search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilanka refugee arrest"

    செங்குன்றம் அருகே கத்திமுனையில் வழிப்பறி செய்த இலங்கையை சேர்ந்த அகதியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த சென்றம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (52). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சென்றம்பாக்கத்தில் இருந்து வடபெரும்பாக்கத்துக்கு முருகன் வந்தார்.

    அப்போது புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேத்தீஸ்வரன் என்ற சந்திர குமார் கத்தியை காட்டி முருகனிடம் ரூ. 2 ஆயிரம் பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து கேத்தீஸ்வரனை கைது செய்தார். இவர் மீது புழல் காவல் நிலையத்தில் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    ×