என் மலர்
நீங்கள் தேடியது "tag 121996"
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், கபிஸ்தலம் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் போலீசார் கபிஸ்தலம் பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது வீரமாங்குடி கொள்ளிடம் ஆற்று கரையில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளிய வாகனத்தை சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளி இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்து பாபநாசம் புது தெருவைச் சேர்ந்த சூர்யா (22) என்பவரையும், அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (23) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
களம்பூரை அடுத்த கீழ்பட்டு பகுதியில் ஆற்று மண் மற்றும் சூளைமண் கடத்தி வருவதாக களம்பூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது வம்பலூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 37) என்பவர் மனி வேனில் மணல் கடத்தி கொண்டு வந்தார். இதனையடுத்து போலீசார் தேவராஜை கைது செய்து, மினிவேனை பறிமுதல் செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கொள்ளை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வராகநதி, சோத்துப்பாறை மற்றும் குளம், குட்டை ஆகியவற்றில் இரவு-பகலாக மணல் கடத்தல் நடந்து வருகிறது.
போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுத்தபோதும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை.
தற்போது மணல் திருட்டில் ஈடுபடும் கும்பல் தோட்டம், புறம்போக்குநிலம் ஆகியவற்றில் மணல் குவியலை பதுக்கி வைத்து விற்பனை செய்துவருவது அதிகரித்துள்ளது.
பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மணல்களை விற்பனைக்காக குவித்து வைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி பெரியகுளம் வருவாய் ஆய்வாளர் தலைமையில் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். புறம்போக்குநிலத்தில் தார்பாயை கொண்டு மூடப்பட்டு மணல் குவியல்கள் விற்பனைக்கு வைத்துள்ளது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்து மணல் கடத்தும் கும்பலை தேடி வருகின்றனர். நாளுக்குநாள் அதிகரித்து வரும் மணல் கொள்ளை மற்றும் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் கும்பல் நடமாட்டத்தால் பெரியகுளம் பகுதியில் இயற்கை வளம் குறைந்து வருவதாக சமூகஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பனம்பள்ளி கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனம் மாயூரநாதர் ஆலயத்திற்கு சொந்தமான 45 ஏக்கர் திடலில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு அனுமதியின்றி பலர் எடுத்து வந்தனர். இதற்காக 30அடி வரை பள்ளம் தோண்டி மணலை அள்ளி விற்பனை செய்து வந்தனர்.
இதை தட்டிக்கேட்ட கிராம மக்களுக்குக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில் அரசு அனுமதியின்றி 42 செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. 10 அடியில் நல்ல தண்ணீர் கிடைத்துவந்த நிலை மாறி தற்போது நிலத்தடி நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதனை கண்டித்து மணல் திருட்டு நடைபெறும் இடத்தில் 30 அடி ஆழத்தில் இறங்கி அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் பனம்பள்ளி கிராமத்திற்கு சென்று அரசு அனுமதியின்றி செங்கல் சூளையும், மணல் குவாரியும் நடத்திவந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்ட கிராம மக்கள் அனைத்து பள்ளங்களையும் மூடி சமன்செய்து தரவேண்டும், மணல் எடுக்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி உளுத்துக்குப்பை என்ற இடத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் போது சிலர் மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொள்ள முயன்றனர். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தடுத்து அப்புறப்படுத்தினார். சம்பவ இடத்துக்கு மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
சென்னை:
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ராஜகோபாலின் முதலாம் ஆண்டு நினைவு நாள் சிங்கபெருமாள் கோவிலில் மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் நடந்தது. ராஜ கோபாலின் உருவ படத்திற்கு சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சங்க நிர்வாகிகள் சந்தித்து மணல் லாரி உரிமையாளர்கள் தீர்மானத்தின் மனுவை அளித்தோம்.
அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகள் மீது காஞ்சீபுரம் மாவட்ட வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் மூலம் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அதிக பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் மணல் லாரிகளால் காஞ்சீபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் விபத்துக்கள் முலம் அதிக உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
தமிழக அரசு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 7 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இந்த மணல் குவாரிகளை அரசு திறந்தால் மணல் விலை அதிக அளவில் குறையும்.
6 சக்கரங்களை கொண்ட லாரிகள் 13 டன் மணல் ஏற்ற வேண்டும். ஆனால் இந்த லாரிகளில் 20 டன் மணல் வரை கொண்டு செல்லப்படுகிறது.
10 சக்கரங்களை கொண்ட லரிகள் 18 டன் மணல் கொண்டு செல்ல வேண்டும். 30 டன் மணல்களை கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு அனுமதி அளித்த எடையுள்ள மணலை மட்டும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கனிம பொருட்களை திருட்டு தனமாக கொண்டு செல்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் காதர்மை தீன், அகத்தியன், கணேஷ், சையது உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமான தொழில் மிகவும் தேக்கம் அடைந்துள்ளது.
மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு கப்பலில் மணல் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த மணல் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள் வாங்குவதற்கு வசதியாக இருந்தது.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் மலேசியாவில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு 50 ஆயிரம் டன் மணல் கப்பலில் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டது.
ஒரு யூனிட் மணல் ரூ.10,350-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. லாரி உரிமையாளர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து மலேசிய மணலை வாங்கி வந்தனர்.
எண்ணூர் துறைமுகத்தில் தற்போது 500 லாரி அளவுக்குத்தான் மணல் உள்ளது. இதுவரை புக்கிங் செய்தவர்களுக்குத்தான் இந்த மணலை விற்க முடியும் என்பதால் நேற்று மதியம் ஆன்-லைன் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. இனி மேல் மணல் வந்தால்தான் மீண்டும் முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மணல் தேவை அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு மலேசியாவில் இருந்து மீண்டும் மணல் இறக்குமதி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அனேகமாக இன்னும் 10 நாளில் கப்பலில் மணல் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை இறக்குமதி செய்யப்பட்ட மணலை விட இந்த முறை 2 மடங்கு அதிகம் மணல் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. 1 லட்சம் டன் அளவுக்கு மலேசிய மணலை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த முறை வீடு தேடி மணல் வினியோகம் செய்யும் நடைமுறையும் தொடங்கி வைக்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
மலேசிய மணல் தூத்துக்குடி, எண்ணூருக்கு வருவதால் இந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் விலையில் மணல் கிடைக்கிறது.
கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு மணல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஏராளமானவர்கள் மணல் கேட்டு காத்திருக்கிறார்கள்.
மணல் லாரி உரிமையாளர்கள் 41 ஆயிரம் லாரிகளுக்கு பணம் செலுத்திவிட்டு காத்திருப்பதால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு வருகிற 19-ந்தேதி லாரிகளுடன் காத்திருப்பு போராட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #SandImport #EnnorePort
சென்னை:
தமிழ்நாட்டில் மணல் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், கலப்பட மணல், திருட்டு மணல் பல பகுதிகளில் விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டு உள்ளதால் ரூ.1330-க்கு கிடைக்க வேண்டிய ஒரு லாரி மணல் வெளிமார்க்கெட்டில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.
இதனால் மலேசியாவில் இருந்து தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்களுக்கு மணல் கொண்டு வரப்பட்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து மணல் விற்பனை நடை பெற்று வருகிறது.
இதில் தூத்துக்குடியில் உள்ள மணல் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாக வில்லை. இந்த மணலில் சிலிக்கான் கலந்துள்ளதாக வதந்தி பரப்பப்பட்டதால் மற்ற மாவட்டங்களில் இருந்து அங்கு சென்று மணல் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
ஆனால் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள மலேசிய மணலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
56 ஆயிரம் மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் தினமும் 300 லாரி மணல் விற்பனையாகிறது. ஒரு யூனிட் மணல் 10,350 ரூபாய்க்கு எண்ணூரில் கிடைக்கிறது.
இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் சிரமத்தை போக்க வீடு தேடி மணல் விற்கும் திட்டத்தை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளது. அனேகமாக ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
எண்ணூர், தூத்துக்குடி துறைமுகங்களில் தேவையான அளவு மலேசிய மணல் உள்ளதால் மணல் தேவைப்படுபவர்கள் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தால் 100 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கு முதலில் வீடு தேடி சென்று மணல் வழங்குவோம்.
இதற்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மணல் இறக்கு மதியை அதிகரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் கூறியதாவது:-
எண்ணூர் துறைமுகத்தில் மலேசிய மணல் கிடைப்பதால் தினமும் 300 லாரிகளில் மணல் எடுத்து வருகிறோம். ஆற்று குவாரிகளில் 1 யூனிட் மணல் ரூ.1,330-க்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் துறைமுகத்தில் கிடைக்கும் மலேசிய மணல் 1 யூனிட் ரூ.10,350 என விலை நிர்ணயம் செய்துள்ளனர்.
விலை அதிகம் இருந்தாலும் பரவாயில்லை. உடனுக்குடன் மணல் கிடைக்கிறது. ஆன்லைனில் 41,000 லாரிகளுக்கு மணல் கேட்டு பதிவு செய்துள்ளோம்.
திருவள்ளூர், ஆற்காடு, விழுப்புரம், கடலூரில் 30 மணல் குவாரிகள் மூடப் பட்டுள்ளது. இதை அரசு திறந்து மணல் விற்பனை செய்தால் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும்.
வீடு தேடி மணல் விற்கும் திட்டத்தை ஜனவரி முதல் செயல்படுத்த போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவது நல்லதுதான். ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தான் இதுபற்றி தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Sand
தேனி:
கூடலூரில் தெற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் தலைமையில் கூடலூர்-குமுளி மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது குருவனூத்து முல்லைப் பெரியாறு வண்ணாந்துறை ஆற்றில் இருந்து பேச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டியன் (வயது 48) என்பவர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த டிராக்டரின் உரிமையாளர் கூடலூர் கே.கே.காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன் (55) என்பதும் தெரிய வந்தது. போலீசார் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்து பாண்டியன் மற்றும் ஈஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி பகுதியில் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி யாசிகா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஓடைப் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் மணல் திருடி வந்த முத்துப்பாண்டி (42) என்பவரை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். #Sandtheft
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அரும்பாக்கம் குமார் என்பரை வெங்கல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குருவாயல் முருகன் என்பவரை பெரியபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க டி.ஐ.ஜி மற்றும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதனை பரிசீலனை செய்த கலெக்டர் இரண்டு நபர்களையும் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திற்கு வாகனங்களில் மணல் கொண்டு செல்வதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணிகள் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை, வருவாய்துறை, காவல் துறை மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமங்கள் இருப்பு வைத்தல் போக்குவரத்து மற்றும் கனிம முகவர்கள் விதிகள் 2011-ன்படி ஜல்லி, மணல் மற்றும் இதர கனிமங்கள் லாரிகளில் எடுத்து செல்லும் போது பொது மக்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களில் மேற்பகுதிகளில் தார்பாய்கள் கொண்டு மூடி எடுத்து செல்ல அனைத்து குவாரி உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட பதிவு சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ கனிமங்கள் எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு கனிம விதிகளின்படி வாகனம் கைப்பற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும். மேலும் உரிய அனுமதியின்றி மணல் மற்றும் கிரானைட் கற்கள் ஏற்றிவரும் வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகன உரிமத்தையும் ஓட்டுனர் உரிமத்தையும், ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முத்துப்பேட்டையை அடுத்துள்ள கோவிலூரில் கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டானா அருகே முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வரப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் நாகை மாவட்டம் தாணிக்கோட்டகத்தை சேர்ந்த ரமேஷ்(வயது22) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரமேசை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.