search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Statewide Meeting"

    • வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்க தொடங்கிவிட்டது.
    • மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது.

    பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சிக்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த வெற்றியின் மூலம் கேரளாவில் கால் பதித்துவிட்டது மற்றும் வாக்கு சதவீதம் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களின் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடர்ந்தபடி இருக்கின்றனர்.

    கேரளாவில் அவர்களது அடுத்த இலக்கு நடைபெற உள்ள பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலாக இருக்கிறது.

    மேலும் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டசபை தேர்தலும் பா.ஜ.க.வின் இலக்காக உள்ளது.

    இந்த தேர்தல்களில் அதிகமான இடங்களில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்கான வியூகங்களை தற்போதே பா.ஜ.க. வகுக்கத் தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக அமைப்பு நிர்வாகிகள் 3 ஆயிரம் பேருடனான மாநிலம் தழுவிய கூட்டம் திருவனந்தபுரத்தில் நாளை நடைபெற உள்ளது.

    நாளை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் பஞ்சாயத்து கமிட்டி அளவிலான தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மாலையில் நடக்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொள்கிறார்.

    நட்டா வருகையால் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்திருக்கின்றனர்.

    ×