search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRI RANGAM TEMPLE"

    • கோபுரம் தொடா்பாக எச்சரித்தும் இந்து சமய அறநிலையத் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கோபுரத்தை சீரமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர்:

    ஸ்ரீ ரங்கம் கோவில் கிழக்கு கோபுரம் சிதிலமடைந்து விழுந்ததற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியமே காரணம் என இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.

    இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    வரலாற்று சிறப்பு மிக்கதும், பழைமையானதுமான ஸ்ரீ ரங்கம் கோவிலின் கிழக்கு கோபுரம் சிதிலமடைந்து விழுந்ததற்கு இந்து சமய அறநிலையத் துறையின் அலட்சியமே காரணமாகும். கோபுரம் சிதிலமடைந்தது தொடா்பாக இந்து முன்னணி, ஆன்மிகப் பெரியவா்கள் எச்சரித்தும் இந்து சமய அறநிலையத் துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, கோவிலில் நிகழ்ந்துள்ள அசம்பாவிதத்துக்கு தக்க பரிகாரம் செய்யவும், கோபுரத்தை சீரமைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற உள்ளது
    • பக்தர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள்

    திருச்சி:

    108 வைணத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் பல்ேவறு திருவிழாக்கள், வைபவங்கள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    அந்த வகையில், நாளை (24-ந்தேதி, திங்கட்கிழமை) தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு நம் பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 10.15 மணிக்கு சந்தனு மண்டபம் சென்றடைகிறார்.

    தொடர்ந்து காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். அதனைத் தொடர்ந்து பகல் 2 மணி முதல் 2.30 மணி வரை அலங்காரம், அமுது செய்தலுக்கு பின்னர் மாலை 4.45 மணிக்கு ஜாலி (சாலி) அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார்.

    இரவு 8 மணிக்கு சந்தனு மண்டலத்தில் இருந்து புறப்படும் உற்சவர் நம்பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுக்கு மரியாதையாகி இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். காலை 6.45 மணி முதல் 8 மணி வரை விஸ்வரூப தரிசனம், பூஜா காலம் காலை 8 மணி முதல் 10 மணி வரை சேவை நேரம் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை பகல் 1.15 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆகும். இரவு 7 மணிக்கு மேல் ஆரியப்படாள் வாயிலில் அனுமதி இல்லை.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×