என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Speaker Empbalam Selvam"
- விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கேக் வெட்டி மையத்தில் உள்ள மன நோயாளிகளுக்கு வழங்கினார்.
- டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் மணவெளி பகுதியில் அமைந்துள்ள அரிச்சுவடி மனநல மையத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு கேக் வெட்டி மையத்தில் உள்ள மன நோயாளிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக விழாவில் பங்கேற்ற சபாநாயகர் ஏம்பலம் செல்வத்துக்கு அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் மற்றும் ஆத்திச்சூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
அரிச்சுவடி டிரஸ்டி அரசமாதேவி பழக்கூடை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பா.ஜனதா செயலாளர் கலைவாணன், தனுசு, தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதுவை வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெறும் 26-வது தேசியப் புத்தகக் கண்காட்சியின் 5-வது நாளில் முனைவர் ரஜியா மற்றும் ஷம்ஷத் ஆகியோர் பிரெஞ்சு மொழியில் எழுதிய தியாகி அப்துல் மஜீத் நினைவஞ்சலி புத்தகத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டார்.
- விழாவில் புத்தகக் கண்காட்சியின் சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்கவுரை ஆற்றினார்.
புதுச்சேரி:
புதுவை வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெறும் 26-வது தேசியப் புத்தகக் கண்காட்சியின் 5-வது நாளில் முனைவர் ரஜியா மற்றும் ஷம்ஷத் ஆகியோர் பிரெஞ்சு மொழியில் எழுதிய தியாகி அப்துல் மஜீத் நினைவஞ்சலி புத்தகத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வெளியிட்டார்.
இதனை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து பெற்றுக்கொண்டார். விழாவிற்கு சீனு. மோகன்தாஸ் தலைமை வகித்தார். கவிஞர்கள் பாலசுப்ரமணியன், திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.
விழாவில் புத்தகக் கண்காட்சியின் சிறப்புத் தலைவர் பேராசிரியர் பாஞ். ராமலிங்கம் நோக்கவுரை ஆற்றினார். ஷர்மிளா பகதூர், ஜஸ்லீன், பூர்ணா, ஷபானா பர்வீன், அன்னமேரி, பிரேமலதா, சசிகுமார், மனோகரன், முகம்மது சிக்கந்தர், மற்றும் சாதிக் அலி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்