search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Symposium on"

    • வேளாண் கண்காட்சியில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.
    • கண்காட்சியில் விவசாயிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் அடங்கிய மஞ்சபைகள் வழங்கப்பட்டன.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளூர் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்த மரபுசார் பன்முகத்தன்மை குறித்த 2-வது கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் புஞ்சை துறையம்பாளையத்தில் உள்ள ஜே.கே.கே.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் மரபியல் பன்முகத்தன்மை குறித்த விஞ்ஞானிகளின் தொழி ல்நுட்ப உரை, விவசாயிகள் விஞ்ஞானி களிடையே கலந்துரையாடல் நிகழ்வு மற்றும் பாரம்பரிய ரகங்கள் சாகுபடி செய்யும் உழவர்க ளின் சாகுபடி அனுபவங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

    உள்ளூர் பயிர் ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சி யில் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்காகவும், விற்பனை க்காகவும் வைக்கப்பட்டி ருந்தது.

    சிறப்பு விருந்தினர்களாக டி.என்.பாளையம் ஒன்றியக்குழுத்தலைவர் விஜயலட்சுமி மற்றும் வாணிப்புத்தூர் பேரூராட்சி த்தலைவர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர்.

    கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து விவசாயி களுக்கும் பாரம்பரிய பயிர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் அடங்கிய மஞ்சபைகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) (பொ) பாமாமணி வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தலைமை உரை நிகழ்த்தினார்.

    ஜே.கே.கே.எம். வேளாண்மை அறிவியல் கல்லூரி முத ல்வர் கல்யாணசு ந்தரம் வாழ்த்துரை வழங்கினார்.

    பவானி சாகர் வேளா ண்மை ஆராய்ச்சி நிலைய பேராசி ரியர்கள் மற்றும் கே.வி.கே. மைராடா வேளா ண்மை அறிவியல் நிலைய விஞ்ஞா னிகள் தொழில்நுட்ப உரையாற்றி னர்.

    விழாவில் வேளாண்மை மற்றும் சகோதரத்துறை அலுவலர்கள் மற்றும் கூகா விதைகள், கழனி, உழவகம், பாசம், தேன்கூடுவள ஆதார மையம் போன்ற தன்னார்வ மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகிகள் கருத்துரை யாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொ ண்டனர். கண்காட்சியில் பாரம்பரிய பயிர் ரகங்களும், பாரம்பரிய விதைகளும், பாரம்பரிய உணவு வகைகளும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

    இந்நிகழ்வின் போது கல்லூரி வளாகத்தில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ரங்கோலி கோலப்போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    முடிவில் டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குநர் சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சி களுக்கான ஏற்பாடுகளை வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ×