜா பேகம் குற்றம் சாட்டியுள்ளார்.
- 2017 ஆம் ஆண்டு 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார்.
- கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான்.
தனது தாயைக் கொன்று, அவரது உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார். கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான். பின்னர் தாயின் இதயத்தையும் விலா எலும்புகளையும் எண்ணையில் வறுத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றத்திற்காக 2021 ஆம் ஆண்டு குச்சொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் குச்சொரவி மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாங்கள் இதைவிட கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கை சந்தித்ததில்லை. குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இறுதியாக கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குச்சொரவிக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.
- தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார்.
- யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி யமுனா. இவர்களது மகன்கள் சித்தார்த், ராகேந்த், ஸ்ரீராக். யமுனா கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் 2009-ம் ஆண்டில் இருந்து தற்காலிக கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.
அவருக்கு தனது மகன் ஸ்ரீராக்கை அரசு போக்குவரத்து கழகத்தில் பணிக்கு சேர்த்து விட வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது. இதற்காக அவர் தனது மகனை டிரைவராக பயிற்சி பெற செய்தார். பயிற்சி முடிந்ததும் வனத்துறையில் தற்காலிக டிரைவராக ஸ்ரீராக் பணிக்கு சேர்ந்தார்.
அதில் இருந்து கொண்டே அவர் அரசு போக்குவரத்துக் கழக டிரைவர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதன் பலனாக கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் ஸ்ரீராக்கிற்கு டிரைவர் வேலை கிடைத்தது. அவருக்கு திருவனந்தபுரம் நகரில் ஓடக்கூடிய அரசு போக்குவரத்து கழக மின்சார ஸ்விப்ட் பேருந்தில் டிரைவர் வேலை கிடைத்தது.
தனது முதல் நாள் வேலையை, ஸ்விப்ட் பஸ்சில் கண்டக்டராக பணி புரியும் தன்னுடைய தாயுடன் இணைந்து பார்க்க ஸ்ரீராக் விரும்பினார். தன்னுடைய இந்த விருப்பத்தை போக்குவரத்து கழக அதிகாரியிடம் தெரிவித்தார். அதற்கு அவரும் சம்மதித்தார்.
இதையடுத்து திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு செல்லும் மின்சார பேருந்தை முதன்முதலாக ஸ்ரீராக் இயக்கினார். அவரின் விருப்பப்படி அவரது தாய் யமுனா அதே பஸ்ஸில் கண்டக்டராக இருந்தார்.
தாய் கண்டக்டராகவும், மகன் டிரைவராகவும் இருந்து இயக்கிய பஸ்சை பலரும் ஆர்வமாக பார்த்தனர். தாயும் மகனும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்த அந்த நிகழ்வை காண யமுனாவின் மற்ற மகன்கள், ஸ்ரீராக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் கிழக்கு கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்திருந்தனர்.
அவர்கள் முன்னிலையில் யமுனா கண்டக்டராகவும், அவரது மகன் ஸ்ரீராக் டிரைவராகவும் ஒரே பஸ்ஸில் பணிபுரிந்தனர். மேலும் வேலை இடைவேளையின்போது தாய்-மகன் இருவரும் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை ஒரே இடத்தில் அமர்ந்து பகிர்ந்து சாப்பிட்டனர். தன்னுடைய மகனுக்கு அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர் வேலை கிடைத்தது மட்டுமின்றி, அவர் ஓட்டிய பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய நிகழ்வு யமுனாவுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்தது.
மகன் ஓட்டிய அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய யமுனா 2022-ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஸ்விப்ட் பஸ்சின் முதல் பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
- வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த தடயமும் போலீசுக்கு கிடைக்கவில்லை.
டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகள் என 3 பேரும் வீட்டின் படுக்கையறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த தம்பதியின் மகன் அர்ஜுன் டெல்லி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ராஜேஷ்குமார் (51), இவரது மனைவி கோமல் (46), மற்றும் அவர்களது மகள் கவிதா (23) ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
அர்ஜுன் காலையில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து போது தனது தாய், தந்தை, தங்கை ஆகியோர் கொலை செய்யப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் இன்று தான் தனது அம்மா அப்பாவின் திருமண நாள் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். வீட்டிற்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த தடயமும் போலீசுக்கு கிடைக்கவில்லை.
இதனையடுத்து அர்ஜுனிடம் போலீசார் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் நீண்ட நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனது குடும்பத்தை நான் தான் கொலை செய்தேன் என்பதை அர்ஜுன் போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
அர்ஜுனுக்கு, அவருடைய தந்தைக்குமான உறவு சுமூகமான முறையில் இல்லை. அர்ஜுனின் தந்தை முன்னாள் ராணுவ அதிகாரியாவார். இதனால் அர்ஜுனிடம் அவர் சிறுவயதில் இருந்தே கண்டிப்புடன் நடந்துள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னாடி கூட அர்ஜுனை அவர் கடுமையாக திட்டியுள்ளார். அப்பா தொடர்ந்து தன்னை திட்டுவதை அம்மாவும் தங்கையும் வேடிக்கை பார்த்ததை கண்டு அர்ஜுனுக்கு மொத்த குடும்பத்தின் மீதும் கோவம் வந்துள்ளது.
அதனால் தான் தாய் தந்தையின் 27 ஆவது திருமண நாள் அன்று அவர்களை கொலை செய்ய அர்ஜுன் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அதிகாலையில் 3 பேரையும் வீட்டில் வைத்தே ஆத்திரம் தீர படுகொலை செய்திருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்தபோது, நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்தேன் என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் போலீசாரிடமும் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
- தான் காதலித்து வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சவான் தனது தாயிடம் கூறியுள்ளார்.
- அவரது தாய் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.
டெல்லியில் தனது தாயை கொலை செய்து விட்டு நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
சவான் என்ற 22 வயது இளைஞர் போலீசாருக்கு போன் செய்து தனது தாயார் கொல்லப்பட்டதாகவும், அவரது காதணிகள் திருடப்பட்டதாகவும் கூறினார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கொள்ளை நடந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் விலைமதிப்பு அதிகம் உடைய பொருட்கள் வீட்டில் இருந்ததை போலீசார் கவனித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சுலோச்சனாவின் இளைய மகன் சவான் தான் தனது தாயாரை கொலை செய்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய போலீசார், "சவானின் அண்ணன் கபிலுக்கு (27) விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதனையடுத்து தான் நீண்ட நாட்களாக காதலித்து வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக சவான் தனது தாயிடம் கூறியுள்ளார். ஆனால், அவரது தாய் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டார். மேலும் உன் விருப்பப் படி நீ திருமணம் செய்தால் சொத்தில் ஒரு பங்கை கூட தரமாட்டேன் என்று அவரது தாயார் எச்சரித்துள்ளார். இதனால் மனமுடைந்த சவான், தனது தாயாரை கொலை செய்ததாக" தெரிவித்தனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய மூதாட்டி (68) பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முற்பட்ட போது அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சோ்த்துள்ளாா்.
- மகனை அரசு பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
அவினாசி
திருப்பூா் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வருபவா் வடிவேல் (வயது40). இவா் தனது மகன் நிஷாந்த் சக்தியை 1, 2ம் வகுப்புகளை கோவை மாவட்டம், பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும்,3 முதல் 5ம் வகுப்பு வரை திருச்சி, மதுராபுரி அரசு நடுநிலைப் பள்ளியிலும், 6 முதல் 8ம் வகுப்பு வரை ஈரோடு குமலன்குட்டை அரசு உயா்நிலைப்பள்ளியிலும் படிக்கவைத்துள்ளாா்.இதைத்தொடா்ந்து இந்த ஆண்டு அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சோ்த்துள்ளாா். தொடா்ந்து தனது மகனை அரசுப் பள்ளியில் சோ்த்து வரும் நீதிபதிக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.