search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special train"

    • ஓணம் பண்டிகையை யொட்டி சிறப்பு ரெயில் அறிவிப்பு.
    • கேரளாவுக்கு 3 சிறப்பு ரெயில்கள்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06161) மறுநாள் காலை 8.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    மறுமாா்க்கமாக மங்களூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (15-ந்தேதி) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06163) மறுநாள் மதியம் 1.30 மணிக்கு கண்ணூா் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக கண்ணூரில் இருந்து திங்கட்கிழமை (16-ந்தேதி) பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

    இந்த ரெயில்கள் பெரம்பூா், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, ஷொரனூா், திரூா், கோழிக்கோடு, வடகரை வழியாக இயக்கப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06160) நாளை காலை 8.30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

    இந்த ரெயில் பெரம்பூா், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா் பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கனூா், கொல்லம் வழியாக இயக்கப்படும்.

    இந்த ரெயில் மறுமாா்க்கமாக இயக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012) வரும் செப்டம்பர் 1, 8, 15, 22, 29 அக்டோபர் 6, 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011) வரும் செப்டம்பர் 2, 9, 16, 23, 30 அக்டோபர் 7, 14, 21, 28 நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது
    • ரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது.

    சென்னை:

    கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. திருச்சி-தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரெயில் 28-ந் தேதி பகல் 12 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது.

    தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு 30-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மாலை 4.10 மணிக்கு திருச்சி சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு 28-ந்தேதி இரவு 7.10 மணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்.
    • திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06115) நாளை (புதன்கிழமை), 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.

     இதேபோல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும்.
    • இன்று பிற்பகல் 12 வரை அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து.

    சென்னை:

    சென்னை தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது ரெயில் முனையமாக உருவாக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு புறநகர் பஸ் நிலையம் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்ட பிறகு தாம்பரம் சென்னையின் பிரதான ரெயில் முனையமாக மாறியுள்ளது.

    தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு தினமும் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ரெயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இங்கிருந்து நாகர்கோவில், செங்கோட்டை, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் தற்போது 8 பிளாட்பாரங்கள் உள்ளன. முதல் இரு பிளாட்பாரங்கள் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரெயில்களை இயக்கவும், 3, 4-வது பிளாட்பாரங்கள் செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

    மீதமுள்ள பிளாட்பாரங்கள் விரைவு மற்றும் சரக்கு ரெயில்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன. இனிவரும் காலங்களின் தேவையை கருத்தில் கொண்டு, தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள் மற்றும் இணைப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் தாம்பரம் ரெயில் நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை தாம்பரம்-பல்லாவரம் இடையே பல மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால் நாளை முதல் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தாம்பரம் ரெயில்வே பணிமனை மற்றும் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தாம்பரம் வழியாக செல்லும் விரைவு ரெயில்கள் 10 முதல் 15 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 35 கி.மீ. வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படும்.

    இதுதவிர கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தாம்பரத்தில் இருந்து சிறப்பு மற்றும் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

    ரெயில் நிலையத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 2 வாரங்களாக மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 15-ந்தேதி முதல் இன்று வரை மின்சார ரெயில்கள் மட்டுமின்றி விரைவு ரெயில்களும், தாம்பரத்தில் நிற்கவில்லை.

    இந்த நிலையில், தாம்பரம் ரெயில்வே பணிமனையில் பராமரிப்பு பணிகள் இன்றுடன் நிறைவடைய உள்ளதால் நாளை (19-ந்தேதி) முதல் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்கு இடையே நேற்று வரை 45 நிமிடத்துக்கு ஒரு ரெயில் தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்டது. மற்ற ரெயில்கள் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்பட்டன.

    ஆனால் இன்று காலையில் தாம்பரம்-பல்லாவரம் இடையே அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன. மேலும் விரைவு ரெயில்களும் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டன.

    இதனால் இன்று காலையில் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    வெளியூர்களில் இருந்து தாம்பரத்தில் வந்த பயணிகளும் தாம்பரத்தில் இருந்து மின்சார ரெயில்கள் இயக்கப்படாததால் அவதி அடைந்தனர்.

    இதையடுத்து இன்று காலை முதல் தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு கூடுதலாக மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் அதில் ஏறி பயணிகள் பயணம் செய்தனர். பஸ் ஏற வந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மற்றும் போலீசார் வழிகாட்டி உதவி செய்தனர்.

    இன்று பிற்பகல் 12 வரை அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படும் என்றும், அதன்பிறகு தாம்பரத்தில் இருந்து பல்லாவரத்துக்கு சில மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.
    • சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    ஊட்டி:

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திரதினம், கிருஷ்ண ஜெயந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது.

    அதன்படி குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில் நாளை (16-ந்தேதி), நாளை மறுநாள் மற்றும் 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி செல்லும். இதேபோல ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் 5.55 மணிக்கு குன்னூர் வரும். மேற்கண்ட ரெயில்கள் முதல் வகுப்பில் 80 இருக்கைகள் மற்றும் 2-வது வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும்.

    மேலும் ஊட்டி-கேத்தி இடையே இருமார்க்கங்களிலும் 3 சுற்றுகள் ஜாய்ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியாக முதல் சுற்று சிறப்பு ரெயில் ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டிக்கு வரும்.

    2-வது சுற்று ரெயில் 11.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 12.10 மணிக்கு கேத்தி வரும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வரும்.

    3-வது சுற்று சிறப்பு ரெயில் மாலை 3 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி வரும். பின்னர் 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வரும். மேற்கண்ட சிறப்பு மலை ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
    • சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து வருகிற 26-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01161) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளா ங்கண்ணி வந்தடையும்.

    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    இதேபோல், மும்பையில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.


    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01164) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
    • தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்படும்.

    சென்னை:

    ஆடிப்பெருக்கு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி மார்க்கமாக செல்லும் ரெயில்களில் இடங்கள் நிரம்பி வழிவதால் தெற்கு ரெயில்வே முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலை அறிவித்துள்ளது.

    தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில் விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக சென்று திருச்சிக்கு நாளை காலை 6.40 மணிக்கு சென்றடைகிறது.

    இதேபோல திருச்சியில் இருந்து நாளை (3-ந் தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு மறுநாள் காலை 5.50 மணிக்கு வந்து சேரும்.

    • வாரந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
    • தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தாம்பரம் - நாகர்கோவில், தாம்பரம் - கொச்சுவேலி இடையே ஏற்கனவே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அந்த வாரந்திர சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் வரும் வாரந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06012), வரும் ஜூலை மாதம் 7, 14, 21 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் காலை 7.45 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06011), வரும் ஜூலை மாதம் 8, 15, 22 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06035), வரும் ஜூலை மாதம் 4, 6, 11, 13, 18, 20 ஆகிய தேதிகள் வரையும், மறுமார்க்கமாக, கொச்சுவேலியில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரம் வரும் வாராந்திர சிறப்பு ரெயில் (06036), வரும் ஜூலை மாதம் 5, 7, 12, 14, 19, 21 ஆகிய தேதிகள் வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, தாம்பரம்-நாகர்கோவில் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடைகிறது.

    மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு புறப்படும் ரெயில் நாளை மறுநாள் தாம்பரம் வந்தடைகிறது.

    அதேபோல், ஞாயிற்றுக்கிழமையும் (16-ம் தேதி) தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கும், பின்னர் மறுமாா்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 17-ம் தேதி புறப்பட்டு (18-ம் தேதி) தாம்பரத்தையும் சிறப்பு ரெயில் வந்தடைகிறது.

    • முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.
    • திருச்சியில் இருந்து இரவு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.


    கோடை விடுமுறை என்பதால் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் புக் செய்பவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் உட்கார கூட பலருக்கு இடம் கிடைக்காத சூழல் உள்ளது.

    இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு முற்றிலும் முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயிலை இயக்க திருச்சி ரெயில்வே கோட்டம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி திருச்சியில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மெமு ரெயில் புறப்படுகிறது.

    இந்த ரெயில் திருவரும்பூர் (இரவு 11.20 மணி), பூதலூர் (11.36), தஞ்சை (11.57), பாபநாசம் (நள்ளிரவு 12.21), கும்பகோணம் ( 12.34), மயிலாடுதுறை (12.54), வைத்தீஸ்வரன்கோயில் (1.13), சீர்காழி (1.20), சிதம்பரம் (1.33), கடலூர் துறைமுகம் (2.06), திருப்பாதிரிபுலியூர் (2.13), பண்ருட்டி (2.42), விழுப்புரம் (அதிகாலை 3.40), திண்டிவனம் (4.13), செங்கல்பட்டு (5.18) வழியாக நாளை காலை (திங்கள்கிழமை) 6.05 மணிக்கு தாம்பரம் சென்று அடையும்.

    இந்த சிறப்பு ரெயில் இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த சிறப்பு முன்பதிவு இல்லாத ரெயிலை பயணிகள் பயன்படுத்தி கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறது.

    • ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.
    • கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    கோவை:

    கோடை முடிந்து ஊர்களுக்கு திரும்ப வசதியாக கோவை-மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வண்டி எண் 06041 மங்களூரு சென்ட்ரல்-கோவை வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற ஜூன் 1,8,15, 22,29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மங்களூருவில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு கோவை வந்தடையும்.

    மறுமார்க்கமாக வண்டி எண் 06042 கோவை-மங்களூரு வாராந்திர சிறப்பு ரெயில் ஜூன் 1,8,15,22,29 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

    இந்த சிறப்பு ரெயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடக்கரா, கோழிக்கோடு, திரூர், சொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, போத்தனூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் முன்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×