என் மலர்
நீங்கள் தேடியது "Stop"
- ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது.
- பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னா ரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்
- ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வில்லி பாளை யம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி , சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளை யம், பெரியாக்கவுண்டம் பாளையம்,தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரி பாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவி பாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டது.
- இந்த ரெயில் அனைத்து ரெயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவே ற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெயில் இன்ஜின் முன்புறம் மாலை அணி வித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.
பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.
இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது.
பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பி டத்தக்கதாகும்.
சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரெயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
- நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி மெட்டல்லா, ஆனங்கூர், சமயசங்கிலி, 12- ந் தேதி நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், மல்லசமுத்திரம், 14 -ந் தேதி நாமகிரிப்பேட்டை, இளநகர், இமல்லி, கொமரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, உப்புபாளையம், 16- ந் தேதி சேந்தமங்கலம், பரமத்திவேலூர், முசிறி, 19- ந் தேதி வளையப்பட்டி, திருச்செங்கோடு, உஞ்சனை, 20- ந் தேதி ராசிபுரம், எஸ்.வாழவந்தி, நாமக்கல், 21 - ந் தேதி காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, கபிலர்மலை, பருத்திபள்ளி, வில்லிபாளையம், 26- ந் தேதி கெட்டிமேடு, பள்ளக்காபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வலையப்பேட்டை வழியாக செல்லும் குடிநீர் பிரதான குழாயில் நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.
- தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலாததால் நடவடிக்கை
- ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.
அருவங்காடு,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து வருவதால், மார்கெட் நுழைவு வாயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வி.பி.தெரு பகுதியில் பொதுமக்கள் நடமாட இயலவில்லை. மேலும் அந்த பகுதியில் சரக்குவாகன நிறுத்தம் செயல்பட்டு வந்தது.
இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி வி.பி.தெரு பகுதியில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே சரக்குவாகன நிறுத்தும் இடம் தற்போது குன்னூர் மெயின் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரே மாற்றப்பட்டு உள்ளது இதனால் அந்த பகுதியில் ஓரளவு வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் சரக்குவாகன நிறுத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பிக்கப் டிரைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
- நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்தது
- மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
இந்தியாவின் பெரு நகரங்களின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம் நகரங்கள் மற்றும் ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது என்பது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் பவர் கட்- ஆல் மெட்ரோ ரெயிலே நின்றுள்ள சம்பவம் கல்கத்தாவில் நடந்துள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கல்கத்தாவில் நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரெயிலானது 10.38 மணியளவில் மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.
பணியாளர்களின் துரிதமான நடவடிக்கையால் சுமார் 14 நிமிடங்கள் கழிந்து மீண்டும் கரண்ட் வந்த நிலையில் 10.52 மணிக்கு மீண்டும் ரெயில் பயணத்தை தொடர்ந்தது. கரண்ட் கட்- ஆல் மெட்ரோ ரெயில் நிற்பது என்பது வழக்கத்துக்கு மாறானதாக பார்க்கப்படுகிறது.
- தேவகோட்டையில் இருந்து கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் இயங்கவில்லை.
- அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையானது முதன்மையான நகராட்சியாகும். இந்த நகரை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்காகவும், சென்னை, கோவை, பெங்களூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல பஸ் வசதிகளுக்காக வந்து செல்கின்றனர்.
மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக அதிக அளவில் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூர், கோவை போன்ற நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது.
குறிப்பாக கோவை செல்ல அரசு விரைவு பஸ்கள் காலையில் 2 பஸ்களும், இரவில் 2 பஸ்களும் இயங்கின. சில மாதங்களாக கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வேலைகளுக்கு செல்வோரும், மேற்படிப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை விட இப்போது 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், கோவை செல்ல குறைந்த செலவில் இந்த பகுதி கிராம மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் அரசு விரைவு பஸ்கள் பயன்பட்டது.
தற்போது அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாததால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தேவகோட்டை பஸ் நிலையம் உட்புறமுள்ள அரசு விரைவு பஸ்கள் முன்பதிவு அலுவலகத்தின் அட்டவணையில் கோவை செல்லும் பஸ்களில் நேரம் உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களுக்கு சாதகமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதன்மையான நகராட்சியில் இந்த அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்றார்.
- பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
- மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜமால், நிர்வாகிகள் உமர் பாரூக், நயினார், சுலைமான் மற்றும் பலர் வந்து அளித்த மனுவில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னரும் அதனை நடைமுறைக்கு கொண்டு வராமல் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.
அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கபடுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
மானூர் யூனியன் கானார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி பிரேம்குமார் தலைமையில் ஊர்மக்கள் அளித்த மனுவில், தங்களது கிராமத்தில் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை.
இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் என கூறியிருந்தனர்.
- தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தின் மூலமாக மரு தன்வாழ்வு, நாரைக்கிணறு, என்.புதூர், கே.கைலாசபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உட்பட ஏராளமானவர்கள் பயன் அடைந்து வந்தனர்.
- கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பாசஞ்சர் ரெயில்கள் ஊரடங்கிற்கு பிறகு நிற்காது என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.
கோவில்பட்டி:
புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தென்னக ரெயில்வேயின் மதுரை ேகாட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தின் மூலமாக மரு தன்வாழ்வு, நாரைக்கிணறு, என்.புதூர், கே.கைலாசபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உட்பட ஏராளமானவர்கள் பயன் அடைந்து வந்தனர்.
ஆனால், கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பாசஞ்சர் ரெயில்கள் ஊரடங்கிற்கு பிறகு நிற்காது என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனால் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்த இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர்
எனவே பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி இந்த வழித்தடத்தில் நின்று சென்ற அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் வழக்கம்போல் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக போரா ட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தோம்.
இந்நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று பயணிகளின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் தூத்துக்குடி, நெல்லை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன்படி தூத்துக்குடி-நெல்லை சிறப்பு ரெயில் (வண்டி எண்:06667) மற்றும் நெல்லை-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்:06668) ஆகிய ரெயில்கள் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் இரவு 7.15 மணிக்கும், காலை 8 மணிக்கும் நின்று செல்லும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாரைக்கிணறு ரெயில் நிலை யத்தில் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்ல வழிவகுத்த வருவாய்துறையினர், தென்னக ரெயில்வே நிர்வாகத்தினருக்கும், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச்செயலாளர் கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் மருத ன்வாழ்வு ரவி, ஒன்றிய செயலாளர்(மேற்கு) ஜே.சி.பி. முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்க ளுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
- நெல்லை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
- சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சியில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் கேபிள்கள் பதிக்கும் பணிக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சாலைகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இதனிடையே பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத காரணத்தி னால் சாலைகள் அமைப்பது தாமதமாகி வந்தது.
இந்நிலையில் மாநகர பகுதி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் சாலை பணிகள் எதுவும் நடைபெறாததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
தற்போது ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலைகள் அமைப்பதற்காக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 2019-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள சொக்கநாதர் கோவில் தெரு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் எடுத்தவர்களை சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மண்டல சேர்மன் சில காரணங்களை கூறி சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஒப்பந்ததாரர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களது பகுதியில் சாலை அமைய உள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் சமீப காலமாக கடும் முயற்சி எடுத்து நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் மேலப்பாளையம் மண்டலத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
மேட்டூர், ஜன. 28-
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாச னத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப் படுவது வழக்கம்.
இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி அணையில் குறைவான தண்ணீர் இருந்ததால் தாமதமாக ஜூலை மாதம் 23-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தாலும் சம்பா நெல் சாகுபடி முழுமையாக நடந்தது. ஆண்டுதோறும் பாசனத்திற் காக ஜனவரி 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.
இதுபற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. இருந்தாலும் டெல்டா பாச னத்திற்கு தண்ணீர் தேவை என்றால் நீர் திறப்பு இன்னும் சில நாட்கள் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 70.81 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 70.81 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கான 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணையில் தற்போது நீர்மட்டம் 70 அடியாக உள்ளதால் அணையில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் மற்றும் நந்தி சிலைகள் படிப்படியாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர் அணை மூலம் 12 டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது வேலூர் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப் பாடு வராது என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். * * * மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதை படத்தில் காணலாம்.