என் மலர்
நீங்கள் தேடியது "மாணவிகள்"
- பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
- 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது
நாடு முழுவதும் நேற்று இந்துமத பண்டிகையான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் நகரில் ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளி மாணவிகள் மீது ரசாயன வண்ணம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே பைக்கில் வந்த கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
அந்நேரத்தில் பஸ் வந்ததால் மாணவிகள் உடனே பஸ்ஸில் ஏறினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பஸ்ஸில் ஏறி அந்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.
இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சிறுமிகளின் பெற்றோர் பதறியடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.
7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மற்ற மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
- மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரை படித்து மேல் படிப்பு மற்றும் தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமை பெண் திட்டம் மூலமாக தமிழ்நாட்டில் 2, 3 மற்றும் 4ம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளார்கள். கன்னியாகுமரி மாவட் டத்தில் 108 கல்லூரிகளிலிருந்து முதற் கட்டமாக 1938 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர்.
தற்போது இவ்வலை தளத்தில் (https://www.puthumaipenn.tn.gov.in) முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப் பிக்கலாம்.இவ்வலைதளத்தில், மாணவிகள் அனைவரும் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பதிவு செய்ய லாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள். மாணவிகள் தங்கள் கல்வி நிறுவ னங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்க கூடாது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவி களுக்கும் கல்வி பயிலும், நிறுவனங்களில் நவம்பர் 18-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மைதவல் திட்ட எண்ணுக்காக EMIS No.) மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் தற்போது 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத் தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் விண் ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா பேங்க் ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை ஆதார் எண் மற்றும் செல்ேபான் எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.
பயனாளியின் பெயர், வங்கி கணக்கு எண், IFSC எண், Branch பெயர் போன்ற விபரங்கள் வங்கி கணக்கு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் விபரத்து டன் ஒத்திருக்க வேண்டும். புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாவது கட்டமாக பய னாளிகள் (முதலா மாண்டு மாணவிகள் மற்றும் விடுபட்டவர் கள்) இணையவழி விண்ணப் பம் அந்தந்த கல்வி நிலை யங்களின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக் கும்படி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம் இணையதளம் தொடர் பான பயிற்சி மற்றும் அறிமுககூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் 28-ந்தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலக கூட்ட ரங்கில் நடைபெறுகிறது.
மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங் கள் இருப்பின், சமூகநல இயக்குநரக அலுவல கத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9150056809, 91500 56805, 9150056801 மற்றும் 9150056810 எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் mraheas@gmail. com < mailto:mraheas@ gmail.com> என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
மேல்படிப்பு மற்றும் தொழிற்நுட்ப படிப்புக ளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தின்கீழ் விண் ணப்ப முறையினை சரி யாக தெரிந்து கொண்டு, கடைசி தேதிக்கு முன்பாக தவறாமல் விண்ணப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.
- மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.
அருப்புக்கோட்டை
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திரிசாள் (9-ம் வகுப்பு) மாணவி மோனிகா (9-ம் வகுப்பு) ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி கீர்த்தனா மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று கேடயமும், சான்றிதழும் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
இந்த 3 மாணவிகளும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடகள போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரி யைக ளையும், அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளிச் செயலாளர் ராமச்சந்திரன், பள்ளித் தலைவர் ஜெய வேல்பாண்டியன் பள்ளி உதவி செயலாளர் காசிகோபிநாத், பள்ளி உதவி தலைவர் அஜய், தலைமையாசிரியை தங்கரதி மற்றும் உறவின்முறை பெரியோர்கள் ஆசிரியர்கள் மாணவ-மாணவி கள் பாராட்டினர்.
- கடத்திச் சென்ற ரவுடி போக்சோ சட்டத்தில் கைது
- குமரி போலீசார் அதிரடி நடவடிக்கை
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த அவரது தோழியான மற்றொரு மாணவியும் திடீ ரென ஒரே நாளில் மாயமானார்கள்.
இது தொடர்பாக மார்த்தாண்டம் மற்றும் திருவட்டார் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 மாணவிகளையும் தேடி வந்தனர்.
அப்போது மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தபோது இருவரும் ஒரே எண்ணுக்கு தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது.அந்த எண் யாருடையது என போலீசார் விசாரணை நடத்திய போது, அது திருவட்டார் குட்டக்குழி காலனி பகுதியைச் சேர்ந்த வினு (வயது 22) என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான வினுவை தேடிச் சென்ற போது, அவரும் வீட்டில் இல்லை. எனவே அவர் தான் 2 மாணவிகளை கடத்திச் சென்றிருக்கலாம் என ேபாலீசார் கருதினர்.
இதையடுத்து பினுவின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்த னர். இதில் அந்த எண் சென்னை திருவான்மியூரில் இருப்பது கண்டு பிடிக்க ப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 2 மாணவி களுடன் வினு இருப்பது தெரிய வந்தது. மாணவி களை மீட்ட போலீசார், அவர்களையும் வினுவையும் குமரி மாவட்டம் அழைத்து வந்தனர். பின்னர் 2 மாணவிகளும் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2 மாணவி களையும் தனித்தனியாக சந்தித்து பேசி வினு தனது வலையில் வீழ்த்தியதும், பின்னர் 2 பேரையும் ஓன்றாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது.
மேலும் ரவுடி வினு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதனை மாணவிகளிடம் கூறாமல் அவர்களுடன் பழகி வந்துள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரவுடி வினுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாய்ப்பு உள்ள தாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட 2 மாணவி களும் இன்று மருத்துவ பரி சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
- கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.
- அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.
சேலம்:
சேலம் கோரிமேடு பகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகள் தங்குவதற்கான அரசு விடுதி சேலம் சங்கர் நகர் தமிழ் சங்கம் பகுதியில் உள்ளது. இந்த விடுதியை சேர்ந்த மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக அரசு பஸ் டிரைவர்கள், அண்ணா பூங்கா பஸ் ஸ்டாப்பில், பஸ்சை நிறுத்துவதில்லை என்றும், பஸ்சில் ஏறினாலும் ஓட்டுநர்கள் கீழே இறங்க வற்புறுத்துவதாகவும் மாணவிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும் இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவிகள் இன்று புகார் அளித்தனர். அதில் அரசு பஸ்கள் முறையாக தங்களை ஏற்றிச் செல்லாத காரணத்தால் நாள்தோறும் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தனர்.
மாணவிகளின் புகார் தொடர்பாக சேலம் கோட்ட போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடியிடம் கேட்டபோது, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
- தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
- மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
தென்காசி:
தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.
தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.
நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.
கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.
- மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.
- நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கிளை நூலகம் எண் 2 மகளிர் வாசகர் வட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் நூலகத்திற்கு களப்பயணம் வந்தனர்.
மாணவிகள் சைக்கிளில் ஊர்வலமாக நூலகத்திற்கு வந்தனர் .நூலகத்தில் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என நூலகர் கலாவதி விளக்கினார் .வாசிப்பின் அவசியம் குறித்தும் நூலகம் செல்வதால் ஏற்படும் வளர்ச்சி பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். எந்த வகையான நூல்கள்நூலகத்தில் உள்ளது. மாணவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என நூலகர் மகேந்திரன், பிரமோத் அஷ்ரப் சித்திகா ஆகியோர் விளக்கினர் .மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்தும். பல்வேறுநூல்கள்குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர் .
இதை தொடர்ந்து நூலகத்தில் உறுப்பினராகாத மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர் .அவர்களுக்கான உறுப்பினர் காப்பு தொகையை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி செலுத்திஅவரும் ரூ .1000 செலுத்தி நூலகப் புரவலராகசேர்ந்தார்.தொடர்ந்து நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுடன் மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்த்தினர். பணி நிறைவு நூலகர் கணேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
- 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.
- வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
பெருமாநல்லூர் :
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற இருக்கும் கலைப் போட்டியில் பங்கேற்க பெருமாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர் இதில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் பேச்சு, நடனம் மற்றும் பாடல் போட்டிகளில் தங்களது திறமையை நிரூபித்தனர்.
இதில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.இந்த தகவலை பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
- பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
- தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை. தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை.
சீர்காழி:
சீர்காழி அருகே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இங்கு தலைமை ஆசிரி யராக சாமுவேல் செல்ல துரை பணியாற்றி வருகிறார்.
இப்பள்ளியில் 54 மாணவர்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்சா முவேல் செல்லதுரை பள்ளியின் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்க ப்பட்ட மாணவி ஒருவரின் பெ ற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா (பொறுப்பு) மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் சாமுவேல் செல்லதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
- ஆசிரியர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
நாகப்பட்டினம்:
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்ட விழிப்புணர்வு கையேடு வழங்கும் நிகழ்வு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
இதை அடுத்து திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்த அம்மையார் நினைவு விழிப்புணர்வு கையேடு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரி யின் தாளாளர் முனைவர்.வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜ், முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன், மற்றும் துணை முதல்வர் துறை தலைவர்கள் நிர்வாக அலுவலர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு கையேடு வழங்கினர்.
- அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
- 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டார அளவிலான 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கலைத்திருவிழா போட்டிகள், புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
கடந்த 22-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பள்ளி அளவில் இப்போட்டிகள் நடைபெற்று, அதில் வெற்றி பெற்றவர்கள் இந்த 3 நாள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர். கமுதி வட்டாரத்தில் உள்ள 30 பள்ளிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். இதில் 30 வகையான கலைபோட்டிகள் நடைபெற்றன.
இவ்விழாவிற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெனிட்டாமேரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளமைய பயிற்றுநர்கள் ஜெகநாதன், கந்தசாமி, ராஜரஹீக், சந்தனகுமார், கவுசல்யா, நித்யா, நூருல்குதா மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் டேவிட், ராமச்சந்திரன், நாகராணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
- தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
2022-23-ம் ஆண்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் பங்கேற்ப வர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகிய வற்றையும் அறிந்திருக்க வேண்டும்.
திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.
1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவ ர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithrurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04567-232130 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.12.2022. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது