search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Medical Camp"

    • 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
    • இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

    நாளை எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள தூசூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு வல்வில் ஓரி அரங்கிலும் சுகாதார திருவிழா நடைபெற உள்ளது.

    இம்முகாமில் ஆண், பெண் தனித்தனி மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளனர். இதில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு பிணி உதவி திட்டத்திற்கான ஆலோசனை வழங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
    • முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    திருப்பூர்:    

    காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பால், திருப்பூர் மாவட்டத்தில், வரும், 10ந்தேதி, மெகா மருத்துவ முகாம் நடத்த, சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    'இன்ப்ளூயன்சா' எனப்படும் பரவக்கூடிய காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் ஒரு பிரிவான, 'எச்3 என் 2' வகை வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் துவங்கியுள்ளது.

    பிற 'இன்ப்ளூயன்சா' போல் அல்லாமல், இந்த வைரஸ் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதியாகி, சிகிச்சை பெறும் அளவுக்கு தீவிரமாக உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறியுடன், அரசு மருத்துவமனையில் சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கி றது. மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    மேலும் அந்தந்த பகுதி அளவிலேயே சிகிச்சை அளித்து, மற்றவர்க ளுக்கு பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் வரும், 10ம் தேதி அதிகமான இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தி எந்த பகுதியில் அதிகமான பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    பொது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது :-

    காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பாதிப்புடன் எந்த பகுதியில் இருந்து அதிகமானோர் அனுமதியாகின்றனர் என்ற விபரத்தை மருத்துவமனைகளில் இருந்து பெற்று, அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    முகாமில் வயதானவர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

    குடும்ப உறுப்பினர் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதால், ஒருவருக்கு பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தி, கவனமாக இருக்க அறிவுரை வழங்கப்படும்.

    காய்ச்சல் அறிகுறி உள்ளவர், இந்த முகாமில் பங்கேற்க ஏதுவாக முன்கூட்டியே வைரஸ் காய்ச்சல் குறித்தும், முகாம் நடத்துவது குறித்தும் அனைத்து பகுதி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும் என்றார்.

    • கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.
    • முகாமில் மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள15-வது வார்டில் செபத்தையாபுரம் ஏரல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து தமிழக அரசின் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் சுப்பிரமணியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நட்டாத்தி பஞ்சாயத்து துணை தலைவர் பண்டாரம், சுப்பிரமணியபுரம் சேகர குரு டேவிட் ராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் பொதுமக்கள் அனைவருக்கும் பொதுமருத்துவம் நீரழிவு நோய்,கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் லேப் கண் சிகிச்சை ஹோமியோபதி, சித்தா மருத்துவம் டெங்கு பற்றி விழிப்புணர்வு, தொழுநோய் சிகிச்சை, மக்களை தேடி வரும் மருத்துவம், சத்துணவு கண்காட்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பணி செட்டி குளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், தூய மேரி நர்சரி பள்ளி தாளாளர் சுதாகர் மைக்கேல், ஏரல் வட்டார மருத்துவ அலுவலர் தினேஷ், சுப்பிரமணிய புரம் சேகர பொருளாளர் தேவ ஆசிர்வாதம், செயளாலர் ஜோசப் மாசில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பொற்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை ஏரல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் செய்து இருந்தார்.

    • கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் 9-க்குட்பட்ட வாய்க்கால் பட்டரை ஜெய் மெட்ரிக் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஆணையாளர் (பொ) ரவி தலைமையில் இன்று நடைபெற்றது. முகாமினை சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. வக்கீல் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

    முகாமில் கருவுற்ற 7 பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. முகாமிற்கு வந்த பொதுமக்களின் வருகை பதிவு செய்யப்பட்டு பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, சித்த மருத்துவம், காசநோய், தொழுநோய், டெங்கு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இம்முகாமில் சிகிச்சைகளுக்கு தேவையான மருத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த அனைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் மாநகர நல அலுவலர் யோகானந், மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் தெய்வலிங்கம், சாந்தி, இந்துஜா, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

    பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் அருகே பள்ளபட்டி ஊராட்சிக்குட்பட்ட கொட்டபட்டியில் தாடிக்கொம்பு வட்டாரம், நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் பல்வேறு நோய்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மருத்துவ அலுவலர் டாக்டர். விக்னேஷ், டாக்டர் ராஜரவிவர்மன், ஊராட்சி மன்ற தலைவர் பரமன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

    • அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது
    • கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்ட த்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதனடி ப்படையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணி யாளர்களுக்கான வட்டார அளவிளான சிறப்பு மருத்துவ முகாம் வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது.

    முகாமினை கருங்குளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கோமதி ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உலகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், தோல் நோய், காசநோய், எச்ஐவி/எய்ட்ஸ், தொற்று நோய் உள்ளிட்டவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் 490 பேர் பயனடைந்தனர். 6 பேர் உயர் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக் கப்பட்டனர். கருங்குளம் யூனியன் அலுவலக மேலாளர் மகேந்திரபிரபு நன்றி கூறி னார்.

    • பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார்.

    முக்கூடல்:

    பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகள், கோழி ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மருத்துவத்திற்காக மக்கள் கொண்டு வந்தனர்.

    கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார். முக்கூடல் கால்நடை உதவி மருத்துவர் ஹேமாசாயி, அத்தாள நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை உதவியாளர் தர்மலிங்கம் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்–2ன் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 6-ந் தேதி நம்பியூர் தாலுகாவில் உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா திருவாச்சி அரசு உயர்நிலை பள்ளியிலும் 7-ந் தேதி நம்பியூர் தாலுகா எலத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி, பெருந்துறை தாலுகா திங்களூர் எம்.பி.டீ.அரசு மேல்நிலைப்ப ள்ளியிலும், வருகிற 9-ந் தேதி நம்பியூர் தாலுகா வேமாண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா விஜயமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூ.டி.ஐ.டி.,) கட்டாயம் என்பதால், அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் போலீசார், குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாமினை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்திய போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமினை கலெக்டர் டாக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து, பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    காவல்துறை பணியானது மகத்தான பணியாகும். உடல் மற்றும் மன நலம் மிகவும் அவசியமானது.

    எனவே, இந்த மருத்துவ பரிசோதனையை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமை யோகா வகுப்பில் கலந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வேண்டும். காவல்துறையினர் ஆரம்ப காலத்திலேயே தங்களுக்கு வரக்கூடிய சிறு, சிறு உடல் சார்ந்த உபாதைகளை சரிசெய்துகொள்ள நேரம் ஒதுக்கி கொள்ள வேண்டும். அப்போது தான் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.

    குடும்பத்தாருடனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், இதயம் சார்ந்த நோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், எலும்பு முறிவு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த நல்ல வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டல பொது மேலாளர்கள் அருள்சம்மந்தம், சக்திவேல், தைவான் நாட்டை சேர்ந்த மருத்துவர் நீனா, காவேரி மருத்துவமனை நாகேஷ்குமார், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசு, இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக நிர்வாக பொது மேலாளர் அருண் மகாவிஷ்ணு வரவேற்புரையாற்றினார்.

    முடிவில் மனிதவள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் காரல்மார்க்ஸ் நன்றி கூறினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி செய்திருந்தார். 
    வீரவநல்லூரில் சவுராஷ்ட்ரா ரெஸ்ட் ஹால் மற்றும் மீட்டிங் ஹாலில் வைத்து நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (28-ந் தேதி) அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    நெல்லை:

    தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மணியன் தமிழக சட்ட பேரவையில் கைத்தறி மான்ய கோரிக்கை நாள் 08.06.2018 அன்று தமிழகம் முழுவதும் நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் வீரவநல்லூர், புதுக்குடி, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், இடைகால் பகுதி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் வீரவநல்லூரில் சவுராஷ்ட்ரா ரெஸ்ட் ஹால் மற்றும் மீட்டிங் ஹாலில் வைத்து நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (28-ந் தேதி) அன்று நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    இந்த முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால், நோய் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது. எனவே வீரவநல்லூர், புகுக்குடி, வெள்ளங்குளி, கல்லிடைக்குறிச்சி, அம்பாச முத்திரம் மற்றும் இடைகால் பகுதி நெசவாளர்கள் பெருமளவில் இச்சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என நெல்லை கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் கேட்டுக்கொள்கிறார்.
    சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது. மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கு அனைத்து மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்திடவும், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் மற்ற துறைகளின் நலத்திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்வதற்கும் சிவகங்கை வருவாய் கோட்ட அளவில் சிறப்பு முகாம் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    இச்சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனுடைய நபர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற்றவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாத உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வங்கி கடன் மற்றும் பிற அரசு உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    எனவே, சிவகங்கை வருவாய் கோட்டத்தினை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் லதா தெரிவித்துள்ளார்.

    ×