என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகார்"

    • ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
    • குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ (வயது2½). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தர்ஷிகாஸ்ரீ படித்து வருகிறார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி பணியாளராக உள்ளார். அவருக்கு உதவியாளராக சுரக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் இருந்து வருகிறார். தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து சென்றும் மாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள். இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழுது கொண்டே ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.

    இதயைடுத்து காயத்திற்கு மருந்து தடவி தூங்க வைத்தனர். இதனையடுத்து செல்லாம்மாள் வீட்டிற்கு சென்று குழந்தையின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது, ஆமாம், உனது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவில்லை.
    • சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர்.

    இவரது மனைவி கோமதி (வயது 45).

    இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு குண்டையூர் செல்லும் பாலம் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது.

    சிறிது நேரம் கழித்து சேகர் முழித்து பார்த்த போது கோமதியை காணவி ல்லை. பல இடங்களில் தேடி பார்த்து ம் கண்டுபிடிக்க முடியவி ல்லை.

    இந்த நிலையில் சந்திரநதியில் ஆற்றின் கரையில் கோமதி பிணமாக கிடந்தார்.

    தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று கோமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுக் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார்.
    • சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பண்ருட்டி, அக்.28-

    பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு பல்லவ ராயநத்தம் முருக ன்கோயி ல்தெருவைச்சேர்ந்தவர் நாகராஜ் (வயது 24), கூலி தொழிலாளி திருமணமா காதவர். அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் வீடியோ எடுத்தார். இதனையடுத்து இந்த வீடியோவை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி உடல் பாதிக்கப்பட்டார்.

    இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சிறுமியை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சிறுமியின் பெற்றோர் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நந்தகுமார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர்.
    • டிராக்டர் பின்னோக்கி வந்ததில் சுவேதன் மீறி ஏறி இறங்கியது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே உள்ள கீழ நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த உதயசூரியன்- வனிதா தம்பதியினரின் இரண்டாவது மகன் சுவேதன் (வயது 14).

    இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான சுவேதன் படிப்பிலும் சிறந்து விளங்குபவர் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுவேதன் வீட்டில் இருந்த நெல் மூட்டை ஏற்றிய டிராக்டரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கீழநெம்மேலி பாலத்தில் டிராக்டரை நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக கீழே இறங்கினார்.

    அப்போது பாலத்தின் இறக்கம் என்பதாலும் பிரேக்கை சரியாக பயன்படுத்தாத காரணத்தினாலும் டிராக்டர் பின்னோக்கி வந்ததில் சுவேதன் மீறி ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுவேதன் இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வடுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டி எஸ்.பி. உள்ளிட்ட போலீசார் மீதான புகாரை மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
    • விசாரணை முடிவில், மாநில மனித உரிமைகள் ஆணைய பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாடானை வழக்கறிஞர்கள் சங்கத்தில் பொருளாளராக பதவி வகித்து வருகிறேன். என்னிடம் வரும் கட்சிக்காரர்களுக்காக சட்டரீதியாக திருவாடனை அப்போதைய போலீஸ் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட காவல் அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு நடத்தி வந்தேன்.

    இதனால் ஆத்திரமடைந்த டி.எஸ்.பி. மற்றும் போலீசார் பொய் புகார் பெற்று என் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் என்னை கைது செய்த போது டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மனித உரிமை மீறலில் என்னை ஈடுபடுத்தினர்.

    இதை திருவாடானை நீதிபதியிடம் தெரிவித்தேன். அவர் அதை பதிவு செய்து கொண்டார்.

    பின்பு ஜாமீனில் வெளி வந்த நான் என் மீது பொய் வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி. உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனித உரிமைகள் ஆணையத்திற்கும், காவல் உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு தாக்கல் செய்தேன்.

    இதனால் டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீண்டும் காவல் நிலைய கட்டுப்பாட்டில் வைத்து என்னை மிரட்டி இழுத்து வந்து இரும்பு கம்பியால் அடித்து தலையில் காயத்தை ஏற்படுத்தி மீண்டும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே என் மீதான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. அதே நேரம் நான் எனக்கு எதிரான வழக்கு குறித்து ஐகோர்ட்டிலும், மனித உரிமைகள் ஆணையத்திலும் ஒரே நேரத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறி என் புகாரை மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது.

    மேலும் இதுதொடர்பாக ஐகோர்ட்டில் உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து டி.எஸ்.பி. மற்றும் போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநா ராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    விசாரணை முடிவில், மாநில மனித உரிமைகள் ஆணைய பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

    • கடலூர் அருகே வீட்டை விட்டு சென்ற முதியவர் மாயமானார்.
    • அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் செல்வராஜை பல்வேறு இடங்களில் தேடினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே மணப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். (வயது 54) இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிந்து செல்வராஜ் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு.
    • திமுக பேச்சாளரின் தரக்குறைவான பேச்சிற்கு கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார்.

    பாஜகவில் உள்ள நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோர் குறித்து திமுக பேச்சாளர் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகார் எழுந்தது. சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் ஒருவரான நடிகை குஷ்பு குறித்து அவர் தரகுறைவாக பேசியது சமுக வளைதளங்களில் வெளியானது.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி மன்னிப்பு கோரியிருந்தார். இதையடுத்து தமது பேச்சிற்கு சைதை சாதிக்கும் மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால் அவரை மன்னிக்க முடியாது என்று குஷ்பு கூறியிருந்தார். இந்த நிலையில் சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ஜ.க மகளிர் அணி சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் உள்பட 5 பிரிவுகளில் தி.மு.க. பேச்சாளர் சைதை சாதிக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்,வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.
    • கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு பகுதியில் பரபரப்பான மாலை வேளையில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 3 மர்மநபர்களால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு எப்போதும் பரபரப்பான சாலையாகும். இந்த சாலையில் எந்நேரமும் வாகன போக்குவரத்தும், உழவர் சந்தை மற்றும் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் சாலையில் இருபுறமும் ஏராளமான நகர்கள் உள்ளதால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் அமைந்துள்ளன.

    இதனால் பொதுமக்கள் அடிக்கடி கடைத்தெருவிற்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இப்பகுதியில் ஒரு சி நபர்கள் கடைத்தெரு மற்றும் கடைகளுக்கு வரும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் பணத்தை பறித்து செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் நாஞ்சிக்கோட்டை சாலையில் பல வங்கிகளின் ஏ.டி.எம்.களும் அமைந்துள்ளன. இந்த ஏ.டி.எம்.களின் அருகிலும், எதிரிலும் ஒரு சிலர் அமர்ந்து கொண்டு பணம் எடுக்க வருவோரை கண்காணித்து பணத்தை பறித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இவ்வாறு பாதிக்கப்படும் பலரும் இதுபற்றி போலீசில் உரிய புகார்கள் அளிப்பதில்லை. இதனால் இந்த மர்ம கும்பலுக்கு இது வசதியாக போய் விடுகிறது.

    இந்த மர்மநபர்கள் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாகி கிடப்பதால் பணம் இல்லாதபோது இதுபோன்ற வழிப்பறியில் அடிக்கடி ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை ரோடு சண்முகாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திர மூர்த்தி. இவரது மகன் ஞானசேகரன் ( வயது 44). இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக உள்ளார்.

    இந்த நிலையில் இவர் நேற்று மாலை நாஞ்சிக்கோட்டை சாலை பர்வீன் தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் 3 அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஞானசேகரனை வழி மறித்து நிறுத்தினர்.

    திடீரென அவர்கள் ஞானசேகரனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டினர். இதற்கு அவர் கொடுக்க மறுத்தார். உடனடியாக அந்த மர்ம நபர்கள் ஞானசேகரன் சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட்டில் சோதனை செய்து அதிலிருந்த ரூ.10 ஆயிரத்து 400 மற்றும் செல்போன் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக பறித்தனர்.

    கழுத்தில் கத்தியை வைத்து இருந்ததால் ஞானசேகரன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இதை அடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது,தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இது போன்ற வழிப்பறி சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் பணம் பறிக்கின்றனர்.

    பெண்கள் நடந்து சென்றால் அவர்களின் நகைகளை பறிக்கின்றனர். வாகனத்தில் செல்பவர்களையும் அவர்கள் விடுவதில்லை. இதனால் சாலையில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றோம்.

    எனவே இந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். அடிக்கடி போலீசார் ரோந்து செல்ல வேண்டும். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

    • பணம் பெற்றுக் கொண்டு முறையாக பயிற்சி அளிக்கவில்லை
    • கருங்கல் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கருங்கல் அருகே மார்த்தாண்டம் சாலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் சார்பில் குறைந்த கட்டணத்தில் சாப்ட்வேர் பயிற்சி வழங்குவ தாகவும், பயிற்சி முடித்தபின் நிறுவனத்திலேயே வேலை வழங்குவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

    இதனை நம்பி பூட்டேற்றி, பாலப்பள்ளம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அங்கு பயிற்சியில் சேர்ந்து உள்ள னர். இந்த நிலையில் அந்த மாணவர்கள் திடீரென பயிற்சி மையம் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

    பயிற்சியில் சேர்ந்த மாணவர்களிடம் 6 மாத பயிற்சி கட்டணமாக ரூ. 50 ஆயிரத்தை சாப்ட்வேர் நிர்வாகத்தினர் பெற்ற தாகவும் தற்போது முறையாக பயிற்சி வழங்காமல் யூ.டியூப். பார்த்து பழகிக்கொள்ள அறிவுறுத்துவதாகவும் மாணவர்கள் புகாரில் கூறி உள்ளனர்.

    தாங்கள் ஏமாற்றப்பட்ட தாக கூறும் மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களையும் பணத்தையும் திரும்ப கேட்டபோது நிர்வாக தரப்பில் வெற்று பேப்ப ரில் கையெழுத்து கேட்டதாகவும் அதற்கு தாங்கள் மறுத்து விட்டதாகவும் தெரி வித்தனர்.

    இந்த நிலையில் நிர்வாகம் தரப்பில் மாணவர்கள் தங்கள் நிறுவனத்தில் தகராறு செய்ததாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவர்களுக்கு போலீசார் அழைப்பு விடுத்திருந்தனர்.

    ஆனால் பயிற்சி பெறும் மாணவர்களும் முன்னாள் மாணவர்களும் நேற்று போலீஸ் நிலையம் திரண்டு வந்து சாப்ட்வேர் நிறுவனத்தினர் மீது புகார் அளித்தனர்.

    தங்களுக்கு முறையாக பயிற்சி தராமலும் வேலை தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் புகாரில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இதுகுறித்து கருங்கல் போலீசார் விசா ரணை செய்து வருகின்றனர்.

    • யாரும் இல்லாத போது பெட்ரூமில் புடவை துணி யால்தூ க்குபோட்டு தற்கொ லை செய்து கொண்டார்.
    • இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ரயில்வே நகரை சேர்ந்தவர் சிவானந்தம் இவரது மகன் தீபன் (25),கூலி தொழிலாளி இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது பெட்ரூமில் புடவை துணி யால்தூ க்குபோட்டு தற்கொ லை செய்து கொண்டார். கூலி வேலை க்கு சென்று வீடு திரும்பிய இவரது பெற்றோர்கள் சிவானந்தம்- மலர்மகன் தூக்கில் பிணமாகதொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்- இன்ஸ்பெக்டர்சரண்யா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றிபண்ருட்டி அரசுஆஸ்பத்திரிக்குபிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் ‘மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்’ என்று யாழினியிடம் கேட்டார்.
    • இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    போரூர்:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தி என்கிற யாழினி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் அசோக் நகர் 135- வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இவர் கடந்த 2-ந்தேதி அசோக் நகர் 3-வது அவின்யூவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் 'மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்' என்று யாழினியிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாழினி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்து வந்த தி.மு.க வட்ட செயலாளர் செல்வகுமார் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற என்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவருக்கு உடந்தையாக முன்னாள் தி.மு.க கவுன்சிலர் கோ.சு.மணியும் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். ஆகவே இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதேபோல் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வகுமாரும் கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்பு மூலம் நீரை வெளியேற்றும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்டு வந்தேன். மழையின் போது இந்த பக்கமே வராத கவுன்சிலர் யாழினி சம்பவத்தன்று வந்து ஆட்களை வைத்து ஆய்வு செய்வது போல செல்போனில் படம் பிடித்தார்.

    இதுபற்றி கேட்ட போது, 'நீ யார்' என்று கேட்டு என்னையும் உடன் இருந்த நிர்வாகிகளையும் தகாத வார்த்தைகளால் பேசிய கவுன்சிலர் யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஆகவே யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இரு தரப்பினர் கொடுத்த புகார் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரூ.2½ லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பு திருட்டு.
    • ஹைட்ராலிக் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீராளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல்.

    இவருக்கு சொந்தமான கதிர் அறுவடை எந்திரத்தில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான ஹைட்ராலிக் பம்பை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுகுறித்து அவர் ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் தனிப்படை அமைத்தார்.

    தனிப்படை போலீசார் பிரான்சிஸ், பாலா, தேவதாஸ், சக்திவேல் ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடிச்சென்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது 22), செல்லப்பா(22), ஆறுமுகம்(28) ஆகியோர் ஹைட்ராலிக் பம்பை திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று 3 பேரையும் கைது செய்து அலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஹைட்ராலிக் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×